Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தாராவியை மிரட்டும் கரோனா; தொற்று 86 ஆக உயர்வு; பலி எண்ணிக்கை 9 ஆக அதிகரிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தாராவியை மிரட்டும் கரோனா; தொற்று 86 ஆக உயர்வு; பலி எண்ணிக்கை 9 ஆக அதிகரிப்பு

dharavi-area-of-mumbai-where-86-covid19

 

மும்பை தாராவியில் மட்டும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 86 ஆக உயர்ந்துள்ளது. அங்கு இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது, கடந்த 24 மணிநேரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, 23 பேர் பலியாகியுள்ளார்கள் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

உயிரிழந்தோர் எண்ணிக்கை 437 ஆகவும், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று ஒரே நாளில் 1,007 ஆக அதிகரித்து 13 ஆயிரத்து 387ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் பலியானோர் எண்ணிக்கை 187 ஆக நேற்று இருந்த நிலையில், இன்று 194 ஆக அதிகரித்துள்ளது. அதாவது கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

15871098822949.jpg

மும்பையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவியிலும் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தாராவியில் மட்டும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 86 ஆக உயர்ந்துள்ளது. அங்கு இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

15871099052949.jpg

இதையடுத்து தாராவியிலும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

https://www.hindutamil.in/news/india/550004-dharavi-area-of-mumbai-where-86-covid19-1.html

 

 

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தாராவியில் பாதிப்பு 86 ஆக உயர்வு: மும்பையில் அதிவேகமாக பரவும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியது

மும்பையில் அதிவேகமாக பரவும் கொரோனா தொற்றால் பாதித்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இதில் தாராவியில் 86 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மும்பையில் 202 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பதிவு: ஏப்ரல் 17,  2020 05:00 AM
மும்பை, 
 
மராட்டிய தலைநகரும், நாட்டின் நிதி தலைநகருமான மும்பையை கொடிய கொரோனா வைரஸ் புரட்டி போட்டுள்ளது.
 
மும்பையில் அதிவேகமாக பரவி வரும் கொரோனாவால் நேற்று முன்தினம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,936 ஆக இருந்தது. இந்தநிலையில் நேற்று மேலும் 107 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
 
இதன் மூலம் மும்பையில் தொற்று பாதித்தவா்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டி உள்ளது. அதாவது 2 ஆயிரத்து 43 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.
 
இதில் அதிர்ச்சி அளிக்கும் தகவலாக கடந்த 6 நாட்களில் மட்டும் சுமார் 1,000 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் 299 பேர் கொரோனா அறிகுறியுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
 
116 பேர் பலி
 
இதேபோல கடந்த சில தினங்களில் மும்பையில் கொரோனாவுக்கு 3 பேர் பலியானதாக மாநகராட்சி தகவல் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் மும்பையில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 116 ஆகி உள்ளது. கடந்த 2 நாட்களாக மும்பையில் கொரோனா இறப்பு விகிதம் குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
 
இதேபோல கொரோனா பாதிப்பில் இருந்து புதிதாக 21 பேர் குணமாகி ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பினர். இதுவரை மும்பையில் 202 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமாகி உள்ளனர்.
 
தாராவி
 
ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியும், தமிழர்கள் அதிகம் வசிக்கும் மும்பை தாராவியில் கடந்த 1-ந் தேதி முதன் முதலில் பாலிகா நகரை சேர்ந்த 56 வயது துணிக்கடைகாரருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அவரை தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் தாராவியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
 
நேற்று முன்தினம் தாராவியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 60 ஆக இருந்தது. இந்தநிலையில் நேற்று ஒரேநாளில் 26 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது.
 
இதில் 13 வயது சிறுவன் உள்பட 11 பேர் தாராவி முஸ்லிம் நகரை சேர்ந்தவர்கள். இதுதவிர முகுந்த் நகர், ராஜீவ்நகர், சோசியல் நகர், சாய்ராஜ் நகர், டிரான்சிஸ்ட் கேம்ப், ராம்ஜி சால் பகுதியை சேர்ந்தவர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தாராவியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 86 ஆக அதிகரித்து உள்ளது.
 
மேலும் ஒருவர் பலி
 
இதேபோல தாராவி லட்சுமி சால் பகுதியை சேர்ந்த 58 வயது நபர் கொரோனாவுக்கு புதிதாக பலியானார். ஏற்கனவே தாராவியில் தமிழ் மூதாட்டி உள்பட 8 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருந்தனர். இந்தநிலையில் தாராவியில் பலியானவர்கள் எண்ணிக்கை 9 ஆகி உள்ளது.
 
இதற்கிடையே மராட்டியம் முழுவதும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டி இருக்கிறது.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அடங்காத கரோனா: மும்பை தாராவி குடிசைப்பகுதிகளில் பாதிப்பு 100-ஐ தாண்டியது

corona-virus-mumbai-dharavi-slum-maharashtra தாராவி பகுதியில் லட்டியை ஓங்கும் போலீஸ்.
 

ஆசியாவின் மிகப்பெரிய குடிசைவாழ் மக்கள் பகுதியான மும்பையின் தாராவியில் கரோனா தொற்று எண்ணிக்கை 100-ஐக் கடந்தது. 15 புதிய தொற்றுக்களுடன் மொத்த கரோனா நோயாளிகள் எண்ணிக்கை இந்தப் பகுதியில் மட்டும் 101 ஆக அதிகரித்துள்ளது.

இதில் 10 பேர் இதுவரை இப்பகுதியில் மரணமடைந்துள்ளனர். 62 வயது நோயாளி ஒருவர் மருத்துவமனையில் மரணமடைந்தார். மட்டுங்கா தொழிலாளர் முகாமில் 3 பேருக்கு புதிதாகக் கரோனா பரவியுள்ளது.

தாராவியில் சுமார் 8 லட்சம் மக்கள் வாழ்கின்றனர். இந்தப் பகுதி வைரஸ் ஹாட்ஸ்பாட் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. இப்பகுதியில் 9 கட்டுப்பாட்டுப் பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளில் போலீசார் தடுப்பு இட்டு காவல் பணி புரிந்து வருகின்றனர். இந்த ஹாட்ஸ்பாட் பகுதியில் குடியிருப்பு வாசிகள் வீட்டிலிருந்து வெளியே வர அனுமதியில்லை, அத்தியாவசியப் பொருட்கள் வீட்டு வாசலுக்கு வரும்.

2073 கரோனா வைரஸ் கேஸ்களுடன் நாட்டில் மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதியாக விளங்குகிறது மும்பை. மும்பையின் 1.2 கோடி மக்கள் தொகையும் முழு லாக்-டவுனில் இருந்து வருகின்றனர்.

https://www.hindutamil.in/news/india/550150-corona-virus-mumbai-dharavi-slum-maharashtra.html

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.