Jump to content

சிவக்குமார், விஜய் சேதுபதி, ஜோதிகா, வைரமுத்து, நெல்லை கண்ணன் குறிவைக்கப்படுவது ஏன்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சிவக்குமார், விஜய் சேதுபதி, ஜோதிகா, வைரமுத்து, நெல்லை கண்ணன் குறிவைக்கப்படுவது ஏன்? – வள்ளி நிலவன்

download-1-4.jpg

download-9.jpg

நடிகர் சிவக்குமார் திருப்பதி கோவில் குறித்து அவதூறாக பேசிவிட்டார் எனச் சொல்லி ஓராண்டுக்கு முன் அவர் பேசிய பேச்சு  தொடர்பாக இப்போது அவர் மீது புகார் அளிக்கிறது திருப்பதி தேவஸ்தானம்.

பல மாதங்களுக்கு முன் ஒளிபரப்பான தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில், ( சன்.டி.வி ) சாமி குளிக்கும்போது காட்டுறாங்க ஆனால், உடை மாற்றும்போது மட்டும் ஏன் திரை போட்டு மறைக்கிறார்கள் என நடிகர் விஜய் சேதுபதி பேசிவிட்டார் என்று சொல்லி தற்போது அவருக்கு எதிராக திடீரென்று கொந்தளிக்கிறது ஒரு கூட்டம்.

சிவக்குமார், விஜய் சேதுபதி, ஜோதிகா, வைரமுத்து, நெல்லை கண்ணன் என்று பார்ப்பனீயவாதிகளால் குறிவைக்கப்படும் இவர்கள் பேசிய கருத்துக்கள் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டியவையா ? இவர்கள் பேசிய கருத்துக்களால் பெரும்பான்மை இந்து சமூகத்தின் மனம் புண்பட்டு விட்டதா என்றால் நிச்சயம் இல்லை. ஏனென்றால் இவர்கள் பேசிய கருத்துக்களை இவர்களுக்கு முன்பாக பார்பனர்களே பேசியிருக்கிறார்கள். இவர்கள் கோபப்பட வேண்டும் எனில், இவர்களுக்கு முன் இதே கருத்துக்களைச் சொல்லிய பார்ப்பனர்கள் மீதுதானே கோபம் கொள்ள வேண்டும்.

பார்ப்பனர்கள் சொன்ன கருத்துக்களையும், பாட்டாளி சமூகத்தின் குரல்களாக இவர்கள் பதிவு செய்த கருத்துக்களையும் ஓர் ஒப்பீடு செய்யலாம்.

சமீபத்தில் சிவக்குமார் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டில் இருந்தே தொடங்குவோம்.

சிவக்குமார் பேச்சின் சாரம் இதுதான், “ மிகுந்த சிரமப்பட்டு விரதம் எல்லாம் இருந்து, பாதயாத்திரையாகவே திருப்பதி கோவிலுக்கு வரும் பக்தனால் ஒரு நிமிடம் கூட சாமியைப் பார்த்து வழிபட முடியாது. ஜரிகண்டி, ஜரிகண்டி என்று விரட்டி விட்டுவிடுவார்கள். ஆனால், மிகப்பெரும் செல்வந்தராக இருந்தால் அவர் சுத்தமேயின்றி கோவிலுக்கு வந்தாலும் அவருக்கு பெரும் மரியாதை அளிக்கப்படும்.” இதுதான் அவர் பேசியது. இது பரவலாக எல்லா கோவில்களிலும் நடக்கும் நிகழ்வுதானே.  இதே குற்றச்சாட்டுக்களை முன் வைத்துத்தானே தமிழகத்தில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோவில்களை ஆன்மீகப் பெரியவர்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என்று இந்துத்துவ அமைப்புகள் கோரி்க்கை வைத்து வருகின்றன.

