Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

காட்டுச் சட்டங்களை எல்லாம் நாட்டில் அமுல் செய்யமுடியாது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆவேசம்

Featured Replies

காட்டுச் சட்டங்களை எல்லாம் நாட்டில் அமுல் செய்யமுடியாது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆவேசம்

""காட்டுச்சட்டங்களை எல்லாம் நாட்டில் அமுல் செய்யமுடி யாது. கொழும்பில் குண்டுகள் வெடித்தாலும், வடக்கில் சண்டை நடந்தாலும் நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கை ஒருபோதும் ஸ்தம்பிதம் அடையாது.''

இவ்வாறு ஆவேசமாகக் கூறினார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.

நேற்று அலரிமாளிகையில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில் கூறியதாவது:

இந்த நாட்டில் ஜனாதிபதியாகப் பதவி வகித்தவர்களில் நான் மாத்திரமே ஊடகத் தணிக்கையை இதுவரை அமுல் செய்யவில்லை. இந்நிலையில் ஊடகங்கள் நாட்டின் முக்கியமான விடயங்களையெல்லாம் அக்குவேறு ஆணிவேறாக வெளிச்சம் போட்டுக் காட்டு கின்றன.

நான் சில கோரிக்கைகளை விடுத்தும் சில பத்திரிகைகள் அவற்றைப் பொருட்படுத்தவில்லை. நாட்டின் பாதுகாப்புடன் தொடர்பான விடயங்களை பத்திரிகையில் வெளியிட வேண் டாம் என்று பலதடவைகள் நான் வலியுறுத்திச் சொல்லியும் அவை அதனை நடைமுறைப்படுத்தவில்லை.

பாதுகாப்புத் தொடர்பான விடயங்களைப் பிரபலப்படுத்து வது நாட்டுக்குச் செய்யும் பெரும் துரோகமாகும். இந்நிலையில் நீங்கள் ஏன் தேசத் துரோகியாகின்றீர்கள் என்பது எனக்குப் புரியவில்லை. எங்களுக்கு வெளிநாட்டு உதவிகள் கிடைக்கின்றன. பிரித்தானியாகவாக இருக்கட்டும் அல்லது வேறு நாடாக இருக்கட்டும் எமக்கு உதவிகளை வழங்கவில்லை என்றால் நாம் என்ன செய்ய முடியும். நாங்கள் எம்மிடம் இருப்பதைக் கொண்டு சமாளிக்க வேண்டும். வெளிநாட்டு உதவிகள் கிடைக்காவிட்டாலும், எமது நாட்டை நாம் அபிவிருத்தி செய்வோம். இதற்காக அபிவிருத்திப் பணிகளை விட்டுவிடப்போவதில்லை.

இதனைவிட்டுவிட்டு வெளிநாடுகளுக்குச் சென்று உதவி கிடைக்கவில்லை என்று சிலர் கூறுவது பொருத்தமான ஒன்றல்ல என நான் நினைக்கின்றேன்.

"மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கருத்துக்களைப் பொருட்படுத்துவதில்லை' என்றும் "அவர் சர்வாதிகாரியாக நடக்கிறார்' என்றும் சிலர் கூறுகின்றார்கள்

இப்போது மனித உரிமை மீறல்கள் பற்றிப்பேசப்படுகின்றது. அது குறித்துப் பொய்யான பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இருப்பினும் மனித உரிமைகள் குறித்து நாம் விசேட கவனம் செலுத்துகின்றோம்.

தினமும் காணாமல் போனோர் பட்டியல் நீண்டுகொண்டே போகின்றது. இது தொடர்பான பல முறைப்பாடுகள் எமக்குக் கிடைத்துள்ளன. ஆனால், சிலர் காணாமல் போய்விட்டனர் என முறைப்பாடு செய்துவிட்டு வெளிநாட்டுக்குச் சென்றுவிடுகின்றனர். ஒரே பெயரில் ஐந்து பேர் வெளிநாடுகளுக்குச் சென்ற சம்பவங்களும் உள்ளன. நாங்கள் இது குறித்துப் பரிசீலணை செய்து கொண்டிருக்கின்றோம்.

பாதாள உலகக் குழு, விடுதலைப் புலிகள் போன்ற குழுக்களாலும் பலர் கடத்தப்பட்டு கப்பம் பெற்ற சம்பவங்களும் உள்ளன. இச்சம்பவங்களை நான் ஒருபோதும் இல்லை என மறுக்கவில்லை. இது குறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்றார். (க 09)

உதயன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழில் வேகமாக செய்திகள் வரவேண்டும் என்ற தங்களின் ஆதங்கம் புரிகிறது..

தயவு செய்து சில வினாடிகள் செலவழித்து பந்திகளுக்கு இடையில் இடைவெளிகள் இருக்கின்றனவா? வாசிக்ககூடிய முறையில் உள்ளதா? போன்ற விடயங்களை கவனத்தில் எடுத்தால் நன்றாக இருக்கும்..

நன்றி..

