Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பு - 12 பண்டாரநாயக்க மாவத்தையில் மாத்திரம் 62 தொற்றாளர்கள்; பிலியந்தலை, பொரலஸ்கமுவவைச் சேர்ந்த இரு தொற்றாளர்களால் பாரிய அச்சம் !

Featured Replies

(எம்.எப்.எம்.பஸீர்)

கொழும்பு - கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பண்டாரநாயக்க மாவத்தையில் மட்டும் இதுவரை 62 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அந்த பகுதியை அண்மித்த ஆமர் வீதியை ஒட்டியுள்ள பகுதிகளும், வாழைத்தோட்டம் , புதுக் கடை பகுதியுடன் தொடர்புபடும் பகுதிகள் பலவும் முற்றாக முடக்கப்பட்டு, பண்டாரநாயக்க மாவத்தை, அதனை சுற்றியுள்ள பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைக்கு அமைய இந்த நடவடிக்கைகள் பாதுகாப்புத் தரப்பினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதன்படிஇன்று செவ்வாய்க்கிழமை மட்டும் 242 குடும்பங்களைச் சேர்ந்த 1010 பேர் மூன்று தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பட்டதாக , கொழும்பு மாநகர சபையின் பிரதான வைத்திய அதிகாரி, விஷேட வைத்திய நிபுணர் ருவன் விஜயமுனி தெரிவித்தார்.

பண்டாரநாயக்க மாவத்தையிலுள்ள 107, 137, 166 ஆம் இலக்க தோட்டங்களை சேர்ந்தவர்களே இவ்வாறு இன்று தனிமைப்படுத்தப்பட்டனர்.
இந்நிலையில் அப்பகுதியில் இருந்து இதுவரை தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 1332 ஆகும். ஏற்கனவே 322 பேர் மட்டக்களப்பு, புனானை, வெலிகந்த - கந்தகாடு உள்ளிட்ட தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பட்டிருந்த நிலையிலேயே இந்த எண்ணிக்கை இவ்வாறு உயர்ந்துள்ளது.

இதனைவிட பண்டாரநாயக்க மாவத்தையிலுள்ள 107, 137, 166 ஆம் இலக்க தோட்டங்களை அண்மித்த பகுதியிலுள்ள ஏனைய 06 தோட்டங்களும் தற்போது முற்றாக முடக்கப்பட்டு அங்குள்ளவர்கள் வீடுகளுக்குள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

ஆமர் வீதி பகுதியிலும் கல்வல பகுதியிலும் முழுமையாக பண்டாரநாயக்க மாவத்தை நோக்கி பயணிக்க முடியுமான இடங்களை மூடி இந்த பகுதி முடக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதான வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி கூறினார்.

இவ்வாறு முடக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிப்போரிடமும் கொரோனா தொற்று குறித்தான பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கான சளி மாதிரிகள் பெறப்படவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பண்டாரநாயக்க மாவத்தையில்இன்று இரவு 8.00 மணியுடன் முடிவடைந்த 12 மணி நேரத்தில் மட்டும் 5 கொரோனh அவைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

இதனிடையே நேற்று திங்கட்கிழமை அடையாளம் காணப்பட்ட கொழும்பு மாவட்டத்தின் பிலியந்தலை மற்றும் பொரலஸ்கமுவ பகுதிகளைச் சேர்ந்த இரு தொற்றாளர்களால் பாரிய அச்சம் ஏற்பட்டுள்ளது.

இவர்கள் இருவரும் எவ்வகையான கண்காணிப்புக்கும் உட்படாத சமூக கட்டமைப்புக்குள் கண்டறியப்பட்டதால் இந்த அச்சம் ஏற்பட்டுள்ளது.
பிலியந்தலை பகுதியில் அடையாளம் காணப்பட்ட நபர், மீன் வர்த்தகர் எனவும் அவருக்கு பேலியகொடை மீன் சந்தையுடன் நேரடியான தொடர்புகள் இருந்துள்ளமையும் தெரியவந்துள்ளது.

அதன்படிஇன்று முதல் பேலியகொடை மீன் சந்தை 3 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளதுடன், மீன் சந்தை வர்த்தகர்கள், சேவையாளர்கள் கொரோனா குறித்த பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படவுள்ளனர். இதற்கான நடவடிக்கைகள்இன்றேஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் குறித்த நபர் வீடு வீடாக சென்றும், தனது வர்த்தக நிலையம் ஊடாகவும் மீன் விற்பனை செய்துள்ளமை தெரியவந்துள்ள நிலையில், அவரிடம் மீன் கொள்வனவு செய்தவர்களை தனிமைப்படுமாறு சுகாதாரத் துறையினர் அறிவித்துள்ளனர்.

