Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊரடங்கால் தோட்டங்களிலேயே அழுகி வீணாகும் கிர்ணி பழங்கள்; துக்கத்தில் புதுச்சேரி விவசாயிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

farmers-worst-affected-in-puduchery

தோட்டத்திலேயே அழுகும் கிர்ணி பழங்கள்.
 

புதுச்சேரி

ஊரடங்கு உத்தரவால் தோட்டங்களிலேயே அழுகிய நிலையில் கிர்ணி பழங்கள் உள்ளதால் வளர்த்த கையாலேயே அதைத் தூக்கி எறியும் மன உளைச்சலில் புதுச்சேரி கிராமப்புற விவசாயிகள் உள்ளனர்.

புதுச்சேரி கிராமப் பகுதிகளில் கோடைக்காலத்துக்கான பயிர்களான தர்பூசணி, கிர்ணி பழங்கள் பயிரிட்டு வெளிமாநில வியாபாரிகள் வந்து வாங்கிச் செல்வது வழக்கம். புதுச்சேரியிலும் பல இடங்களில் இப்பழங்கள் விற்பனையாகும்.

அதிக அளவில் புதுச்சேரி கிராமப்பகுதியில் பி.எஸ்.பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் விளைந்த கிர்ணி பழங்களை வாங்க யாரும் வெளிமாநிலங்களில் இருந்து வரமுடியவில்லை. ஏனெனில், ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதே முக்கியக் காரணம். கடைகளும் மூடப்பட்டுள்ளன. தெருவில் மட்டுமே அதிக அளவில் கொட்டி இப்பழம் விற்கப்படும்.

கிர்ணி பழத்தை 7 ஏக்கரில் பயிரிட்ட பி.எஸ்.பாளையத்தைச் சேர்ந்த ரவி கூறுகையில், "கிர்ணி பழத்தில் அதிக வைட்டமின்கள், சத்துகள் நிறைந்துள்ளன. இதை கோடையில் ஜூஸ் செய்து சாப்பிடும் போது உடல் வெப்பத்தைத் தாங்கும்.

அத்துடன் நிக்கோட்டின் பாதிப்பிலிருந்து நுரையீரலைக் காக்கும். இதில் கொலஸ்ட்ரால் துளியும் இல்லை. நோய் எதிர்ப்பு சக்தி தரும். அல்சர் நோய்க்கு மருந்து. இதை அறிந்து கடந்த 6 ஆண்டுகளாக கிர்ணி பழம் பயிரிட்டு வந்தேன்.

இம்முறையும் நன்றாக கிர்ணி விளைச்சல் இருந்தது. அறுவடை செய்யும் நேரத்தில் கரோனா அச்சுறுத்தல் எழுந்தது. ஊரடங்கும் அமலானதால், வெளியூரிலிருந்து யாரும் வாங்க வர முடியாத சூழல் ஏற்பட்டது. தோட்டத்திலேயே அழுகி வீணாவதைப் பார்க்க முடியவில்லை.

நான் ரூ.4 லட்சம் செலவிட்டேன். அத்தனையும் கடன்தான். ரூ.10 லட்சம் வரை லாபம் கிடைக்கும் என எதிர்பார்த்தேன். ஆனால் மொத்தமாக வீணாகிவட்டது" என்று கூறுகிறார்.

தோட்டத்தில் பணியாற்றும் பெண்கள் கூறுகையில், "நாங்கள் கஷ்டப்பட்டு விளைவித்த பழங்களை நாங்களே தூக்கி எறிந்து அப்புறப்படுத்துகிறோம். எப்படியும் ரூ.25-க்கு விற்கும் இப்பழம் தற்போது ரூ.5-க்கு தான் விற்பனையாகிறது.

தோட்டத்தை தற்போது சுத்தம் செய்யத் தொடங்கிவிட்டோம். மனசுக்கு கஷ்டமாக இருக்கிறது. அடுத்த முறை எப்படி விவசாயம் நடக்கும் எனத் தெரியவில்லை. தோட்டத்தில் பார்த்து பார்த்து வளர்த்த பழங்கள் தற்போது வீணாகி நிற்பதைக் காண்பதே கஷ்டம்தான்" என்றனர்.

