Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழினப் படுகொலையின் மக்கள் அவலத்தை நினைவேந்தும் முள்ளிவாய்க்கால் கஞ்சி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழினப் படுகொலையின் மக்கள் அவலத்தை நினைவேந்தும் முள்ளிவாய்க்கால் கஞ்சி

75.jpg

2009, தமிழினப்படுகொலையின் போது மக்கள் உணவுக்காக பட்டதுன்பத்தை நினைவேந்தும் வகையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி திட்டம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் தொடக்கநாளான இன்று தமிழர் தாயகத்தில் தொடங்கிவைக்கப்பட்டதோடு, மரக்கன்றுகளும் வழங்கபட்டன.

யூதர்கள் தமக்கென்று ஓர் தேசம் உருவாகிய பின்னரும், கஞ்சி குடித்து தமதினத்தின் அவலத்தை நினைவு கொள்வதுபோல், முள்ளிவாய்க்கால் இனவழிப்புக்கால வாழ்வியலை காலாதி காலம் நினைவிற் கொள்ளும் வகையில் தமிழினப்படுகொலையின் குறியீடாக ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’ அமைகின்றது.

இந்நிலையில் தமிழர் தாயகத்தில் எதிர்கால எதிர்கால சந்ததியினருக்கும் இளைய தலைமுறையினருக்கு தெரியப்படுத்தும் முகமாகவும் முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழ் இளையோர் இயக்கத்தினால் தொடங்கி வைக்கப்பட்டது.

முள்ளிவாய்க்கால் கிழக்கு முள்ளிவாய்க்கால் மேற்கு வலைஞர் மடம்,அம்பலவன் பொக்கணை,மாத்தளன் ,புதுக்குடியிருப்பு முதலிய பல பிரதேசங்கள் உள்ளடங்களாக ஆயிரம் பொதுமக்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சிக்கான பொதிகள் வழங்கிவைக்கப்பட்டதோடு மரக்கறி நாற்றுக்களும் வழங்கப்பட்டுள்ளன.

74.jpgமுல்லைத்தீவு மாவட்டம் மட்டுமல்லாது கிளிநொச்சி வவுனியா முதலிய மாவட்டங்களிலும் இன்றையதினம் ஆயிரம் பொதுமக்களுக்கான கஞ்சி உணவுப் பொதிகளை வழங்கும் செயற்திட்டம் சமநேரத்தில் முன் எடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. ஓரிரு நாட்களில் மன்னார்,யாழ்ப்பாணம் திருகோணமலை மட்டக்களப்பு அம்பாறை முதலிய மாவட்டங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

மே18 முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலையினை தமிழீழத் தேசிய துக்க நாளாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளதோடு, மே12 முதல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடதக்கது.

 

http://thinakkural.lk/article/41513

 

8 hours ago, உடையார் said:

இந்நிலையில் தமிழர் தாயகத்தில் எதிர்கால எதிர்கால சந்ததியினருக்கும் இளைய தலைமுறையினருக்கு தெரியப்படுத்தும் முகமாகவும் முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழ் இளையோர் இயக்கத்தினால் தொடங்கி வைக்கப்பட்டது.

எமது கலாச்சார வாழ்வில் ஒரு புதிய இணைப்பாக இந்த "முள்ளிவாய்க்கால் கஞ்சி" அமையட்டும் !

தமிழன் என்று சொல்பவர்கள் அனைவரும் இந்த ஒருகிழமை படுகொலை செய்யப்பட்ட தமிழர்களை நினைந்து வருந்தி அவர்களுக்காக அவர்கள் குடும்பத்துக்காக பிரார்த்திக்க தவறமாட்டார்கள்.  

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், உரை மற்றும் வெளிப்புறம்

கேள்வி: முள்ளிவாய்க்கால் கஞ்சியின் வரலாறு என்ன?

பதில்: வன்னி பெருநிலப்பரப்பின் மீதான இனவழிப்பு போரினை சிறிலங்கா அரசானது தொடர்ச்சியான குண்டு மழையினுடாக முன்னெடுத்த சமநேரத்தில், மனித விழுமியங்களை மீறி பட்டினி சாவினுடாகவும் மக்களை கொல்வதற்காக திட்டமிட்டு உணவுப்பொருட்களை தடை செய்திருந்தது. சிறிலங்கா இராணுவம் படிப்படியாக மக்களை முள்ளிவாய்க்கால் வரை தள்ளிச்சென்று ஒன்று குவித்தது.

