Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் பொதுப் போக்குவரத்து வழமைக்கு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் பொதுப் போக்குவரத்து வழமைக்கு

எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் பொதுப் போக்குவரத்து வழமைக்கு

 

எதிர்வரும் 8 ஆம் திகதி திங்கட் கிழமை முதல் சுகாதார நடைமுறைகளுக்கு உட்பட்டு பொதுப் போக்குவரத்தை வழமைக்கு கொண்டுவர போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.

இன்று முற்பகல் போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் குறித்த அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, எதிர்வரும் தினங்களில் பொதுமக்களின் நடத்தை, கொவிட் 19 தொற்று நிலைமை மற்றும் சுகாதார பிரிவினால் பெற்றுக் கொடுக்கப்படும் ஆலோசனைகளை கருத்திற் கொண்டு எதிர்வரும் திங்கட் கிழமை (08) முதல் பொது போக்குவரத்து சேவையை வழமைப் போல் நடாத்திச் செல்ல தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பொது போக்குவரத்து சேவையை வழமைப் போல் முன்னெடுத்துச் செல்லும் போது ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் சவால்களுக்கு முகங்கொடுப்பது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

கொவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக பேருந்துகளில் இருக்கைகளின் எண்ணிக்கைக்கு மாத்திரம் பயணிகளை ஏற்றிச் செல்வது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதால் அதற்காக பேருந்து பற்றாக்குறை பிரச்சினை தொடர்பில் இதன்போது விசேட அவதானம் செலுத்தப்பட்டதாக போக்குவரத்து அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, தற்போது காணப்படும் தனியார் மற்றும் இ.போ.ச பேருந்துகள் முழுமையாக சேவையில் ஈடுபடுத்தபடவுள்ள நிலையில் பாடசாலை சேவை பேருந்து, சுற்றுலா மற்றும் யாத்திரைகளுக்காக பயன்படுத்தப்படும் பேருந்துகள் போன்று பதிவுக்காக காத்திருப்பு பட்டியலில் உள்ள அனைத்து பேருந்துகளையும் பயணிகள் போக்குவரத்துக்காக ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த பேருந்துகளை தற்காலிகமாக பதிவு செய்யும் நடைமுறை நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

எதிர்வரும் 10 ம் திகதியின் பின்னர் புகையிரதங்களில் பயணிப்பதற்கான முன்பதிவு அவசியமில்லையென அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாரம் புகையிரதத்தில் பயணிப்பதற்கென சுமார் 21 ஆயிரம் பேர் முன்பதிவுகளை மேற்கொண்டிருந்தனர்.

எனினும் அவர்களில் 446 பேர் மாத்திரமே பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் எதிர்வரும் 10 ம் திகதியின் பின்னர் அரச மற்றும் தனியார் பணியாளர்கள் முன் பதிவுகளை செய்வது அவசியமில்லையென புகையிரத திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

https://www.ibctamil.com/srilanka/80/144530

15 hours ago, nunavilan said:

எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் பொதுப் போக்குவரத்து வழமைக்கு

அளவுக்கதிகமாக பயணிகளை ஏற்றாமல் இருக்கைகளுக்கு ஏற்ப நடைமுறைப்படுத்தப்படுமானால் நல்ல முயற்சி!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.