Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Rise of the planet of the apes |movie explained |movie explained in Tamil/Hollywood in tamil

Featured Replies

வில் றோமன் சான்ஸ்பிரான்ஸிஸ்கோ பயோடெக் கம்பெனியான ஜினிஸிஸ்சில் சயிண்டிஸ்டாக பணிபுரிகிறார்

அல்ஸிமேர்ஸ் நோயைக்குணப்படுத்தக்கூடிய வைரல் பேஸ் மருந்து ஒன்றை அவர்கள் கண்டுபிடிக்கின்றார்கள் ,இவர்கள் ALZ-112  என்ற பெயரைக்கொண்ட இந்த மருந்தை பிரைட் ஐ என்ற பெயரைக்கொண்ட சிம்பான்சி குரங்கு ஒன்றில் பரிசோதனை செய்துபார்க்கிறார்க்கின்றார்கள், இந்த மருந்து வெற்றியளித்தால் அடுத்ததாக மனிதர்கள் மீது இந்த மருந்தை பரிசோதனைசெய்வதுதான் இவர்களது திட்டம் இவர்கள் எதிர்பார்த்ததுபோலவே பிரைட் ஐ என்ற குரங்கின் அறிவுத்திறமை அபரிமிதமாக வளர்ச்சியடைகின்றது ,தன் திட்டத்தில் வெற்றி அடைந்துவிட்டதாக கருதிய வில் றோமன் மற்ற விஞ்ஞானிகளின் முன் இதை பிறசண்டேசன் செய்யமுற்படும்போது பிரைட் ஐ கூண்டைவிட்டு வெளியே தப்பித்து தன் முன்னால் இருப்பவர்களை தாக்க ஆரம்பிக்கின்றது வேறுவழியில்லாமல் பிரைட் ஐயை சுட்டுக்கொன்றுவிடுகிறார்கள் காவலர்கள் இவற்றால் கடுப்பாகிய கன்பனியின் பாஸ் இந்த திட்டத்தை நிரந்தரமாக மூடிவிடுகின்றார்.குரங்கிற்கு என்ன நடந்தது என்று பார்ப்பதற்காக அதன் கூட்டினருகே வரும் வில்றோமனுக்கு பிரைட் ஐ ஏன் அவ்வாறு முரட்டுத்தனமாக நடந்துகொண்டது என்பதற்கான காரணம்புரிகின்றது பிரைட் ஐ ஒரு குரங்கை பெற்றெடுத்திருந்தது அந்தவலியில்தான் அது அவ்வாறு முரட்டுத்தனமாக நடந்துகொண்டது.அந்தக்குரங்கை தானே வளர்க்கவேண்டுமென்று முடிவுசெய்த பில் றோமன் குரங்கை வீட்டிற்கு கொண்டுவருகின்றார் குரங்கிற்கு சீசர் என்றுபெயரும் இடுகின்றார்.இன்னொரு அதிர்ச்சிகரமானவிடயமும் சீசரின் கண்களைப்பார்க்கும்போது வில் றோமனுக்கு தெரியவருகின்றது.பிரைட் ஐயிடமிருந்து அதன் புத்திசாலித்தனமும் சீசருக்கு கடத்தப்பட்டிருக்கின்றது என்பதுதான் அது.

அதோடு தான் கண்டுபிடித்த ALZ-112 என்ற மருந்தை டெமென்ஸியாவால் பாதிக்கப்பட்ட தன் தந்தைக்கு ஊசிமூலம் ஏற்றுகிறார் அது அவரை மீண்டும் பழைய நிலைக்கு மீட்கின்றது 3 வருடங்களின் பின் சீசர் மெல்லமெல்ல பலவிடயங்களை கற்றுக்கொள்கின்றது,வில்றோமன் சீசரை ரெட்வூட் பார்க்கில் உள்ள காட்டிற்கு அழைத்துச்செல்கின்றார் அங்கே சீசர் தன்னைப்போன்ற குரங்குகள் அடைக்கப்பட்டிருப்பதையும் விலங்குகளை மனிதர்கள் கழுத்தில் பட்டியைக்கட்டி அழைத்துச்செல்வதையும் பார்க்கின்றது சீசருக்கு தான் ஒரு அடிமையாக நடாத்தப்படுவதுபோல் உணர்கின்றது

தான் ஒரு செல்லப்பிராணியா என வில் றோமனிடம் கேள்விகேட்க ஆரம்பிக்கின்றது சீசர் இங்குதான் பல விடயங்கள் சீசருக்கு கொஞ்சம் கொஞ்சமாக புரிய ஆரம்பிக்கின்றன தான் யார் என சீசர் வில்றொமனிடம் கேட்டு அறிந்துகொள்கின்றது,நாளாக நாளாக ALZ-112 என்ற மருந்து வில்றோமனின் உடலில் சரியாகவேலைசெய்யாமல்போக ஆரம்பிக்கின்றது

