Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காத்தான்குடிப் படுகொலையின் பின்னணி..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காத்தான்குடிப் படுகொலையின் பின்னணி பற்றி எழுதுமாறு முகநூலிலுள்ள பல உறவுகள் கேட்டிருந்தார்கள். விடுதலைப்புலிகள் அவசியமற்றதாகக் கருதிய ஓர் “இஸ்லாமிய சிங்களப் பிணக்கு” பற்றி நாம் எழுத வேண்டியதில்லை என நினைத்திருந்தேன். ஆனால் தமிழ்நாட்டின் திடீர் “புலியெதிர்ப்புத் தலைவிரிகூத்தாடிகள்” சிலர்; காத்தான்குடி என்ற இடத்தின் சரியான பெயரைக்கூட அறியாமல், காத்தான்குளம் சம்பவம், கந்தன்குடி சம்பவம் என்று விளிக்க ஆரம்பித்த பிறகு இதை எழுதியே ஆகவேண்டும் என்று முடிவெடுத்து, சில தமிழீழத் தகமையாளர்களுடன் உரையாடி அவர்களது கருத்தினையும் செவிமடுத்த பின்னரே இதை எழுதுகிறேன்.

காத்தான்குடி என்பது தமிழ்இஸ்லாமியர்கள் அதிகமாக வாழு தமிழ்நிலம். அவர்களைத் தமிழ்த்தேசிய அங்கத்தவர்களாகவே நீண்டகாலமாக தமிழ்த்தலைமைகள் கருதிவந்தன. புலிகளும் அவ்வாறே கருதினார்கள். ( யாழ் மற்றும் வன்னியிலிருந்த முஸ்லிம்களின் நலன்கருதி, புலிகள் அவர்களை விலகிவாழச்சொல்லியதற்கான காரணங்களை வேறோரிடத்தில் பார்க்கலாம்) கிழக்கு மாகாணம் புலிகளின் கட்டுப்பாட்டிற்குள் முழுமையாக வந்துவிடுவதைத் தவிர்க்க வேண்டுமாயின் புலிகளுக்கும் முஸ்லிம்களுக்கும் பிணக்கினை மூட்ட சிங்களம் திட்டமிட்டது, காரணம்; தமிழீழ விடுதலைப்புலிகளோடு ஏராளமான முஸ்லிம்கள் இணைந்திருந்த காலம் அது.

காத்தான்குடிப் பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டவர்கள் மீது கண்மூடித்தனமாகத் துப்பாக்கிப் பிரயோகம் செய்தவர்கள், நிதானமாக நடந்து சென்று பள்ளியினுள் நுழைந்து தாக்குதல் நடாத்தியிருந்தார்கள். இந்தத் தாக்குதலிலிருந்து தப்பிப்பிழைத்த முஸ்லிம்கள் அவர்களது முகங்களைத் தெளிவாக அடையாளம் கண்டிருந்தார்கள். International Crisis Group வெளியிட்ட அறிக்கையில்; தாக்குதல் நடாத்தியவர்களை “Unknown Gunmen” என்றே குறிப்பிடுகிறது. அவ்வேளையில் ஜிகாத் இயக்கத்தின் நடவடிக்கைகள் கிழக்கில் ஆரம்பித்திருந்ததையும் ICG குறிப்பிடுகிறது. இதுவரை; எவ்வித நீதிமன்ற உத்தரவோ அன்றி உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களோ இதைப் புலிகளே செய்தனர் என்று எங்கும் குறிப்பிடவில்லை. இலங்கை அரசின் செய்திச்சேவையான “லங்காபுவத்” கட்டவிழ்த்த செய்தியே “காத்தான்குடிப் பள்ளிவாசலில் புலிகள் தாக்குதல் ” என்று தலைப்பிட்ட செய்தியாகும்.

அந்நேரத்தில், கிழக்கில் புலிகளது அரசியல் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக இருந்த கரிகாலன் அவர்களிடம் இதுசம்பந்தமாக வினவப்பட்டபோது, இதற்கும் புலிகளுக்கும் சம்பந்தமில்லை எனத் தெரிவித்திருந்தார். அந்நேரம் காத்தான்குடிப்பகுதி முற்றுமுழுதாக இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியாகும். இலங்கை அதிரடிப்படையின் கட்டுப்பாட்டுப் பகுதியில் நடந்த இத்தாக்குதலை நடாத்திய சூத்திரதாரிகள், நின்று நிதானித்துத் தாக்குதலை நடாத்தித் தப்பிச்செல்லும் வரை, அதிரடிப்படையின் ஒரு படைப்பிரிவாவது பள்ளிவாசல் அமைந்திருந்த பகுதியைச் சுற்றி வளைத்திருந்தால் தாக்குதலாளிகளில் சிலரையாவது உயிருடன்பிடிக்கவோ அன்றி சுட்டுக்கொல்லவோ முடிந்திருக்குமே..ஏன் அதை இராணுவம் செய்ய முனையவில்லை என்ற கேள்விக்கு இதுவரை யாரிடமும் பதிலில்லை.

