Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்கா – கனடா எல்லையை திறப்பதில் ஏன் இந்த அவசரம்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா – கனடா எல்லையை திறப்பதில் ஏன் இந்த அவசரம்?

  • ரொறொன்ரோவிலிருந்து குரு அரவிந்தன்

கனடா – அமெரிக்க எல்லையைத் திறப்பதில் அமெரிக்கா அதிக ஆர்வம் காட்டினாலும் கனடாவின் நலன் கருதி எல்லையைத் திறப்பது சற்றுப் பின்போடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸின் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 21 ஆம் திகதி இந்த எல்லைகள் இருநாட்டின் விருப்பத்துடன் மூடப்பட்டன. பொதுமக்களுக்காக மூடப்பட்டாலும் அத்தியாவசிய வர்த்தக, மற்றும் பொது சுகாதார தேவைகளுக்கான போக்குவரத்துக்காக எல்லைகள் பாவனையில் இருந்தன. எனவே மேலும் ஒரு மாதத்திற்கு எல்லையைத் திறப்பது பற்றிய முடிவு பின்போடப் பட்டிருப்பதாகக் கனடியப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ அவர்கள் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸின் தாக்கம் குறையும் பட்சத்தில், பொருளாதார நோக்கம் கருதி எல்லைகள் மீண்டும் திறக்கப்படலாம்.

canada-1.jpgஎங்கள் பக்கத்து நாடான அமெரிக்காதான் அதிகளவில் கொரோனா வைரசின் தாக்கத்திற்குள்ளான நாடாக இருக்கின்றது. அத்துடன் கொரோனா வைரஸால் பலியானவர்களில் அதிக தொகையைக் கொண்ட நாடாகவும் அமெரிக்கா இருக்கின்றது. யானையும் ஒரு நாள் அடி சறுக்கும் என்பது போல, தொடக்கத்தில் அவர்கள் விட்ட தவறு காரணமாக இந்த நிலை ஏற்பட்டிருக்கின்றது. இன்றைய நிலையில் (23-04-2020) 876,174 மேற்பட்டோருக்கு அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவியிருக்கின்றது. இதனால் இதுவரை 49,651 அங்கு பலியாகி இருக்கின்றனர். இதில் எங்களுக்கு அருகே எல்லையில் உள்ள நியூயோர்க்கில் மட்டும் 20,861 பேர் மரணமாகி இருக்கிறார்கள். பொருளாதார வீழ்ச்சியை நிவர்த்தி செய்யச் சில மாகாணங்கள் உல்லாசப் பயணிகளின் பாவனைக்காகத் தமது கடற்கரைகளைத் திறந்து விட்டிருக்கிறார்கள்.

அமெரிக்காவின் கெனெக்டிகெட் மாநிலத்தில் உள்ள சவுத் வின்ட்ஸர் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களுக்கு அந்த நகரத்தவர்கள் மோட்டார் வண்டிகளில் சென்று மரியாதை செலுத்தினர். அங்கு பணியாற்றும் தென்னிந்தியாவில் மைசூரைச் சேர்ந்த தளத்தில் நின்று கடமையாற்றிய மருத்துவரான உமா மதுசூதனனுக்கும் மரியாதை செலுத்தும் விதமாக அந்நகர பொதுமக்கள், காவல்துறை மற்றும், தீயணைப்புத்துறையினர் அவரது வீட்டிற்கு முன்பாக வண்டிகளில் ஊர்வலமாகச் சென்று நன்றி தெரிவித்த காட்சி முகநூலில் பதிவு செய்யப்பட்டிருந்தது.