அயலவர் ஒருவரிடமிருந்து வில்லின் தந்தையை பாதுகாக்கமுயற்சிசெய்த சீசர் அயலவரை கடித்துவிடுகின்றது இதனால் சீசர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றது எவளவு முயற்சிசெய்தும் வில் றோமனினால் சீசரை வெளியில் கொண்டுவரமுடியவில்லை.சீசர் புதியசிறையில்  டோஜ் லண்டன் என்ற இளைஞனால் மிகவும் துன்புறுத்தப்படுகின்றது.அதோடு மற்றவிலங்குகள் துன்புறுத்தப்படுவதையும் பார்க்கின்றது.

அங்கே சீசருக்கு மொரீஸ் என்ற பெயருடைய ஓரங்குட்டானின் நட்புக்கிடைக்கின்றது.சீசர் மற்றகுரங்குகளைவிட அடிபுத்திசாலியாகையால் எப்படி பூட்டைத்திறப்பது என்பதையும் அறிந்துகொள்கின்றது.எல்லா விலங்குக்கூட்டத்திற்கும் ஆல்பாவாக ஒரு விலங்கு இருக்கும் அந்தவிலங்கின் கீழ்தான் மிகுதிவிலங்குகள் அனைத்தும் கட்டுப்படும் சீசர் இருக்கும் சிறைக்குள் ராக்கட் என்ற பெயருடைய பெரியசிம்பன்சி ஒன்றுதான் ஆல்பா இடத்தில் இருந்தது ஆனால் சீசர் அதை சமாளித்து அதன் இடத்திற்கு வந்துவிடுகின்றது , சிறையில் இருக்கும் விலங்குகளை அடைக்கப்பட்ட ஒரு பொதுவெளியில் சிலமணி நேரம் விடுவார்கள் அந்த இடத்திற்கு சிறைக்கதவைதிறந்து சீசர் சென்றுவிடுகின்றது.

ஜினிஸிஸ் கம்பெனியின் லாப்பில் தலைவர் ஜேகொப்  ALZ-113  என்ற வாயு நிலை மருந்தை கண்டுபிடிக்கிறார் இது ஆரம்பத்தில் சீசரின் தாய்க்கு வழங்கப்பட்ட மருந்தைவிட அதிக வீரியமானது,இதைப்பயன்படுத்தி தம் அடுத்த கட்ட பரிசோதனைகளை நடத்த குழு தீர்மானிக்கின்றது இதற்காக கோபா எனப்படும் குரங்கை பயன்படுத்துகின்றார்கள் பரிசோதனைகளால் கோபா மிகவும் கொடூரமாக கடந்தகாலத்தில் பாதிக்கப்பட்டிருந்தாலும் குழுவினர் அந்தக்குரங்கை பயன்படுத்துகின்றார்கள் வில்றோமன் அந்த மருந்தை தன் தந்தைக்கு வழங்குவதற்கு கொண்டுவருகிறார் ஆனால் அதை பயன்படுத்த தந்தை மறுத்துவிடுகிறார் அதோடு அடுத்த நாளே அவர் இறந்தும் விடுகின்றார்.இதேவேளை இந்தமருந்தை கோபா என்ற குரங்கில் பரிசோதனைசெய்யும்போது அங்கிருந்த இன்னொரு விஞ்ஞானியான பிராங்கிலின்  ALZ-113 வாயுவை தவறுதலாக சுவாசிக்க நேருகின்றது இதனால் அவர் வினோதமான ஒரு நோயால் பாதிக்கப்படுகின்றார் அதோடு பிராங்கிலின் அயலவரான ஹன்ஸிகர்   மீது தும்மிவிட அவரின் மீது இரத்தம் பீறிடுகின்றடு அடுத்த நாளே பிராங்கிளின் தனது வீட்டில் இறந்துகிடக்கின்றார் .வில்றோமன் முயற்சியால் சீசரை வெளியில்கொண்டுவர சகல ஏற்பாடுகளையும் செய்துவிட்டு சீசரிடம் செல்ல சீசர் வெளியே வர மறுத்துவிடுகின்றது

தன்னை விடுவித்து மீண்டும் அடிமையாக இருக்க சீசர் விரும்பவில்லை அதோடு சீசர் தன் இனத்தின் விடுதலை பற்றி சிந்திக்க ஆரம்பித்திருந்தது அன்றிரவே சீசர் சிறையைவிட்டு தப்பித்து வில் றோமனின் வீட்டுக்கு சென்று அங்கிருந்து  ALZ-113 நின் வாயுக்குடுவைகளை எடுத்துக்கொண்டு மீண்டும் சிறைக்க்கு வந்துவிடுகின்றது வாயுகுடுவைகளை உடைத்து அங்கிருக்கும் ஏனைய குரங்குகள் மீது எறிகின்றது இதன் மூலம் தன்னைப்போல் ஏனைய குரங்குகளின் மூளையும் விருத்தியடையும் என சீசர் அறிந்திருந்தது

