Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரன், கருணா பகை போன்றே கருணா, பிள்ளையான் பகையும்

Featured Replies

கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் கருணா குழுவினர் இரண்டு குழுக்களாக பிரிந்து சென்று விட்டதாக தகவல்கள் தெரிவித்திருந்தன. இவ்வாறு குறித்த போட்டிக் குழுவுக்குத் தலைமை தாங்கியவர் பிள்ளையானும் மற்றும் அவருடைய சகாவான சீலன் எனப்படுபவருமே ஆகும். பிள்ளையான் கருணா குழுவில் மிகவும் பலம்வாய்ந்த படையணியின் தலைவராக இருந்தவர். கருணாவின் நிழல்போல அவருடனேயே கூட இருந்து செயற்பட்டவர்.

கடந்த 2004 ஏப்ரல் 9 ஆம் திகதி விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் விசேட படையணியினர் வெருகல் ஆற்றங்கரைப் பிரதேசங்களில் வைத்து கருணாவின் குழுவினர் மீது தீவிர தாக்குதல்களைத் தொடுத்த வேளையில், அதனை எதிர்கொள்ள முடியாத நிலையில் பின்வாங்கிய கருணா தனது குழுவினரைக் கலைந்து செல்லும்படி கூறிவிட்டு, வெளிநாட்டுக்குத் தப்பியோடிய சந்தர்ப்பத்தில் கருணாவின் குழுவினருக்குத் தலைமைதாங்கி அவர்களை வழிநடத்தியவர் பிள்ளையான்தான்.

இத்தகைய பிள்ளையான் தற்போது கருணா குழுவிலிருந்து பிரிந்து தனிக்குழுவாக இயங்குவதற்கு காரணம் கருணா குழுவினரால் செய்யப்பட்ட கொள்ளையடித்தல், கப்பம் வாங்குதல் மற்றும் மோசடிகள், ஒழுக்கச் சீர்கேடுகள் என்றே கூறப்படுகிறது. கருணா குழுவினரின் இந்த நடவடிக்கைகளை விரும்பாது அதிருப்தியடைந்த பிள்ளையான் இதுபற்றி பல தடவைகள் கருணாவிடம் தெரிவித்தபோதும் கருணா அதுபற்றி அக்கறை எடுக்கவில்லை. தொடர்ந்து இந்தப் பிரச்சினை சம்பந்த மாக கருணாவுக்கும் பிள்ளையானுக்கும் இடையே ஏற்பட்ட வாய்ச் சண்டை பாரதூரமாகிவிட்ட நிலையிலேயே பிள்ளையானும் அவருடைய சகா சீலனும் தமக்குச் சார்பான படையணியினருடன் தனியான குழுவாகப் பிரிந்து சென்றனர். கருணாவும் இவர்கள் இருவரையும் மறுபடியும் தனது குழுவில் சேர்த்துக்கொள்வதற்கான எந்தவித முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. அத்துடன், பிள்ளையானுக்குப் பணிந்துபோக கருணா சிறிதும் விரும்பவில்லை என்றும் தெரியவருகிறது.

இவ்வாறான பயங்கரவாத இயக்கங்களைப் பொறுத்தவரை ஒரு குழுவிலிருந்து அதன் உறுப்பினர்கள் பகைத்துக்கொண்டு வெளியேறும் சந்தர்ப்பங்களில் குறித்த குழுவின் தலைவருக்கு தனது உயிர் பாதுகாப்பு பற்றிய அச்சம் ஏற்படுகிறது. குறித்த குழுவின் உயர் மட்டத் தலைவர் பிள்ளையான் போன்று பிரிந்து செல்லும் உயர்மட்ட உறுப்பினருக்கு "மரண தண்டனை" வழங்குவதுபோன்ற நிலைப்பாட்டை எடுப்பார். இதுவே பயங்கரவாத இயக்கங்களின் நடைமுறையாக இருந்துவருகிறது. இவ்வாறான ஒரு நிலைப்பாட்டுடனேயே கருணா செயற்படுவதாகத் தெரிய வருகிறது. பிரபாகரன் கருணாவைக் கொலை செய்ய மேற்கொண்ட முயற்சிகளும் இவ்வாறு கருணா பிரிந்து சென்றதால் இயக்கத்தின் பலம் பிளவுபட்டுப்போனதாலேயே. சட்டவிரோதமான ஆயுதப் படையணிகளின் போக்கு இவ்வாறுதான். தற்போது கருணாவுக்கும் பிள்ளையானுக்குமிடையே ஏற்பட்டிருக்கும் பிளவுக்கும் பகைக்கும் இது பொருந்தும்.

