Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவை விட்டு விலகி சீனாவுடன் நெருக்கம் காட்டும் நேபாளம் - ஏன்?

Featured Replies

குடியரசு நாடுகளில் உள்ள பிரதமரோ அதிபரோ மக்களின் மனநிலையை உதாசீனப் படுத்த முடியாது.

கடந்த ஆண்டு ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதையடுத்து இந்திய அரசு நாட்டின் புது வரைபடத்தை வெளியிட்டது. அந்த வரைபடத்தில் காலாபானி என்னும் பகுதி இருப்பதைக் கண்டு நேபாள மக்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

இதற்காக நேபாள மக்கள் தங்கள் நாட்டு அரசின் மேல் தங்களுக்கு இருந்த கோபத்தை வெளிப்படுத்தினர். அதனால் நேபாள அரசு இந்திய அரசு வெளியிட்ட இந்த வரைபடத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தது. அப்போதிலிருந்து இந்திய அரசுக்கு எதிராக ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஓர் அழுத்தம் நேபாள அரசுக்கு வந்தது.

இந்தியாவிலிருந்து சீனா வரையிலான சாலை ஒன்றை லிபுலேக்கில் அமைக்கத் தொடங்கியது இந்தியா. இந்நிலையில் நேபாளமும் சிறிது நாள் கழித்து தங்கள் நாட்டு அதிகாரபூர்வ வரைப்படத்தை வெளியிட்டபோது அதில் தங்கள் நாட்டின் பகுதி என எவற்றையெல்லாம் நேபாளம் உரிமை கொண்டாடியதோ அந்த பகுதிகளும் உள்ளடங்கி இருந்தன. இதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது. இது தொடர்பாக இரு நாடுகளுக்கு இடையே விவாதம் ஏற்பட்டது.

நேபாளப் பிரதமர் கே.பி.ஷர்மா ஒலி கூறுகையில், தங்கள் இரு பெரிய அண்டை நாடான இந்தியா மற்றும் சீனாவுடன் நேபாளம் ஒரு நல்ல உறவை வைத்திருக்க விரும்புவதாக கூறினார்.

ஷர்மா ஒலி இந்திய அரசுக்கு ஆதரவாக ஒரு காலகட்டத்தில் செயல்பட்டதாக கூறப்படுகிறது.

1996ல் இந்தியா மற்றும் நேபாளத்திற்கு இடையே செய்யப்பட்ட மகாகாளி ஒப்பந்தத்தில் ஒலிக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது. 1990களில் ஷர்மா ஒலி நேபாளத்தின் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தார். 2007 வரை இவர் நேபாளத்தின் வெளியுறவுத்துறை அமைச்சராகவும் இருந்தார்.

அப்போது இவருக்கு இந்தியாவுடன் நல்ல உறவு இருந்தது. ஆனால் தற்போது, நேபாளம், சீனாவுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறப்படுகிறது. ஆனால் நேபாளம் ஒரு இறையாண்மை உள்ள நாடு. அதன் உள்நாட்டு விவகாரங்கள் சம்பந்தமாக முடிவெடுக்க அந்நாட்டுக்கு சுதந்திரம் உள்ளது.

கே.பி ஷர்மா ஒலி 2015 பிப்ரவரியில் நேபாளத்தின் பிரதமர் ஆனார். அப்போதிலிருந்து அவர் மூன்று முறை இந்தியா வந்துள்ளார். தன்னுடைய தேர்தல் பிரசாரத்தில் சீனாவுடனான ஒத்துழைப்பை அதிகரிப்பது மற்றும் இந்தியாவை சார்ந்து இருப்பதை குறைப்பது குறித்தும் இவர் பேசியிருந்தார்.

நேபாளத்தின் புது அரசமைப்புச் சட்டம் மீதான இந்தியாவின் திருப்தியின்மையைப் பற்றி ஷர்மா ஒலி கூறுகையில், அது நேபாளத்தின் உள்நாட்டு விவகாரம் என்று குறிப்பிட்டார்.

மேலும், 1950ல் இந்தியா மற்றும் நேபாளத்திற்கு இடையே போடப்பட்ட' பீஸ் அண்ட் ஃபிரண்ட்ஷிப்' ஒப்பந்தத்தை அவர் கடுமையாக விமர்சித்தார். அந்த ஒப்பந்ததிற்கு எதிராக தேர்தல் பிரசாரத்திலும் பேசினார். இந்தியாவுடனான இந்த ஒப்பந்தம் முடிவுக்கு வரவேண்டும் என்று ஒலி விரும்புகிறார்.

