Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயப் பொங்கல் விழா கிரிகை நிகழ்வுகள் மாத்திரமே இடம்பெறும் – மக்களுக்கு அனுமதியில்லை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயப் பொங்கல் விழா கிரிகை நிகழ்வுகள் மாத்திரமே இடம்பெறும் – மக்களுக்கு அனுமதியில்லை

முல்லைத்தீவு, வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் விழா எதிர்வரும் ஜூன் மாதம் 8ஆம் திகதியன்று இடம்பெறவுள்ளது.இந்நிலையில் குறித்த பொங்கல் விழா தொடர்பாக நேற்று புதன்கிழமை முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.இக்கலந்துரையாடலில் மாவட்டசெயலர் க.விமலநாதன், மேலதிக மாவட்டசெயலர் க.கனகேஸ்வரன், சுகாதாரப்பணிப்பாளர், கரைதுறைப்பற்று பிரதேசசெயலர் மணிவண்ணன் உமாமகள், கரைதுறைப்பற்று பிரதேசசபைின் செயலாளர், பொரலிஸார், இராணுவத்தினர், கோயில் நிர்வாகத்தினர் எனப்பலரும் கலந்திருந்துகொண்டனர்.

இந்நிலையில், தற்போது கொரோனா தொற்று அச்சம் காரணமாக, இவ்வருடம் குறித்த பொங்கல் நிகழ்வு பாரிய அளவில் இடம்பெறமாட்டதெனவும், பாரம்பரிய வழிபாட்டுக் கிரிகை நிகழ்வுகள் மாத்திரமே இடம்பெறும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.மக்கள் கூட்டங்கூடுவதைத் தவிர்ப்பதற்காக, குறித்த பொங்கல் கிரிகைகள் இடம்பெறும் நாட்களில், இந்தப் பகுதிகளில் ஊரடங்கு அமுல்படுத்த ஆலோசிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், தற்போதுள்ள கொரோனாத்தொற்று நிலைமைகளைக் கருத்திற்கொண்டு, போலீசார், இராணுவத்தினர், மற்றும் மாவட்டசெயலகம் வழங்கும் அறிவுறுத்தல்களையும், ஆலோசனைகளையும் ஏற்று பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் எனவும் சமகாலத்தில் நிலவுகின்ற கொரோனா நோய் நிலைமையின் காரணமாக உலகத்தோடு நாம் ஒத்துப்போகவேண்டிய தேவைபற்றி தெளிவுபடுத்தப்பட்டது.அதனடிப்படையில், சுகாதாரப் பகுதியின் ஆலோசனைகளை ஏற்று இந்த ஆண்டு பொங்கல் விழாவினை பாரிய பொங்கல்விழாவாக இல்லாமல், பாரம்பரிய ரீதியில் எடுக்கின்ற கிரிகைகளை மாத்திரம் ஆலயத்தில் செய்ய இருக்கின்றோம். அந்தவகையில் மக்கள் கூடுவது தவிர்க்கப்பட்டிருக்கின்றது என தெரிவித்தார்.

இது தொடர்பாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவிக்கையில், “வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் இவ்வருடத்திற்கான வருடாந்த பொங்கல் நிகழ்வு ஜூன் மாதம் 8ஆம் திகதி இடம்பெறவிருக்கின்றது. அந்தப் பொங்கல் நிகழ்வினை நடத்துவதற்கு உரிய அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தோம் என தெரிவித்ததனர்.(15)

 

http://www.samakalam.com/சிறப்பு-செய்திகள்/வற்றாப்பளை-கண்ணகி-அம்மன்/

எமது அறிவுபூர்வமான தற்காப்பு நடவடிக்கைகள் தான் எமது மகிழ்வான வாழ்விற்கு துணை நிற்குமேயொழிய கடவுள் அல்ல என்ற பகுத்தறிவு மக்களுக்கு  இருப்பதை நினுக்கும் போது சந்தோசமாக உள்ளது.  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.