-திவயின விமர்சனம்: 20.05.2007

என்ன தெரு நாயோட புலியை ஒப்பிடுவதா கேனைத்தனமாக இல்லை

கருணாவை இயக்கத்திலிருந்து விரட்டியடித்ததற்கும், பிள்ளையான் பிரிந்து சென்றதற்கும் முடிச்சுப் போட முடியாது.

கருணாவின் பிரிவால் சிங்களம் சிரித்தது.

பிள்ளையானின் பிரிவால் தமிழர் மகிழ்கின்றனர்.

கருணாவும் பிள்ளையானும் பிரிஞ்சிட்டாங்களோ?? ஆளாளுக்கு துரோகிப்பட்டம் குடுத்திட்டாங்களோ?? நேற்றும் ஐசீஆர்சீக்கும் ரிஎம்வீபீ பிரதிநிதிகள்..உறுப்பினாகளுக்

-------------------இத்தகைய பிள்ளையான் தற்போது கருணா குழுவிலிருந்து பிரிந்து தனிக்குழுவாக இயங்குவதற்கு காரணம் கருணா குழுவினரால் செய்யப்பட்ட கொள்ளையடித்தல்இ கப்பம் வாங்குதல் மற்றும் மோசடிகள்இ ஒழுக்கச் சீர்கேடுகள் என்றே கூறப்படுகிறது. கருணா குழுவினரின் இந்த நடவடிக்கைகளை விரும்பாது அதிருப்தியடைந்த பிள்ளையான் இதுபற்றி பல தடவைகள் கருணாவிடம் தெரிவித்தபோதும் கருணா அதுபற்றி அக்கறை எடுக்கவில்லை. தொடர்ந்து இந்தப் பிரச்சினை சம்பந்த மாக கருணாவுக்கும் பிள்ளையானுக்கும் இடையே ஏற்பட்ட வாய்ச் சண்டை பாரதூரமாகிவிட்ட நிலையிலேயே பிள்ளையானும் அவருடைய சகா சீலனும் தமக்குச் சார்பான படையணியினருடன் தனியான குழுவாகப் பிரிந்து சென்றனர்.-----------------

நல்ல இயக்கங்களில் இருந்து விலகுவதற்க்கு காரணம், நல்லதை தொடர்ந்து செய்ய முடியாமல். இப்படிபட்ட துரோகிகளுக்குள் பிரச்சினை என்டால், பங்கு போடுவதில் ஏற்படும் பிரச்சினைகளே.

பிரபாகரன் - கருணா பகை போன்றே கருணா - பிள்ளையான் பகையும்: திவயின.

கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் கருணா குழுவினர் இரண்டு குழுக்களாக பிரிந்து சென்று விட்டதாக தகவல்கள் தெரிவித்திருந்தன. இவ்வாறு குறித்த போட்டிக் குழுவுக்குத் தலைமை தாங்கியவர் பிள்ளையானும் மற்றும் அவருடைய சகாவான சீலன் எனப்படுபவருமே ஆகும். பிள்ளையான் கருணா குழுவில் மிகவும் பலம்வாய்ந்த படையணியின் தலைவராக இருந்தவர். கருணாவின் நிழல்போல அவருடனேயே கூட இருந்து செயற்பட்டவர்.

கடந்த 2004 ஏப்ரல் 9 ஆம் திகதி விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் விசேட படையணியினர் வெருகல் ஆற்றங்கரைப் பிரதேசங்களில் வைத்து கருணாவின் குழுவினர் மீது தீவிர தாக்குதல்களைத் தொடுத்த வேளையில், அதனை எதிர்கொள்ள முடியாத நிலையில் பின்வாங்கிய கருணா தனது குழுவினரைக் கலைந்து செல்லும்படி கூறிவிட்டு, வெளிநாட்டுக்குத் தப்பியோடிய சந்தர்ப்பத்தில் கருணாவின் குழுவினருக்குத் தலைமைதாங்கி அவர்களை வழிநடத்தியவர் பிள்ளையான்தான்.