பிரசந்தாவின் அரசியல்

2008ல் பிரசந்தா நேபாளத்தின் பிரதமரான பின்பு நேபாள பிரதமர் எப்போதும் முதலாவதாக டெல்லிக்கு வரும் வழக்கத்தை உடைத்துவிட்டு முதலில் சீனாவுக்கு சென்றார்.

கடந்த வாரம் நேபாள அரசு அவர்கள் நாட்டு அதிகாரபூர்வ வரைபடத்தை வெளியிட்டது. அதில் இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில் இருக்கும் பகுதிகள் என்று இந்திய அரசு கூறும், லிம்பியாதுரா, காலாபானி, லிபுலேக் ஆகிய பகுதிகள் நேபாள நாட்டின் பகுதிகளாகச் சேர்க்கப்பட்டிருந்தன.

நேபாளத்தில் பெரும்பாலான மக்கள் இதை தங்கள் அரசாங்கம் எடுத்துவைத்த வலிமையான அடியாகப் பார்க்கின்றனர். ஆனால் ஒலியின் விமர்சகர்கள் பரவி வரும் கோவிட்-19 தொற்றை அரசு கட்டுப்படுத்தத் தவறியிருப்பதை திசை திருப்ப எடுத்த முடிவு இது என்கின்றனர்.

வரைப்படம்படத்தின் காப்புரிமைSURVEY OF INDIA

இந்த மூன்று இடங்களும் இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ளன என இந்தியாவும், நேபாளத்தின் மேற்கு மாகாணத்தில் உள்ளன என நேபாளமும் கூறி வருகின்றன. 1816ல் கையெழுத்திடப்பட்ட சுகாலி ஒப்பந்தம் மற்றும் அதற்கு பிறகு கையெழுத்திடப்பட்ட இரு நாட்டு ஒப்பந்தங்களிலும் மகாகாளியின் கிழக்கு பகுதி நேபாளத்தின் கீழ் வருகிறது என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது என்கிறது நேபாளம்.

நேபாளத்தில் எதிர்கட்சிகளும் எல்லைப் பிரச்சனையில் ஆளும் கட்சியோடு ஒருமித்த கருத்தைக் கொண்டிருக்கின்றன.

செப்டம்பர் 2015: இந்திய - நேபாள எல்லை மூடல்

செப்டம்பர் 2015ல் காரணமில்லாமல் எல்லையை மூடியதும் இந்தியாவுக்கு எதிராக ஒலி செயல்படுவதற்கு ஒரு காரணம் ஆகும். அதற்கு நான்கு மாதங்கள் முன்னால் தான் நேபாளத்தில் ஒரு மிகப்பெரிய நிலநடுக்கம் வந்தது.

இந்த எல்லை குறைந்தது ஆறு மாதம் முடியிருந்தது. இதனால் பெட்ரோல் போன்ற அத்தியாவசியப் பொருள்கள் நேபாளத்துக்கு கிடைக்கவில்லை.

அந்த சமயத்தில் ஒலி தலைமையிலான ஆளும் கட்சி இந்தியாவுக்கு முன் பணிவாக செல்ல விரும்பவில்லை. அதற்கு பதில் அனைத்து பொருட்களுக்காகவும் சீனாவை நாடுவது நல்லது என நினைத்தது.

சமையல் எரிவாயு இல்லாமல் நேபாளத்தில் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாயினர். அப்போது நேபாளம் சீனாவுடன் வணிக ஒப்பந்தம் செய்தது.

இந்தியாவின் வட கிழக்கில் உள்ள தேராய் பகுதியில் உள்ள செயற்பாட்டாளர்களின் எல்லை மூடும் போராட்டம் முடிந்ததும் மீண்டும் நேபாளத்திற்கான அத்தியாவசிய பொருட்களின் விநியோகத்தை தொடங்கியது இந்தியா.

