Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குட்டை நாயின் எலும்புத்துண்டு யோசனை

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் பிரச்சினை’ என்றழைக்கப்படும் பிரச்சினைக்கான மூல காரணங்கள் இனங் காணப்பட்டு வரலாற்று யதார்த்தங்களைக் கருத்திற் கொண்டு அப்பிரச்சினைகள் தொடர்பில் பொருத்தமான தீர்வுகளைக் காணுதல் வேண்டும்

குட்டை நாய்கள் துரத்தி அடிக்கபடுவதே மக்களின் இன்றைய விருப்பம்

ரிஎம்விபி அமைப்பால் சமர்ப்பிக்கப்பட்ட தீர்வுயோசனை…

tmvp.jpg

சர்வகட்சிக்குழுவின் தலைவர் அமைச்சர் திஸ்ஸ விதாரணவிடம் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் (ரி.எம்.வி.பி) மும்மொழிகளிலான தமது அரசியல் தீர்வு யோசனைகளை இன்று சமர்ப்பித்தனர் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள்(ரி.எம்.வி.பி) மும்மொழிகளிலான தமது அரசியல் தீர்வு யோசனைகளை சர்வகட்சிக்குழுவின் தலைவர் அமைச்சர் திஸ்ஸ விதாரண அவர்களிடம் இல.408 காலிவீதி கொழும்பு-03 இல் அமைந்துள்ள அவரது காரியாலயத்தில் இன்று காலை (28-05-2007) 11.30 மணியளவில் கையளித்தனர். கட்சியின் செயலாளர் திருமதி.எஸ்.பத்மினி அவர்களும் கட்சியின் சமாதானச் செயலகப் பொறுப்பாளர் திரு.க.மகேஷ் அவர்களும் மும்மொழிகளிலான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் அரசியல் தீர்வு யோசனைகளை சர்வகட்சிப்பிரதிநிதி குழுவின் தலைவர் அமைச்சர் திஸ்ஸ விதாரண அவர்களிடம் கையளித்தார்கள். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளால் சமர்ப்பிக்கப்பட்ட (ரி.எம்.வி.பி) அரசியல் தீர்வு யோசனைகள் பின்வருமாறு:

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (ரி.எம்.வி.பி)

இனப்பிரச்சினை தொடர்பில் ஒன்றுபட்ட இலங்கைக்குள் நிரந்தரமான தீர்வொன்றினைக் காண்பதற்கான விதந்துரைப்புக்கள்.

1987 ஆம் ஆண்டின் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தினைத் தொடர்ந்து அன்றிலிருந்து எழுகின்ற அரசியல் யதார்த்தங்கள் தொடர்பில் கவனம் செலுத்துவதற்கென மேலதிக அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்குவதன் ஊடாக அரசியல் அமைப்பிற்கு கொண்டு வரப்பட்ட 13ஆவது திருத்தத்தின் மூலம் ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்பட்டவாறான மாகாண சபைகள் சட்டத்தின் முழுமையான அமுலாக்கத்தினை ரி.எம்.வி.பி சிபாரிசு செய்கின்றது.

இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் கீழ் மத்திய அரசாங்கத்திடமிருந்து மாகாண சபைகளுக்கான அரசியல் அதிகாரப் பகிர்வானது இலங்கையில் நிலவுகின்ற தற்போதைய பிரச்சினை தொடர்பில் தீர்வுத் திட்டமொன்றினை வகுப்பதற்கான முக்கியமான காரணியாகவும் அடிப்படையாகவும் அமைதல் வேண்டும் என ரி.எம்.வி.பி உறுதியாக நம்புகின்றது.

அறிமுகவுரை

மூன்று தசாப்தமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற சிவில் யுத்தமும் அதன் விளைவான முட்டாள் தனமானதும் கொடூரமானதுமான வன்முறை இன்றுவரை எண்பதாயிரம் பெறுமதியான உயிர்களை கொன்றுள்ளதுடன் பல்லாயிரக்கணக்கான மக்களை பலவந்தமாக நாட்டைவிட்டு வெளியேற்றி இருப்பதுடன் அதே தொகையான மக்களை உள்ளக இடம்பெயர்விற்குள்ளாக்கி யிருக்கின்றது. இதன் விளைவாக எமது நாட்டின் பொருளாதாரம் அபிவிருத்தி ஸ்திரத்தன்மை மற்றும் சட்டம் என்பன கடுமையான பாதகமான விளைவுகளுக்கு உள்ளாகி இருப்பதுடன் இவ்விளைவுகள் வடக்கு கிழக்கு மாகாணங்களில் மிகவும் அதிகமாகவே காணப்படுகின்றன. சிறுபான்மை மக்களின் விசேடமாக தமிழர்களினதும் தமிழ் பேசும் ஏனைய மக்களினதும் பிரச்சினைகள் தொடர்பில் நிரந்தரமானதும் ஏற்றுக்கொள்ளக்கூடியதுமான தீர்வொன்றினைக் காண்பதற்கான எமது இயலாமையானது எமது நாட்டை ஆட்டிப்படைக்கும் பிரச்சினைகளுக்கான அடிப்படையான ஓரே மூலகாரணமாக அமைகின்றது.

வரலாற்று ரீதியில் உற்றுநோக்கும் போது சில பல்லின பல்தேசிய பல்மத மற்றும் பல்கலாசார நாடுகளில் சிறுபான்மையினர் எண்ணிக்கை அடிப்படையில் பிரதான பெரும்பான்மையினரின் அடக்கு முறைக்குள்ளாக்கப்படும் போது அது சிறுபான்மை மக்களின் எதிர்ப்பினை தோற்றுவிப்பதுடன் அவ்வெதிர்ப்பு கவனியாதுவிடப்படுமிடத்து அது வன்முறைசார் கிளர்ச்சிகளைத் தோற்றுவிக்கின்றது. சிறுபான்மை உரிமைகள் அவர்களின் பாதுகாப்பு சட்டத்தில் சமத்துவம் மற்றும் அவர்களது கௌரவம் பாதுகாக்கப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டிருக்கு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதை எங்கிருந்து பெற்றீர்;கள்?

...எமது தேசிய பிரச்சினை தொடர்பில் தற்போதைய அரசாங்கத்தின் அணுகுமுறையினை நாம் வரவேற்கின்றோம். முன்னைய அரசாங்கங்களைப் போலல்லாது ‘தமிழ் பிரச்சினை’ என அழைக்கப்படும் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு தற்போதைய அரசாங்கம் தெளிவானதும் தெளிவுடன் கூடியதுமான செயல்நோக்கொன்றைக் கொண்ட அணுகுமுறையொன்றினை நாடியிருக்கின்றது. இவ்வரசாங்கம் அரசியல் தீர்வுகளைக் காண்பதற்காக சர்வகட்சி மாநாட்டு செயன்முறையொன்றினை முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கும் அதேவேளை எமது நாட்டின் இறைமையினையும்இ ஒருமைப்பாட்டினையும் உறுதிசெய்வதற்காக பயங்கரவாதத்தினை தோற்கடிப்பதற்கான தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுடன் இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது. ...

சிங்களத்தின் எலும்புத் துண்டிற்கு கரிநாயின் நன்றிக்கடன்.

மேற்கொண்டு அறிக்கையை வாசிக்க பொறுமையும் அவசியமும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

துரோகிகள் மற்றும் எதிரிகளின் செய்திகளை நகைச்சுவை என்ற பெயரில் இங்கு இணைப்பது ஒரு வகையில் அவர்களுக்கான பரப்புரையாக அமையக்கூடும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.