Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யுத்த குற்றச்சாட்டுகளிற்கு ஒருநாள் பதிலளிக்கவேண்டிய இராணுவ அதிகாரிகள் பலர் தற்போது இலங்கையை ஆட்சி செய்கின்றனர்- ஜஸ்மின் சூக்கா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யுத்த குற்றச்சாட்டுகளிற்கு ஒருநாள் பதிலளிக்கவேண்டிய இராணுவ அதிகாரிகள் பலர் தற்போது இலங்கையை ஆட்சி செய்கின்றனர்- ஜஸ்மின் சூக்காRajeevan Arasaratnam May 5, 2020 யுத்த குற்றச்சாட்டுகளிற்கு ஒருநாள் பதிலளிக்கவேண்டிய இராணுவ அதிகாரிகள் பலர் தற்போது இலங்கையை ஆட்சி செய்கின்றனர்- ஜஸ்மின் சூக்கா2020-05-05T09:20:55+00:00உள்ளூர்
இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தனது நிர்வாகத்தில் அச்சம் தரும் எண்ணிக்கையில் யுத்தகுற்றச்சாட்டிற்குள்ளான பலரிற்கு நியமனம் வழங்கியுள்ளாhர் எனதென்னாபிரிக்காவை தளமாக கொண்ட சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

முன்னர் ஊழலில் ஈடுபட்டனர் என்ற அதிகாரிகளும் அவரது நிர்வாகத்தில் காணப்படுகின்றனர் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவிற்கு நெருக்கமான அதிகாரிகளின் விபரங்கள் அடங்கிய இன்போகிராபிக்சினையும் சர்வதேச அமைப்பு வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதிக்கு நெருக்கமான அதிகாரிகளில் அவரது கஜபா படைப்பிரிவை சேர்ந்த ஆறு ஜெனரல்களும் , பிரிகேடியர்களும் உள்ளனர் என தெரிவித்துள்ள சர்வதேச அமைப்பு இராணுவதளபதி, முப்படைகளின் பிரதானி, பாதுகாப்பு செயலாளர்,தேசிய புலனாய்வு பிரிவின் தலைவர் போன்ற முக்கிய பதவிகள் இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கஜபா படைப்பிரிவை சேர்ந்த இரு ஜெனரல்கள் 1989ம ஆண்டு மாத்தளை மாவட்டத்தில் கோத்தபாய ராஜபக்சவின் கீழ் செயற்பட்டவர்கள் எனவும் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பு தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட பகுதிக்கான இராணுவ ஒருங்கிணைப்பாளராக அவர் செயற்பட்டவேளை சுமார் 700 சிங்கள இளைஞர்கள் காணாமல்போனார்கள் என அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ ஆவணங்கள் காண்பிக்கின்றன என சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.


 
இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் போது கோத்தபாய ராஜபக்ச அதிக பலம் பொருந்திய அச்சத்தை ஏற்படுத்தும் பாதுகாப்பு செயலாளராக பணியாற்றியவேளை அவரின் கீழ் பணிபுரிந்த 14 இராணுவ மற்றும் காவல்துறை அதிகாரிகள் தற்போதை அவரது அரசாங்கத்தில் முக்கிய பதவியை வகிக்கின்றனர் எனவும் சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.

1989 மற்றும் 2009 ம் ஆண்டுகளில் தங்களின் சொந்த பிரஜைகள் ஆயிரக்கணக்கானவர்கள் கொலை செய்யப்பட்டதுடன் தொடர்புபட்டவர்கள் என்ற குற்றச்சாட்டுகளிற்காக ஒருநாள் பதிலளிக்கவேண்டிய இராணுவ அதிகாரிகளால் இலங்கை தற்போது நிர்வகிக்கப்படுகின்றது என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்று இயக்குநர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

இவ்வாறான இராணுவ அதிகாரிகள் தொடர்ந்தும் அதிகாரத்தில் உள்ளமை இலங்கை தனது அதிகாரிகளின் மனித உரிமைகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவில்லை என்பது புலனாகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜெனிவாவில் தீர்மானங்களிற்கு அனுசரனை வழங்கிய நாடுகள் இந்த விழுமியங்கள் பின்பற்றப்படுவதை உறுதி செய்யவேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

http://thinakkural.lk/article/40404

4 hours ago, உடையார் said:

குறிப்பிட்ட பகுதிக்கான இராணுவ ஒருங்கிணைப்பாளராக அவர் செயற்பட்டவேளை சுமார் 700 சிங்கள இளைஞர்கள் காணாமல்போனார்கள் என அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ ஆவணங்கள் காண்பிக்கின்றன என சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.

இது உண்மை என எடுத்துப்பார்த்தால், சிங்கள மக்களையும் கூட கொன்றவர்களை சிங்களவர்களே பெரும்பான்மை தந்து ஆட்சியில் அமர்த்தி உள்ளார்கள். 

ஒரு காரணம், இந்த இராணுவ கட்டமைப்பு. அதற்குள் மக்கள் பயத்துடன் வாழ வேண்டிய நிலமை. 
அடுத்து, சிங்கள எதிர்க்கட்சிகளின் பலவீனம். மேலும், ஊடக அடக்குமுறை.

பௌத்த பீடாதிபதிகளை தம் வசம்  வைத்திருக்கும் மகிந்த கூட்டம். அதற்கு கையில் எடுக்கும் மதவாதம், இனவாதம். 

  

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ampanai said:

இது உண்மை என எடுத்துப்பார்த்தால், சிங்கள மக்களையும் கூட கொன்றவர்களை சிங்களவர்களே பெரும்பான்மை தந்து ஆட்சியில் அமர்த்தி உள்ளார்கள். 

எங்களுக்கு ஒருகண் போனாலும் பரவாயில்லை சிறுபாண்மை இனங்களுக்கு இரண்டுகண்களும் போகவேண்டும் என்ற வக்கிரம்கொண்ட வெறி, வேறொன்றுமில்லை. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.