Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுமந்திரனின் விசனத்தனமான பேச்சால் தமிழ் தேசியக் கூட்டமைப்பை மக்கள் புறந்தள்ளிவிடாதீர்கள்- மயூரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

S.Mayooran.jpg

சுமந்திரனின் விசனத்தனமான பேச்சால் தமிழ் தேசியக் கூட்டமைப்பை மக்கள் புறந்தள்ளிவிடாதீர்கள்- மயூரன்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் விசனத்தனமான பேச்சால் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை புறக்கணித்துவிட வேண்டாம் என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் செ.மயூரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், சுமந்திரன் கதைப்பது சரியா பிழையா என்பதை யாழ். மக்கள் வாக்குகளால் உணர்த்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  வவுனியா விளக்குவைத்த குளத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு கூறுகையில், “தமிழ் மக்களின் உரிமைக்காகவும் தமிழ் மக்களின் அபிலாசைகளுக்காகவும் தமிழ் மக்களின் தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையிலும் இருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இம்முறையும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் அதிக ஆசனங்களைப் பெறும்.

இதுவரை காலமும் எங்களால் முடிந்ததை செய்திருக்கிறோம். மக்களின் பிரச்சினைகளை எங்களது பிரதிநிதிகள் ஊடாக ஓங்கி ஒலிக்கச் செய்திருக்கிறோம். எனினும் நாங்கள் இந்த நாட்டின் அரசாங்கம் அல்ல. எங்களுக்கு கிடைக்கின்ற வளங்களின் ஊடாக எங்களது மக்களை ஓரளவுக்கேனும் திருப்திப்படுத்தியிருக்கிறோம். அந்த நம்பிக்கையில் நாங்கள் மீண்டும் இந்தத் தேர்தலுக்கு முகம் கொடுத்திருக்கிறோம்.

இந்தவேளை, உங்களுடைய வாக்குகளை சூறையாடுவதற்காகாவும் எங்களுடைய இருப்பை இல்லாது ஒழிப்பதற்காகவும் சிலர் வாக்குகளை கேட்பதற்காக இங்கே வருவார்கள். அவ்வாறானவர்கள் சிங்கள தேசிய கட்சிகளின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கலாம். அல்லது அவர்களின் அருவருடிகளாக இருக்கலாம். அவர்கள் உங்களுடைய பிரச்சினைகளை தீர்த்துத்தருவதாகக் கூறிக்கொண்டுதான் வருவார்கள்.

உங்களுடைய வாக்குகளை சுவீகரிப்பதற்காக வசீகரத்துடன் வருவார்கள். ஆனால் எதனையும் செய்து தரப்போவதில்லை. இந்த நிலையில்தான் ஒன்றை நாங்கள் கவனமாக சிந்திக்க வேண்டும். அதாவது தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்வதற்காக முன் எச்சரிக்கை நடவடிக்கையோடு பயணித்துக்கொண்டு இருக்கின்றார்கள். அந்தவகையில்தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு மக்களின் பலத்தால் வளர்ந்திருக்கிறது.

இந்நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சிலரது விசனத்தனமான பேச்சால் தமிழ் தேசிய கூட்டமைப்பை புறம்தள்ளி விடக்கூடாது. யாழ். மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனது கருத்துக்கள் தமிழ் மக்களின் மனதை புண்படுத்துவதாக இருக்கின்றது. விடுதலைப் புலிகள் சகோதர படுகொலைகளை செய்துதான் தனி இயக்கமாக உருவாகினார்கள் என அவர் யாழ்ப்பாணத்தில் தெரிவித்திருந்தார்.

ஆனால், இன்று சுமந்திரன் இருக்கின்ற கட்சியும் சகோதர கட்சிகளைப் புறம்தள்ளி ஐந்து கட்சிகளாக இருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பை மூன்று கட்சிகள்தான் இருக்கின்ற நிலையை உருவாக்கியிருக்கிறார்கள்.

இதில் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் ஒன்று மட்டும்தான் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட காலத்தில் இருந்து இன்று வரை இருக்கின்ற கட்சியாகும். இந்நிலையில் இடையில் வந்த சிலரது கருத்துக்கள் காரணமாகவும் கொள்கை ரீதியான நிலைப்பாடுகள் காரணமாகவும் மற்றவர்கள் பிரிந்து சென்று விட்டார்கள். இந்நிலையில் நாங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பை நிராகரித்து விடக்கூடாது.

தான் சொல்வது சரி, தான் நினைப்பது சரி, தான் இலங்கை அரசாங்கத்துடன் உறவாடுவது சரி என சுமந்திரன் நினைத்துக்கொண்டு இருக்கிறார். இந்நிலையில் யாழ். மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு வாக்காளர்களும் அவர் கதைப்பது சரியா பிழையா என உணர்ந்துகொள்ள வேண்டும்.

யாழ். மாவட்ட மக்கள் வாக்களிப்பதில் இருந்து அவர் தான் கதைத்தது சரியா, பிழையா என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். அத்துடன் எமது பிரச்சனைகளைக் கதைப்பதற்கு கொழும்பில் இருந்து எவரையும் இறக்குமதி செயயப்பட வேண்டிய தேவை எமக்கில்லை.

தற்போது சுரேன் ராகவன் கூட்டமைப்பின் ஊடாக போட்டியிடுவதற்கு சந்தர்ப்பத்தைக் கோருவதாக அறிகின்றேன். ஏற்கனவே சுமந்திரனது கருத்துக்களாலும் விக்னேஸ்வரனது கருத்துக்களாலும் நான்றாகவே பட்டுத்தெளிந்திருக்கிறோம்.

அவர்களது கருத்துக்களால் எமது பிரச்சினைகள் எவ்வளவு தூரம் சீரழிந்து போயுள்ளது என்பதையும் உணர்ந்துள்ளோம். அந்த வகையில் யாழ்.மாவட்ட மக்களும் தமக்கான நாடாளுமன்ற உறுப்பினரைச் சரியாகத் தெரிவுசெய்வார்கள். ஆகவே வன்னி தேர்தல் தொகுதியிலும் மக்களோடு மக்களாக நண்பனாக செயற்படக்கூடிய செல்வம் அடைக்கலநாதனும். வினோநோகதாரலிங்கமும் களத்தில் இருக்கிறார்கள் அவர்களையும் ஆதரிக்க வேண்டிய தேவை எமக்கிருக்கிறது” எனத் தெரிவித்தார்.

http://athavannews.com/சுமந்திரனின்-விசனத்தனமா/

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் விசனத்தனமான பேச்சால் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை புறக்கணித்துவிட வேண்டாம் என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் செ.மயூரன் தெரிவித்துள்ளார்.

அப்போ சுமந்திரனை புறந்தள்ளி விடுங்கள்

8 hours ago, தமிழ் சிறி said:

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் விசனத்தனமான பேச்சால் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை புறக்கணித்துவிட வேண்டாம் என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் செ.மயூரன் தெரிவித்துள்ளார்.

அப்ப நீங்க ஏன் அவரை இன்னும் விட்டு வைச்சிருக்கீக?

உங்க விஷமத்தனம் அதை வென்றதா இருக்குதல்லோ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.