 

 

இந்தியா - நேபாளம் இடையேயான தகராறு

2015ல் 1800 கிலோமீட்டர் நீளமுள்ள இந்திய நேபாள எல்லையில் உள்ள முக்கிய வர்த்தக தொடர்பு புள்ளிகளை மூடியது இந்தியா. 1989-90களில் 21 முக்கிய புள்ளிகளில் 19 புள்ளிகளை அப்போதைய அரசு மூடியது போல இருந்தது அது. அந்த சமயத்தில் நேபாளத்தில் பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

1989-90 களில் இந்தியா நேபாளத்தின் தனி வர்த்தக ஒப்பந்தங்களை நிராகரித்தது. இந்தியா ஒரே ஒப்பந்தத்தை மட்டுமே விரும்பியது. மேலும் அப்போது இருந்த நேபாள மன்னர் குடும்பம் சீனாவிலிருந்து விமானம் வாங்கியதால் இந்திய அரசு நேபாளத்தின் மீது கோபத்தில் இருந்தது.

மேலும் இந்திய குடியேறி தொழிலாளர்களுக்கான பணி அனுமதி பெறுவதற்கான நடைமுறை இந்தியாவுக்கு திருப்தியளிக்கவில்லை.

இந்திய நேபாள எல்லைகள் சந்திக்கும் தெற்கு தேராய் மக்களுக்கு நேபாள குடியுரிமை அளிக்கவும் மறுத்தது நேபாளம்.

ஆனால் நேபாள அரசர் பிரேந்திர 30 வருடங்களாக அரசியல் கட்சிகள் மீது இருந்த தடையை 1990ல் நீக்கினார். அதன் பின் வந்த புது அரசு இந்தியாவுடன் புதிய ஒப்பந்தம் கையெழுத்திட்டது.

 

இந்தியாவின் வேறு வழிகள்

மேற்குறிப்பிட்ட பிரச்சனை நடந்து 30 ஆண்டுகள் கழித்து, தேராய் பகுதி தொடர்பாக இந்தியா- நேபாளம் இடையே பதற்றம் நிலவி 5 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது மீண்டும் இரு நாடுகளும் எதிரும் புதிருமாக நிற்கின்றன.

லிபுலேக் பற்றிய விவாதத்திற்கு பிறகு நேபாளம் மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளிலும் வெளியுறவு கொள்கை வல்லுநர்கள், அரசியல் தலைவர்களுக்கு விரைவில் ராஜீய பேச்சுவார்த்தை தொடங்க வலியுறுத்துகின்றனர். இப்போது கோவிட்-19 பிரச்சனையால் இந்த பேச்சுவார்த்தை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. பெரிய நாடு என்பதால் இந்தியா இதை முதலில் பேச வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஆனால் இப்போது நடக்கும் நிகழ்வுகள் மூத்த அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை அளிக்கிறது. நேபாளத்துக்கான முன்னால் இந்திய தூதர் நேபாளி பத்திரிக்கை ஒன்றில் இந்த ராஜீய பேச்சுவார்த்தையை தவிர இந்த பிரச்சனையை தீர்க்க வேறு வழியில்லை எனக் கூறியுள்ளார். ( வேறு விதமான எதிர்ப்பு இருக்கக்கூடாது என எச்சரித்துள்ளனர்.)

முன்னாள் இந்தியத் தூதரான கே.வி.ராஜன் இந்த உறவு பழமையானது மற்றும் வலிமையானது. உட்கார்ந்து பேசினால் இந்தியா மற்றும் நேபாளத்துக்கு இடையே தீராத பிரச்சனை இருக்க முடியாது. ஆனால் தேவையற்ற பொதுக் கருத்து உருவாக்கம் இந்தப் பேச்சுவார்த்தைக்குத் தடையாக வராமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

இந்த இரு நாடுகளுக்கிடையேயான எல்லை பிரச்சனையை பேச நேபாளமும் தயாராக இருப்பதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார். நேபாளத்தின் கோரிக்கையை இந்தியா முன்னரே ஏற்றுக்கொண்டிருந்தால் இந்நேரம் நல்ல திருப்பம் வந்திருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்தியா ராஜீயப் பேச்சுவார்த்தையை கோவிட்-19 முடிந்தவுடன் தொடங்கும். ஆனால் நேபாளத்தில் இருக்கும் சில நிபுணர்கள் வெளியுறவுத் துறை அளவிலான இந்த பேச்சு வார்த்தை வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் தொடங்கினால் இரு நாடுகள் இடையே நம்பிக்கையும் புரிந்துணர்வும் வளரும் என்கின்றனர்.

