Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெண்களுக்கான சுயதொழில் வாய்ப்புக்கு உதவும் திட்டம்

Featured Replies

a12.jpg?itok=z9Tbn4l4

உற்பத்திகளுக்கு சந்தை வாய்ப்பு இருக்க வேண்டும்.அப்போதுதான் அவ்வுற்பத்திகள் வருமானத்தைத் தரும். கிழக்கு மாகாண கிராமிய அபிவிருத்தித் திணைக்களம் மாதர்களின்அபிவிருத்தியை நோக்கமாகக் கொண்டு கிழக்கு மாகாணத்தின் கிருமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் 45இடங்களில் மாதர் அபிவிருத்திக்கான தொழிற் பயிற்சி நிலையங்களை நடத்தி வருகின்றது.

இவற்றில் 1620பயிற்சியாளர்கள் பயிற்சி பெறுகிறார்கள். இவர்களது பயிற்சிக் காலம் ஆறு மாதங்களாகும். இவர்களுக்கு நிபுணத்துவத் திறன் படைத்த பயிற்றுவிப்பாளர்கள் பயிற்சியை வழங்கி வருகிறார்கள்.

இந்த மூன்று நாட்கள் கொண்ட  பொருட்காட்சி மட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் விசாலமான வளாகத்தில் அண்மையில் தொடர்ந்து மூன்று நாட்களாக நடைபெற்றது.

இதில் 106 காட்சியறைகளினூடாக சுமார் 2000 உற்பத்திப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அவை யாவுமே இப்பயிற்சி நிலையங்களினூடாக  புதிதாக உற்பத்தியாகிய பொருட்களேயாகும்.

இந்த மூன்று நாட்களிலும் ஐயாயிரத்திற்கு மேற்பட்ட பார்வையாளர்கள் பொருட்காட்சியை  பார்வையிட்டதாக புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. பார்வையாளர்களிடமிருந்து எதுவித கட்டணங்களும் அறவிடப்படாதது இப்பொருட்காட்சியின் விசேட அம்சமாகும்.

இப்பொருட்காட்சியை கிழக்கு மாகாண ஆளுநர் திருமதி அனுராதா ஜகம்பத் சம்பிரதாய நிகழ்வுகளோடு திறந்து வைத்தார். நிகழ்வுக்கு கிழக்கு மாகாண உள்ளூராட்சி, கிராமிய அபிவிருத்தி, அமைச்சின் செயலாளர்  யு.எல்.ஏ.அஸீஸ் தலைமை தாங்கினார்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள் எஸ்.வியாழேந்திரன், சீ.யோகேஸ்வரன் மற்றும் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் துஸித்த பி. வணிகசிங்க, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இதனையொட்டிய ஆரம்ப வைபவத்தில் உரை நிகழ்த்திய கிழக்கு மாகாண ஆளுநர் தனது உரையில் இப்பொருட்காட்சி பல்லின மக்களை உள்ளடக்கியதாகவும், அவர்களது கலாசாரம், பழக்கவழக்கங்கள் என்பவற்றை வெளிக்கொணர்வதாகவும், அவற்றுக்கு மதிப்பளிப்பதாகவும் குறிப்பிட்டார். இக்கண்காட்சி சிறப்பாக ஒழுங்குபடுத்தப்பட்டிருப்பதை தான் கவனித்ததாகவும் ஆளுநர் குறிப்பிட்டார்.

பல்சமயங்கள், பல் இனங்கள் கொண்ட கிழக்கு மாகாணத்தில் இவ்வாறான நிகழ்வுகள் அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கியதாக இருப்பது எல்லோருக்கும் சந்தோசம் தரக் கூடியது என அவர் பாராட்டினார். இது ஒரு சாதாரண நிகழ்வல்ல... இந்த மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் இருக்கின்ற கிராமியப் பெண்களின் குடிசைக் கைத்தொழிலையும், கிராமியக் கைத்தொழிலையும் வெளிக்காட்டி நிற்கிறது என்றார் ஆளுநர்.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய கிழக்கு மாகாணத்தின் முதன்மைச் செயலாளர் துஸித்த பி. வணிகசிங்க கூறுகையில், "கிராம அபிவிருத்தித் திணைக்களம் ஒரு பலம் வாய்ந்த அமைப்பு. அது எமது மாகாணத்தில் இருக்கின்ற ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவையும் இணைத்து செயற்படுகிறது. அங்கிருக்கின்ற மாதர்களுக்கு, அங்கேயிருக்கக் கூடிய இலகுவான மூலவளங்களை இனம்கண்டு அவைகளைக் கொண்டு பயிற்சி அளித்து வருகிறது.

அதனது 2000இற்கு மேற்பட்ட உற்பத்திகளே இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதனை ஒழுங்குபடுத்துவது ஒரு இலகுவான விடயமல்ல. மிக ஆழமான பிரயத்தனம் இங்கு பயன்படுத்தப்பட்டிருப்பதை இப்பொருட்காட்சியை பார்க்கின்றவர்களால் ஊகிக்க முடியும். இப்பொருட்காட்சி உற்பத்தியாளர்களுக்கும், அவ்வுற்பத்திகளை தேடுபவர்களுக்கும் ஒரு சந்திப்பை ஏற்படுத்துவதற்கான களமாகும்" என்றார்.

கிராமிய அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளர் என். தனஞ்செயன் இங்கு கருத்துத் தெரிவிக்ைக யில், "இப்பொருட்காட்சியின் நோக்கம் உற்பத்தியாளர்களையும், நுகர்வோரையும் சந்திக்க வைப்பதுடன், உற்பத்தியாளர்களின் திறமைகளை வெளிக்கொணர சந்தர்ப்பம் அளிப்பதுமாகும். உற்பத்தியாளர்கள் தமது உற்பத்திகள் தொடர்பில் நுகர்வோரின் விமர்சனங்களை  உள்வாங்கிக் கொள்ளவும், எதிர்காலத்தில் தமது உற்பத்திகளில் திருத்தங்களையும்  திருப்பங்களையும் மேற்கொள்ளவும் சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுப்பதாகும்" என்றார்.

"இந்த நோக்கம் நிறைவேறியிருப்பதைக் காணக் கூடியதாகவுள்ளது. இவற்றினூடாக எமது மாகாணத்திலுள்ள பெண்களின் வருமானம் உயர வேண்டும். அவர்களும் அவர்களது குடும்பங்களும் சுபிட்சத்தோடு வாழ வேண்டும் என்பதே எமது திணைக்களத்தின் இலக்கு. அது நிறைவேறி வருகிறது" என்றும் அவர் கூறினார்.

எஸ்.எஸ்.தவபாலன்
புளியந்தீவுகுறூப் நிருபர்

https://www.thinakaran.lk/2020/03/07/கட்டுரைகள்/49259/பெண்களுக்கான-சுயதொழில்-வாய்ப்புக்கு-உதவும்-திட்டம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.