Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பும், நியூயோர்க்கும் – கொரோனாவும்…?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பும், நியூயோர்க்கும் – கொரோனாவும்…?

  • கணபதி சர்வானந்தா

பிறந்தது தொடக்கம் கைகளே உடலுக்கான அத்தனை பணிகளையும் செய்து வந்தன. எதை எடுத்தாலும் கைகளின் உதவியின்றி உடலால் நகர்த்த முடியாது என்ற நிலை. கைகளில் பாதிப்புற்ற மாற்றுத் திறனாளிகளைப் புறந்தள்ளிவிட்டுப் பார்த்தால் அனைவரது இயக்கத்துக்கும் கைகளே ஆதாரமாக இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் இன்று உடல் கைகளைப் பார்த்துப் பயப்படுமளவுக்குக் கொரோனா கைகளை உடலிலிருந்து அந்நியப்படுத்தி யுள்ளது. கைகள் உடலுக்கு உதவவேண்டிய நிலை ஏற்படுகின்ற தருணங்களில் எல்லாம் கைகளைப் பார்த்து “ சவர்க்காரம் போட்டுக் கழிவுவிட்டாயா?” என்று உடல் கேட்டுவிட்டுத் தான் தன்னைத் தொட அனுமதிக்கிறதென்றால் நிலைமை எப்படி மாறி இருக்கிறது?

522-6.jpgஇப்படியாகக் கொரோனா உலகச் சமூகத்திடையே பல அதிரடி மாற்றங்களைச் செய்திருக்கிறது. மனிதன் தொன்று தொட்டுத் தொடர்ந்து கொண்டு வருகிற கலாசார, பண்பாட்டுத் தளங்களிலேயே அசைவுகளை ஏற்படுத்திப் பல மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய தேவையை உணர்த்தியிருக்கிறது கொரோனா. “கறணம் தப்பினால் மரணம்” என்ற நிலைக்கு வந்துவிட்டோம். தொற்றுக்கு எதிராகப் பல புதிய நடைமுறைகளைக் கடைப்பிடித்தாக வேண்டும். “இதுவரை அப்படித்தான் இருந்து வந்திருக்கிறோம்” என்று அடம்பிடிக்க முடியாது. எமது சமய ரீதியாக இப்படித்தான் செய்து வந்திருக்கிறோம், இதைத்தான் கடைப்பிடித்து வந்திருக்கிறோம் என்று பிடிவாதம் பிடித்தோமானால்…. ஆட்டம் அடங்கிவிடும்.

கொரோனா என்ற பதத்துக்குள் கொழும்பென்ன?, நியூயோர்க்கும் என்ன? இரண்டும் எதுவித பாராபட்சமற்றுச் சிக்கித் தவிப்பதை நேரிடையாகப் பார்க்கிறோம். உலகில் இந்த இடங்கள் வேறு வேறு இடத்திலும், வேறு வேறு தளத்திலும் அமைந்திருந்தாலும் கொரோனா சம்பந்தப்பட்ட தாக்கமும், அதற்கு எதிரான நடவடிக்கைகளும் ஒன்றாகத்தானிருக்கிறது. இப்படியான இடங்களில் நோய் தாக்கம் உச்சமாக இருப்பதற்குக் காரணம் ஒன்றுதான். மக்கள் நெருக்கமாக வாழ்கின்றனர். இரண்டு இடங்களும் சுத்தம், சுகாதாரம் என்ற வகையில் வேறுபட்டாலும் மற்றைய எல்லாவகைகளிலும் இரண்டு இடங்களுக்கும் வேறுபாடு கிடையாது. முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுக்காது விட்டதால், நியூயோர்க்கில் காணப்படும் வீச்சை ஒத்ததாகக் கொழும்பிலும் நோய்த்தொற்றின் விகிதம் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது.

மேற் குறிப்பிட்ட இரண்டு நகரங்களும் சனச்செறிவு அதிகமானவை. பல் தேசிய இனங்களால் நிரம்பி வழிபவை.இனம், மொழி, கலை, கலாசாரம் என்பவற்றால் மட்டும் அவர்கள் வேறுபடவில்லை. அந்த மக்ககளுக்கிடையே காணப்படும் வாழ்வியல் முறைகளும் ஒன்றுக்கொன்று வேறுபடுகின்றன. இனத்தை அடிப்படையாகக் கொண்ட கலாசாரமும், மொழியினைக் கொண்ட கலாசாரமும், மதத்தைக் கொண்ட கலாசாரமும் அவர்கள் வாழ் வியலிலே பிரதிபலிக்கின்றன. உணவு தயாரிப்பிலும், அவற்றை உண்ணுகின்ற முறைகளிலும் கூட அவர்கள் வேறுபடுகின்றனர்.