dc-Cover-5643i95gsg6b9s674a3itkcna5-2018

அவர்கள் மீது யாரும் கோபம் கொள்வதில்லையே ஏன் ? இதே திருப்பதி கோவிலில் பணம் படைத்தவர்களையும், விஜபிக்களும்தான் எங்களுக்கு முக்கியம் என்று திருப்பதி கோவிலைச் சேர்ந்த  பார்ப்பனர் ஒருவர் தனியார் தொலைக்காட்சியில் ( சன்.டி.வி ) பேட்டி கொடுத்தாரே , அவர் மீது ஏன் கோபம் கொள்ளவில்லை. இவர்கள் மீதெல்லாம் வராத கோபம் நடிகர் சிவக்குமார் மீது வருகிறதென்றால் காரணம் இரண்டுதான். ஒன்று அவர் பார்ப்பனர் இல்லை. இரண்டாவது காரணம் அவர் அந்த கருத்தரங்கில் திருப்பதி கோவிலைப் பற்றி மட்டும் பேசிவிட்டுச் சென்றிருந்தால் பரவாயில்லை. ஆனால், அவர் கோவில்களில் இன்னமும் சாதிய அடக்குமுறை இருக்கிறது. கோவிலைக் கட்டும் வரை கருவறைக்குள் செல்ல அனுமதிக்கப்படும் ஒரு தொழிலாளிக்கு அதன் பின் அனுமதி மறுக்கப்படுகிறதென்றால் அது சாதி வெறியின்றி வேறென்ன ? என்ற கேள்வியை சிவக்குமார் எழுப்பினார். இந்தக் கேள்வியை ஒரு நாத்திகவாதி எழுப்பியிருந்தால் பார்ப்பனர்கள் கடந்து போயிருப்பார்கள். கடவுளை நிந்திக்கிறவர்கள் ஏன் இதைப்பற்றி கவலைப்பட வேண்டும் என்று வழக்கமான கேள்வியைக் கேட்டு அதை மடைமாற்றம் செய்திருப்பார்கள். ஆனால், இறை நம்பிக்கை உடைய உலகத்தமிழர்கள் அனைவரும் மதிக்கின்ற ஒரு மூத்த நடிகர் அதைக் கேட்கின்றபோது , பார்ப்பனர்களுக்கு அச்சம் வந்துவிடுகிறது. தங்கள் அடிமடியிலேயே இவர் கை வைக்கிறாரே என்ற அச்சம். அதை நேரடியாகக் கூற முடியாமல் இந்துக் கடவுகள்களை இழிவுபடுத்துகிறார் என்று சொல்லி இந்துச் சமூகத்தில்  இருக்கும் இடைநிலைச் சாதிகளை, அவர்கள் மொழியில் சொல்வதென்றால் சூத்திரர்களை சிவக்குமார் போன்றவர்களுக்கு எதிராக திருப்பும் முயற்சியைத் தொடங்குகிறார்கள். சட்ட ரீதியிலான நடவடிக்கைகள் மூலம் பார்ப்பனீயத்திற்கு எதிரான அவர்களின் கருத்துக்கள் தொடர்ந்து பொது வெளிச் சமூகத்தில் பேசு பொருளாகி விடாமல் இருக்கும்படி அவர்களை மிரட்டுகிறார்கள்.

இனி ஜோதிகா கூறிய கருத்துக்களுக்கு வருவோம். கோவில்களுக்கு செலவிடும் பணத்தை பள்ளிகள் கட்ட பயன்படுத்தலாமே என்பதுதான் ஜோதிகா கூறிய கருத்து.

இதற்கு ஏன் இத்தனை கொந்தளிப்பு. காரணம் இருக்கிறது.

உள்ளம் பெரும் கோயில் ஊன் உடம்பு ஆலயம்

வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்

தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்

கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே..

என்ற திருமூலரின் வார்த்தைகளைப் புரிந்து கொண்டு, நம்ம மனசுதான் கோவில். அதை சுத்தமா வச்சுப்போம். சாமியை வீட்டில் இருந்தே வழிபடுவோம் என்ற முடிவுக்கு மக்கள் சென்று விட்டால் பெரும் இழப்பு யாருக்கு என்று சிந்தியுங்கள். நிச்சயம் பார்ப்பனர்களுக்குத்தான். ஏனெனில் அவர்கள்தான் கோவில்களை வைத்து வயிறு வளர்கிறார்கள். யாரும் கோவிலுக்கு செல்லவில்லை அல்லது கோவிலுக்குச் சென்றாலும் அங்கு பணம் கொடுப்பதில்லை அதற்கு மாறாக ஏழைகளுக்கு உதவிகள் செய்யத் தொடங்கிவிட்டார்கள் என்றால் பார்ப்பனர்களின் நிலையை எண்ணிப் பாருங்கள்.

