Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொரோனா தடுப்பு நிவாரண நிதி

Featured Replies

கொரோனா தடுப்பு நிவாரண நிதிக்கு அஜித் ஒரு கோடியே 25 இலட்சம் ரூபா நிதி உதவி!

கொரோனா தடுப்பு நிவாரண நிதிக்கு முன்னணி நடிகரான அஜித் ஒரு கோடியே 25 லட்ச ரூபாய் நிதி உதவி வழங்கியிருக்கிறார்.

கொரோனா தடுப்பு நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்கலாம் என இந்திய அரசும், தமிழக அரசும் அறிவித்தன. இதைத்தொடர்ந்து தமிழக முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் 25 லட்ச ரூபாய் நிதி உதவி கொடுத்து, தமிழ் திரையுலகின் பங்களிப்பை தொடங்கிவைத்தார்.

இதனைத் தொடர்ந்து முன்னணி நடிகர்கள் பலரும் அரசிற்கு நிதி வழங்குவார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.

தற்போது நீடித்து வரும் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட திரைப்பட தொழிலாளர்களுக்கும் நடிகர்கள் தங்களால் இயன்ற பொருளுதவி வழங்கி வருகிறார்கள்.

இந்த இரண்டு பட்டியலிலும் இதுவரை முன்னணி நடிகர்களான 'தல' அஜித், தளபதி விஜய் போன்றவர்கள் இடம்பெறவில்லை என்ற விமர்சனம் இருந்தது.

இந்நிலையில் அஜித், பிரதமரின் நிவாரண நிதிக்கு 50 லட்ச ரூபாயும், தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு 50 லட்ச ரூபாயும், திரைப்பட தொழிலாளர் சங்கமான பெப்சிக்கு 25 லட்ச ரூபாயும் வழங்கியிருக்கிறார். இதன் மூலம் தன்மீது எழுந்த விமர்சனத்திற்கு பதிலளித்திருக்கிறார் 'தல' அஜித்.

இதனிடையே அஜித் நடித்துவரும் 'வலிமை' படத்தின் படப்பிடிப்பு ஊரடங்கு உத்தரவு காரணமாக இடைநிறுத்தம் செய்யப்பட்டிருப்பதால் திட்டமிட்டபடி படம் வெளியாகாது என்பது குறிப்பிடதக்கது.

https://www.virakesari.lk/article/79528

  • தொடங்கியவர்

ட்விட்டர் இணை நிறுவனர் ஜாக் டோர்சி COVID-19 நிவாரண நிதிக்கு 1 பில்லியன் டாலர் உறுதிமொழி அளிக்கிறார்

ஜாக் டோர்சி தனது ஒட்டுமொத்த செல்வத்தில் (கோப்பு) 28 சதவீதத்தை பங்களிப்பதாக கூறினார்

சான் பிரான்சிஸ்கோ:

ட்விட்டர் இணை நிறுவனர் ஜாக் டோர்சி செவ்வாயன்று தனது பரோபகார நிதியின் மூலம் கொரோனா வைரஸ் நிவாரணத்திற்காக தனது தனிப்பட்ட செல்வத்தில் 1 பில்லியன் டாலர் செலவழித்து வருவதாகக் கூறினார்.

தொடர்ச்சியான ட்வீட்களில் டோர்சி தனது டிஜிட்டல் கொடுப்பனவு குழு சதுக்கத்தில் தனது பங்குகளை தனது வரையறுக்கப்பட்ட பொறுப்புக் கூட்டு நிறுவனமான ஸ்டார்ட் ஸ்மால் நிறுவனத்திற்கு மாற்றுவதாகக் கூறினார், இது அவரது ஒட்டுமொத்த செல்வத்தில் 28 சதவீதத்தை பங்களித்தது.

“இப்போது ஏன்? தேவைகள் பெருகிய முறையில் அவசரப்பட்டு வருகின்றன, மேலும் எனது வாழ்நாளில் அதன் தாக்கத்தை நான் காண விரும்புகிறேன்” என்று டோர்சி கூறினார். “இது மற்றவர்களுக்கு இதேபோன்ற செயலைச் செய்ய தூண்டுகிறது என்று நான் நம்புகிறேன். வாழ்க்கை மிகவும் குறுகியது, எனவே இப்போது மக்களுக்கு உதவ இன்று எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்.”

https://trendingupdatestamil.net/world/ட்விட்டர்-இணை-நிறுவனர்-ஜ/

  • தொடங்கியவர்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், உரை

  • தொடங்கியவர்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், உரை

  • தொடங்கியவர்

கூலித் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி - ரூ.5 கோடி வழங்கிய சுந்தர் பிச்சை!

GIVE INDIA என்கிற தன்னார்வ அமைப்பு நன்கொடையாளர்களுக்கும் உதவி தேவைப்படும் மக்களுக்கும் இடையே ஒரு பாலமாக செயல்பட்டு வருகிறது. இதற்கு தற்போது கூகுள் CEO சுந்தர் பிச்சை ரூ.5 கோடி நிதி அளித்துள்ளார். தினசரி கூலித் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு கொரோனா லாக் டெளன் நேரத்தில் தேவையான பண உதவி வழங்க இந்த நிதி பயன்படுத்தப்படும் என GIVE INDIA தெரிவித்துள்ளது. மேலும், தனது ட்விட்டர் பக்கத்தில் சுந்தர் பிச்சை அவர்களுக்கு நன்றி தெரிவித்தும் ட்வீட் செய்துள்ளது.

இதற்கு முன்பு கூகுள் நிறுவனம் கொரோனா தொற்றை அழிக்க உதவும் ஆராய்ச்சிகளுக்கு 800 மில்லியன் டாலர் நிதியுதவி அளிக்க உள்ளதாக உறுதியளித்தது. சிறு வணிகங்களுக்கு மூலதனத்தை ஈட்ட உதவும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் வங்கிகளுக்கான 200 மில்லியன் டாலர் முதலீட்டு நிதியும் இதில் அடங்கும்.

https://www.vikatan.com/news/healthy/sundar-pichai-donates-5-crores

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.