கிழக்கில் பிளவுகளை ஏற்படுத்த, நீர்கொழும்புக் கிறிஸ்தவரான சிறிலங்காவின் புலனாய்வு அதிகாரி; “முனாஸ்” என்பவர் பற்றிய தகவல்களை, நிராஜ் டேவிட் அவர்களது “உண்மைகள்” வெளியிட்ட விழிய இணைப்பு இங்கே தொடுக்கப்பட்டுள்ளது.

இலங்கைமுஸ்லிம்களில் பலர் இன்றும் ஊர்காவல் படைகளிலும் அரச புலனாய்வு அதிகாரிகளாகவும் இருக்கிறார்கள். சத்துருக்கொண்டான், வந்தாறுமூலை, பனிச்சங்கேணி என தமிழர்கள்கள் மீது அவர்கள் படுகொலைகளை நிகழ்த்திக்கொண்டிருந்த வேளையில் கூட, அந்நடவடிக்கைகளுக்குப் பதில்சொல்லும் விதமாக விடுதலைப்புலிகள் “படுகொலைப் படலத்தை” நடாத்தியிருந்தாற்கூட; பள்ளிவாசல் ஒருபோதும் அவர்களது தெரிவாக இருந்திருக்காது. காத்தான்குடியிலும் அண்டிய பிரதேசங்களில் வெறும் 77 குடும்பங்களே அந்தாளில் முஸ்லிம்மதத்தைச் சாராத குடும்பங்களாகும்.கிராமம் கிராமமாக இறங்கித் தாக்குதல் நடாத்தியிருந்தால் கூட, ஏறக்குறைய 1000 முஸ்லிம்களையாவது கொன்றிருக்க முடியும்.

விடுதலைப்புலிகள் மனிதப்பண்பிற்கு அப்பாற்பட்ட தாக்குதல்களை நடாத்துவதில்லை என கடந்த Easter குண்டுவெடிப்பின்போது பல செய்திநிறுவனங்கள் தெரிவித்திருந்ததை அவதானித்திருப்பீர்கள். முஸ்லிம்களைக்கொண்டு, கிறிஸ்தவர்களை இலக்காக வைத்து நடாத்தப்பட்ட இத்தாக்குதல்களையும், அதுசம்பந்தமான தகவல்களையும் வேகமாக முடக்கியபோதும், காத்தான்குடியில் ஆயுதங்களோடு தங்கியிருந்த முஸ்லிம்களைச் சுட்டுக்கொன்றபோதும், அதன் தொடர்ச்சியாகப் பல முஸ்லிம்கள் கைதுசெய்யப்பட்டபோதும் எந்த முஸ்லிம் கட்சியும் கேள்வியெழுப்பவில்லையே ஏன்.,? பௌத்த நாட்டில் சிறு கீறல் விழுந்தால் போர்க்கொடி உயர்த்தும் பௌத்த பீடமானது, Easter தாக்குதல்கள் பற்றி வாயே திறக்காது மௌனம் சாதித்தமைக்கான காரணம் என்ன…?

அதிகம் வேண்டாமே.. காத்தான்குடிப் பள்ளிவாசல் தாக்குதல் நடந்தபொழுதில், விடுதலைப்புலிகளின் தாக்குதற் செயற்பாடுகளுக்குப் பொறுப்பாக இருந்தவர் கருணா. அவர் இப்பொழுது இலங்கை அரசுடன் இருக்கிறார். காத்தான்குடி படுகொலை பற்றி நீலிக்கண்ணீர் வடிப்பவர்கள், இலங்கை அரசிற்கு அழுத்தம் கொடுத்து கருணாவை விசாரணைக்கு உட்படுத்தலாமே…? இன்றுவரை அதைச்செய்ய ஏன் முஸ்லீம் தலைவர்கள் முன்வரவில்லை..?

எல்லாமே அரசியற் தரகர்களின் திருகுதாளம். தமிழர்களை அழிக்க முஸ்லிம்கள் தேவைப்பட்டார்கள். இப்போது சிங்கள அரசியற் போட்டியின் பகடைக்காய்களாக அங்கங்கே முஸ்லிம்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். காத்தான்குடி என்பது புலியெதிர்ப்பாளர்கள் தொட்டுக்கொள்ளும் ஊறுகாய். அதுபற்றி ஆழமாக அவர்களிடம் விசாரித்தாலே முன்னுக்குப்பின் முரணான தகவல்களை உளறுவார்கள். அதில் பெரிய ஆச்சரியமில்லை;

காரணம் அனைவருக்குமான பொது எதிரி “புலிகள்”. அப்படியாயின் முஸ்லிம்கள் இவர்களது நட்பா என்று பார்த்தால் இல்லவே இல்லை. பாவம் முஸ்லிம்கள், காலம் காலமாக சிங்களத்திடம் தம்மை அடகுவைத்த பகடைக்காய்கள் அவர்கள்….!

https://youtu.be/r0uG7ci2Y2w

-தேவன்

http://www.velichaveedu.com/edkl88/?fbclid=IwAR1GOV0pY1admRKHziiZojD004DJM0kWTJqC3GBx_QbGMwC7uuE1Brf9YWg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.