அந்த அச்சமே ஜோதிகாவிற்கு எதிராக கொந்தளிக்க வைக்கிறது.

சரி, ஜோதிகா சொன்னதற்காக கோபப்படும் இவர்கள், “

அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்

ஆலயம் பதினாயிரம் நாட்டல்

பின்னருள்ள தருமங்கள் யாவும்

பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்,

அன்னயாவினும் புண்ணியம் கோடி

ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்”

என்று பாரதி பாடிச் சென்றுள்ளானே அவன் மீதும் கோபம் கொள்வார்களா.? பாரதியையும் இந்து விரோதி என்பார்களா?

சொன்னாலும் சொல்வார்கள். சரி பாரதியை விடுங்கள். இவர்களின் தலைவர் மோடியும் இதே கருத்தைத்தானே சொன்னார். ஜோதிகாவாவது கோவில்களை விட பள்ளிகள் முக்கியம் என்றார். மோடி கோவில்களை விட கழிப்பறைகள் முக்கியம் என்றாரே. அவர் மீது ஏன் கோபம் கொள்ளவில்லை.

ஆக இவர்களுக்கு சொல்லும் பொருள் மீது அல்ல கோபமும், எதிர்ப்பும். சொல்லும் மனிதர்கள் மீதே கோபமும் வெறுப்பும்.

vijay-sethupathi-1581599739-300x169.jpg

நடிகர் விஜய் சேதுபதி பேசியதற்கு கிளம்பிய எதிர்ப்பும் அப்படிப்பட்டதே. நடிகர் விஜயை பார்ப்பனர்கள் ஜோசப் விஜய் என்று மதம் சார்ந்து அவர் மீது வெறுப்பை கக்கி அவருக்கு இளைஞர்களிடம் இருக்கும் ஆதரவை மடைமாற்றம் செய்ய முயற்சிக்கும்போது அந்தப் பட்டியலில் விஜய் சேதுபதியையும் இணைக்கிறார்கள். அவர் அதற்கு பதிலடி கொடுக்கத் தொடங்கியதும், அவர் இந்துக் கடவுகள்களை அவமதித்துவிட்டார் என்று ஓராண்டிற்கு முன் நடைபெற்ற நிகழ்வை எடுத்து வந்து அவருக்கு எதிராக பிரச்சாரம் செய்யத்  தொடங்குகிறார்கள்.

ஆனால், விஜய் சேதுபதி பேசிய அதே கருத்தை பல ஆண்டுகளுக்கு முன்பாகவே நடிகர் கிரேசி மோகன் பேசுகிறார். சாமி குளிக்கும்போது காட்டுறாங்க, டிரஸ் மாத்தம்போது மட்டும் ஏன் திரை போட்டு மறைக்கிறாங்க  என்று கிரேசி மோகன் கேட்டபோது நவதுவாரங்களையும் மூடிக்கொண்டு இருந்தவர்கள், விஜய் சேதுபதி கேட்டதற்கு அதுவும் ஓராண்டு கழித்து பொங்குகிறார்கள் என்றால் பிரச்னை அவர் கடவுள் குறித்து பேசியது அல்ல. அவர் கல்வி, நீட் என்று பொதுப்பிரச்னைகள் குறித்தும் கருத்து சொல்ல தொடங்கிவிட்டார் என்பதே.

ஆக இவர்களுக்கு சொல்லப்படும் கருத்துக்களின் மீது எப்போதுமே விமர்சனங்கள் இருப்பதில்லை. அதை யார் சொல்கிறார்கள் என்பதைப் பொறுத்தே இவர்களின்  எதிர்ப்பும் ஆதரவும் இருக்கும்.

