Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொரோனாவும் தேசபரிபாலனமும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனாவும் தேசபரிபாலனமும்

  • நியூசிலாந்து சிற்சபேசன்

Sitsabesan.jpgஇன்றைய காலகட்டத்தில் அசாதாரணமான ஒரு சூழ்நிலை காணப்படுகின்றது. ஒருவகையில் கண்ணுக்குத் தெரியாத எதிரிக்கு அஞ்ச வேண்டியிருக்கின்றது. காமாலைக் கண்ணனுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் என்பது பழமொழி. கண்ணுக்குத் தெரியாத சூனியமெல்லாம் கொரோனா என்பது புதுமொழி. யுத்தமொன்றில் எதிரி கண்ணுக்குத் தெரியும். தாக்குதல் தொடுக்கப்படுகின்ற திசை வழியாக, எதிரி வருகின்ற திசையை அடையாளம் காணலாம். அதன்மூலமாக, எதிரியை எதிர்கொள்ளலாம். சிலவேளைகளில், எதிரியை நேருக்கு நேராகவும் சந்திக்கலாம். கொரோனா கண்ணுக்குத் தெரிவதில்லை. அதனால் எங்கும், எதிலும், எப்போதும் கொரோனாவே தெரிகின்றது.

கொரோனாத் தொற்றின் வெளிச்சத்தில் தெரியத் தொடங்கிய மிகப்பெரிய ஓட்டை தேசபரிபாலனமாகும். ஆனால் அஃது ஒன்றும் புதிய விடயமல்ல. பொருளாதார வளர்ச்சி, நுகர்வுக் கலாசாரம், சமாதானத்திற்கான யுத்தம் போன்ற போலிக்கவசங்களினால் தேசபரிபாலனத்தின் ஓட்டைகள் இதுகாறும் மறைக்கபட்டன.

covid-0-2.pngதொற்றுத் தொடர்பில் போதிய தகவல் இல்லாமையே தொற்றைத் தடுப்பதிலும், தொற்றுக்கான சிகிச்சை அளிப்பதற்கான மருந்தை அடையாளம் காணுவதிலும் சிக்கலை ஏற்படுத்துவதாகத் தேசங்கள் சொல்கின்றன. தடுப்பு மற்றும் தயார்நிலை என்பவை பொதுச் சுகாதாரப் பொறிமுறைகளில் முக்கிய தூண்களாகும். இவை இரண்டிலுமே தேசபரிபாலனம் தோற்றிருக்கின்றது வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு முன்னர் கட்டுவதற்கே அணை என்று பெயர். வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பின்னரே தேசங்கள் அணைகட்டுவதற்கான மூலப்பொருட்களைத் தேடுகின்றன. 2009லே ஏற்பட்ட சுவைன் காய்ச்சல் தொற்றும், 2014ல் ஏற்பட்ட எபொலாத் தொற்றும் எச்சரிக்கை சமிக்ஞைகளை வெளிப்படுத்தின. உலகளாவிய ரீதியாக ஏற்படக்கூடிய தொற்றுக் குறித்து அச்சம் ஏற்பட்டிருந்தது. ஆனாலும் தேசபரிபாலனத்தில் உரிய கவனம் எடுத்துக் கொள்ளப்படவில்லை.

 

மாறாக, பொருளாதார வளர்ச்சி, பாதுகாப்புத் தளபாடங்களின் உற்பத்தி, அணுஆயுதப் பெருக்கம், நாட்டாண்மை என்பவற்றிலேயே கவனம் குவிந்திருந்தது. பொதுசுகாதாரப் பொறிமுறையின் தொய்வு சுற்றுச்சூழல் சீர்கேடு போன்றவை பொருட்படுத்தப்படவில்லை. அறம் செல்லாக்காசாகியது. வல்லான் வகுப்பதே வாய்க்கால் என்பதே நடைமுறையாகியது. விளைவு: 2020ம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் நான்கு மில்லியனுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டிருக்கின்றது. மூன்று இலட்சம் வரையானவர்கள் பலியாகியுள்ளனர்.

ஒரு பேரிடரை எதிர்கொள்ளும் வல்லமை கொண்ட தேசபரிபாலனம் எங்கெல்லாம் காணப்படுகின்றன? பொதுச்சுகாதாரப் பேரிடரை எதிர்கொள்வதற்கான தயார்நிலையில் தேசங்கள் காணப்படுகின்றனவா? பேரிடரை எதிர்கொள்ளும் வல்லமை கொண்ட நிர்வாகக் கட்டமைப்பு காணப்படுகின்றதா? ஒருங்கிணைந்த செயற்பாடுகளை முன்னெடுக்கும் பாங்கு தேசங்களிடையே காணப்படுகின்றனவா?. ஆகக்குறைந்தது, ஓரணியில் செயற்படுவதான தோற்றப்பாட்டை வெளிப்படுத்துகின்ற தேசங்களிடையேகூட, ஒருங்கிணைந்த செயற்பாடுகளைக் காணமுடிகின்றதா? இவையே, கொரோனாப் பேரிடர் வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ள தேசபரிபாலனம் குறித்த கேள்விகளாகும்.