இத்தகைய பிள்ளையான் தற்போது கருணா குழுவிலிருந்து பிரிந்து தனிக்குழுவாக இயங்குவதற்கு காரணம் கருணா குழுவினரால் செய்யப்பட்ட கொள்ளையடித்தல், கப்பம் வாங்குதல் மற்றும் மோசடிகள், ஒழுக்கச் சீர்கேடுகள் என்றே கூறப்படுகிறது. கருணா குழுவினரின் இந்த நடவடிக்கைகளை விரும்பாது அதிருப்தியடைந்த பிள்ளையான் இதுபற்றி பல தடவைகள் கருணாவிடம் தெரிவித்தபோதும் கருணா அதுபற்றி அக்கறை எடுக்கவில்லை. தொடர்ந்து இந்தப் பிரச்சினை சம்பந்த மாக கருணாவுக்கும் பிள்ளையானுக்கும் இடையே ஏற்பட்ட வாய்ச் சண்டை பாரதூரமாகிவிட்ட நிலையிலேயே பிள்ளையானும் அவருடைய சகா சீலனும் தமக்குச் சார்பான படையணியினருடன் தனியான குழுவாகப் பிரிந்து சென்றனர். கருணாவும் இவர்கள் இருவரையும் மறுபடியும் தனது குழுவில் சேர்த்துக்கொள்வதற்கான எந்தவித முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. அத்துடன், பிள்ளையானுக்குப் பணிந்துபோக கருணா சிறிதும் விரும்பவில்லை என்றும் தெரியவருகிறது.

இவ்வாறான பயங்கரவாத இயக்கங்களைப் பொறுத்தவரை ஒரு குழுவிலிருந்து அதன் உறுப்பினர்கள் பகைத்துக்கொண்டு வெளியேறும் சந்தர்ப்பங்களில் குறித்த குழுவின் தலைவருக்கு தனது உயிர் பாதுகாப்பு பற்றிய அச்சம் ஏற்படுகிறது. குறித்த குழுவின் உயர் மட்டத் தலைவர் பிள்ளையான் போன்று பிரிந்து செல்லும் உயர்மட்ட உறுப்பினருக்கு "மரண தண்டனை" வழங்குவதுபோன்ற நிலைப்பாட்டை எடுப்பார். இதுவே பயங்கரவாத இயக்கங்களின் நடைமுறையாக இருந்துவருகிறது. இவ்வாறான ஒரு நிலைப்பாட்டுடனேயே கருணா செயற்படுவதாகத் தெரிய வருகிறது. பிரபாகரன் கருணாவைக் கொலை செய்ய மேற்கொண்ட முயற்சிகளும் இவ்வாறு கருணா பிரிந்து சென்றதால் இயக்கத்தின் பலம் பிளவுபட்டுப்போனதாலேயே. சட்டவிரோதமான ஆயுதப் படையணிகளின் போக்கு இவ்வாறுதான். தற்போது கருணாவுக்கும் பிள்ளையானுக்குமிடையே ஏற்பட்டிருக்கும் பிளவுக்கும் பகைக்கும் இது பொருந்தும்.

-Tamilwin-

Edited by யாழ்வினோ

ஹா தூ திவயின மண்டையில இடி விழ, இந்த கருநாய பிரபாகரனுக்கு ஒப்பிடுவதா.........? ஒன்றுக்குமே வக்கிள்ளாத கருநாய் நாட்டை விட்டே ஓடிவிட்டது

  • தொடங்கியவர்

நகைச்சுவை பகுதியில் இணைக்க பட்டிருக்கு

பிரபாகரன் படையணி என்றொன்று இல்லையங்கோ. அது தான் எதிரிகள் அனைவரும் கண்டு மிரளும் எம் " தமிழீழ விடுதலைப் புலிகள்" நைனா. கருணா ஒன்று பெரிய பருப்பு கிடையாது. அது உண்ட வீட்டிற்கே இரண்ண்டகம் செய்யும் ஈனப்பிறவி.