விவசாயிகள் தரப்பில் கூறுகையில், "கடன் வாங்கி பல லட்சம் செலவு செய்தோம். மொத்தமும் நஷ்டம்தான். அரசு எங்களுக்கு உதவுமா" என்று கேள்வி எழுப்புகின்றனர்.

https://www.hindutamil.in/news/tamilnadu/548154-farmers-worst-affected-in-puduchery-2.html

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தார்களை வெட்ட கூலி ஆட்கள் வராததால் மரத்திலேயே வீணாகும் வாழைப்பழங்கள்: விவசாயிகள் கவலை

TamilNews_Apr_2020__959942042827607.jpg

 

குளித்தலை: தார்களை வெட்ட கூலி ஆட்கள் வராததால் மரத்திலேயே வாழைப்பழங்கள் பழுத்து தொங்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த மாயனூர் கதவனையில் இருந்து தென் கரைவாய்க்கால், கட்டளை மேட்டு வாய்க்கால் மூலம் 1.50 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. இதில் 75 சதவீதம் வாழை பயிரிடப்படுகிறது அதில் பூவன், கற்பூரவள்ளி, ரஸ்தாளி, நேந்திரம் உள்ளிட்ட ரகங்களை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 4 வருடங்களுக்கு முன் வறட்சியால் தண்ணீரின்றி வாழை விவசாயிகள் பெருமளவிற்கு பாதிக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து கஜா புயலில் 90 சதவீதம் வாழை விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். தற்போது கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலியால் வாழை பயிரிட்டுள்ள விவசாயிகள் வாழை மரங்களின் வாழைத்தார்களை வெட்ட முடியாமல் தவித்து வருகின்றனர்.

தமிழக அரசு ஊரடங்கு உத்தரவால் கூலி தொழிலாளிகளும் வரமுடியாத சூழ்நிலையில் வாழைத்தார்களை வெட்ட முடியவில்லை.மேலும் வாழைத்தார்களை வாகனங்களில் வைத்து வேறு இடங்களுக்கு செல்லவே முடியாத சூழ்நிலையில் லட்சக்கணக்கான வாழைத்தார்கள் மரத்திலேயே பழுத்து விடுகின்றன. மேலும் வியாபாரிகள் குறைந்த விலைக்கே கேட்பதால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு தமிழக அரசு, ஊரடங்கு உத்தரவால் விவசாய இடுபொருள்கள் கொண்டு செல்வதில் உள்ள சிரமங்களைக் கண்டு அந்த விவசாயிகள் உற்பத்திப் பொருளை வெளி சந்தைக்கு விற்பனைக்கு எடுத்து செல்ல உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, கடந்த 2 நாட்களாக குளித்தலை வட்டாரத்திலுள்ள விவசாயிகள் வாழைத்தாரை வெட்டி வெளிசந்தைக்கு விற்பனைக்கு எடுத்துச் செல்ல அனுமதித்துள்ளனர். இதனால் வாழைத்தார்கள் வெட்டப்பட்டு சிறிய வாகனம் மூலம் எடுத்து செல்லப்படுகிறது.இருந்தாலும் வாழை விவசாயிகள் போதிய விலை இல்லாமல் பெரும் நஷ்டத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். மேலும் இந்த தடை உத்தரவு காலத்தில் ஏற்பட்டுள்ள இழப்பிற்கு வாழை விவசாயிகளுக்கு தமிழக அரசு ஏக்கருக்கு ரூ 50ஆயிரம் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=577109

 

 

  • கருத்துக்கள உறவுகள்

ப‌ட்டினி தாங்க‌ முடியாம‌ த‌விக்கும் ம‌க்க‌ள் ப‌ல‌ , விசாயிக‌ள் த‌ங்க‌ளின் ப‌ழ‌ங்க‌ள் வீனா போகுது என்று க‌வ‌லை ,

Edited by பையன்26

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா ஊரடங்கால் 300 ஏக்கரில் மரத்திலேயே அழுகும் மாம்பழங்கள்: வேதனையில் கருங்குளம் விவசாயி!