இதற்கு மற்றுமொரு சான்றுதான் வைரமுத்து விவகாரம். ஆண்டாள் குறித்து வைரமுத்து தன் சொந்தக் கருத்தை வைத்ததுபோல் வெகுண்டெழுந்து கத்தியவர்கள் அனைவருக்குமே தெரியும் அது வைரமுத்துவின் கருத்தல்ல என்று. வைரமுத்து ஒரு ஆய்வுக்கட்டுரையை மேற்கோள் காட்டுகிறார். அந்த  ஆய்வுக் கட்டுரையில் , ஆண்டாள் தேவதாசி மரபைச் சேர்ந்தவளாக இருக்கக்கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதை மேற்கோள் காட்டிய வைரமுத்துவின் நாக்கையே வெட்ட வேண்டும் என்றெல்லாம் பேசினார்களே எனில், இந்தக்கட்டுரையை எழுதியவர்கள் கதி என்ன ஆகுமோ என்று நினைத்தால், ஒன்றுமே நடக்கவில்லை. கட்டுரையை எழுதியவர்களுக்கு எதிராக ஒரு கடுகளவு எதிர்ப்பு கூட வரவில்லை. காரணம் கட்டுரையை எழுதியவர் எம்.ஜி.எஸ்.நாராயணன் எனும் பார்ப்பனர். இந்த நாராயணன் ஒரு நூலை மேற்கோள் காட்டுகிறார். அதை எழுதியவர் டி.ஏ.கோபிநாத் ராவ். இவரும் ஒரு  பார்ப்பனர்.  இதற்கெல்லாம் மேலாக, ஹேராம் திரைப்படத்தில் “ நீங்க என்னை ஆம்படையாளா ( பொண்டாட்டி ) ஏத்துக்கலை. ஆண்டாளாவாவது ஏத்துக்கோங்கோ “ என்று வசனம் வந்ததே. அப்போது ஏன் கொந்தளிக்கவில்லை. வாலியே இதைச் சொல்கிறார். “திருவிழாவில் யானைக்கு மதம் பிடித்ததால் ஓடவில்லை. மதம் பிடிக்கவில்லை அதனால்தான் ஓடியது “ என்று தான் ஒரு கவிதை சொல்லியதாகவும் அதைப் பார்த்துவிட்டு கலைஞர் கருணாநிதி, இதையே நான் சொல்லியிருந்தால் “சோ” வென மழை கொட்டும் என்று கூறியதாகவும் சொல்கிறார் வாலி.

ஆக இங்கே பார்ப்பனர்களுக்கு ஒரு நீதி. மற்றவர்களுக்கு ஒரு நீதி.

நெல்லை கண்ணன் மீது வழக்கு போட்டு அவரை கைது செய்தார்களே. என்ன காரணம் அவர் அமித்ஷா, மோடி ஆகியோரின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும்விதமாக பேசிவிட்டார் என்பது சொல்லப்பட்ட காரணம்தான். உண்மையான காரணம் அதே மேடையில் அவர் இந்து என்று ஒரு மதமே கிடையாது என்றும் தான் ஒரு இந்து அல்ல சைவன் என்றும் பேசுகிறார். அதுதான் பிரச்னை.

jpg-300x225.jpg

சரி அதற்காக அவர், மோடி, அமித்ஷா ஆகியோரின் பாதுகாப்பு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது சரியா என்று கேள்வி எழுப்பும் நண்பர்களிடம் நான் முன் வைக்கும் கேள்வி, வைரமுத்துவின் நாக்கை வெட்ட வேண்டும் என்று பாஜக வின் நயினார் நாகேந்திரன் பேசினாரே. அவர் ஏன் கைது செய்யப்படவில்லை. நாங்களும் சோடா பாட்டில் வீசுவோம் என்று ஒரு ஜீயர் பேசினாரே அவர் மீது ஏன் நடவடிக்கை இல்லை.  ரத்த ஆறு ஓடினாலும் பரவாயில்லை இதற்கு ஒரு முடிவு வரட்டும் இந்துக்கள் என்ன ஏமாளிகளா ?  என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஒரு தொலைக்காட்சி பேட்டியில் பகிரங்கமாக பேசினாரே அவர் ஏன் கைது செய்யப்படவில்லை.