ரிஎம்விபி ஒட்டுக்கும்பலுக்குள் ஏற்பட்ட பிளவையடுத்து, பல கூலிகள் கைகளில் அகப்பட்டதை சுருட்டிக் கொண்டு இந்தியாவிற்கு தப்பியோட்டம்?

இந்திய/இலங்கை புலனாய்வுத்துறையினரின் அரும் பெரும் கூட்டுப் படைப்பான ரிஎம்விபி ஒட்டுக்கும்பலுக்குள் ஏற்பட்ட பிளவையடுத்து, பல ஒட்டுக்குழு உறுப்பினர்கள் படுகொலை செய்யப்பட்ட நிலையில், மீதியிருந்த ஒட்டுக்குழு உறுப்பினர்கள் உயிரச்சம் காரணமாக கைகளில் அகப்பட்டதை சுருட்டிக் கொண்டு இந்தியா தப்பிச் செல்வதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதை நெருப்புக்கு இலங்கையிலுள்ள இந்திய தூதுவராலய வட்டாரங்கள் ஊர்ஜிதம் செய்திருக்கின்றன.

கிழக்கில் கருணா ஒட்டுக்கும்பலுக்கு, சிங்கள புலனாய்வுத்துறையினரால், சிங்கள இராணுவ முகாங்களுக்கு அருகே அமைத்துக் கொடுக்கப்பட்ட பல முகாங்களை பிள்ளையான் தலைமையிலான ரிஎம்விபி ஒட்டுகுழுவினர் சிங்கள படையினரின் உதவியுடன் கைப்பற்றியிருப்பதால், சிங்களப் பகுதிகளில் சிறிலங்காப் புலனாய்வுப்பிரிவினரால் தங்க வைக்கப்பட்டிருந்த பல கருணா கூலிக்கும்பலின் உறுப்பினர்கள் தாம் பிள்ளையானினால் என்றோ ஒருநாள் படுகொலை செய்யப்படலாம் என்ற பீதியில் இந்தியாவிற்கு தப்பியோடுவதற்கு, இந்திய தூதரக வாசலில் காத்திருப்பதாக , இலங்கைக்கான இந்திய தூதரலாய வட்டாரங்கள் நெருப்புக்குத் தெரிவித்தன.

ஏற்கனவே கருணாவும், அவரது நான்கு முக்கிய கையாட்களும் இந்தியாவிற்கு கையிலிருந்த பணங்களுடன் தப்பியோடியுள்ள நிலையில், ஏனைய உறுப்பினர்கள் கைகளில் அகப்படுவதுகளை சுடுட்டுவதில் மும்முரமாக ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது. பல ஒட்டுக்குழு உறுப்பினர்கள் ஒரு நேர சோற்றுக்கே தற்சமயம் தடங்கினத்தோம் போட வேண்டியிருப்பதாக கருணா சார்பு ஒட்டுக்குழு வட்டாரங்கள் நெருப்புக்குத் தெரிவித்தன.

இதன் எதிரொலியாக கொழும்பிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் வாழும் தமிழர்கள் கப்பம் கேட்டு கருணா சார்பு ஒட்டுக்குழுக் கும்பலினால் கடத்தப்படலாம் என கொழும்பு சிங்கள காவற்துறை வட்டாரங்கள் அச்சம் வெளியிட்டுள்ளன.

இதேநேரம் கருணா ஒட்டுக்கும்பலை இல்லாமலேயே செய்வதில் சிங்கள அரசு உறுதியாக உள்ளதாக கொழும்பு அரசியல் வட்டாரங்களில் கருத்துத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இலங்கையில் நடைபெற்ற அனைத்து மனித உரிமை மீறல்களும் தற்போது கருணாவின் ஒட்டுக்கும்பலின் மீது போடப்பட்டிருப்பதனால், சர்வதேசத்தை திருப்திப் படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கையை சிங்கள அரசு கட்டாயம் மேற்கொள்ளுமென்று அவை தெரிவித்தன.

Web : neruppu.org

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.