Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாமாங்கம் !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாமாங்கம் !


மலையாளம், தமிழ் உட்பட நான்கு மொழிகளில் வெளியான படம்தான் மாமாங்கம்!.

நான் சினிமா விமர்சனம் செய்ய விளையவில்லை.!! இந்தப் படத்தைப் பார்த்தபோது என் மனதில் தோன்றியவற்றைப் பகிர விரும்பினேன். அவ்வளவே!

உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படம் இரண்டு நாட்டில் இரு வேறு நூற்றாண்டுகளில் நடைபெற்ற இரண்டு உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டதோ என்று மயங்க வைத்தது. உலகில் பல்வேறு காலங்களில் நிகழ்ந்த, தோற்றுப்போன இனக் குழுமங்களின் கதையை ஒத்தது என்றும் கூறலாம் என்று என் நண்பன் சொல்கிறான். 

இது பதினேழாம் நூற்றாண்டில் நடக்கும் வரலாற்றுக் கதை. சேர மன்னர்களின் ஆட்சி முடிந்த பின்னர், குறுநில மன்னர்கள் உருவான பின்னரான காலப் பகுதியில் நடைபெற்ற சம்பவங்களே இந்தப் படத்திற்கு அடிப்படை. 

தங்களுக்கு உரிமையான நிலத்தை எதிரிகளிடம் பறிகொடுத்த வள்ளுவ நாட்டைச் சேர்ந்த வீரர்கள் பன்னிரண்டு வருடத்துக்கு ஒருமுறை எதிரி நாட்டில் நடக்கும் மாமாங்கம் என்கின்ற திருவிழாவில் கலந்து கொண்டு எதிரியை வீழ்த்தி பரம்பரைப் பகையை தீர்க்க முயல்வதுதான் கதை.

இந்தப் படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே இருபதாம் நூற்றாண்டில் நடைபெற்ற இலங்கைத் தமிழர்களின் போராட்டம் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. இலங்கையில் நடைபெற்ற ஆயுதப் போராட்டம் பழிவாங்கும் போராட்டம் இல்லை என்பது வேறு விடயம்.

என்றோ நடந்து முடிந்த நிகழ்வுக்காக வருடங்கள் கடந்தும் பகையை நீட்டிக்க வேண்டாம். அடுத்த தலைமுறையாவது அமைதியாக வாழட்டும் என்கிற கருத்தை மம்முட்டியின் பாத்திரத்தினூடாக இந்தப் படம் சொல்கிறது.

ஒரு மாமாங்கத்தின்போது தற்கொலைப் படையாளியாக சென்ற அவர் எதிரியையும் கொல்லாமல் தானும் சாகாமல் சண்டையின் முடிவில் தப்பிச் சென்று இந்த வாழ்க்கை வேண்டாம் என்பதாக வேறிடத்தில் ஒதுங்கி வாழ்கிறார். 

அதனால் அவர் சார்ந்த கூட்டம் அவரைத் துரோகியாக கருதுகிறது. இதுவும் எம்மத்தியில் எம்மோடு இணைந்து போகாத யாரையும் இலகுவாக துரோகியென அடையாளப்படுத்தும் மனநிலையை ஒத்துப் போவதாக இருக்கிறது. 

இந்தப் படம் வள்ளுவநாடு என்ற இடத்தைச் சுற்றி நடந்த உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டதென்று சொல்லப்பட்டாலும், எமது அண்மைய வரலாற்றையும் ஒத்துப் போவதால், எமது கதைதான் இந்தப் படமோ என்ற மயக்கம் படம் பார்க்கும்போது ஏற்படலாம். இதே உணர்வு தமது இழந்த உரிமைக்காகப் போராடிய வேறு இனமக்களுக்கும் ஏற்படக்கூடும். 

இறுதியில் மம்முட்டியூடாக சொல்லப்படும் செய்தியும் எமக்கான செய்தியோ என்று நினைக்கவும் வைக்கிறது. 
சந்தர்ப்பம் கிடைத்தால் ஒருமுறை பாருங்கள்!

 

 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

நான் சினிமா விமர்சனம் செய்ய விளையவில்லை.!! இந்தப் படத்தைப் பார்த்தபோது என் மனதில் தோன்றியவற்றைப் பகிர விரும்பினேன். அவ்வளவே!

தகவலுக்கு நன்றி கிருபன். பார்த்து விட்டுச் சொல்கிறேன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kavi arunasalam said:

தகவலுக்கு நன்றி கிருபன். பார்த்து விட்டுச் சொல்கிறேன்

Amazon Prime இல் மலையாளத்தில் உள்ளது. தமிழில் வரும் என்று நினைக்கின்றேன். 

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி கிருபன் ..இது உங்கள் சொந்த ஆக்கன் இல்லைத் தானே 
 

இந்த படத்தை பார்த்திட்டு எங்கட ஆக்கள் தலைவர் திரும்பி வருவார் என்று சொல்லப் போயினம் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, ரதி said:

இணைப்பிற்கு நன்றி கிருபன் ..இது உங்கள் சொந்த ஆக்கன் இல்லைத் தானே 
 

இந்த படத்தை பார்த்திட்டு எங்கட ஆக்கள் தலைவர் திரும்பி வருவார் என்று சொல்லப் போயினம் 

எனது நண்பன் எழுதியது. நானும் இடையிடையே அக்கம்-பக்கம் இல் எழுதுவதுண்டு.😎

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, கிருபன் said:

எனது நண்பன் எழுதியது. நானும் இடையிடையே அக்கம்-பக்கம் இல் எழுதுவதுண்டு.😎

அதிலையும் கிருபன் என்ட பெயரிலா எழுதுற நீங்கள் :LOL:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ரதி said:

அதிலையும் கிருபன் என்ட பெயரிலா எழுதுற நீங்கள் :LOL:

ஆமாம். ஆனால் ஒரு பதிவுதான் எனது பெயரில் காட்டுகின்றது! ஏனென்று பார்க்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

படம் ஆரம்ப 30 நிமிடம் அளவில் மட்டுமே பார்த்தேன், மாமாங்கம் பற்றிய காட்சிகளினூடான விளக்கம் , பின்னர் மம்முட்டி அறிமுக காட்சி , மம்முட்டியை தேடிச்செல்பவர்களின் பிரியாவிடைக்காட்சி என்பன மிகவும் தேவைக்கதிகமாகவும் அழுத்தமற்ற காட்சிகள் என்பன படத்தை சலிப்பு தட்ட வைக்கின்றது , இந்த பதிவை படம் பார்ப்பதற்கு முன் பார்த்திருந்தால் முழுமையாக திரைப்படத்தை பார்த்திருப்பேன் ( எனது இரசனை ஒரு மட்டமான இரசனை என நினைக்கிறேன்).

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.