ஆக, சட்டம் ஒழுங்கு சார்ந்த நடவடிக்கையே நெல்லை கண்ணன் கைது என்று சொல்வது ஏமாற்று வேலை என்பது அப்பட்டமாகிறது. பார்ப்பனீயத்தை உடைக்கும் விதமாக நெல்லை கண்ணன் பேசுகிறார் என்பதே அவரின் கைதுக்கு காரணம்.

பார்ப்பனர்களின் ஒட்டுமொத்த தலைவனாக தன்னை நினைத்துக் கொண்டிருக்கும் எஸ்.வி.சேகரிடம் புதிய தலைமுறை தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் நெறியாளர் செந்தில் ஒரு கேள்வியை முன் வைத்தார். காஞ்சி சங்கராச்சாரியார் உங்களின் குரு பீடம் அவரை யார் அவமதித்தாலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று சொல்லும் நீங்கள் அவரை ஜெயலலிதா கைது செய்த போது அதிமுக எம்.எல்.ஏ. வாகத்தானே இருந்தீர்கள். அப்போது ஏன் அதை எதிர்த்து குரல் கொடுக்கவில்லை. ஜெயலலிதாவைக் கண்டித்து போராட்டம் நடத்தியிருக்கலாமே. குறைந்தபட்சம் உங்கள் எம்.எல்.ஏ.பதவியையாவது ராஜினாமா செய்திருக்கலாமே என்று கேட்ட கேள்விக்கு பதிலே இன்றி விழித்தார் எஸ்.வி.சேகர். இவர் மட்டுமில்லை. இன்று வைரமுத்துவின் நாக்கை வெட்டுவேன் என்று கொக்கரிக்கும் நயினார் நாகேந்திரன் அப்போது அதிமுகவில்தானே இருந்தார். இந்து சமய மடாதிபதியை கைது செய்த ஜெயலலிதாவை எதிர்த்து ஒரு வார்த்தை பேசவில்லையே ஏன். இப்போது நாங்களும் சோடா பாட்டில் வீசுவோம் என்று வீர வசனம் பேசும் ஜீயர் அப்போது எங்கிருந்தார் என்றே யாருக்கும் தெரியாதே.

காரணம் ஜெயேந்திரரை கைது செய்தது ஜெயலலிதா எனும் பார்ப்பனர். இதுவே கலைஞர் ஆட்சியில் ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டிருந்தால் திமுக வும் கலைஞரும் இந்து விரோதிகளாக குற்றம்சாட்டப்பட்டு பார்ப்பனர்கள் அனைவரும் பொங்கி எழுந்திருப்பார்கள்.

பார்ப்பனர் என்ற வார்த்தையைச் சொன்னாலே கோபம் வருகிறது. அவர்களுக்கு.

889037-nellai-300x169.jpg

பார்ப்பனர் என்ற வார்த்தை திருக்குறளில் இருக்கிறது. சிலப்பதிகாரத்தில் இருக்கிறது. அம்பேத்கர் பார்ப்பனர்களை கடுமையாக விமர்சிக்கிறார். பார்ப்பானை ஐயர் என்ற  காலமும் போச்சே என்று பாரதி பாடுகிறான். இவர்கள் மீதெல்லாம் கோபம் கொள்வார்களா பார்ப்பனர்கள்.

மாட்டார்கள் மாறாக அம்பேத்கர், பெரியார் போன்றவர்கள் பார்ப்பனர்களைப் பற்றி பேசிய கருத்துக்களை மேற்கோள் காட்டினாலோ, திருக்குறளில், சிலப்பதிகாரத்தில் பார்ப்பனர் என்ற வார்த்தைகள் இருப்பதைச் சுட்டிக்காட்டினாலோ, அம்பேத்கர் பேசியிருக்கிறார் என்பதை நினைவுபடுத்தினாலோ அவர்களுக்கு பற்றி எரிகிறது. என்ன செய்வது.

