Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"தனிமைப்படுத்தப்பட்டு வீடு திரும்பியவருக்கு கொரோனா": இதுவரை 162 தொற்றாளர்கள் அடையாளம் : 9 சிறுவர்களும் உள்ளடக்கம்

Featured Replies

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, இன்று மாலை மாலை 5.30 மணியுடன் நிறைவடைந்த 48 மணி நேரத்துக்குள் 11 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இதுவரையில் இலங்கையில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 162 ஆக உயர்ந்துள்ளது. இதில் நேற்று 8 பேரும், இன்று மட்டும் புதிதாக மூன்று தொற்றாளர்களும் கண்டுபிடிக்கப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க கூறினார்.

இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட 11 தொற்றாளர்களில் தென் கொரியாவில் இருந்து நாடு திரும்பி, கந்தகாடு தனிமைப்படுத்தல் முகாமில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு தொற்று நீக்கல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டு வீட்டுக்கு அனுப்பட்ட ஒருவரும் உள்ளடங்குவதாக சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவித்தன.

நேற்று, அவர் மத்துகம - நவ துடுவ பகுதியில் வைத்து கண்டறியப்பட்டுள்ள நிலையில் அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலைக்கு சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கடந்த மார்ச் 10 ஆம் திகதி தென் கொரொயாவிலிருந்து நாட்டுக்கு வந்துள்ள நிலையில், கந்தகாடு தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். பின்னர் 14 நாள் தனிமைப்படுத்தல் காலத்தின் பின்னர் மார்ச் 24 ஆம் திகதி வீடு திரும்பியுள்ள நிலையிலேயே,நேற்று கொரோனா தாக்கம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தனிமைப்படுத்தல் காலத்தின் பின்னர் வீடு திரும்பியதும் அவரை பார்வை இட வந்தவர்கள், அவ்வீட்டில் வசித்த அந்நபரின் தாய் மற்றும் உறவுக்கார யுவதி ஒருவரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

நேற்று கண்டறியப்பட்ட 8 தொற்றாளர்களில் மூவர் யாழ்ப்பாணத்தில் கண்டுபிடிக்கப்பட்டவர்களாவர். அவர்கள் சுவிஸ் மத போதகரின் நிகழ்வில் கலந்து கொண்வர்கள் என சுகாதார அதிகாரிகள் கூறினர். ஏனையோர் தெஹிவளை, புத்தளம், பண்டாரகம, பேருவளை பகுதிகளில் அடையாளம் காணப்பட்டவர்களாவர். பேருவளையில் அடையாளம் காணப்பட்ட பெண் கர்ப்பிணியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு குழந்தை பிரசவித்தவராவார்.

இந்நிலையில் இன்று அடையாளம் காணப்பட்ட மூவரில் இருவர் கண்டி - அக்குரணை பகுதியிலும் ஒருவர் புத்தளத்திலும் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்தது.

இந்நிலையிலேயே இலங்கையில் இதுவரை 162 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 9 பேர் சிறுவர்களாவர். அவ்வாறு அடையாளம் காணப்பட்ட சிறுவர்களில் ஒரு வருடமும் 4 மாதங்களும் நிறம்பிய குழந்தை ஒன்று இன்று குணமடைந்து அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையிலிருந்து வெளியேறியது.

அங்கொடை தொற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெறும் எந்த குழந்தைக்கோ, சிறுவர்களுக்கோ கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் பாரதூரமாக இல்லை எனவும், அவர்களுக்கு அவர்களது தாய், தந்தை போன்றோரிடமிருந்தே வைரஸ் தொற்றியுள்ளதாகவும் அங்கொடை தொற்று நோய் வைத்தியசாலையின் சிறுவர்கள் குறித்த விஷேட வைத்திய நிபுணர் மேனா கப்ரால் தெரிவித்தார்.

இதுவரை இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள 162 தொற்றாளர்களில் 5 பேர் மரணமடைந்துள்ள நிலையில், 27 பேர் குணமடைந்து வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளனர். மேலும் 130 பேர் தற்சமயம் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அதிகமானோர் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 38 ஆகும். இதற்கு அடுத்தபடியாக புத்தளம் மாவட்டத்தில் 27 பேரும், களுத்துறையில் 25 பேரும், கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். கம்பஹா மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட தொற்றாளர்கள் 11 பேர் ஆவர். இதற்கு அடுத்தபடியாக யாழ். மாவட்டத்தில் 7 தொற்றாளர்களும், கண்டி மாவட்டத்தில் 6 தொற்றாளர்களும், இன்று மாலை 5.30 மணி வரையிலான காலப்பகுதியில் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் மேல் மாகாணத்தின் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, வட மேல் மாகாணத்தின் புத்தளம், மத்திய மாகாணத்தின் கண்டி, வடக்கின் யாழ். மாவட்டங்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றின் அச்சுறுத்தல் தொடர்ந்து உச்ச நிலையில் உள்ளதாக சுகாதார தரப்பினர் சுட்டிக்காட்டினர்.
இவ்வாறான பின்னணியில் கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் மட்டும் நாடளாவிய ரீதியில் 30 வைத்தியசாலைகளில் 273 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
 

https://www.virakesari.lk/article/79286

3 hours ago, ampanai said:

