Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏப் - 29 ஆம் திகதி பூமியை விண்கல் தாக்கினால் பாரிய அழிவு ஏற்படும்.!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஏப்ரல் மாதம்-29 ஆம் திகதி பூமியை விண்கல் தாக்கினால் பாரிய அழிவு ஏற்படும்.!

article-2107654-11F52DD9000005DC-408_308

மிகப்பெரிய விண்கல் ஒன்று பூமியை நோக்கி பயணிப்பதாகவும், இந்த விண்கல் பூமியை தாக்கினால் மிகப்பெரிய அழிவு ஏற்படும் எனவும் நாசா அறிவித்துள்ளது.

விண்கல் என்பது விண்வெளியில் இருந்து வளி மண்டலத்தை கடந்து பூமியை அடையும் பொருளாகும். சூரிய மண்டலத்தில் பில்லியன் கணக்கில் சிறு கற்களும், உலோகப் பாறைகளும் நீந்திக் கொண்டிருக்கின்றன. இந்த விண்கற்கள் சில பூமியை நோக்கி வருமாயின் அது மேற்புறத்தில் இருந்து ஈர்ப்பு விசை காரணமாக அதி வேகத்தில் வந்தடையும்.

எரிகல் அல்லது எரி நட்சத்திரம் வளிமண்டலத்தின் உராய்வு வெப்பத்தினால் எரிந்து, ஒளிந்தபடியான பாதையை ஏற்படுத்துகின்றன. அப்பொழுது இவை எரிகல் அல்லது எரி நட்சத்திரம் என அழைக்கப்படுகிறது.

இவற்றில் சில முழுவதுமாக எரிந்து வளி மண்டலத்துடன் கலந்து விடுகின்றன. சிலவற்றுகள் பூமியில் விழுந்து, நினைத்து பார்க்கமுடியா பள்ளங்களை ஏற்படுத்தியுள்ளன.

சூரிய குடும்பத்தில் மிதந்துக் கொண்டிருக்கும் கற்கள் சில நேரங்களில், வியாழனின் ஈர்ப்பு விசை காரணமாக உள் சூரிய மண்டலத்தை நோக்கி பயணிக்கிறது, அதில் சிலவற்று பூமியை அச்சுறுத்தும் வகையிலும் உள்ளது.

அதன்படி, நான்கு கிலோமீட்டர் அகலம் கொண்ட பிரம்மாண்ட எரி கல் ஒன்று பூமியை நோக்கி வந்துக் கொண்டு இருக்கிறது. இந்த எரிகல் வரும் ஏப்ரல் 29ம் தேதி, புதன்கிழமை அதிகாலை 4:56 மணிக்கு பூமிக்கு மிக அருகில் இந்த எரிகல் பறந்து செல்லும் என கணிக்கப்படுகிறது.குறிப்பாக இந்த எரிகல் பூமியின் மீது மோதினால் மிகப்பெரிய அழிவு ஏற்படும் என்றும் நாசா குறிப்பிட்டுள்ளது.

ஆனால் அப்படி நடப்பதற்கான வாய்ப்பு மிக குறைவு என்றும் பூமியை எரிகல் நெருங்கும்போது அளவு குறைந்து சிறிய துகள்களாக மாறவே அதிக வாய்ப்பிருப்பதாகவும் அறிவித்துள்ளது நாசா.

இந்த எரிகல்லுக்கு 52768 (1998 OR2) என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த எரிகல் முதலில் 1998ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இந்த எரிகல் மணிக்கு 31 ஆயிரத்து 320 கிலோமீட்டர் வேகத்தில் கடந்து செல்லும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த எரிகல் பூமிக்கு மிக அருகில் கடந்து செல்கிறது என்பதால் இதை அபாயகரமான எரி கல்லாக நாசா குறிப்பிட்டுள்ளது.

http://puthusudar.lk/2020/04/18/ஏப்ரல்-மாதம்-29-ஆம்-திகதி-பூ/

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பூமிக்கு மிக அருகாமையில் கடக்கும் Asteroid 1998 OR2 - நிகழ்வை Live பார்ப்பது எப்படி?