523-1-8.jpgசீனா நாட்டில் வுகான் மாகாணத்தில் ஆரம்பித்த இந்த தொற்று நோய் அங்கிருந்து உலகெங்கும் பரவியது. அமெரிக்கா, இத்தாலி, ஈரான், ஸ்பெயின், பிரான்ஸ், ஆகிய நாடுகளே இந்த தொற்று நோயால் இதுவரை மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன. உலக ரீதியாகப் பார்க்கும் போது இதுவரை 210 நாடுகளில் பரவி இருக்கின்றது. 2,715,614 பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர், இவர்களில் வைத்தியசாலைகளில் 1,717,920 பேர் சிகிட்சை பெற்று வருகின்றனர். நோய்வாய்ப்பட்டவர்களில் 190,422 பேர் இதுவரை மரணமாகி இருக்கிறார்கள். ஜேர்மனி, யப்பான், வியட்நாம், அமெரிக்கா ஆகிய நான்கு நாடுகள்தான் சீனாவிற்கு வெளியே முதலில் பெரிய அளவில் பாதிக்கப்பட்டன. பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை சுமார் 715, 000 பேர் சிகிட்சை பெற்றுக் குணமடைந்திருப்பதாகத் தெரிகின்றது. ஆனாலும் இதுவரை இதற்கான மருந்தோ, அல்லது தடுப்பூசிகளோ கண்டு பிடிக்கப்படவில்லை.

கொரோனா வைரஸ் காரணமாகக் கனடாவில் 2020 ஆண்டு ஏப்ரல் 20 ஆம் திகதி மாலை கிடைத்த எண்ணிக்கைபடி 36,823 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் கியூபெக் மாகாணத்தில் 19,319 பேரும், ஒன்ராறியோ மாகாணத்தில் 11,184 பேரும், அல்பேர்டாவில் 2,908 பேரும், வான்கூவர் மாகாணத்தில் 1,699 பேரும் அடங்குவர். கனடாவில் 2020 ஆண்டு ஏப்ரல் 23 ஆம் திகதி மாலை கிடைத்த எண்ணிக்கைபடி 42,110 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் கியூபெக் மாகாணத்தில் 20,965 பேரும், ஒன்ராறியோ மாகாணத்தில் 12,879 பேரும், அல்பேர்டாவில் 3,401 பேரும், வான்கூவர் மாகாணத்தில் 1,795 பேரும் அடங்குவர். ஏப்ரல் 2 ஆம் திகதி 10,132 ஆக இருந்த கனடாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஏப்ரல் 23 ஆம் திகதி 42,110 ஆக அதிகரித்திருக்கின்றது. ஒன்ராறியோவில் 2,793 ஆக இருந்த பாதிக்கப்பட்டவர்கள் தொகை 12,879 ஆக அதிகரித்திருக்கின்றது. கனடாவில் கொரோனா வைரஸ்ஸால் ஏற்பட்ட முதலாவது மரணம் மார்ச்மாதம் 9 ஆம் திகதி அறிவிக்கப்பட்டது. ஏப்பிரல் மாதம் 23 ஆம் திகதி மாலை வரை 2,147 பேர் மரணமாகியிருக்கின்றனர்.

