Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உறுதியான தீர்வுக்கு வலுச்சமநிலையிலான அணுகுமுறை அத்தியாவசியமானது

Featured Replies

உறுதியான தீர்வுக்கு வலுச்சமநிலையிலான அணுகுமுறை அத்தியாவசியமானது

– சு.ப.தமிழ்ச்செல்வன்

''அனைத்துலக நாடுகள் விடுதலைப்புலிகள் மீது நியாயமற்ற தடைகளை விதித்து அந்தந்த நாடுகளில் தமிழர்களின் அரசியற்செயற்பாடுகளை கட்டுப்படுத்தியமையை சிறீலங்கா அரசு தனக்கு சாதகமாக பயன்படுத்தி இராணுவத் தீர்வை நோக்கிய தமது கடுமையான போக்கை முன்னெடுப்பதற்கு காரணமாக அமைந்துள்ளது.'' என தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப தமிழ்ச்செல்வன் தமிழ்நெட் இணையத் தளத்திற்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.

அச்செவ்வியில் சாரம்....

விடுதலைப்புலிகளை சமாதான முயற்சியின் சமதரப்பாக ஏற்று வலுச்சமநிலையடிப்படையில் தீர்வு முயற்சி முன்னெடுக்கப்பட்டால் அன்றி ஏனைய தீர்வு முயற்சிகள் எவ்வித பயனையும் அளிக்கப் போவதில்லை எனக் தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் குறிப்பிட்டுள்ளார்

முப்பது வருடங்களுக்கு முன்னரே தமிழர்களால் நிராகரிக்கப்பட்ட தீர்வு முயற்சிகளை தற்போது வெளியிடுவதனால் எவ்வித பயனையும் தரப்போவதில்லை. தமிழரின் உண்மையான அபிலாசைகளை சிங்களதேசம் உண்மையாக உணரும்போதே சரியான தீர்வை அவர்களால் முன்வைக்க முடியும். சிறீலங்கா அரசு விடுதலைப்புலிகளுக்கு எதிரான நடவடிக்கை என்று கூறியபடி தற்போது முன்னெடுத்துவரும் இராணுவ நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்வதைப்போலான அனைதுலக நாடுகள் சிலவற்றின் அணுகுமுறை சிங்கள தேசம் உண்மையான தீர்வை நோக்கி நகர்வதற்கு எப்படி உதவமுடியும் எனவும் தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் கேள்வியெழுப்பினார்.

கடந்த ஐந்தாண்டு காலப்பகுதியில் சமாதான முயற்சியில் ஈடுபட்டிருந்தபோதும் சிறீலங்கா அரசு தமிழர்களுக்கு நியாயமான தீர்வு எதனையும் முன்வைக்கப்கவில்லை என்பதனை அனைத்துலக சமூகத்தினர் யதார்த்தமாக உணர்ந்திருப்பார்கள்.

ஆனால் இன்றைய நிலையில் தமிழர்களின் தேசிய அபிலாசைகளை உணர்ந்து அங்கீகரிப்பதன் ஊடான அனைத்துலக சமூகத்தின் அணுகுமுறையே இனிவரும் காலத்தில் சமாதான முயற்சிகளுக்கான புறநிலையை ஏற்படுத்தும்.

விடுதலைப்புலிகள் அமைப்பை இராணுவ ரீதியாக பலவீனப்படுத்தி அதனூடாக குறைந்த தீர்வு திட்டம் ஒன்றை ஏற்கவைக்கலாம் என்பது மடைமையானது என்றும் சு.ப தமிழ்ச்செல்வன் அவர்கள் குறிப்பிட்டார்.

இராணுவ ரீதியிலோ அல்லது அரசியல் ரீதியிலோ பலவீசனமாக நிலையில் விடுதலைப் புலிகளோ அல்லது தமிழீழ மக்களோ ஒருபோதும் பேச்சு நடவடிக்கையில் ஈடுபடமாட்டார்கள் எனவும் தமிழ் மக்கள் பலமான நிலையில் இருக்கும் போது மட்டுமே பேச்சுக்களில் ஈடுபடுவார்கள் என தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