குறித்த நபர் கடந்த மார்ச் 10 ஆம் திகதி தென் கொரொயாவிலிருந்து நாட்டுக்கு வந்துள்ள நிலையில், கந்தகாடு தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். பின்னர் 14 நாள் தனிமைப்படுத்தல் காலத்தின் பின்னர் மார்ச் 24 ஆம் திகதி வீடு திரும்பியுள்ள நிலையிலேயே,நேற்று கொரோனா தாக்கம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தொற்றை உறுதிப்படுத்தும் முறையான பரிசோதனை முறைகள் போதியளவு இல்லாத நிலையில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை வகைப்படுத்தும் பெரும்பாலான பரிசோதனைகள் குத்துமதிப்பாகவே நடைபெறுவதாக தெரிகிறது.

கொரோனா தொற்றாளர்களுடன் பழகியவர்களை மீண்டும் மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்த தீர்மானம்!

கொரோனா-வைரஸ்.jpg

கொவிட் 19 என்னும் கொரோனா வைரஸ் நாட்டினுள் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ள நிகழ்ச்சித்திட்டங்களின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானிப்பதற்கான கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ  தலைமையில் இன்று(சனிக்கிழமை) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் அநுருத்த பாதெனிய வைரஸின் உலகளாவிய பரவல் மற்றும் அதனை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் மேற்கொண்ட செயற்பாடுகளின் முன்னேற்றம் குறித்து விளக்கினார்.

நாட்டினுள் வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட முதல் சந்தர்ப்பத்திலேயே ஜனாதிபதி தலைமையில் அரசாங்கம் மேற்கொண்ட உடனடி நடவடிக்கைகளின் காரணமாக இந்த சுகாதார பிரச்சினை கட்டுப்பாட்டை மீறிச் செல்ல இடமளிக்காது முகாமைத்துவம் செய்ய முடியுமாக இருந்ததாக இங்கு கருத்துத் தெரிவிக்கப்பட்டது.

ஜனாதிபதி தலைமையில் அரசாங்கம் இதுவரையில் செயற்பட்டதைப் போன்று வைரஸை ஒழிக்க தொடர்ந்தும் சுகாதார, மருத்துவ, பாதுகாப்பு மற்றும் சட்டம் உள்ளிட்ட குறித்த துறைகளின் நிபுணர்களின் ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும்.

நோயின் உலகளாவிய பரவலை கண்காணித்து உலக சுகாதார தாபனம் அவ்வப்போது செய்யும் பரிந்துரைகளை ஆராய்ந்து பொருத்தமான வகையில் பின்பற்றுவதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்படும்.

தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள கொரோனா ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டத்தை மேலும் முறையாக தொடர்ந்தும் முன்னெடுக்க கலந்துரையாடலில் இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

தொற்றுக்குள்ளானவர்கள், தொற்றுக்குள்ளானவர்கள் என சந்தேகிக்கப்படுபவர்கள் மற்றும் அவர்களுடன் பழகியவர்களை மீண்டும் மீண்டும் கடுமையான பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.

தொற்றை கட்டுப்படுத்துவதில் வெற்றிகண்ட ஏனைய நாடுகளும் இத்தகைய நடைமுறைகளையே பின்பற்றியுள்ளன. தொற்றுக்குள்ளானவர்கள் மற்றும் அவர்களுடன் பழகியவர்களை சரியாக இனம்காண முடிந்திருப்பதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜனாதிபதியின் ஆலோசகர் லலித் வீரதுங்க, முன்னாள் ஆளுநர் வைத்தியர் சீதா அரம்பேபொல, பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா, பதில் பொலிஸ் மா அதிபர் சீ.டீ. விக்ரமரத்ன, அரச வைத்திய அதிகாரிகளின் சங்கத்தின் அதிகாரிகள், தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப நிறுவனத்தின் தலைவர் ஜயன்த டி சில்வா ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.

http://athavannews.com/கொரோனா-தொற்றாளர்களுடன்-ப/

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, போல் said:

தொற்றை உறுதிப்படுத்தும் முறையான பரிசோதனை முறைகள் போதியளவு இல்லாத நிலையில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை வகைப்படுத்தும் பெரும்பாலான பரிசோதனைகள் குத்துமதிப்பாகவே நடைபெறுவதாக தெரிகிறது.

இதுதான் உண்மை...வளர்ச்சி அடைந்த நாடுகளே..திணறும்போது...இங்கு நடக்கும் சோதனைகளை நினைத்தால் .........வராமல் என்ன செய்யும்....இதற்கிடையில் வாய்ச்சவடால் கூட...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.