தேசபரிபாலனத்துக்கு அடுத்தபடியாக, பேரிடர் காலத்திலே நடைபெறுகின்ற மோதல்கள் விசனத்தை ஏற்படுத்துகின்றன இனத்துவ அடிப்படையிலான பாகுபாடுகள் அச்சத்தை உருவாக்குகின்றன. மனிதவுரிமை மீறல்கள் கிலேசத்தை அதிகரிக்கின்றன. கொரோனாத் தொற்றினால் பேரிடர் ஏற்பட்டிருக்கின்ற வேளையிலும்கூட பகைமை குறையவில்லை. தற்காலிகமாகவேனும் பொறுமை காப்பதற்கு யாருமே தயாரில்லை. முரண்பாடுகளை ஒரு ஓரத்தில் வைக்கமுடியவில்லை. மோதல்களைத் தற்காலிகமாகவேனும் நிறுத்தமுடியவில்லை.

சதீஷ்கர் பிரதேசத்தில் மாவோயிஸ்ட்டுகளின் தாக்குதல்கள் தொடருகின்றன. ஹிஸ்புல்லா அமைப்பினரின் தளங்கள் இலக்குவைக்கப்படுகின்றன. போகோ ஹராம் தாக்குதல்கள் இடம்பெறுகின்றன. தலிபான்களின் தாக்குதல்கள் குறையவில்லை. ஏவுகணைச் சோதனைகள் நடைபெறுகின்றன. ஒடுக்கப்படுகின்ற சமூகங்கள் மேன்மேலும் ஒடுக்கப்படுகின்றன. பேரிடரைக் கவசமாக்கி மனிதகுலத்துக்கு விரோதமான செயற்பாடுகளைச் செய்வதை சில அரச மற்றும் அரசு அல்லாத தரப்புக்கள் வாடிக்கையாகவே கொண்டுள்ளன. தொற்று அச்சம், உயிரிழப்புக்கள், பொருளாதார அவலம், உலகமே அடங்கிய லொக்டவுன் என்பவை மோதல்போக்கைக் கடைபிடிக்கும் மனிதர்களிடம் எத்தகைய தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. கொடிய தொற்றுக்கு எதிராக உலகமே போராடிக்கொண்டிருக்கும் வேளையிலே நடைபெறுகின்ற மோதல்கள், பாகுபாடுகள் மற்றும் மீறல்கள் நம்பிக்கைகளைச் சிதறடிக்கின்றன.

மறுவளத்தில், பேரிடரை எதிர்கொள்ளும் வல்லமைகொண்ட அரச தரப்பு, அரசு அல்லாத தரப்புக்கள், சட்டவாக்கல் அமைப்பு (பாராளுமன்றம்), நீதித்துறை, நிர்வாகக் கட்டமைப்பு, சுகாதாரப்புலம், கல்விப்புலம் உள்ளிட்ட தேசமொன்றின் இயக்கக்கூறுகள் எத்தனை நாடுகளில் இயங்குதன்மையோடு காணப்படுகின்றன என்பது கேள்வியாகின்றது.

சமத்துவம், நீதி, பாதுகாப்பு, பொருளாதாரம், கல்வி, சுகாதாரம், தொற்றுக் குறித்த அச்சுறுத்தல் உள்ளிட்ட மக்கள் நலன்சார்ந்த விடயங்களை தேசபரிபாலனம் கவனத்தில் கொள்ளவேண்டும். அதற்குத் துறைசார் வல்லுனர்களின் ஆலோசனை வேண்டும். வல்லுனர்களின் ஆலோசனைகளை உள்வாங்குகின்ற அரசு வேண்டும். சமன்செய்து சீர்தூக்கி, கடந்தகாலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் குறித்த பிரக்ஞையுடன், தீர்மானங்களை மேற்கொள்ளும் அரசியல் தலைமை வேண்டும். அரசியல் அறம் வேண்டும். அவைகளே தேசபரிபாலனத்தை ஆரோக்கியமானதாக்கும். அப்போதே தேசத்தில் நம்பிக்கைகைகள் பூத்துக்குலுங்கும். மக்கள் வாழ்வு செழிப்படையும். தேசம் எழுச்சியடையும்.

அத்தகைய தேசபரிபாலனம் இல்லாத சூழ்நிலையிலேயே, அரசாங்கத்தின் செயற்பாடு பொதுமக்களுக்கு நம்பிக்கையூட்டுவதில்லை. அதனாலேயே பெரும்பாலான தேசங்கள் திணறுகின்றன. கொரோனத் தொற்றின் வீரியமும், பிணப்பைகளின் பெருக்கமும் தேசபரிபாலனத்தின் ஓட்டைகளைத் துல்லியமாகக் காட்டுகின்றன.

http://thinakkural.lk/article/42348

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.