மட்டுப்படுத்த அளவிலான அரிசி ஒன்றினை தவிர ஏனைய உப உணவு வகைகள் கைக்கு எட்டாத ஓர் அவலநிலை. இதன்போது, களமுனை போராளிகளுக்காக சேமிக்கப்பட்ட அரிசியிலிருந்து காய்ச்சப்பட்ட உப்பில்லாத கஞ்சியே பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிரை காப்பாற்றியது. ஆயின், அக்கஞ்சியினைக்கூட நிம்மதியாக குடிக்க விடாது, கஞ்சிக்கு வரிசையில் நின்ற மக்கள் முப்படையினரின் மிலேச்சதனமாக தாக்குதல் மூலம் கொன்றொழிக்கபட்ட வரலாறுமுண்டு.

கேள்வி: முள்ளிவாய்க்கால் கஞ்சியின் முக்கியத்துவம் என்ன?

பதில்: எம்மீதான இனவழிப்பின் போது மக்களின் உயிரை பட்டினி சாவிலிருந்து காப்பாற்றியதில் பெரும் பங்காற்றியது முள்ளிவாய்க்கால் கஞ்சியே. ஒரு நாள் அல்ல, ஒரு வாரமல்ல, பல வாரங்கள் இதுவே உணவு. குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை, ஏன் இரவுபகலாக களமாடிய போராளிகளுக்கு கூட இதுவே உணவு. எமது இனத்தின் மீதான அழிப்பின் மிக முக்கியமான குறியீடு.

எப்படியாவது ஒட்டுமொத்த மக்களையும் ஒன்றுகூட்டி பட்டினியுடன் மொத்தமாக அழித்துவிட தீட்டிய திட்டத்தினை, குண்டுவீச்சில் இறந்தவர் போக மீதிப்பேரை தனித்துநின்று உயிர்காத்த "ஜீவ அமிர்தம்". அனுபவித்தவர்கள் மட்டுமே புரிந்துகொண்ட ஒரு இனப்படுகொலைக்கெதிராக போராடி உயிர்காத்து வரலாறு படைத்த கஞ்சி.

இவ் வரலாறு எம்மிடையே ஆண்டாண்டு காலமாக ஓர் மரபாக பேணப்படுவதுடன் எமது வருங்கால சந்ததியினருக்கும் வாழையடி வாழையாக கடத்தப்படவேண்டும். முள்ளிவாய்க்கால் கஞ்சி தமிழர் வாழ்வியலின் ஓரங்கமாக, கலாச்சாரத்தின் பகுதியாக மாற வேண்டும். தமிழீழ திருநாடு மலர்ந்த பின்பும் எமது விடுதலைக்கு நாம் கொடுத்த விலையை, எமது வலியுணர்வின் நினைவூட்டலாக தொடரப்படவேண்டும்.

கேள்வி: முள்ளிவாய்க்கால் கஞ்சியினை எவ்வாறு தயார் செய்து பரிமாறுவது?

பதில்: மே 18 நினைவேந்தலின் பின்பு, சிவப்பு பச்சை அரிசியில் உப்போ அல்லது வேறு ஏதும் சுவையூட்டும் பொருள்களோ / பதார்த்தங்களோ சேர்க்காமல் கஞ்சியினை காய்ச்சி, முள்ளிவாய்க்காலினை நினைவூட்டும் விதமாக மக்கள் வரிசையில் நின்று பெற்றுக்கொள்ளுமாறு ஏற்பாடு செய்யப்பட வேண்டும். நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொள்ளமுடியாதவர்கள், தத்தமது வீடுகளில் உப்பில்லாத கஞ்சியினை காய்ச்சி தமது அனைத்து குடும்ப அங்கத்தவர்களுக்கு மற்றும் அயலவர்களுக்கும் வழங்கலாம். இதன்போது எமது இனத்தின் மீதான அழிப்பின் வரலாறு தெரியாதவர்கள், குறிப்பாக இளம்பராயத்தினர் மாற்றும் சிறார்களுக்கு எழும் இயல்பான "ஏன் உப்பில்லாத கஞ்சி?" என்ற கேள்வியினுடாக அவர்களுடன் உரையாடுங்கள். அவர்களுக்கு எமது இனம் எவ்வாறு சிறிலங்காவினாலும் மற்றும் 40ற்கும் மேற்ப்பட்ட சர்வதேச கூட்டினுடாக திட்டமிட்டு அழிக்கப்பட்டது என்பதனையும் எமது போராட்டத்தினது நியாயப்பாடுகளையும், எமது இனத்தின் விடுதலையின் அவசியத்தையும் எடுத்துக்கூறுங்கள்.

எமது இளைய சந்ததியினர் விடுதலை அவாவினையும், எமது தமிழீழ கனவினை தூக்கி சுமப்பவர்களாக மாற்றுவதற்கு இச்சந்தர்ப்பத்தினை பயன்படுத்துங்கள். இதனுடாக எமது வரலாற்று கடமையினை செய்வதுடன் விடுதலையின்பால் தொடர்ந்து பயணிப்போம்.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள், பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர் மற்றும் வெளிப்புறம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.