சர்வதே நாடுகள் சிலவற்றில் தமிழீழ விடுதலைப் புலிகள் தடைசெய்யப்பட்டு அரசியல் வேலைகளுக்கான கட்டுபாடுகளை தமது இராணுவத் தீர்வுக்கு கிடைத்த அங்கீகாரமாக என சிறீலங்கா அரசாங்கம் கருதுவதா தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனை உணர்ந்து தமிழீழ மக்களின் உரிமைப் போராட்டத்திற்குகு ஆதரவு வழங்குவதன் மூலமே பேச்சுவார்த்தைக்கான உகந்த சூழ்நிலையை சர்வதேச சமூகம் தோற்றுவிக்க முடியும் என அரசியற்துறைப் பொறுப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் சுயமரியாதை, உரிமைகள், சுதந்திரம் அடிப்படையில் கெளரவமான தீர்வு ஏற்படுத்தும் பட்சத்திலேயே அடக்குமுறைகள் நீங்கி சுந்திரமாகவும் சுயமரியாதையுடனும் வாழமுடியும் என்ற நம்பிக்கை தமிழ் மக்களுக்கு ஏற்படும் என்றும் இது ஈழத்தீவில் சுயபலத்துடன் சமாதானத்துடன் வாழக்கூடிய பொருளாதார பலமிக்க இரு தேசங்களின் தோற்றுவாய்க்கு வழிகோலும் எனவும் தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்த உண்மையை உணர்ந்து சமாதானப் பாதையில் சிறீலங்கா அரசாங்கத்தை வழிப்படுத்த உகந்த நடவடிக்கைகளை அனைத்துலக சமூகம் எடுக்க வேண்டும் எனவும் தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் மேலும் குறிப்பிட்டுளார்.

பதிவு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உறுதியான தீர்வுக்கு வலுச்சமநிலையிலான அணுகுமுறை அத்தியாவசியமானது

– சு.ப.தமிழ்ச்செல்வன்

கடந்த ஐந்தாண்டு காலப்பகுதியில் சமாதான முயற்சியில் ஈடுபட்டிருந்தபோதும் சிறீலங்கா அரசு தமிழர்களுக்கு நியாயமான தீர்வு எதனையும் முன்வைக்கப்கவில்லை என்பதனை அனைத்துலக சமூகத்தினர் யதார்த்தமாக உணர்ந்திருப்பார்கள்.

தமிழர்கழுக்கு உண்மையான தீர்வை மேற்கு உலகம் விரும்புகிறதா என்கிறது தான் தமிழர்கள் எல்லோரும் புரிந்த விடயம். உண்மை என்னவெனில் இந்த மேற்குலகம் தான் இந்த அளவிற்கு தமிழர்களின் அவலத்துக்கு காரணமே. இவர்கள் வாய் அளவில் ஏதோ கூறிக்கொண்டு தங்கள் அரசியல் லாபங்களுக்கக எத்தனயோ இனங்களின் அழிவுக்கும் இன்னல்களுக்கும் காரணமாய் இருக்கிறார்கள். இதற்கு சாதகமாக மகிந்த ராஜபக்ச போன்ற குள்ள நரிகள் ஆங்காங்கே அரசமைத்து தங்கள் சொந்த மக்களினுடய அறிவின்மயை பயன்படுதி தாம் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துகொண்டு நாட்டை பெரும் பாதாழத்துக்குள் இட்டு செல்கின்ரனர். இதில் வருந்ததக்க விடயம் என்னவெனில் இவர்கள் ஆட்சியில் இருந்து இல்லாமல் போகும்பொது ஆட்சியில் இருந்து இவைகள் செய்த தவறுகளுக்காக தண்டிக்கப்படாமலே தொடர்ந்தும் மக்கள் வறுமயிலும் போர் விளைவுகளினலும் இன்னல்பட தாங்கள் சொகுசு வாழ்கை தொடர்ந்து வாழ்ந்துகொண்டு இருப்பார்கள்.

உறுதியான தீர்வு தமிழர்களுக்கு சிங்கள இனம் தெரிவு செய்யும் தலைவர்களாலும் கிடையாது மேற்குலகம் செய்யும் முயற்சிகளாலும் கிடையாது. ஏனெனில் சிங்கள மக்கள் சரி மேற்குலகம் சரி விரும்புவது தங்களுடைய லாபங்களை தானே.

எனது விருப்பம் சிங்கள மக்கள் இந்த போரின் தாக்கத்தை, தமது தலைவரின் போக்கின் பரிணாமத்தை, பாரதூரமான விளைவுகளை இன்னமும் வேகமாக உணரவேன்டும். அதற்கு புலிகளின் வான்படை இன்னமும் வேகமாக செயலில் இற்ங்கவேன்டும். அவர்கள் மிக் 29 ரக விமானங்களை வேண்ட கூட இயலாதவாறு பணவீக்கதை உருவாக்க வேன்டும் புலிகள் கட்டிஎழுப்பிய விமானப்படயின் வளர்ச்சி பலவீனபடுத்த சந்தர்ப்பமும் கால அவகாசமும் அவர்களுக்கு ஏற்ப்படுத்தக்கூடாது. பொருளாதாரதில் ஏற்படும் வீழ்ச்சியே எமது போரை வெல்ல அடித்தளம்.

Edited by Vinavu

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.