அடுத்த நாள் டொட்ஜ் சீசர் தான் சிறையைத்திறக்காமலேயே பொதுவெளியில் இருப்பதை பார்த்துவிட்டு சீசரை அடித்து சிறைக்கு அனுப்ப முயற்சிசெய்கிறார்  அப்போதுதான் அதிர்ச்சிகரமான அந்த சம்பவம் நடைபெறுகிறது கோபமடைந்த சீசர் அவனின் கைகளைப்பிடித்து முதன் முதலில் உரத்த குரலில் பேசுகின்றது நோ நோ என்று சீசர் கத்துகின்றது.அதோடு  நாங்கு கால்களில் நடக்கும் சீசர் இரண்டு கால்களில் நடக்க ஆரம்பிக்கின்றது ஏனைய குரங்குகள் அனைத்தும் இதனால் மிரண்டுவிடுகின்றன.

உடனடியா அந்த சிறையில் இருக்கும் அத்தனை குரங்குகளையும் விடுவிக்க முயற்செய்செய்கின்றது சீசர் அந்தமுயற்சியில் டொட்ஜெட் தவறுதலாக இறந்துவிடுகின்றார்

சிறையைவிட்டுவெளியேறிய குரங்குகள் சான்ஸ்பிரான்ஸிஸ்கோவின் சூவில் அடைக்கப்பட்டிருக்கும் அத்தனை குரங்குகளையும் விடுதலைசெய்கின்றன ஜீன்ஸிஸில் பரிசோதனைக்காக அடைக்கப்பட்டிருக்கிம் அத்தனை குரங்குகளையும் சீசர் குரங்குக்கூட்டங்களுடன் சென்றுவிடுதலைசெய்கின்றது அதோடு கோபாவையும் சீசர் விடுதலைசெய்கின்றதுtamilinfofacts

ரெட்வூட் காட்டிற்கு அனைத்துக்குரங்குகளும் செல்ல ஆரம்பிக்கின்றன ஆனால் அவை கோல்டன் கேட் என்ற பாலத்தைத்தாண்டித்தான் செல்லவேண்டியிருந்தது அந்தப்பாலத்தைபோலீசார் தடைசெய்கின்றார்கள் அங்கே குரங்குகளுக்கும் போலீஸிற்குமிடையில் மோதல் நடைபெறுகின்றது

பக்ச் என்ற மிகப்பெரிய குரங்கு  நடந்தபோரில் ஏனைய குரங்குகளைக்காப்பாற்றுவதற்காக தன்னையே தியாகம் செய்கின்றது

ஜேகோப்பின் ஹலிஹாப்டர் வீழ்த்தப்படுகின்றது பாலத்தின் விளிம்பில் தொங்கிக்கொண்டிருக்கும் ஹெலிஹாப்டரினுள் ஜேகோப் உயிருக்குப்போராடிக்கொண்டிருக்கிறார் கோபா பாலத்தின் விளிம்பில்  நின்றுகொண்டு ஜேகோப்பை பார்த்துவிட்டு காலால் உதைந்து ஹெலிஹாப்டரை வீழ்த்திவிடுகின்றது

ஒருவழியாக குரங்குகள் காட்டை அடைந்துவிடுகின்றன

வில்றோமன் அதே காட்டுக்கு சீசரைத்தேடி ஓடுகிறார் அங்கே சீசரிடம் வில் வீட்டுக்கு வந்துவிடும்படி கெஞ்சுகிறார் ஆனால் சீசர் வில்லைக்கட்டிப்பிடித்து சீசர் இஸ் ஹோம் என்று கூறுகிறது சீசர் தன் கூட்டத்துடன் இணைந்துவிட்டது என்பதைப்புரிந்துகொண்ட வில் அங்கிருந்து வெளியேறுகிறார்


படத்தின் முடிவில்  ALZ-113 வைரஸால் பாதிக்கப்பட்ட  ஹன்ஸிகர் சான்ஸ்பிரான்ஸிஸ்கோ விமான நிலையத்திற்கு செல்கின்றார் அங்கிருந்து பாரிஸ் செல்கின்றார் அவரினூடாக  ALZ-113 உலகின் ஏனைய இடங்களுக்கு எவ்வாறு பரவுகின்றது என்று காண்பிக்கின்றார்கள்

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.