Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பில் கொட்டாஞ்சேனை,பண்டாரநாயக்க மாவத்தையில் கொரோனா தீவிரம் - 25 தொற்றாளர்கள் கண்டுபிடிப்பு

Featured Replies

(எம்.எப்.எம்.பஸீர்)

கொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19 தொற்று காரணமாக இன்று இரவு 8.00 மணியுடன் நிறைவடைந்த 12 மணி நேரத்தில் 15 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் இலங்கையில் அடையாளம் காணப்பட்ட மொத்த தொற்றாளர்கள் எண்ணிக்கை 269 ஆக அதிகரித்துள்ளது. 

இன்று அடையாளம் காணப்பட்ட 15 புதிய தொற்றாளர்களும் கொழும்பு , கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வாழைத்தோட்டம் எல்லையில் உள்ள பண்டாரநாயக்க மாவத்தையில் இருந்து கண்டறியப்பட்டுள்ள நிலையில் அப்பகுதி முழுவதும் முடக்கப்பட்டுள்ளது.

குறித்த 15 பேரும் பண்டாரநாயக்க மாவத்தை, 146 ஆம் தோட்டத்தில் முதன் முதலாக அடையாளம் காணப்பட்ட 59 வயது பெண்ணுடன் தொடர்புகளை பேணியவர்கள் என தெரியவந்துள்ள நிலையில், இதுவரை பண்டாரநாயக்க மாவத்தையில் மட்டும் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.

அதன்படி கொழும்பு மாவட்டத்தில் மட்டும் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 76 ஆக உயர்ந்துள்ளது.
இவ்வாறான பின்னணியில் இலங்கையில் அடையாளம் காணப்பட்ட 269 தொற்றாளர்களில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று 10 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறிய நிலையில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 96 ஆக உயர்ந்துள்ளது.
அதன்படி தற்போதும், 166 பேர் தொடர்ந்தும் அங்கொடை தேசிய தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலை, வெலிகந்த, முல்லேரியா ஆதார வைத்தியசாலைகள், சிலாபம் - இரணவில் வைத்தியசாலை ஆகியவற்றில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

அத்துடன் கொரோனா சந்தேகத்தில் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கையிலும் இன்றைய தினம் அதிகரிப்பை அவதானிக்க முடிந்ததாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவினர் கூறினர்.

அதன்படி நாடளாவிய ரீதியில் 23 வைத்தியசாலைகளில் 122 பேர் கொரோனா சந்தேகத்தில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த வாரம், கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட 146 ஆம் தோட்டத்தில் வசிக்கும் 59 வயதான பெண்ணொருவர், இந்தியாவுக்கு யாத்திரை சென்றுவிட்டு திரும்பி 33 நாட்களின் பின்னர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கண்டறியப்ப்ட்டது.

அதனை தொடர்ந்து அவரது மகன்மார் உள்ளிட்டோருக்கும் கொரோனா இருப்பது முன்னெடுக்கப்பட்டமை பி.சி.ஆர். பரிசோதனைகளில் தெரியவந்தது.

இதனையடுத்து பண்டாரநாயக்க மாவத்தையின் 146 ஆம் தோட்டம் வரையிலான பகுதி முடக்கப்பட்டு தனிமைபப்டுத்தப்பட்டது. இந்நிலையில் அங்கிருந்த பலரும் வெலிசறை வைத்தியசாலை உட்பட சில தனிமைப்படுத்தல் முகாம்கலுக்கு அனுப்பட்டனர்.

ஏனையோர், முடக்கப்பட்ட பண்டாரநாயக்க மாவத்தை பகுதியிலேயே தனிமைப்படுத்தப்பட்டனர். இந் நிலையில் முடக்கப்பட்ட பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டோரிடம் பி.சி.ஆர். பரிசோதனைக்கான சளி மாதிரிகள் நேற்றைய தினம் பெறப்பட்ட நிலையில், அதன் பெறுபேறுகள் இன்று மாலை கிடைத்தன. அதன்படி அதில் 15 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.

அவர்களது தொடர்பாடல் வட்டத்தை ஆராய்ந்த பாதுகாப்புத் தரப்பினர், அந்த வட்டம் முழு பண்டாரநாயக்க மாவத்தையிலும் வியாபித்துள்ள நிலையில் அப்பகுதியை முழுமையாக முடக்கினர்.

அத்துடன் அங்கிருந்தோர் பலரை தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு இராணுவம் கடற்படையினர், பொலிஸாரின் தலையீட்டுடன் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைக்கு அமைய பாதுகாப்புத் தரப்பினர் அழைத்துச் சென்றனர்.

இது குறித்து, கொழும்பு மாநகர சபையின் பிரதான வைத்திய அதிகாரி, விஷேட வைத்திய நிபுணர் ருவன் விஜயமுனி தகவல் தருகையில்,
' உண்மையில் பண்டாரநாயக்க மாவத்தை பகுதியில் மிக சிக்கலான நிலவரமே உள்ளது. ஏனெனில் பிரதான பாதையில் ஊரடங்கு அமுல் இருந்துள்ள போதும், உள் தோட்டங்களில் அங்கிருந்தவர்கள் ஒன்று கூடி கரம் விளையாடியுள்ளார்கள்.

உணவுகளை பரிமாறி சேர்ந்தே இருந்துள்ளனர். அதனால் அப்பகுதியில் கொரோனா வியாபித்திருக்க அதிக வாய்ப்புள்ளது. அந்த பகுதியில் இருந்து இன்றைய தினம் இரவு அழைத்து செல்லப்பட்ட கர்ப்பிணி தாய் ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது கொழும்பு காசல் வைத்தியசாலையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந் நிலையில் அந்த பகுதியில் உள்ள அனைவரையும் கொரோனா தொடர்பிலான பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கு உட்படுத்தவுள்ளோம்.' என்றார்.
இதுவரை நாடளாவிய ரீதியில் 26 சுகாதார மாவட்டங்களில் 15 இல் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதில் கொழும்பு சுகாதார மாவட்டத்திலேயே அதிக தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இன்று அடையாளம் காணப்பட்ட 15 தொற்றாளர்களுடன் சேர்த்து அம்மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 76 ஆகும்.

அதற்கு அடுத்தபடியாக களுத்துறை மாவட்டத்தில் 45 பேரும், புத்தளத்தில் 35 பேரும் கம்பஹா மாவட்டத்தில் 31 பேரும் இதுவரை தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ். மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் எண்ணிக்கை 16 ஆகும். கண்டியில் 7 பேரும், இரத்தினபுரியில் 5 பேரும், கேகாலையில் மூவரும் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனைவிட குருணாகல், மாத்தறை மற்றும் கல்முனை அகிய சுகாதார மாவட்டங்களில் தலா இருவர் வீதமும், காலி, மட்டக்களப்பு, பதுளை, வவுனியா மாவட்டங்களில் தலா ஒவ்வொரு கொரோனா தொற்றாளர் வீதமும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இலங்கையில் இன்று இரவு 8.00 மணி வரை அடையாளம் காணப்பட்ட 269 தொற்றாளர்களில், 3 வெளிநட்டவர்களும், வெளிநாட்டிலிருந்து வந்து நேரடியாக தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பப்பட்ட 38 பேரும் உள்ளடங்குவதும் குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/80325

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.