பழைய சுமூக உறவுகளால் இரு நாடுகளுக்கும் பெரிய பலன்கள் இருந்தன. விசா இல்லாமல் பயணிப்பதன் மூலம் நிறைய நன்மைகளும் தீமைகளும் இருந்தன. ஆனால் சுற்றுலா பயணிகள், குடியேற்றத் தொழிலாளர்கள் ஆகியோருக்கு மிகுந்த நன்மை இருந்தது.

தற்போது கோவிட்-19 ஆல் இரு நாடுகளின் பொருளாதாரமும் வீழ்ந்துள்ளன. இரு நாட்டு எல்லைகளிலும் தனிமைப்படுத்தும் மையம் அமைந்துள்ளன.

வணிக நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதில் சிரமங்கள் உள்ளன. எப்போது பழைய நிலை வரும் என தெரியவில்லை.

நாடாளுமன்ற மக்களவையில் பேசிய பிரதமர் ஒலி கூறுகையில், "இந்தியா, நேபாளத்துக்கு இடையேயான உறவு தனித்துவமான உறவு ஆகும். இரு நாடுகளுக்கிடையேயான உறவை சரி செய்வது கடினம் ஆனால் முடியாதது இல்லை" என்றார்.

ஆனால் இந்தியாவின் மோதி அரசும் நேபாளத்தின் ஒலி அரசும் பேச்சுவார்த்தை தொடங்க முடிவு செய்தாலும் அது எப்போது தொடங்கும் என்பது மிகப்பெரிய கேள்வியாகும்.

https://www.bbc.com/tamil/global-52790010

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Quote

இந்தியாவை விட்டு விலகி சீனாவுடன் நெருக்கம் காட்டும் நேபாளம் - ஏன்?

இந்தியாவுடன் நெருக்கமாக இருக்கும் நாடுகள் எவை?

  • தொடங்கியவர்
1 hour ago, குமாரசாமி said:

இந்தியாவுடன் நெருக்கமாக இருக்கும் நாடுகள் எவை?

தமிழ் ஈழம். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ampanai said:

தமிழ் ஈழம். 

அப்படியொரு புரிதல் இருந்திருப்பின் தனது தென்புறத்திலே சீனாவுக்குப் பதிலாகத் தமிழீழத்தை அரவணைத்திருக்கும். எப்படி மகாவம்ச மமதையில் சிங்களம் இருக்கிறதோ, அதேபோன்று ஆரிய மமதையில்   கிந்தியா உழலும் வரை அவர்களுக்குள் தெளிவுவராது.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

இந்தியாவுடன் நெருக்கமாக இருக்கும் நாடுகள் எவை?

பெரிசா ஒரு நாடும் இல்ல‌ தாத்தா , பாக்கிஸ்தான் கூட‌ சீனாவின் ப‌க்க‌ம் /

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, ampanai said:

தமிழ் ஈழம். 

21 minutes ago, பையன்26 said:

பெரிசா ஒரு நாடும் இல்ல‌ தாத்தா , பாக்கிஸ்தான் கூட‌ சீனாவின் ப‌க்க‌ம் /

நாங்கள் கட்டுமரத்திலை  விழுந்தடிச்சு ஏறி   காப்பாத்தப் போன மாலைதீவு ஆர்ரை பக்கம்?  😂

 

  • தொடங்கியவர்
2 hours ago, nochchi said:

அப்படியொரு புரிதல் இருந்திருப்பின் தனது தென்புறத்திலே சீனாவுக்குப் பதிலாகத் தமிழீழத்தை அரவணைத்திருக்கும். எப்படி மகாவம்ச மமதையில் சிங்களம் இருக்கிறதோ, அதேபோன்று ஆரிய மமதையில்   கிந்தியா உழலும் வரை அவர்களுக்குள் தெளிவுவராது.

சீனாவை விட்டு பொருளாதர ரீதியாக இந்தியா பக்கம் சாய விரும்பும் உலகம் 
சீனாவை மீறி வளர விரும்பும் இந்தியா, இந்தியாவை பலவீனமாக்க விரும்பும் சீன அரசு.  

கோவிட்19 ஊடாக, உலக ( மேற்குலக ) விருப்பம் / ஒழுங்கு எமது மக்களின் உரிமைகளை தரும் என நம்புவோம். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.