கொரோனா வைரஸால் ஏற்படும் மரணங்கள் ஒரு பக்கம் இருக்க கனடாவின் வடகிழக்குப் பகுதியில் இருக்கும் நோவாஸ்கோஷியாவில் 51 வயதான கபிறியல் வோட்மான் என்பவர் சென்ற சனிக்கிழமை றோயல் கனடியன் மவுண்ட் பொலீஸ் சீருடை அணிந்து தனது முன்னாள் நண்பர்கள் இருவரைச் சுட்டுக் கொலைசெய்திருந்தார். அவரது வண்டியும் பொலீஸ் வண்டி போலவே இருந்ததாகச் சொல்கிறார்கள். தொடக்கத்தில் தன்னுடன் தொடர்புடைய சிலரைப் பழிவாங்கும் நோக்கத்தோடு சுட்டுக்கொன்ற இவர் பின் கட்டுக்கடங்காமல் கண்ணில் பட்ட எல்லோரையும் சுடத் தொடங்கினார். அத்துடன் நிறுத்தாமல் இரண்டு குழந்தைகளின் தாயான ஹெய்டி ஸ்ரீவென்ஸன் என்ற பொலீஸார் ஒருவரையும் சுட்டுக் கொன்றார். அதன்பின் இவர் பொலிஸாரின் துப்பாக்கியையும் எடுத்துச் சென்ற வழியெல்லாம் மொத்தமாகப் 22 பேரைச் சுட்டுக்கொலை செய்திருக்கின்றார். சுயதனிமைப்படுத்தலால் எல்லோரும் வீட்டுக்குள் இருந்ததால், பொலீஸ் உடையுடன் வீடுகளுக்குச் சென்று கதவைத் தட்டித் திறந்து இந்த கொலைகளை அவரால் இலகுவில் செய்ய முடிந்தது. இச்சம்பவத்தில் ஐந்து வீடுகளையும் தீக்கிரையாக்கினார். இரண்டு வண்டிகளும் எரியுண்டன. சனிக்கிழமை இரவு ஆரம்பமான இவரது வெறியாட்டம், ஞாயிறு காலைவரை தொடர்ந்தது. ஞாயிறு காலை பொலிஸார் 57 மைல்லளுக்கு அப்பால் கலிபாக்ஸ் செல்லும் பாதையில் இவரைக் கண்டுபிடித்துச் சுட்டுக் கொன்றனர். இச்சம்பவத்தில் கொலையாளியுடன் மொத்தம் 23 பேர் இதுவரை மரணமாகி இருக்கிறார்கள். 1989 ஆண்டு மொறியலில் 15 கல்லூரி மாணவர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தின் பின் கனடாவில் நடந்த தனிமனித பெரிய தாக்குதல் இதுவாகும்.

524-3.jpgகனடாவில் கொரோனா வைரஸின் தாக்கத்தால் மரணமானவர்களில் தமிழ் சமூகத்தவர்களும் அகப்பட்டிருக்கிறார்கள். அந்தக் குடும்பத்தினர் எல்லாம் இழப்பின் வலியால் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். எல்லோரும் வீட்டுக்குள் அடைந்திருப்பதால் சமூகத்தில், ஏன் உறவுகளிடையே கூட என்ன நடக்கிறது என்பது அனேகருக்குத் தெரியாத சூழ்நிலையில் இருக்கிறார்கள். அவர்களாக அறிவித்தால் அல்லாமல் யாராவது மரணமானால்கூட கொரோனா வைரஸா காரணம் என்று கேட்பதற்குக்கூடத் தயங்குகின்றார்கள். குடும்பத்தவர்களே அருகே செல்ல முடியாத சுகாதாரக் கட்டுப்பாடுகள் ஒரு பக்கம், ஒருவரின் மரணத்தில் மீண்டும் தங்கள் இருப்பை உறுதி செய்து, வார்த்தையாடி மகிழ்பவர்கள் மறுபக்கம். மரணமானவரின் குடும்பத்தை ஆற்றுப்படுத்துவதை விட்டுவிட்டு, அந்தக் குடும்பத்தைச் சின்னாபின்னமாக்கித் தனிப்பட்ட கோபதாபங்களை ஒருசிலர் தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஒன்றுமறியா அப்பாவிமக்கள் தான் இவர்களின் பொறியில் சிக்கி பலியாகுகிறார்கள். நாங்கள் மதிக்கும் இங்குள்ள சமூக நலன் விரும்பும் கல்விமான்கள், பெரியவர்கள் சிலர் குறிப்பிட்டது போல ‘இந்தக்கூட்டம்’ இருக்கும் வரை தமிழ் சமூகம் இந்த மண்ணில் ஒருநாளும் உருப்படாது என்பதை மீண்டு உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். ஆனால் கூடாததிலும் ஒரு நல்ல விடயம் என்னவென்றால் இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள், சந்தர்ப்பவாதிகள் யார் என்பதை எல்லாம் புரிந்து கொள்ள கொரோனா வைரஸ் தமிழ் சமூகத்திற்கு, குறிப்பாக அடுத்த தலைமுறையினருக்கு நல்லதொரு சந்தர்பத்தைத் தந்திருப்பதுதான்.