நியூயோர்க்கில் நோய்த் தொற்று அங்குள்ள சனச்செறிவை அடிப்படையாகக் கொண்டு அதிகரித்தாலும், மேற்கத்தைய கலாசார, பண்பாடுகளும் அதனை ஊக்குவிக்கின்றன. அது மட்டுமல்ல இவ்வாறான இடங்களில் சமூக இடைவெளிகளை இயல்பிலே கொண்டிருக்கின்ற சமூகங்களும், அது இல்லாது பழக்கப்பட்ட சமூகங்களும் என இரண்டு வேறுபட்ட சமூகங்களின் ஒன்றிணைவுக் கூடாக அதிக தொற்றுக்கள் இடம்பெறுவதாகச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. எட்ட நின்று பழகும் சமூகங்களும் உண்டு. கட்டி அணைத்து முத்தமிட்டுப் பழகும் சமூகங்களும் உண்டு.எனவே தொட்டுப் பழகும் சமூகத்தால் இந் நோய் இலகுவாகத் தொற்றிக் கொண்டு பலவிதமான ஊடகங்களினூடாகப் பிறருக்குத் தொற்ற வாய்ப்பிருப்பதாகவே நம்பப்படுகிறது. அவர்கள் புறத்தில் எந்தவித சுகாதாரச் சூழலைப் பேணினாலும் பல சமயங்களில் மேற் குறிப்பிட்ட விடயங்களினூடாகக் கோட்டைவிட்டுவிடுவார்கள்.

ஆனால் கொழும்பைப் பொறுத்தவரை மேற்சொன்னவற்றோடு முக்கியமானதொன்று நோய்த் தொற்றை ஊக்குவிக்கின்றது. பொதுவாக அங்கே காணப்படுகின்ற சுகாதாரம் அற்ற சூழலும், முறையற்று அமைக்கப்பட்டிருக்கும் குடியிருப்புகளும்.சமூக இடைவெளியைப் பேண மூன்று அடிக்குக் கூடவான இடைவெளிகளிலேயே அவர்கள் நடமாட வேண்டும் என்ற விதி மீறலும் நோய் தொற்றை ஊக்குவிக்கக் கூடிய காரணிகளாகக் காணலாம். தற்போது நோய்த் தொற்று அதிகரித்திருக்கும் வாழைத்தோட்டம், பண்டாரநாயக்க மாவத்தைப் பகுதிகளிலே அமைந்துள்ள வீடுகளுக்கிடையே காணப்படும் இடைவெளிகள் பெரும்பாலும் ஒரு அடிக்குக் குறைவாகவும், கழிவு முகாமைத்துவத்தில் மிகவும் பின் தங்கிய இடங்களாகவும் காணப்படுகின்றன. நோய் எச்சில் வழியாகவும் தொற்றலாம். எச்சிலை அவர்கள் முறையாகக் கழிவகற்ற மாட்டார்கள். கண்ட கண்ட இடங்களில் எல்லாம் எச்சில் விட்டிருப்பதைக் காணலாம். அவற்றை மிதித்த வண்ணம் மனிதர்களுக்கு நடுவே பிராணிகளும் அவற்றின் போக்கிலே நடமாடிக் கொண்டிருக்கும். அவர்களை அறியாமலே மிகவும் நெருக்கடிக்குள் அவர்கள் வாழ்வு அமைந்திருப்பதைக் காணலாம். அங்கே பல்லின மக்கள் வாழ்வதால் பெரும்பாலும் அவர்கள் ஒருவரை ஒருவர் சமாளித்துப்போக வேண்டிய நிலையில், ஒரு கலப்படமான கலாசார, பண்பாட்டு நடவடிக்கைகளுக்குள்ளேயே அவர்கள் வாழ்வு நகர்ந்துகொண்டிருக்கும்.. பெரும்பாலும் அங்கே தெருக்கரையோரங்களில் காணப்படும் சுகாதாரமற்ற உணவுக் கடைகள், காய்கறி மற்றும் மாமிச உணவுப் பொருட்களை விற்கும் கடைகள் என்பன மக்கள் ஒன்று கூடும் முக்கியமான இடங்களாகக் காணப்படுகிறது. சிறிய பெட்டிக்கடைகளுக்கு முன்னாலே பலர் நின்று உணவு அருந்துவது சாதாரணமாக இடம்பெறுவதொன்று. மற்றும் சுகதாரமற்று, சிறந்த முறையில் பேணப்படாத பொது மலசல கூடங்கள், பொதுக் குளியல் தொட்டிகள் என்பனவும் நோயைப் பரப்புவதற் கான சூழலைக் கொண்டிருக்கின்றன. மற்றும் இப்படிப்பட்ட இடங்களிலேயே இருப்பவர்களில் அதிகப்படியானவர்கள் பணியாளர்களாகவும், கூலிகளாகவும் புறக்கோட்டைச் சந்தையிலும், வியாபாரப் பகுதிகளிலும், தொகுதிகளிலும் பணிபுரிகின்றனர். எனவே இப்பகுதிகளில் நோய் தொற்றைக் கட்டுப்படுத்த அந்தப் பகுதிகளுக்கேற்றவாறு ஒரு புதிய பொறிமுறையின் அவசியத்தை உணர்ந்து அதற்கேற்றவாறு அத்துறை சார்ந்தவர்கள் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

