Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பு, கொட்டாஞ்சேனை பெண்ணின் 2 ஆவது மகனுக்கும் கொரோனா - இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் தொகை 242 ஆக உயர்வு

Featured Replies

 

 

(எம்.எப்.எம்.பஸீர்)

கொழும்பு, கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவின் பண்டாரநாயக்க மாவத்தையில் அடையாளம் காணப்பட்ட 59 வயதான கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணின் 2 ஆவது மகனுக்கும் கொரோனா தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந் நிலையில் இன்று இரவு 9.00 மணி வரையிலான காலப்பகுதியில் இலங்கையில் புதிதாக 4 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், இலங்கையில் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 242 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

covid19.jpg

 

இன்று அடையாளம் காணப்பட்டவர்களில் 3 பெண்கள் உள்ளனர். இவர்கள் மட்டக்களப்பு, புனாணை தனிமைப்படுத்தல் மையத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டவர்கள். மற்றையவர் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட கொட்டாஞ்சேனை பகுதி பெண்ணின் 2 ஆவது மகன் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க குறிப்பிட்டார்.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த 7 பேர் இன்று பூரண குணமடைந்து வைத்தியசாலைகளைவிட்டு வெளியேறியுள்ளனர். அதற்கமைய, குணமடைந்தோரின் எண்ணிக்கை 77 ஆக அதிகரித்துள்ளது.
 

இதுவரை அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களில் 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போதும், 158 பேர் தொடர்ந்தும் அங்கொடை தேசிய தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலை, வெலிகந்த முல்லேரியா ஆதார வைத்தியசாலைகள் சிலாபம் - இரணவில் வைத்தியசாலை ஆகியவற்றில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும் நாடளாவிய ரீதியில் 25 வைத்தியசாலைகளில் 148 பேர் கொரோனா சந்தேகத்தில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 

இதேவேளை மட்டக்களப்பு , புனாணை தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 212 பேர் இன்று வீடு திரும்பினர். மருதானை, இமாமுல் அரூஸ் மாவத்தை பகுதியில் கொரோனா தொற்றாளர் ஒருவர் உயிரிழந்தும் மேலும் மூவர் அடையாளம் காணப்பட்டதன் பின்னணியில் தனிமைப்படுத்தப்பட்ட 212 பேரே இன்று வீடு திரும்பினர்.

அவர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில் கொரோனா தொற்று இல்லை என உறுதியான நிலையில் இவ்வாறு அவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய நடவடிக்கை மையத்தின் தலைவர், இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா கூறினார்.

கடந்த 11,12,14, மற்றும் 15 ஆம் திகதிகளில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் உள்ள 875 பேரின் சளி மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கு எடுக்கப்பட்ட நிலையில், அவற்றின் பரிசோதனை பெறுபேறுகளுக்கு ஏற்ப தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக அவர் கூறினார்.
 

இந்தநிலையில், இன்றும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ள 530 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
 

இதனிடையே, கொட்டாஞ்சேனை பண்டாரநாயக்க மாவத்தை பகுதியில் அடையாளம் காணப்பட்ட குறித்த பெண்ணின் கணவன் மற்றும் முத்த மகனுக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில் அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என தெரியவந்துள்ளது.
 

எனினும் 2 ஆம் மகனுக்கு கொரோனா இருப்பது தெரியவந்துள்ள நிலையில் விஷேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
குறிப்பாக ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட பெண்ணுக்கு எவ்வாறு கொரோனா தொற்று ஏற்பட்டது என ஆராய்ந்துவரும் சுகாதாரத் துறை அவருக்கு இந்தியா, யாத்திரை செல்லும் போது விமானத்தில் வைத்து கொரோனா தொற்றியிருக்கலாம் என சுகாதாரத் துறையினர் சந்தேகிக்கின்றனர்.

குறிப்பாக யாத்திரை செல்லும் போது விமானத்தில் அவருக்கு அருகே இருந்த ஆசனத்தில் வெளிநாட்டு பிரஜை ஒருவர் இருந்ததாகவும், அவர் அடிக்கடி இருமிக் கொண்டிருந்ததாகவும் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவருக்கு கொரோனா தாக்கம் இருந்து அதனூடாக இந்த பெண்ணுக்கு தொற்றியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

அப்பெண்ணுக்கு கடந்த மார்ச் 27 ஆம் திகதியே இருமல் உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் காட்டியுள்ள போதும் அவர், தனக்கு ஆஸ்துமா இருப்பதால் அதனை அவ்வளவு பாரதூரமாக எடுத்துக்கொள்ளவில்லை என வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறான பின்னணியில் நேற்று அப்பெண்ணின் 2 ஆம் மகனுக்கும் கொரோனா இருப்பது உறுதியான நிலையில், அவரால் கொஹுவலை - சரணங்கர வீதியில் உள்ள மருந்தகம் ஒன்றுக்கு விற்பனைக்காக கையளிக்கப்பட்ட ஒரு தொகை முகக் கவசங்கள் பொலிஸாரால் நேற்று தீயிட்டு அழிக்கப்பட்டன. அத்துடன் அந்த பாமசிக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.

 

கடந்த 5 ஆம் திகதி குறித்த நபரால் 550 முகக் கவசங்கள் விற்பனைக்காக அந்த பாமசிக்கு கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அதில் எதுவும் இன்று வரை விற்பனை செய்யப்பட்டிருக்கவில்லை என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளன.
 

இந் நிலையில் அந்த பாமசியின் உரிமையாளரும் இரு உதவியாளர்களும் நேற்று முதல் வெள்ளவத்தை மற்றும் களுபோவில பகுதிகளில் உள்ள அவர்களது வீடுகளில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

https://www.virakesari.lk/article/80193

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.