Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊரடங்கு தளர்ந்த போது இவர்கள் எங்கே ஓடிச் சென்றார்கள்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஊரடங்கு தளர்ந்த போது இவர்கள் எங்கே ஓடிச் சென்றார்கள்?

 

kanapathy.jpg

 

இந்தக் கொரோனாக் காலத்தில் எது நடந்தாலும் அதனைச் சமூக நலன் கொண்டு பார்க்கவே மனம் விழைகிறது. மனிதர்கள் பற்றிய நினைவுகளைச் சுமந்தபடியே அது தொடர்பான சம்பவங்களை மனம் இரை மீட்டுக் கொள்ளுகிறது. கடந்த 16 வியாழக் கிழமையன்று வட மாகாணத்தில் யாழ்.மாவட்டம் தவிர்ந்தன ஏனைய இடங்களில் ஊரடங்கு சில மணி நேரங்களுக்குத் தளர்த்தப்பட்டது.

அந்தச் சிறிய இடைவெளி யைப் பயன்படுத்தி பலரும் பலவழிகளில் தமது தேவைகளை மீளமைத்துக் கொண்டனர். பலர் பலசரக்குக் கடைகளை நோக்கி ஓடினர். சிலர் வங்கிகளில் பணத்தைப் மீளப் பெறவும், தமது தோட்டம் துரவுகளைச் சென்று பார்த்துவிட்டு வரவும் அந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டனர். சிலர் தம்மிடம் அதிகம் இருக்கின்ற வளங்களைப் பிறரோடு பகிர்ந்து கொண்டனர். சிலர் தமது நெருங்கிய உறவுகளைப் பார்க்கச் சென்றனர்.

இப்படியாகத் தமது தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அந்த இடைவெளியைப் பயன்படுத்திக் கொண்டவர்களுள் பலர் நிதி நிறுவனங்களை நோக்கியும் ஓடிச் சென்றிருக்கின்றனர். அவர்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்கத் தமது நகைகளை அடகு வைக்கவே அவ்வாறு சென்றிருக்கின்றனர் என்ற செய்தி சற்று அதிர் ச்சி தருவதாக இருந்தாலும் அழமாகச் சிந்திக்கவும் செய்திருக்கிறது.

வன்னி மாவட்டத்தில் பல இடங்களில் இந்த நிலைமையைத் தாங்கள் அவதானித் ததாக இலங்கையின் பிரபல வானொலி ஒன்று செய்தி வெளியிட்டிருக்கிறது. எமது சமூகத்தைச் சார்ந்த ஒரு சாரார் தமது உணவுத்தேவைக்காகத் தம்மிடமிருந்த அற்ப சொற்ப மீதிகளையும் அடகு வைக்கத் தொடங்கியிருக்கின்றனர். இதனை மீளப் பெறுவதற்கான எந்த வழிவகைகளும் அவர்களிடம் இருக்கும் என்று சொல்வதற்கில்லை. அவர்கள் பெரும்பாலும் தின வருவாயில் தங்கி வாழ்பவர்கள். அன்றைய நாளைக் கடக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் அவர்களிடம் இருக்குமே ஒழிய அடகை எப்படி மீளலாம் என்ற கரிசனையோடு இருக்க மாட்டார்கள். அடகு வைப்பதைத் தவிர வேறு வழி இல்லை என்ற நிலையில் அவர்கள் இருப்பதால்தான் அவர்கள் பற்றிச் சற்று ஆழமாக நாம் சிந்திக்க வேண்டி இருக்கிறது.

இப்படியான வேளைகளில் இவர்கள் போன்றவர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்ட ஒரு அமைப்பு எம்மிடம் இல்லை. ஒரு பொறி முறை இல்லை. அப்படி ஒன்று இருந்திருந்தால் இப்படியான சந்தர்பத்தில் அவர்களுக்கு ஆதரவாக அந்த அமைப்புச் செயற்பட்டிருக்கும். என்ற சிந்தனை எம்மை மீண்டும் ஒரு சமூகத் தேடலை நோக்கி இழுத்துச் செல்கிறது. அவற்றை எல்லாம் கவனித்து வழிநடத்த பொறுப்புள்ளதொரு தலைமைத்துவம் எம்மிடம் இல்லை. “பிற குழந்தைகள் போல எனக்கும் எனது பெற்றோர் இருந்திருந்தால் எம்மை இப்படி விட்டிருக்க மாட்டார்கள்” என ஒரு அநாதைக் குழந்தை ஏங்குவதைப் போல….. ஏங்கவேண்டிய சூழ்நிலைக்குள் நாம் இருக்கிறோம்.