144 ஊரடங்கு காலத்தில் வேலையாட்கள் வராததாலும் ஏற்றுமதிக்கும் வழி இல்லாததாலும் மரத்திலே பழங்களை விட்டுவிட்டதால் அழுகி வீணாகி வருகிறது.

கொரோனா ஊரடங்கால் 300 ஏக்கரில் மரத்திலேயே அழுகும் மாம்பழங்கள்: வேதனையில் கருங்குளம் விவசாயி!

 

சிவகங்கை மாவட்டம் கருங்குளத்தில் கொரோனா ஊரடங்கால் 300 ஏக்கரில் மரத்திலேயே மாம்பழங்கள் அழுகி வீணாகின்றன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

கொரரோன வைரஸ் காரணமாக பல கோடி ருபாய் அல்போன்சா மாம்பழம் கடுமையாக பாதிக்க பட்டு உள்ளன. சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே கருங்குளத்தில் முருகேசன் என்ற விவசாயி 300 ஏக்கரில் 15 ஆண்டுக்கு முன்பே உயர்தர அல்போன்சா மாமரத்தை நடவு செய்து விவசாயம் செய்து வந்தார்.

கடந்த 10 ஆண்டாக பலன் கிடைத்து உள்நாடு மட்டும் இன்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வந்த இந்த விவசாயிக்கு இந்தாண்டு பெரும் நஷ்டத்தை எற்படுத்தியுள்ளது. 144 ஊரடங்கு காலத்தில் வேலையாட்கள் வராததாலும் ஏற்றுமதிக்கும் வழி இல்லாததாலும் மரத்திலே பழங்களை விட்டுவிட்டதால் அழுகி வீணாகி வருகிறது.


இதனால் இவர் கோடிக் கணக்கில் நஷ்டத்தை சந்தித்துள்ளார். விவசாயி முருகேசன் ஆண்டுதோறும் மார்ச் முதல் ஜூலை வரை அல்போன்சா மாம்பழங்களைப் பறித்து பேக்கிங் செய்து நாட்டின் முக்கிய நகரங்களான டெல்லி, மும்பை கொல்கொத்தா, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைப்பதோடு சிங்கப்பூர் மலேசியா உள்ளிட்ட பல வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது வழக்கம்.

இதில் ஒரு 12 கிலோ பாக்ஸ் 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் என 300 டன் வரை வருமானம் ஈட்டி வந்தார். இந்தாண்டு மரத்திலே பழம் அழுகி இழப்பு ஏற்பட்டு தவித்து வருகிறார். காப்பீடும் செய்யமுடியாத நிலையில் அரசு கைகொடுக்க வேண்டும் என்பது எதிர்பார்த்து காத்திருக்கிறார்.

நீர் வளம் இல்லாத இப் பகுதியில் கிடைக்கும் மழை நீரை கால்வாய்கள் மூலம் சேமித்து சொட்டு நீர் பாசனம் மூலம் மா விவசாயம் செய்து சாதனை படைத்த விவசாயி தற்போது வேதனை அடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

https://tamil.news18.com/news/coronavirus-latest-news/mangos-are-not-sale-due-to-corona-virus-lock-down-in-sivagangai-vaiju-278109.html

 

இவ்வாறான பழங்களை தகர பேணிகளில் அடைத்து சேமிக்கும் வசதியும், குடி பானங்களை செய்யும் வசதிகளை விவசாயிகள் கூட்டாக உருவாக்க வேண்டும். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
விளைபொருட்களை விற்க செல்லும் விவசாயிகளுக்கு யாரும் எந்த தடையும் விதிக்கக் கூடாது - முதல்வர் பழனிசாமி
 
தமிழகத்தில் எந்தெந்த தொழிற்சாலைகள் இயங்கலாம் என்பது திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
பதிவு: ஏப்ரல் 17,  2020 14:27 PM
சேலம், 
 
விளைபொருட்களை விற்க செல்லும் விவசாயிகளுக்கு யாரும் எந்த தடையும் விதிக்கக் கூடாது என்று முதல்வர் பழனிசாமி  தெரிவித்தார். செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முதல்வர் பழனிசாமி மேலும் கூறியதாவது:- “  சேலம் மாவட்டத்தில் நோய் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதித்த 24 பேரில் 7 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் . 
 
