Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போதிய பணவசதியின்மையால் பொருட்களை கொள்வனவு செய்வதில் மக்கள் திண்டாட்டம்

Featured Replies

பொலிஸ் ஊரடங்குச்சட்டம் இன்று (16.04.2020) காலை 6 மணிக்கு தற்காலிகமாக தளர்த்தப்பட்டதையடுத்து மலையகத்திலுள்ள பிரதான நகரங்களுக்கு காலை வேளையிலேயே மக்கள் வருகைதந்து அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்தனர்.

upcountry.jpg


ஏப்ரல் 9 ஆம் திகதிக்கு பிறகு இன்று காலையே ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதால் அண்மைய நாட்களை விடவும் இன்று சனக்கூட்டம் சற்று அதிகமாகவே காணப்பட்டது. ஆனால் கைவசம் போதுமானளவு பணம் இல்லாததால் குறைந்தளவிலேயே அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்தனர்.

photo__11_.jpg


ச.தொ.ச விற்பனை நிலையங்கள், சுப்பர் மார்க்கெட்டுகள், சில்லறை மற்றும் மொத்த வியாபார நிலையங்களுக்கு முன்னால் நீண்ட வரிசையில் காத்திருந்து, அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்தனர். மருந்தகங்களுக்கு முன்னாலும் நீண்ட வரிசை இருந்தது.

photo__14_.jpg


ஹட்டன், தலவாக்கலை, கொட்டகலை, பொகவந்தலாவ ஆகிய நகரங்களில் இந்நிலைமையைக் காணக்கூடியதாக இருந்தது. பெரும்பாலான மக்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைப் பின்பற்றி, சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதை காணக்கூடியதாக இருந்தாலும் ஒரு சிலர் எவ்வித நடைமுறைகளையும் பின்பற்றவில்லை.

photo__3_.jpg


நகரப்பகுதிகளில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததுடன், ரோந்து நடவடிக்கையிலும் பாதுகாப்பு அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர்.

அதேவேளை, மலையகத்தில் கடந்த சில நாட்களாக பிற்பகல்வேளையில் அடை மழை பெய்வதால், மழைக்கு முன்னர் வீடு திரும்ப வேண்டும் என்பதில் மக்கள் தீவிரமாக இருந்தனர். ஒரு சில பகுதிகளில் மழைக்கு மத்தியிலும் மக்கள் காத்திருந்ததை காணமுடிந்தது.

https://www.virakesari.lk/article/80105

  • தொடங்கியவர்

மக்களுக்கு 5000 என்று செய்தியை அரசு வெளியிட்டு, அவர்களின் கோபத்தை சமாளிக்க பார்க்கின்றது. 

ஒன்றில் ஊரடங்கை தளர்த்த வேண்டும்; இல்லை அதிக பணத்தை தரவேண்டும் ( அதுவும் எல்லா மக்களையும்  போய்ச்சேராது , இடையில் ஊழல் இருக்கும்) 

ஊரடங்கை தளர்த்தினால், கோவிட் 19 பரவும், தேர்தலில் மண் கவ்வ வேண்டி வரலாம். 
தளர்த்தாவிட்டால், தேர்தலில் மண் கவ்வ வேண்டி வரலாம். 

என்னதான் விடை ?  இராணுவ ஆட்சி.  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.