காட்டு மிராண்டி ஆட்சியில் காட்டுச்சட்டம் பறவாயில்லை பயப்பிடாமல் அமுல்படுத்துங்கள்

நாட்டில் ஊடகத் தணிக்கையை இல்லாமலிருக்கலாம்.

ஆனால் ஊடகவியலாளர்களுக்கு சுதந்திரம் இல்லை. மகிந்தாவின் குறுகிய ஆட்சிக்காலத்தில் பல ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டும், தாக்கப்பட்டும், கொலை மிரட்டல் விடுக்கப்பட்டும், கடத்தப்பட்டும் இருக்கிறார்கள்.

காட்டுச் சட்டங்களை எல்லாம் நாட்டில் அமுல் செய்யமுடியாது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆவேசம்..

மந்திக் கூட்டத் தலைவனுக்கு காட்டில் பல வருடங்கள் ஆட்சி செய்த அனுபவம் பேசுகின்றதோ? நாட்டையும், காட்டையும் பிரித்தறியக் கூடிய பகுத்தறிவு குரங்குகளிடமும் இருக்கும் விடயம்கண்டு மனம் மகிழ்ந்தோம்..

  • கருத்துக்கள உறவுகள்

Date: 2007-05-31

காட்டுச் சட்டங்கள் நாட்டுக்கு ஏன்?

""காட்டுச் சட்டங்களை எல்லாம் நாட்டில் நடைமுறைப்படுத்த முடியாது. அதற்கு எனது அரசு இடமளியாது.'' என்று ஆவேசத்தோடு உறுதிமொழி கூறியிருக்கின்றார் நாட் டின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.

வன்னிக் காட்டில் நிலைகொண்டிருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் அங்கு நடைமுறைப்படுத்தும் சட்டங்களை அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் நடைமுறைப்படுத்த முடி யாது என்பதை அல்லது காட்டிலிருக்கும் பயங்கரவாதிகளின் சட்டங்கள் நாட்டில் நடைமுறைப்படுத்த இடமளிக்கப்பட மாட்டாது என்பதை ஜனாதிபதி மஹிந்தர் இவ்வாறு இந்த வார்த்தைகளில் கூறியிருப்பார் என்று கருதலாம்.

ஆனால், அதைத்தான் அரச படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழர் தாயகப் பிரதேச மக்களும், தென்னிலங்கையில் வசிக்கும் தமிழ் மக்களும் நாட்டின் தலைவரைப் பார்த்துக் கேட்கவிழைகின்றார்கள் என்பதுதான் நிலைமை.

ஆட்கடத்தல்கள், அச்சுறுத்திக் கப்பம் அறவிடல், காணா மற் போகச் செய்தல், படுகொலைகள் என்று தமிழர்கள் எதிர்கொள்ளும் மோசமான மனித உரிமை மீறல்கள் நாகரிக உலகில் எந்த நாட்டின் நீதியான சட்டங்களுக்கும் அமைவானவை அல்ல என்பதை எண்ணி, மனம் வெதும்பிப் போயிருக்கும் தமிழர்களுக்கு, ஜனாதிபதியின் இந்தக் கூற்று அவர் தங்களைக் கிண்டல் நையாண்டி செய்கின்றாரோ என்ற எண்ணத்தையே தோற்றுவிக்கின்றது. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்று உருத்திராட்சப் பூனையின் அஹிம்சை உபதேசம் போல அந்தக் கூற்று அமைந்திருக்கின்றது என் பதே தமிழரின் கருத்து.

கொடூர இன மோதலும் யுத்தமும் இடம்பெறும் நாட்டில் மனித உரிமை மீறல்களும் இடம்பெறுவது தவிர்க்க முடியாததுதான். ஆனால் மனித உரிமை மீறல்களை வகை தொகையின்றி முன்னெடுக்கும் விதத்தில் அரச பயங்கரவாதத்தைத் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடுவதற்கு திறந்த "லைசென்ஸ்' வழங்கும் விதமாக இன மோதலைச் சாட்டாகப் பயன்படுத்தக் கூடாது; பயன்படுத்த முடியாது.

கொழும்பிலும் வடக்கு, கிழக்கின் ஏனைய பகுதிகளிலும் தமிழர்கள் கொத்துக் கொத்தாகக் கடத்தப்பட்டு அல்லது கைது செய்யப்பட்டு காணாமற் போகச் செய்யப்படுதலும், கடத்தப்பட்டோரின் பெயரால் பெருந்தொகைப்பணம் கப்பமாக அறவிடப்படுதலும் சர்வ சாதாரண நிகழ்வுகளாக இங்கு இடம்பெறுகின்றன. கப்பம் கோருவோர் சாவகாசமாக பல்வேறு தொலைபேசிகளில் இருந்து அச்சுறுத்தல் அழைப்புகளை எடுத்து, சுளையாகக் கோடி ரூபாக்களை அறிவிடுகிறார்கள். சில சமயங்களில் வங்கிக்கணக்குகள் மூலம் கப்பப் பணம் கைமாறுவதாகவும் தகவல்.