சேலம் மாவட்டத்தில் 9 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.  எதிர்கட்சி தலைவர் பொறுப்புடன் செயல்பட வேண்டும். ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் செயல்படுகிறது என்பதை ஸ்டாலின் புரிந்து கொள்ள வேண்டும். மருத்துவர்கள் தான் ஆலோசனை கூற முடியும். அரசியல்வாதிகள் எப்படி ஆலோசனை கூற முடியும்? மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையை பின்பற்றினால் தான் நோயை கட்டுப்படுத்த முடியும்  
 
1.25 லட்சம் ரேபிட் பரிசோதனைக் கருவிகளை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 24 ஆயிரம் கருவிகள் வந்துள்ளன. தமிழகத்தில் எந்தெந்த தொழிற்சாலைகள் இயங்கலாம் என்பது திங்கட்கிழமை அறிவிக்கப்படும்.  விளைபொருட்களை விற்க செல்லும் விவசாயிகளுக்கு யாரும் எந்த தடையும் விதிக்கக் கூடாது” என்றார். 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தென்காசி மாவட்டத்தில் மாங்காய் விளைச்சல் அமோகம்: கரோனா ஊரடங்கால் விலை வீழ்ச்சி

mango-yields-in-tenkasi-district-corona-curfew-prices-fall  
 

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் மாங்காய் விளைச்சல் அமோகமாக உள்ளது. கரோனா தொற்று பரவலைத் தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளதால் விற்பனை பாதிக்கப்பட்டு விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

தென்காசி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையையாட்டி உள்ள கடையநல்லூர், செங்கோட்டை, வல்லம், குற்றாலம், வடகரை உட்பட பல்வேறு பகுதிகளில் மா சாகுபடி அதிக அளவில் உள்ளது. இந்த ஆண்டில் மா விளைச்சல் அமோகமாக உள்ளது. மாங்காய்கள் அறுவடைப் பணி தொடங்கிய நிலையில் கரோனா தொற்று பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால், மாங்காய்களை அறுவடை செய்து, சந்தைப்படுத்த முடியாமல் விவசாயிகள் பெரும் நஷ்டத்துக்கு ஆளானார்கள். மேலும், காட்டு யானைக் கூட்டமும் மா மரங்களை சேதப்படுத்தின.

விவசாயப் பணிகளுக்கு ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டதால், தற்போது மாங்காய் அறுவடைப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இருப்பினும், மாங்காய்களை சந்தைப்படுத்துவதில் தேக்க நிலை தொடர்வதால், விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

1587312771751.jpg

இதுகுறித்து, விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கூறும்போது, “தென்காசி மாவட்டத்தில் பல்வேறு ரக மாங்காய்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இங்கு விளையும் மாங்காய்கள் வெளி மாவட்டங்களுக்கும், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்குக் கொண்டு செல்லப்படும். தற்போது மாங்காய்கள் விளைச்சல் அதிகமாக உள்ள நிலையில், கரோனா தொற்று பரவலைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு மாங்காய்களை விற்பனைக்குக் கொண்டு செல்ல முடியவில்லை.

இதனால், மாங்காய்கள் விலை வீழ்ச்சி அடைந்துள்ளன. கடந்த ஆண்டில் 25 கிலோ மாங்காய் 500 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை விற்பனையானது. தற்போது, 400 ரூபாய் முதல் 500 ரூபாய் வரைதான் விற்பனையாகிறது. போதிய விலை கிடைக்காததால் மாங்காய் சாகுபடியில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மேலும், மாங்காய்களை அறுவடை செய்து, விற்பனைக்குக் கொண்டு செல்ல முடியாததால் மாங்காய்கள் மரத்திலேயே பழுத்து அழுகும் நிலை உள்ளது. மாங்காய்களை அறுவடை செய்யவும், இடையூன்றி சந்தைப்படுத்தவும் மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்

 

https://www.hindutamil.in/news/tamilnadu/550394-mango-yields-in-tenkasi-district-corona-curfew-prices-fall-1.html

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.