மேற் சொன்ன இடங்களைவிட கொள்ளுப்பிட்டி. பம்பலப்பிட்டி போன்ற இடங்களும் அதனை அண்டிய புற நகர்ப் பகுதிகளில் உள்ள எந்த இடத்தை எடுத்துக் கொண்டாலும் அங்கே இரு வேறுபட்ட குடியிருப்புகள் அமைந்திருக்கும். மிகவும் சுகாதரம் பேணப்படும் ஒரு பெருங் குடியிருப்புப் பகுதிக்கு அண்மையில் சுகாதாரமற்ற நெருக்கமான குடிசைகள் கழிவு வாய்க்கால்களுக்கு அருகே அமைந்திருப்பதோடு அந்தக் குடிசைவாழ் மக்களே பெருங்குடியிருப்புகளில் காணப்படும் அன்றாட வேலைகளுக்கு வருபவர்களாகக் காணப்படுகின்றனர். ஒருவர் ஒரே நாளில் பல வீடுகளுக்குச் சென்று பணியாற்று பவர்களாகவும் இருக்கின்றனர். எனவே இவர்களும் நோய்க் காவிகளாக இருக்க வாய்ப்புண்டு.இத்தகையதொரு பிணைப்புகள் நிறைந்த வாழ்க்கை முறைகளும் நோய்த் தொற்றை அதிகரித்து ஆரோக்கியமான வாழ்கைக்கு அச்சுறுத்தலாக அமைகின்றன. எனவே இப்படியான இடங்களிலும் விசேடமாக ஒரு புதிய நடைமுறைகளைக் கைக்கொள்ள வேண்டும்.

இந்த இக்கட்டான தருணத்தில் மக்கள் மருந்துகளைத் தேடி ஓடுவதைவிட சுகாதார நிறுவனங்களால் பரிந்துரைக்கப்படும் முறைகளைக் கைக்கொண்டு, சுய ஒழுக்கத்தைப் பேணி த் தம்மையும், தம்மைச் சார்ந்தவர்களையும் பாதுகாக்க வேண்டும் என்றார் ஒரு மருத்துவர். முக்கியமாக பொதுச் சுகாதார நடைமுறைகளோடு அந்தந்தப் பகுதிவாழ் மக்கள் தமது வாழ்வியலுக்கும், நடைமுறைகளுக்கும் ஏற்றவாறு தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ நோய்ப் பரவலைத் தடுக்கக் கூடிய உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து அதனை நடைமுறைப்படுத்தாவிட்டால் கொரோனாவை அதிகம் அறுவடை செய்கின்ற நியூயோர்க்கைப் போலக் கொழும்பும் மாறிவிடும் என்று மக்கள் அச்சப்படுகின்றனர்.

 

http://thinakkural.lk/article/39807

8 hours ago, உடையார் said:

மேற் சொன்ன இடங்களைவிட கொள்ளுப்பிட்டி. பம்பலப்பிட்டி போன்ற இடங்களும் அதனை அண்டிய புற நகர்ப் பகுதிகளில் உள்ள எந்த இடத்தை எடுத்துக் கொண்டாலும் அங்கே இரு வேறுபட்ட குடியிருப்புகள் அமைந்திருக்கும். மிகவும் சுகாதரம் பேணப்படும் ஒரு பெருங் குடியிருப்புப் பகுதிக்கு அண்மையில் சுகாதாரமற்ற நெருக்கமான குடிசைகள் கழிவு வாய்க்கால்களுக்கு அருகே அமைந்திருப்பதோடு அந்தக் குடிசைவாழ் மக்களே பெருங்குடியிருப்புகளில் காணப்படும் அன்றாட வேலைகளுக்கு வருபவர்களாகக் காணப்படுகின்றனர். ஒருவர் ஒரே நாளில் பல வீடுகளுக்குச் சென்று பணியாற்று பவர்களாகவும் இருக்கின்றனர். எனவே இவர்களும் நோய்க் காவிகளாக இருக்க வாய்ப்புண்டு.இத்தகையதொரு பிணைப்புகள் நிறைந்த வாழ்க்கை முறைகளும் நோய்த் தொற்றை அதிகரித்து ஆரோக்கியமான வாழ்கைக்கு அச்சுறுத்தலாக அமைகின்றன. எனவே இப்படியான இடங்களிலும் விசேடமாக ஒரு புதிய நடைமுறைகளைக் கைக்கொள்ள வேண்டும்.

நியூயோர்க்கில் உள்ள பெரும் பணக்காரர்கள் புறநகர் பகுதிகளுக்கு ஓடுகிறார்கள். 

அதேபோன்று, கொழும்பிலும் உள்ள காசு முதலைகள், புற நகரங்களில் கூட ஒரு மனையை கொண்டு இருக்கலாம். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.