ஆண்டாண்டு காலமாய் பார்ப்பனீயம் செய்து வரும் அடக்குமுறைகளை அம்பலப்படுத்துபவர்களை இந்து  விரோதிகள் என்றும், தேச விரோதிகள் என்றும் சாதிய, மத, சட்ட ரீதியிலான மிரட்டல்கள் மூலமாகவெல்லாம் அவர்களை அடக்கி ஒடுக்க நினைக்கும் உங்களின் முயற்சிகள் வேறெங்கு வேண்டுமானாலும் வெற்றி பெறலாம். ஆனால் தமிழகத்தில் அது ஒருக்காலமும் வெல்லாது. பார்ப்பனீயத்தால் தமிழ் மண்ணில் ஒரு போதும் வெற்றி பெறவே முடியாது.

 

https://uyirmmai.com/news/சமூகம்/analysis-on-influence-of-brahmanism-in-tamil-nadu/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழில் நான்காயிரம் ரூபாவுக்கு விற்கப்பட்ட தேங்காய்!! (மாதவன்) யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் வருடாந்தம் நடத்தும் போர்த் தேங்காய் போட்டிக்காக பயன்படுத்தும் தேங்காய்கள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன்போது ஓர் தேங்காய் நான்காயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சங்கானை இந்து இளைஞர் அமைப்பினால் இந்த போர்த் தேங்காய் ஏல விற்பனை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது போர்த் தேங்காய் போட்டிக்கு பயன்படுத்தப்படக் கூடிய வைரமான தேங்காய்கள் தெரிவு செய்யப்பட்டு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. தெரிவு செய்யப்பட்ட ஏனைய அனைத்து தேங்காய்களும் ஆயிரம் ரூபாவிற்கும் அதிகமாக ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டதுடன் அதில் ஒரு தேங்காய் 4000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அந்த தேங்காயை பல போட்டியாளர்கள் பெற்றுக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பாரம்பரிய போர்த் தேங்காய் விளையாட்டை பேணிப் பாதுகாக்கும் நோக்கில் சங்காய் இளைஞர் அமைப்பு இந்த போட்டியை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (ஏ) யாழில் நான்காயிரம் ரூபாவுக்கு விற்கப்பட்ட தேங்காய்!! (newuthayan.com)
    • யாழில் சகோதரிக்கு போதை ஊசி செலுத்தி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சகோதரன் கைது Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 03:41 PM   தனது சகோதரியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்ததுடன், சகோதரியை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த குற்றச்சாட்டில் சகோதரன் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.  யாழ்ப்பாணம் நகர் பகுதியை அண்டிய கிராமத்தைச் சேர்ந்த 34 வயதுடைய பெண்ணொருவர் தனது பெற்றோர் உயிரிழந்த நிலையில், சகோதரியுடன் வடமராட்சி கிழக்கு பகுதியில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் வசித்து வந்துள்ளார்.  இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் பெண்ணின் சகோதரி உயிரிழந்துள்ளார். அதனை அடுத்து இல்லத்தில் வசித்து வந்த சகோதரியை , யாழ்.நகர் பகுதியை அண்டிய பிரதேசத்தில் வாழும் சகோதரன் தன்னுடன் அழைத்து வந்து தங்க வைத்துள்ளார்.  இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் குறித்த பெண்ணுக்கு போதைப்பொருட்களை வலுக்கட்டாயமாக நுகர வைத்தும், போதை ஊசிகளை செலுத்தியும் பாலியல் வன்புணர்வுக்கு கும்பல் ஒன்று உட்படுத்தி வந்துடன் பெண்ணை சித்திரவதைக்கு உள்ளாக்கியும் வந்துள்ளது.  பின்னர் கடந்த வாரம் மீண்டும் ஆதரவற்றோர் இல்லத்தில் பெண்ணை கொண்டு சென்று சகோதரன் சேர்த்துள்ளார். இல்லத்தில் பெண்ணின் நடவடிக்கையில் மாற்றங்கள் தென்பட்டதுடன், உடலில் காயங்கள் காணப்பட்டமையால், இல்ல நிர்வாகத்தினரால் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பெண்ணை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.  