Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜரோப்பிய ஒன்றியத்தின் தீர்மானத்தால் புலம்பெயர் தமிழர்கள் ஏமாற்றம்.

Featured Replies

ஜரோப்பிய ஒன்றியத்தின் தீர்மானத்தால் புலம்பெயர் தமிழர்கள் ஏமாற்றம்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான தடையை ஜரோப்பிய ஒன்றியம் அடுத்த வருடத்திற்கு நீடிப்பதற்கு ஆலோசிப்பதையிட்டு புலம்பெயர் வாழ் தமிழர்கள் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளதாக சுவிஸ் தமிழர் பேரவை ஜரோப்பிய ஒன்றிய தலைமை ஆணையருக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளது.

கடிதத்தின் முழு வடிவம் இங்கே கிளிக் செய்யவும் (pdf)

-Sankathi-

Edited by யாழ்வினோ

வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சி பாய்ச்சி தமிழன் வெந்தே போனான்.....

எத்தனை தடை வந்தாலும் நாம் விடுதலைப் பாதையில் என்றுமே சோர்ந்து போனதில்லை.

Edited by லிசான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்களப் பேரினவாதத்தின் கடுமையான போக்கு, தனியரசு என்ற ஒரேயொரு பாதையைத்தான் இன்று தமிழீழ மக்களுக்குத் திறந்துவைத்திருக்கிறது. எனவே, இந்த விடுதலைப் பாதையிற் சென்று, சுதந்திரத் தமிழீழத் தனியரசை நிறுவுவதென இன்றைய நாளில் நாம் தீர்க்கமாக முடிவு செய்திருக்கிறோம். எமது அரசியற் சுதந்திரத்திற்கான இந்தப் போராட்டத்தை விரைவாக ஏற்று அங்கீகரிக்குமாறு நீதியின் வழிநடக்கும் உலகநாடுகளையும் சர்வதேச சமூகத்தையும் நாம் அன்போடு வேண்டுகிறோம்.

தமிழினம் விடுதலைப் பாதையில் வீறுகொண்டெழுந்திருக்கின்ற இந்தப் பெருமைமிகுந்த வரலாற்றுக் காலகட்டத்தில் உலகத்தமிழினத்தின் உதவியையும் பேராதரவையும் நாம் வேண்டிநிற்கிறோம். இந்தச் சந்தர்ப்பத்திலே எமது புலம்பெயர்ந்த உறவுகள் காலங்காலமாக விடுதலைப் போராட்டத்திற்குச் செய்துவரும் பெரும் பங்களிப்பிற்கும் உதவிகளுக்கும் எனது அன்பையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்வதோடு தொடர்ந்தும், உங்கள் தார்மீகக் கடமையை ஆற்றுமாறு வேண்டுகிறேன். இதேபோன்று எமக்காக உணர்வுபூர்வமாக உரிமைக்குரல் கொடுத்துவரும் தமிழக உறவுகளுக்கும் தமிழகத் தலைவர்களுக்கும் எனது அன்பையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்வதோடு எமது தமிழீழத் தனியரசு நோக்கிய போராட்டத்திற்கு தொடர்ந்தும் நல்லாதரவும் உதவியும் வழங்கி, எமக்குப் பக்கபலமாகச் செயற்படுமாறு அன்போடும் உரிமையோடும் வேண்டுகிறேன்.

எமது தேசத்தின் விடுதலைக்காகச் சாவை அரவணைத்து, சரித்திரமாகிவிட்ட எமது மாவீரர்களை நினைவுகூரும் இன்றைய நன்நாளில் எந்த இலட்சியத்திற்காக ஆயிரமாயிரம் விடுதலைவீரர்கள் களப்பலியானார்களோ அந்த இலட்சியத்தை அடைந்தே தீருவோமென உறுதியெடுத்துக்கொள்வோமாக.

"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"

ஐரோப்பிய ஒன்றியம் எடுத்த முடிவு: விமர்சிக்கிறார் நோர்வே அமைச்சர்

ஐரோப்பிய ஒன்றியம் கூட்டாக எடுத்த நிலைப்பாடானது தனிப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் அமைதி முயற்சிகளுக்கு பங்களிப்புச் செய்வதைக் கடினமாக்கி விட்டது அல்லது சாத்தியமற்றதாக்கிவிட்டது. இலங்கையில் என்ன நடந்தது என்பதை தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் பட்டியலில் ஐரோப்பிய ஒன்றியம் சேர்த்தமையை உதாரணமாகக் கூறலாம்.

இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளார் நோர்வே வெளியுறவு அமைச்சர் ஜோனஸ் காஹர் ஸ்டோர். ஒஸ்லோவில் நடந்த வருடாந்த ஐரோப்பிய மாநாட்டில் அமைச்சர் உரை நிகழ்த்தினார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவைஅடுத்து இலங்கை கண்காணிப்புக் குழுவில் பணிபுரிந்த ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்கள் குடிமக்களுக்கான பாதுகாப்பு உத்தரவாதத்தை விடுதலைப் புலிகள் வாபஸ் வாங்கிக்கொண்டனர். அதன் விளைவாக சுவீடன், டென் மார்க், மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகள் தமது அங்கத்தவர்களை விலக்கிக் கொள்ள நேர்ந்தது. அதே விதமாக நோர்வேயும் செயற்பட்டிருந்தால் அங்கு பணியாற்றுவதற்கு எவரும் மிஞ்சி இருந்திருக்கமாட்டார்கள் என்று அவர் மேலும் கூறினார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் பொதுவான வெளிநாட்டு மற்றும் பாதுகாப்பு கொள்கைகளை உருவாக்கி தீர்மானிக்கும் செயற்பாட்டிலிருந்து நோர்வே விலகி இருந்தமையால் அமைதி முயற்சிகளுக்கு வழமையாகத் தேவைப்படும் ஓரளவு இணக்கப்பாடான ராஜதந்திரத்துடன் ஈடுபட்டுவருவதற்கு எம்மால் முடிந்துள்ளது. என்றும் நோர்வே வெளி நாட்டு அமைச்சர் கூறினார்.

(ப)

உதயன்

ஐரோப்பிய ஒன்றியத்தின் தீர்மானத்தால் ஐரோப்பிய சமூகமோ ஏமாற்றமடைந்துள்ளது. தமிழர்கள் ஏமாறவேயில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.