Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவில் 33 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Coronavirus-India.jpg

இந்தியாவில் 33 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 74 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு, நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதனால் வைரஸ் அதிவேகமாக பரவுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் பரிசோதனைகளை அதிகரிக்க அதிகரிக்க, புதிய நோயாளிகளின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. இறப்பு விகிதமும் உயர்ந்து வருகிறது.

இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை இன்று(வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்தை கடந்துள்ளது. மொத்தம் 33050 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஆயிரத்து 718 பேருக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 67 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்து 74 ஆக உயர்ந்துள்ளது. 8 ஆயிரத்து 325 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.

கொரோனா பாதிப்பு எண்ணக்கையில் மகாராஷ்டிர மாநிலம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு மொத்தம் 9 ஆயிரத்து 915 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 432 பேர் உயிரிழந்துள்ளனர்.

குஜராத்தில் 4 ஆயிரத்து 82 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 197 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய பிரதேசத்தில் 2561 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், 129 பேர் மரணமடைந்துள்ளனர். தலைநகர் டெல்லியில் 3439 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 56 பேர் உயிரிழந்துள்ளனர்.

http://athavannews.com/இந்தியாவில்-33-ஆயிரத்தை-கட/

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே நாளில் 1,823 பேருக்கு கொரோனா தொற்று: இந்தியாவில் பாதிப்பு 33 ஆயிரத்தை கடந்தது

புதுடெல்லி, 

உலகம் முழுவதையும் ஆட்டிப்படைத்து வரும் கொரோனா, உயிரிழப்பு மற்றும் நோய்த்தொற்றை ஏற்படுத்துவது மட்டுமின்றி அனைத்து நாடுகளையும் பொருளாதார பாதிப்புக்கும் உள்ளாக்கி வருகிறது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு அனைத்து தொழில்களும் முடங்கியுள்ளதால் ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பை எப்படியாவது சரிகட்டிக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் பல்வேறு நாடுகளும் தொடர்ந்து ஊரடங்கை நீட்டித்து வருகின்றன. சில நாடுகள் தொழில் தொடங்க அனுமதி வழங்கி தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை பிறப்பித்துள்ளன. இந்தியாவில் நாளை மறுநாளுடன் ஊரடங்கு முடிவுக்கு வருகிறது. தொடர்ந்து வைரஸ் தாக்கம் இருந்து வருவதால் பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.


இந்தியாவில் நேற்று முன்தினம் வரை 31,787 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், இந்த எண்ணிக்கை நேற்று 33,610 ஆக அதிகரித்து இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. புதிதாக 67 பேர் உயிரிழந்ததால், பலியானவர்கள் எண்ணிக்கையும் 1,075 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 8,373 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பிவிட்டதாகவும், 24,162 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மராட்டிய மாநிலத்தில் கொரோனா கோர தாண்டவம் ஆடி வருகிறது. அங்கு மட்டும் 9,915 பேரை கொரோனா பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது. மேலும் அங்கு தனது கோரப்பிடியில் சிக்கிய 432 பேரை பலி கொண்டுவிட்டது. அடுத்தபடியாக அதிவேகமாக குஜராத்தில் தனது ஆதிக்கத்தை செலுத்திய கொரோனா 4,082 பேரை பாதிப்புக்கு உள்ளாக்கியதுடன் 197 பேரை உயிரிழக்கவும் செய்துவிட்டது.

டெல்லியில் 3,439 பேரும், மத்திய பிரதேசத்தில் 2,560 பேரும், ராஜஸ்தானில் 2,556 பேரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். தமிழகத்தில் ஒரே நாளில் அதிகபட்சமாக 161 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,323 ஆக அதிகரித்து இருக்கிறது. உத்தரபிரதேசத்தில் 2,203 பேரையும், ஆந்திராவில் 1,403 பேரையும், தெலுங்கானாவில் 1,016 பேரையும், கர்நாடகாவில் 565 பேரையும் கொரோனா தாக்கி உள்ளது.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/05/01051636/Corona-infected-1823-people-in-one-day-the-impact.vpf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.