வைத்திய சிகிச்சையின் போதே பெண் தனக்கு நேர்ந்த கொடுமைகளை விபரித்துள்ளார். அதனை அடுத்து சட்ட வைத்திய அதிகாரியினால், முன்னெடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனைகளின் போது, பெண் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமையும், பெண்ணை அடித்து துன்புறுத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கியமைக்கான காயங்கள் உடலில் காணப்பட்டுள்ளமையும் உறுதிப்படுத்தப்பட்டது.  சம்பவம் தொடர்பில் ஆரம்ப விசாரணைகளை முன்னெடுத்த பருத்தித்துறை பொலிஸார், குற்றம் நடைபெற்ற பிரதேசம் யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலைய பிரிவுக்கு உட்பட்டது என்றதன் அடிப்படையில் , யாழ்ப்பாண பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து, யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.  விசாரணைகளின் அடிப்படையில் பெண்ணின் சகோதரனே, பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்தமையும், போதைப்பொருட்களை கட்டாயப்படுத்தி நுகர வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியமையும் தெரிய வந்துள்ளது.  அதனை அடுத்து சகோதரனை கைது செய்த பொலிஸார் விசாரணைகளின் பின்னர் யாழ்,நீதவான் நீதிமன்றில் நேற்று வியாழக்கிழமை முற்படுத்தியவேளை, சகோதரனை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.  அதேவேளை, பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியவர்கள் என 08 பேரை அடையாளம் கண்டுள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   யாழில் சகோதரிக்கு போதை ஊசி செலுத்தி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சகோதரன் கைது | Virakesari.lk
    • மன்னார் - நானாட்டான் கமநல சேவைகள் பிரிவில் உள்ள வஞ்சியன்குளம் கமக்காரர் அமைப்புக்கு உட்பட்ட வஞ்சியக் குளக்கண்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை (26) காலை பயிர்களுக்கு ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறும் பணிகள் இடம்பெற்றன. அந்த வகையில், MI 07 இனத்தைச் சேர்ந்த பயறு செய்கைக்கான திரவ உரம் ட்ரோன் மூலம் விசிறப்பட்டது.  ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறும் பணிகள் இடம்பெற்றபோது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், கமநல அபிவிருத்தி  உதவி ஆணையர், விவசாய மாகாண பிரதி பணிப்பாளர், கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர், கமநல மற்றும் விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள், விவசாயிகள் என பலர் களத்தில் இருந்தனர். மன்னார் - நானாட்டானில் பயிர்களுக்கு ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறப்பட்டது!  | Virakesari.lk
    • நெடுமாறன் அய்யா எமக்காக செய்தவற்றில் சில 1982ஆம் ஆண்டு இலங்கையில் தமிழ் நூல்கள் அதிகம் இருந்த யாழ் நூலகம் தீக்கிரையாக்கப்பட்டபோது, அவ்விடம் சென்று அதனை ஆவணப்படுத்தி, அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆரிடம் அறிக்கை சமர்ப்பித்தார். அதன்பின், எம்.ஜி.ஆர், இலங்கையில் தமிழர் போராட்டம் குறித்து அன்றைய பிரதமர் இந்திரா காந்தியிடம் பேசினார் என்பது வரலாறு. மேலும், 1985ஆம் ஆண்டு, சிங்களப் படைகளால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழ்ப்பகுதிகளை, ரகசியமாக பயணம் செய்து காணொலியாகப் பதிந்து, உலகம் முழுக்க தெரியப்படுத்தினார். அதேபோல், 1991ஆம் ஆண்டு இந்திய அமைதிப்படை இலங்கையில் செய்த கொடூரங்களை, ஆவணப்படுத்தி, அன்றைய பிரதமர் வி.பி.சிங்கிடம் இதுகுறித்து பேசி,அவரை திரும்பப்பெற வலியுறுத்தினார். இப்படி தொடர்ந்து ஈழ ஆதரவுப் போராட்டங்களில் ஈடுபட்டார், பழநெடுமாறன்.  நாங்கள் என்ன செய்தோம்.  போராடமால் வெளிநாடு சென்று இணையத்தில் மட்டுமே போராடுகிறோம்.  2010 தேர்தலில் எம்மை அழித்த சரத் பொன்சேகாவுக்கு யாழில் எம்மவர்கள் வழங்கிய அதிக வாக்குகள்.  ஆனால் நாங்கள் தமிழக அரசியல்வாதிகளைப் பார்த்து துரோகிகள் என்கிறோம். இது வேடிக்கை இல்லையா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.