Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு யோசப்பு அவர்களின் 79 அகவை நாள்

Featured Replies

16.04.2020 மதிப்புக்குரிய ஐயா முன்னாள் மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு யோசப்பு அவர்களின் 79 அகவை நாள். அவரின் நீண்ட ஆயுளுக்காக பிரார்த்திப்பதை விட எதுவும் தோன்றவில்லை...

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், நிற்கிறார், சூட் மற்றும் தாடி

16.04.1940 ஆம் ஆண்டு நெடுந்தீவில் அவதரித்த அவர் "ஆயர்" என்ற அடைமொழிக்கு பொருத்தமானவர். அவருடன் சந்திக்கும் வாய்ப்பை காலம் தந்திருந்தது. அது வரமாக இருக்கும். மிகவும் அருமையான சிறு கண்டிப்பான மனிதர். தமிழீழ விடுதலை மீதும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். ஈழப்போராட்டத்தில் அவர் ஒரு அத்தியாயம்.

இறுதி யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்டவர்கள் காணாமல் போனோர் மற்றும் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறுதியான தகவலை இலங்கை அரசின் மக்கள் தொகை கணிப்பீட்டின் அடிப்படையாக கொண்டு 146679 என உலக நாடுகளுக்கு தெரியப்படுத்தியவர்.

இலங்கை அரசின் பல்வேறு அழுத்தங்களுக்குள் நின்று தமிழீழ தேச மக்களின் விடிவிற்காய் அயாராது உழைத்தவர். மன்னார் மாவட்டம் மட்டுமல்லாது தமிழீழ தேசமெங்கும் இராணுவத்தினரின் அடாவடித்தனங்களை மிக கடுமையாக எதிர்த்தவர்.

25 வருடங்களாக ஆயராக பணியாற்றியவர். இலங்கை இராணுவத்தால் இறுதி யுத்தத்தில் காணமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் படுகொலை செய்யப்பட்டவர்களுக்காக நீதி வேண்டி ஐநா மன்றத்திற்கும் மனித உரிமை அமைப்புக்களுக்கும் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வந்தார்.

அது மட்டுமல்ல போரினால் வெளிநாடுகளில் தஞ்சமடைந்தவர்களை திருப்பி அனுப்புவது தவறானது என்றும் அவர்களின் உயிருக்கு இலங்கை அரசினால் அச்சுறுத்தல் உண்டு எனவும் பகிரங்கமாக அறிக்கை விட்டவர்.

அவரின் உடல்நிலைக்கு இலங்கை இராணுவம் தான் முக்கிய காரணம் என்ற ஒரு கருத்தும் நிலவியது. இது பெய்யாக இருக்கவும் வாய்ப்பில்லை.

தமிழர்களுக்கான குரல்களை நசுக்குவது இலங்கை இனவாதத்திற்கு புதிதல்ல... சிங்கள ஊடகங்களும் பிக்குகளும் ஆயர் அவர்களை புலி என்று வசை பாடும் அளவிற்கு அவரின் செயற்பாடுகள் தமிழர் நலன் சார்ந்ததாக இருந்தது....

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர்

அவரின் பணிகள் எக்காலத்திலும் நினைவு கூறப்படவேண்டியது.

 

( முகநூல் )

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.