asteroid-1998-or2watchlive-1588150292.jp

பூமியின் ஓசோன் படலத்திலிருந்த மிகப்பெரிய ஓட்டை அடைந்துவிட்டது என்ற மகிழ்ச்சியான செய்தியை விஞ்ஞானிகள் சமீபத்தில் வெளியிட்டனர். அதேபோல், தற்பொழுது பூமிக்கு மிக அருகாமையில் நிகழப்போகும் ஒரு மிகப்பெரிய நிகழ்வு பற்றி அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

பூமியை இன்று மிகப்பெரிய சிறுகோள் 1998 OR2 என்ற அபாயகரமான அஸ்டிராய்டு, பூமியைக் கடந்து செல்கிறது. இதை நேரலையில் பார்க்க உங்களுக்கு வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

பூமியைக் கடக்கும் சிறுகோள் 1998 OR2

இந்த அபாயகரமான சிறுகோள் 1998 OR2, ஏப்ரல் 29ம் தேதி புதன்கிழமை அதாவது, இன்று பூமியைக் கடந்து செல்கிறது. இந்த நிகழ்வில் உள்ள ஒரே ஒரு நல்ல செய்தி என்னவென்றால், இந்த மாபெரும் சிறுகோள் பூமியின் மேற்பரப்பின் எந்தப் பகுதியையும் தாக்காமல், பூமிக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாத வகையில் பூமிக்கு மிக அருகாமையில் பாதுகாப்பாகக் கடந்து செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வளவு தூரத்தில் பூமியை கடக்கிறது ?

அதிகாரப்பூர்வ தகவலின்படி, சிறுகோள் (52768) 1998 OR2 என்று அழைக்கப்படும் இந்த விண்வெளியிலிருந்து வரும் சிறுகோள் பாறை பூமியிலிருந்து சுமார் சுமார் 6.29 மில்லியன் கி.மீ தூரத்தில் கடந்து செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறுகோள் அளவு என்ன?

அதேபோல், NEO என்று சொல்லப்படும் பூமிக்கு அருகிலுள்ள பொருட்களில் ஒன்றான இந்த சிறுகோள் 52768, சுமார் 0.9 மைல் முதல் 2.54 மைல்கள் விட்டம் கொண்டதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரேசிபோ ஆய்வகத்தின் அறிவிப்பு என்ன சொல்கிறது ?

இந்த சிறுகோள் 1998 OR2 தோராயமாக சுமார் 1.5 கி.மீ முதல் 4.1 கி.மீ தூரம் கொண்ட விட்டதைக் கொண்டுள்ளது விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். புவேர்ட்டோ ரிக்கோவில் உள்ள அரேசிபோ ஆய்வகம் சிறுகோளின் இயக்கத்தை உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. அரேசிபோ ஆய்வகத்தின் அறிவிப்புப்படி புதன்கிழமை பிற்பகல் 3:26 மணியளவில் பூமிக்கு மிக அருகில் இந்த சிறுகோள் கடந்து செல்லும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

மக்கள் நேரலை காண அரேசிபோ ஆய்வகம் ஏற்பாடு

பூமிக்கு மிக அருகாமையில் கடந்து செல்லும் இந்த சிறுகோளின் நிகழ்வை மக்கள் நேரலை காண அரேசிபோ ஆய்வகம் ஏற்பாடு செய்துள்ளது. இதன்படி இந்த நிகழ்வை உலகத்தில் உள்ள மக்கள் அனைவரும் அரேசிபோ ஆய்வகத்தின் வலைத்தளம் மற்றும் யூடியூப் சேனல் மூலம் நேரலை பார்க்கலாம்.

நேரலை பார்க்க

பூமியை இந்த சிறுகோள் விண்வெளியில் UTC நேரத்தின்படி சரியாக இன்று மாலை 6 மணிக்கும், IST நேரத்தின் படி சரியாக இரவு 11.30 மணிக்குக் கடந்து செல்கிறது. விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் அதிகாரப்பூர்வ வளைத்ததில் நேரலை பார்க்க https://www.virtualtelescope.eu/webtv இந்த லிங்க் கிளிக் செய்யுங்கள்.

https://tamil.gizbot.com/news/how-to-watch-live-stream-of-asteroid-1998-or2-passes-the-earth-s-surface-today/articlecontent-pf179108-025361.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.