கனடாவில் தபால் விநியோகம் செய்பவர்கள் தொடர்ந்தும் செய்து கொண்டேதான் இருக்கிறார்கள். அவர்களில் 9 பேர் இதுவரை ரொறன்ரோவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டதாக அறிவித்திருக்கிறார்கள். எங்கெல்லாம் கடிதங்களை பட்டுவாடா செய்தார்கள் என்பதை அவர்கள் குறிப்பிடவில்லை. தெரிந்தோ, தெரியாமலோ சமூகநலன் விரும்பிகள் யாரும் அவர்களிடம் காகிதம் மூலம் கொரோனா பரவுமா என்று கேள்வி கேட்கவில்லை, பட்டிமன்றமும் நடத்தவில்லை. பத்திரிகை மூலம் கொரோனா வைரஸ் பரவாது என்று தினக்குரல் பத்திரிகையில் வெளிவந்த செய்தி இங்குள்ள பலருக்கு ஆறுதல் தருவதாகவும், நலன் விரும்பிகளின் கேள்விகளுக்குப் பதிலாகவும் அமைந்திருந்தது.

 

http://thinakkural.lk/article/39686

உடையார் அண்ணை, தலையங்கத்துக்கும் கட்டுரைக்கும் என்ன சம்பந்தம் ?

 

"மரணத்தில் மீண்டும் தங்கள் இருப்பை உறுதி செய்து, வார்த்தையாடி மகிழ்பவர்கள் மறுபக்கம். மரணமானவரின் குடும்பத்தை ஆற்றுப்படுத்துவதை விட்டுவிட்டு, அந்தக் குடும்பத்தைச் சின்னாபின்னமாக்கித் தனிப்பட்ட கோபதாபங்களை ஒருசிலர் தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஒன்றுமறியா அப்பாவிமக்கள் தான் இவர்களின் பொறியில் சிக்கி பலியாகுகிறார்கள். நாங்கள் மதிக்கும் இங்குள்ள சமூக நலன் விரும்பும் கல்விமான்கள், பெரியவர்கள் சிலர் குறிப்பிட்டது போல ‘இந்தக்கூட்டம்’ இருக்கும் வரை தமிழ் சமூகம் இந்த மண்ணில் ஒருநாளும் உருப்படாது என்பதை மீண்டு உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். ஆனால் கூடாததிலும் ஒரு நல்ல விடயம் என்னவென்றால் இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள், சந்தர்ப்பவாதிகள் யார் என்பதை எல்லாம் புரிந்து கொள்ள கொரோனா வைரஸ் தமிழ் சமூகத்திற்கு, குறிப்பாக அடுத்த தலைமுறையினருக்கு நல்லதொரு சந்தர்பத்தைத் தந்திருப்பதுதான். "

 

கட்டுரையாளர் என்ன சொல்ல வருகிறார் ?

  • கருத்துக்கள உறவுகள்

குடும்பத்தைச் சின்னாபின்னமாக்கித் தனிப்பட்ட கோபதாபங்களை ஒருசிலர் தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஒன்றுமறியா அப்பாவிமக்கள் தான் இவர்களின் பொறியில் சிக்கி பலியாகுகிறார்கள். நாங்கள் மதிக்கும் இங்குள்ள சமூக நலன் விரும்பும் கல்விமான்கள், பெரியவர்கள் சிலர் குறிப்பிட்டது போல ‘இந்தக்கூட்டம்’ இருக்கும் வரை தமிழ் சமூகம் இந்த மண்ணில் ஒருநாளும் உருப்படாது என்பதை மீண்டு உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். 

 

ஏற்றுக்கொள்கின்றேன்.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.