அத்துடன் மீன் வர்த்தகருடன் அப்பகுதியில் நேரடி தொடர்பில் இருந்த 11 பேரை பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கு உட்படுத்தியுள்ள சுகாதாரத் துறையினர், அப்பகுதியில் 15 குடும்பங்களை சேர்ந்த 74 பேரை தனிமைப்படுத்தியுள்ளனர்.

இதேவேளை பொரலஸ்கமுவ பகுதியில் இருந்து திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கும் கொரோனாதொற்றிருப்பது தெரியவந்ததால் அச்ச நிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த நபர் கொட்டாவ - பன்னிப்பிட்டிய பகுதியில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றுக்கு குருதி மாற்றத்துக்காக அடிக்கடி சென்றுவருபவர் என தெரியவந்துள்ள நிலையில், வைத்தியசாலையில் இருந்து அவருக்கு கொரோனாதொற்று ஏற்பட்டதா என்பது குறித்து அவதானம்செலுத்தப்பட்டுள்ளது.
குறித்த வைத்தியசாலைக்கு அடையாளம் காணப்பட்ட 114 ஆவது தொற்றாளர் சென்றுவந்திருந்தமை ஏற்கனவே அடையாளம் காணப்பட்டிருந்த நிலையிலேயே இச்சந்தேகம் எழுந்துள்ளது.

இந் நிலையில், குறித்த தனியார் வைத்தியசாலையும் மூடப்பட்டு அங்கு சேயைாற்றியவைத்தியர்கள் ஊழியர்கள் உட்பட அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக இன்றையதினத்தில் இரவு 8.00 மணி வரையிலான காலப்பகுதி வரை அடையாளம் காணப்பட்ட மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 310 ஆக அதிகரித்துள்ளது.

இதில் 7 தொற்றாளர்கள் இதுவரை உயிரிழந்துள்ள நிலையில்,இன்றும் நால்வர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளை விட்டு வெளியேறினர்.
அதன்படி இதுவரை 102 தொற்றாளர்கள் பூரண குணமடைந்துள்ளனர். இந் நிலையில், 201 தொற்றாளர்கள் தொடர்ந்தும் அங்கொடை தேசிய தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலை, வெலிகந்த, முல்லேரியா ஆதார வைத்தியசாலைகள், காத்தான்குடி ஆதார வைத்தியசாலை மற்றும் சிலாபம் - இரணவில் வைத்தியசாலை ஆகியவற்றில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

அத்துடன் கொரோனா சந்தேகத்தில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 158 ஆகும். அவர்கள் நாடளாவிய ரீதியில் 29 வைத்தியசாலைகளில் கொரோனா சந்தேகத்தில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந் நிலையில் தொடர்ந்தும் அதிக தொற்றாளர்கள் மேல் மாகாணத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்று நோய் தடுப்புப் பிரிவின் தகவல்கள் தெரிவித்தன.

அந்த தகவல்கள் பிரகாரம் மேல் மாகாணத்தில் அடையாளம் காணப்பட்டோர் எண்ணிக்கை 192 ஆகும். இதில் கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள தொற்றாளர்களின் எண்ணிக்கை 115 ஆகும்.

அதற்கு அடுத்தபடியாக களுத்துறை மாவட்டத்தில் 45 பேரும், புத்தளத்தில் 35 பேரும் கம்பஹா மாவட்டத்தில் 31 பேரும் இதுவரை தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ். மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் எண்ணிக்கை 16 ஆகும். கண்டியில் 7 பேரும், இரத்தினபுரியில் 5 பேரும், கேகாலையில் நால்வரும் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனைவிட குருணாகல், மாத்தறை மற்றும் கல்முனை ஆகிய மாவட்டங்களில் தலா இருவர் வீதமும், காலி, மட்டக்களப்பு, பதுளை, வவுனியா மாவட்டங்களில் தலா ஒவ்வொரு கொரோனா தொற்றாளர் வீதமும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இலங்கையில் இன்று இரவு 8.00 மணி வரை அடையாளம் காணப்பட்ட 310 தொற்றாளர்களில், 3 வெளிநட்டவர்களும், வெளிநாட்டிலிருந்து வந்து நேரடியாக தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பட்ட 38 பேரும் உள்ளடங்குவதும் குறிப்பிடத்தக்கது.

 

https://www.virakesari.lk/article/80461

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.