Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரே நேரத்தில் 25 பள்ளிகளில் பணியாற்றியதாக கணக்கு காட்டி மாதம் ரூ. 1 கோடி சம்பளம் வாங்கிய ஆசிரியை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே நேரத்தில் 25 பள்ளிகளில் பணியாற்றியதாக கணக்கு காட்டி மாதம் ரூ. 1 கோடி சம்பளம் வாங்கிய ஆசிரியை

ஒரே நேரத்தில் 25 பள்ளிகளில் பணியாற்றியதாக கணக்கு காட்டி மாதம் ரூ. 1 கோடி சம்பளம் வாங்கிய ஆசிரியை

 

ஒரே நேரத்தில் 25 பள்ளிகளில் பணியாற்றியதாகக் கணக்குக் காட்சி ஆசிரியை ஒருவர் மாதம் ரூ.1 கோடி சம்பளம் வாங்கியதாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
பதிவு: ஜூன் 05,  2020 13:40 PM
லக்னோ:

உத்தரப்பிரதேசத்தில் அரசுப் பள்ளி ஆசிரியராக இருக்கும் ஒருவருக்கு  ஒரே நேரத்தில் 25 பள்ளிகளில் பணியாற்றியதாகக் கணக்குக் காட்டப்பட்டு, அவருக்கு மாதம் ரூ.1 கோடி ஊதியமாக வழங்கப்பட்டு உள்ளதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.


மெயின்புரியைச் சேர்ந்த பள்ளி ஆசிரியை ஒருவர் சுமார் 25 பள்ளிகளில் பணியாற்றுவதாகக் கூறி அவருக்கு மாதந்தோறும் ரூ.1 கோடி அளவுக்கு ஊதியம் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதாவது மாநிலத்தில் அம்பேத்கார் நகர், அலிகார், பிரயாக்ராஜ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இயங்கும் கஸ்தூர்பா காந்தி பலிகா வித்யாலயா பள்ளியில் பணியாற்றியதாக அவரது பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.

இது தொடரபான விசாரணைக்கு  உத்தரப்பிரதேச மாநில துவக்கக் கல்வித் துறையின் கூடுதல் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். 

முறைகேட்டில் ஈடுபட்ட ஆசிரியையின் பெயர் வெளிச்சத்துக்கு வந்துள்ள நிலையில், அதுபற்றிய தகவல்கள் எதுவும் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. தற்போது அந்த ஆசிரியை தலைமறைவாகிவிட்டார்.

தகவல்களின் அடிப்படையில் அவர் ஒருவருக்கு மாதம் ரூ.1 கோடி அளவுக்கு ஊதியம் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் அதில் உண்மை எதுவும் இல்லை. இதுவரை இந்த தகவல் எந்த வகையிலும் உறுதி செய்யப்படவில்லை என்று பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் விஜய் கிரண் ஆனந்த் விளக்கம் அளித்துள்ளார்.

விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணையில் முறைகேடு நடந்தது உண்மை என்று தெரிய வந்தால், முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்யப்படும். இதுபோல வேறு சில ஆசிரியர்களும் முறைகேடாக வேறு பள்ளிகளில் பணியாற்றுகிறார்களா என்று விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/06/05134059/Nothing-confirmed-so-far-UP-govt-on-reports-of-teacher.vpf

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மாதத்தில் ஒரு கோடி சம்பளம் வாங்கிய ஆசிரியை மீது 5 மாவட்டங்களில் வழக்குப்பதிவு

ஒரு மாதத்தில் ஒரு கோடி சம்பளம் வாங்கிய  ஆசிரியை மீது 5 மாவட்டங்களில் வழக்குப்பதிவு

 

25 பள்ளிகளில் வேலைபார்த்ததாக கூறி ஒரு மாதத்தில் ஒரு கோடி சம்பளம் வாங்கிய ஒரு அறிவியல் ஆசிரியையின் மோசடி: 5 மாவட்டங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
பதிவு: ஜூன் 08,  2020 16:13 PM
லக்னோ:

உத்தரப்பிரதேசத்தில் அரசுப் பள்ளி ஆசிரியையாக இருக்கும் ஒருவருக்கு  ஒரே நேரத்தில் 25 பள்ளிகளில் பணியாற்றியதாகக் கணக்குக் காட்டப்பட்டு, அவருக்கு மாதம் ரூ.1 கோடி ஊதியமாக வழங்கப்பட்டு உள்ளதாக கூறப்பட்டது.


மெயின்புரியைச் சேர்ந்த பள்ளி ஆசிரியை அனாமிகா என்பவர் சுமார் 25 பள்ளிகளில் பணியாற்றுவதாகக் கூறி அவருக்கு மாதந்தோறும் ரூ.1 கோடி அளவுக்கு ஊதியம் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதாவது மாநிலத்தில் அம்பேத்கார் நகர், அலிகார், பிரயாக்ராஜ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இயங்கும் கஸ்தூர்பா காந்தி பலிகா வித்யாலயா பள்ளியில் பணியாற்றியதாக அவரது பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.

இது தொடரபான விசாரணைக்கு  உத்தரப்பிரதேச மாநில துவக்கக் கல்வித் துறையின் கூடுதல் இயக்குநர் உத்தரவிட்டு இருந்தார். 

இந்த நிலையில் அனமிகா சுக்லா என்ற சான்றிதழ்கள் பெயரில் பணியாற்றி வந்த பிரியா சிங் என்பவரை கஸ்கஞ்ச் போலீசார் கைது செய்து உள்ளனர்.

ஐந்து மாவட்டங்களில் அனாமிகா சுக்லா பெயரில்  ஏற்கனவே எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், வாரணாசி மற்றும் அமேதியின் பி.எஸ்.ஏ.க்கள் இன்னும் முறையான புகார் அளிக்கவில்லை.இந்த மாவட்டங்களிலும் அவர் வேலை செய்வதாக கண்டறியப்பட்டுள்ளது.அனாமிகா அ.றிவியல் ஆசிரியை ஆவார்

நேர்மையின்மை, ஆள்மாறாட்டம் மூலம் மோசடி, மதிப்புமிக்க பாதுகாப்பு மோசடி செய்தல்,  மோசடி செய்தல்,  போலி ஆவணத்தைப் பயன்படுத்துதல் என அவருக்கு எதிராக  அனாமிகாவுக்கு எதிராக பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு உள்ளது.

https://www.dailythanthi.com/News/TopNews/2020/06/08161349/Science-teachers-art-of-fraud-FIR-lodged-against-Anamika.vpf

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.