கடந்த தேர்தல் காலத்திலும் இப்படியானதொரு ஏக்கச் சூழ்நிலைக்குள் இருந்தபோது பல புத்தி ஜீவிகளுக்குச் சுடலை ஞானம் ஏற்பட்டது. பல சந்திப்புகள் நடைபெற்றன. அதிலும் அரசியல் தலையீடுகள் குறுக்கிட்டு அதனை அப்படியே நீர்த்துப்போகச் செய்துவிட்டன. இவற்றை எல்லாம் முன் அனுபவமாகக் கொண்டு முன் செல்ல வேண்டிய பொறுப்போடு நாம் இருப்பதால் உடனடியாக ஏதாவது செய்தாக வேண்டும். தெளிந்த சிந்தனையோடு சமூகப் பாதுகாப்பை நிலைநிறுத்தி யதாகத் தொடர் நடவடிக்கைளை மேற்கொள்ளக் கூடியதொரு சமூக நிறுவனம் எமக்கு வேண்டும். அது அனைத்து வளம் மிக்க எமது சமூக அங்கத்தவர்களால் நிரப்பப்பட வேண்டும். அவர்கள் எதுவித அரசியல் பின்னணி அற்றவர்களாகவும், அரசியல் கொரோனாக்களை வெல்லத் தகுந்தவர்களாகவும் இருக்க வேண்டும்.

இப்படியானதொரு செயற்திட்டத்தின் கீழ் இணைந்து செயற்படாது போனால் தற்போது காணப்படும் நிலையே தொடர்கதையாகிவிடும்.

அப்படி ஒரு அமைப்பின் தேவையை நாம் உணர்வதைப்போல புலம்பெயர் சமூகமும் சிந்திக்கிறது. தற்போது காணப்படும் இந்த உலகப் பொது இக்கட்டுக்களுக்குமிடை யேயும் அவர்கள் எமது நலன் சார்ந்து சிந்திப்பது எமக்கு ஆறுதலைத் தருகிறது. அவர்கள் அப்படிச் சிந்திக்கிறார்கள் என்றதற்கு ஆதாரமாக அவர்களின் அனுசரணையுடன் இடர் நீக்கவெனப் பல இடங்களில் தொடர்ந்து நடைபெற்று வரும் உலர் உணவு விநியோகத்தைச் சொல்லலாம். பல அமைப்புக்களுக்கூடாகவும், தனியாரா கவும் பலர் தமது பங்களிப்பைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இது பற்றிப் புலம்பெயர் தமிழர் ஒருவர் என்னுடன் தொடர்பு கொண்டு பேசியபோது – “ இந்த இடர்காலத்தில் தம்மாலான நிதியைத் தந்துதவப் பலர் விரும்புகிறார்கள். ஆனால் அவர்கள் அதனைக் கொடுக்க தமிழர்களுக்கான பொது அமைப்பைத் தேடுகிறார்கள்.அதற்கு 2009க்குப் பின்னரான காலத்தில் அவர்கள் பெற்ற அனுபவம்தான் காரணம். அப்போது இங்கிருந்து கொடுக்கப்பட்ட பல உதவிகள் மக்களைச் சென்றடையவில்லை.எனவே கண்டவர்களிடம் தமது பங்களிப்பைக் கொடுக்கத் தயாரில்லை.அதுவும் விசேடமாக அரசியல்வாதிகளை அவர்கள் நம்பத் தயாராக இல்லை. எமது மக்களுக்கெனப் பொதுவானதொரு அமைப்புச் செயற்படுமாயின் அவர்களிடம் உதவிகளைக் கையளிக்கலாம் என்று சொன்னார்.

தினமும் வேலைக்குச் சென்று தமது வாழ்வாதாரத்தைப் பேணுகின்ற அவர்களுக்கான தொரு பொறிமுறை எம்மிடம் இல்லை. அதனைத் தற்காலிகமாக ஏற்படுத்தக் கூடிய வல்லமை யும் இல்லை என்றால்…? அடகு கடைகளின் முன்னால் காத்துக் கிடக்கும் அவர்கள் பற்றியும் நாம் சிந்திக்க வேண்டும். இது போன்ற விடயங்களில் எமது கவனமில்லாது போனால் 2009 காலப்பகுதியைப் போன்று, மீண்டும் அவர்களைக் கடன் கலாசாரத்துக்குள் தொடர்ந்து செல்ல அனுமதிப்பவர்களாக இருப்போம். சமூகத்தில் கடனாளிகள் அதிகமானால் சமூகம் சீரழிந்துவிடும். அதனால் குடும்பங்களில் அமைதியற்றுப் போகலாம். அமைதியற்ற குடும்பங்களில் குடும்ப வன்முறைகள் அதிகமாகும். தற்கொலைகள் தவிர்க்க முடியாததாகிவிடும். அப்படி ஒரு சமூகத்தை நாம் பார்க்க விரும்புகிறோமா? நாம் ஆழமாகச் சிந்திக்க வேண்டிய தருணம் இது.

 
 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அமைப்பு தொடங்கினால்..முதலில் உதவிபெறச் செல்வது..புலம்பெயர் தமிழரை தூற்றும் சிலர்தான்..அவர்கள்தான் கக்கூசு கழுவிகள்..குப்பை பொறுக்கிகள் .. பெண் பித்தர்கள்  வாய்க்கு வந்தபடி சொல்பவர்கள்... உங்கடை உதவி எமக்கு தெவையற்றது என்ற கொள்கைப்பிடிப்பாளர்கள்...  எனவேபுலம்பெயர்  எம்மினமே..ஊர் ஊராக இளையவர்களிடம் உதவியை ஒப்படையுங்கள்.. அவர்கள் சரியான முறையில் உதவி புரிவார்கள்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.