Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனநாயகத்தை மழுங்கடித்து நாட்டில் ஏகாதிபத்தியவாதத்தை நிலைநாட்ட முயற்சி - சஜித்

Featured Replies

(நா.தனுஜா)

தற்போதைய நெருக்கடி நிலையைப் பயன்படுத்தி நாட்டில் ஜனநாயகத்தை மழுங்கடித்து, ஏகாதிபத்தியவாதத்தை நிலைநாட்டுவதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருவதனை அவதானிக்க முடிகிறது.

இத்தருணத்தில் அரசியல்சார் நலன்களை அடைய முயற்சிப்பது வரவேற்கத்தக்கதல்ல மாறாக மக்களின் பிரச்சினைகளுக்கான உரிய தீர்வுகள் வழங்கப்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியிருக்கிறார்.

கொவிட் - 19 கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாட்டுமக்கள் எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் இன்று செவ்வாய்கிழமை அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கிறார்.

அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக தற்போது நாட்டின் அனைத்துத் துறைகளும் வீழ்ச்சி கண்டிருப்பதுடன், மக்களின் அன்றாட வாழ்க்கையும் ஸ்தம்பிதமடைந்திருக்கிறது. விவசாயிகள் தமது பயிர்ச்செய்கை நடவடிக்கைகளைத் தொடரமுடியாத நிலைக்குத்தந தள்ளப்பட்டுள்ளனர்.

இனிவரும் காலத்தில் பாரியதொரு உணவுப்பொருள் தட்டுப்பாடொன்றுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலை உருவாகியிருக்கிறது. மருந்துப்பொருட்களுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. மக்கள் தமது வாழ்க்கையைக் கொண்டு நடாத்துவதற்கான ஜீவனோபாய மார்க்கங்கள் அனைத்தும் முடங்கிப்போயிருக்கின்றன.

எனவே இத்தகையதொரு நெருக்கடியில் அரசாங்கம் நாட்டுமக்கள் தொடர்பில் சிந்தித்து, அவர்கள் வாழ்வதற்கான வழிவகையொன்றை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம். ஒரு மனிதன் வாழ்வதற்கான அன்றாட வாழ்க்கைச்செலவு பெருமளவில் அதிகரித்திருக்கையில், சிறியதொரு தொகைப்பணத்தை வழங்கி அவர்களது தேவைகளை ஈடுசெய்ய முடியாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

எனினும் தற்போதைய நெருக்கடி நிலையைப் பயன்படுத்தி நாட்டில் ஜனநாயகத்தை மழுங்கடித்துஇ ஏகாதிபத்தியவாதத்தை நிலைநாட்டுவதற்கா முயற்சிகள் இடம்பெற்று வருவதனை அவதானிக்க முடிகிறது. இத்தருணத்தில் அரசியல்சார் நலன்களை அடைய முயற்சிப்பது வரவேற்கத்தக்கதல்ல மாறாக மக்களின் பிரச்சினைகளுக்கான உரிய தீர்வுகள் வழங்கப்பட வேண்டும்.

https://www.virakesari.lk/article/79488

25 minutes ago, ampanai said:

தற்போதைய நெருக்கடி நிலையைப் பயன்படுத்தி நாட்டில் ஜனநாயகத்தை மழுங்கடித்து, ஏகாதிபத்தியவாதத்தை நிலைநாட்டுவதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருவதனை அவதானிக்க முடிகிறது.

இலங்கையில் எப்போது சனநாயகம் நிலவியது?

சிங்கள-பௌத்த இனமதவெறி அரச பயங்கரவாதம் தான் வருடா வருடம் அதிகரித்துச் செல்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, போல் said:

இலங்கையில் எப்போது சனநாயகம் நிலவியது?

சிங்கள-பௌத்த இனமதவெறி அரச பயங்கரவாதம் தான் வருடா வருடம் அதிகரித்துச் செல்கிறது.

உண்மை!

அரசியல்வாதிகள் சிலவேளைகளில் குழவியாகிவிடுகிறார்கள். அவர்களுக்கு மீண்டும் நாம்  சிறுவர்பூங்காவில் இருந்து தொடங்கவேண்டும்.  இலங்கையில் சனநாயகத்தைக் குப்பறக்கிடத்திக் கடந்ததின் முக்கிய பங்காளியே உங்க கட்சிதான்.  சந்தர்ப்பவாத சனநாயாகவாதிகள் இப்படியே மாறி மாறித் துப்பிக்கொண்டிருக்க வேண்டியதே.  

இலங்கையில் கடந்த ஏழு தசாப்தங்களாக நடைபெறுவது அரசபயங்கரவாத ஆட்சி. இருந்த அற்ப வாய்ப்புகளையும் 1972இலும் 1981இலுமாக இல்லாமலாக்கியதோடு நாடு நாசமாகத் தொடங்கி மீளமுடியாது இருக்கிறது.

சனநாயகம் என்பது மக்களுக்கானது என்பதே அரசியல் விதி. ஆனால் காட்டாட்சியாளரான உங்களைப் போன்றோருக்கு வாக்குச் சேர்பதற்கான மொழி(சொல்) அதனால்தான் இந்துமாவாரியில் ஒரு குருதித்துளியாக  21ஆம் நூற்றாண்டிலும்  இலங்கை. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.