ஆனால் இதுபற்றி எல்லாம் பாதுகாப்புத் தரப்பினருக்கு முறைப்பாடு செய்யப்பட்டால் திருப்தி தரும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதாகத் தெரியவில்லை. ஆட்கடத்தல், கப்பம் அறவிடல் போன்றவற்றின் சூத்திரதாரிகளான "கிரிமினல்களை' சட்டத்தின் முன் நிறுத்தும் உண்மையான திடசங் கற்பமோ, பற்றுறுதியோ பாதுகாப்புத் தரப்பினருக்கு இருப்ப தாக கிஞ்சித்தேனும் நம்புவதற்குத் தமிழர்கள் வெறும் முட்டாள்களல்லர்.

"காணாமல் போனோர் என்று கூறப்படுவோர் உண்மை யில் வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டனர்' என்றும், பாதாள உலகக் குழுக்களும், புலிகளுமே ஆட்களைக் கடத்துகின்ற னர் என்றும் (அ)நியாயங்கள் கற்பித்து, இக்கடத்தல்கள், காணாமற் போதல் போன்ற மனித உரிமை மீறல்களை சமா ளிக்க முயல்வது அந்தக் குற்றங்களுக்கு உடந்தையாகும் கருத் தையே வெளிப்படுத்தும் என்பதை நாட்டின் தலைவர் புரிந்துகொள்ள வேண்டும்.

"விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்தைப் பதில் பயங்கர வாதத்தால் முடக்குவது' என்ற புதிய விநோத விபரீத கருத்து நிலைப்பாட்டின் கீழ் யாழ். குடாநாட்டிலும் பிற இடங்களிலும் கட்டவிழும் அராஜகம் உண்மையில் காட்டுச் சட்டங்களை நாட்டுக்குக் கொண்டு வரும் வேலையன்றி வேறில்லை என்பதையும் சுட்டிக்காட்டுவது பொருத்தம்.

கொழும்பில் இராணுவத் தளபதி மீது நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலின்போது, தற்கொலைத் தாக்குதல் நபர் பயன்படுத்திய கைத்தொலைபேசியின் "சிம்' கார்ட், மிகவும் சேதமடைந்து, ஒரு துண்டுப் பகுதியே கிடைத்தது என்றும், அதை வைத்துக்கொண்டு அந்தத் தொலைபேசி இலக்கத்தை நவீன தொழில்நுட்ப உத்தியால் கண்டுபிடித்து, இத்தாக்குதலின் பின்னணியில் புதைந்து கிடந்த சகல மர்மங்களையும் புலனாய் வாளர்கள் ஊடுருவிக் கண்டுபிடித்து விட்டனர் என்றும் புல னாய்வாளர்களுக்குக் கொழும்பில் புகழாரம் சூட்டப்படுகின்றது.

நல்லது. ஆனால் கொழும்பில் மேற்கொள்ளப்படும் ஆட்கடத்தல்கள், கப்பம் அறவிடுதல் போன்றவற்றின் கிரிமினல் சூத்திரதாரிகள் பயன்படுத்தும் தொலைபேசிகளின் முழு இலக்கங்களும் பாதுகாப்புத் தரப்புக்கு ஒழுங்காக வழங்கப் பட்டாலும் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படுவதில்லையே? யாரும் கைது செய்யப்படுகிறார்கள் இல்லையே? சம்பந்தப்பட்ட கைத்தொலைபேசிப் பாவனையாளர்கள் எவரும் மடக் கப்படுகின்றார்கள் இல்லையே? இது ஏன்?

நீதிபதி அம்பேபிட்டிய அண்மையில் கொழும்பில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலையாளிகள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் பொதுத் தொலைபேசி பற்றிய தகவலை மட்டும் வைத்துக்கொண்டு, கொலையாளிகளை இனங்கண்டு, மடக்கி, முழு மர்மத்தையும் விடுவித்து, கொலை யாளிகளுக்கு விரைந்து மரணதண்டனைத் தீர்ப்பும் வாங்கிக் கொடுத்த இலங்கைப் பொலிஸாருக்கு இந்த ஆட்கடத்தல் விவ காரத்தில் மட்டும் திறமை சித்திக்காமல் சிதறிப்போவது ஏன்?

மனமிருந்தால்தான் இடமுண்டு.(if there is a will, there will be a way).

தமிழருக்கு எதிரான மனித உரிமை மீறல்களைக் கட்டுப்படுத்தி அடக்கி, குற்றவாளிகளைத் தண்டிக்கும் பற்றுறுதி அர சுத் தலைமைக்கு இருந்தால்தான் அதற்கான வழி கிட்டும். உண் மையான விருப்பம் திடசங்கற்பம் தீர்மானம் இல்லாமல் பயன்தரு நடவவடிக்கை இல்லை.

காட்டுச் சட்டங்கள் எல்லாம் நாட்டுக்கு வரக்கூடாது என்றால் அதற்கான தீர்மானம் உண்மையில் முதலில் அரசுத் தலைமைக்கு ஏற்பட வேண்டும் வார்த்தைகளில் அல்ல உதட்டள வில் அல்ல உண்மையில் உள்ளத்து அளவில்! ஜனாதிபதியின் வார்த்தையை அத்தகையதாக எடுத்துக் கொள்ளலாமா?

உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.