Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிறீலங்காவிற்கு ஆயுத உதவி வழங்குவதை நிறுத்தக்கோரிக்கை – டாக்ரர்.ராமதாஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வியாழன் 31-05-2007 01:57 மணி தமிழீழம் [சிறீதரன்]

சிறீலங்காவிற்கு ஆயுத உதவி வழங்குவதை நிறுத்தக்கோரிக்கை – டாக்ரர்.ராமதாஸ்

பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் ராமதாஸ இந்தியாவை சிறீலங்கா அரசாங்கம் சமாதான பேச்சுவார்த்தைக்கு சென்று இனப்பிரச்சனைக்கு தீர்வு காணும்வரை சிறீலங்காவற்கு ஆயுத உதவிகளை வழங்கக்கூடாது என கேட்டுக்கொண்டுள்ளார்.

தீடீரென இந்தியாவிற்கு விஐயம் செய்த சிறீலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராயபக்ச இந்தியாவின் தேசியபாதுகாப்பு ஆலோசகர்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதையடுத்தே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இவ்வாறு வழங்கப்படும் உதவியானது சிறீலங்காவில் அப்பாவிப்பொதுமக்களுக்கு எதிராக உபயோகிக்கப்படும் எனவும் 6.5 கோடி இந்தியத் தமிழ் மக்கள் பேச்சுவார்த்தை மூலமே பிரச்சனைக் தீர்வு காண விரும்புவதாகவும். இந்திய அரசு ஆயுதஉதவி வழங்குவதை எதிர்ப்பதாகவும் தமிழ்நாட்டு முதலமைச்சர் கருணாநிதியிடம் இதுதொடர்பில் மத்தியில் அரசு ஆயுதஉதவி வழங்குவதை நிறுத்த உத்தரவாதம் பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரியவருகிறது.

pathivu

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையை இந்தியா கட்டாயப்படுத்த வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

அமைதிப் பேச்சை மீண்டும் தொடங்க இலங்கையை இந்தியா கட்டாயப்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்துகிறார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

"இலங்கை அரசின் பாதுகாப்புதுறைச் செயலாளர் ராஜபக்சே முன் அறிவிப்பு ஏதுவுமில்லாமல் தில்லி வந்துள்ளார். அவர் நம்நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், பாதுகாப்புதுறை செயலர் மற்றும் முப்படைத் தளபதிகளைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். எந்த இடத்துக்கும் எளிதாக எடுத்து செல்லக்கூடிய ரேடார்கள், தரையிலிருந்து பாய்ந்து தாக்கும் ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுதங்களை அவசரமாக இந்தியா வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்.

இந்த ஆயுதங்களை இந்தியா வழங்காவிட்டால் பாகிஸ்தான் உள்ளிட்ட பிற நாடுகளை இதற்காக இலங்கை நாடும் என்று அவர் தெரிவித்திருப்பதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றன. இலங்கைக்கு ஆயுத உதவி வழங்கும் பிரச்னையில் இந்தியத் தரப்பில் எத்தகைய வாக்குறுதியும் வழங்கப்படவில்லை என்றும் செய்திகள் வெளிவந்திருக்கின்றன. இது ஆறுதல் அளிக்கிறது. இந்த ஆறுதல் நீடித்து நிலைக்க வேண்டும்.

இலங்கையில் ராணுவத் தாக்குதல்கள் ஆரம்பமாகி மோதல்கள் உருவானதற்குப் பின்னர் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மாண்டு போயிருப்பதாக செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றன.

இப்படி இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் அப்பாவித் தமிழர்கள். இப்படிப்பட்ட நிலையில் இலங்கைக்கு இனியும் ஆயுதங்களை வழங்கினால் அவை ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவிப்பதற்கே பயன்படுத்தப்படும். எனவே இலங்கைக்கு ஆயுத உதவி என்ற பெயரில் ஒரு சிறு துரும்பைக் கூட வழங்கமாட்டோம் என்று இந்தியா உறுதிபட அறிவிக்க வேண்டும்.

இந்தியாவில் வாழும் ஆறரைக் கோடி தமிழர்களின் ஒட்டுமொத்த விருப்பமும் வேண்டுகோளும் இதுதான். இதனை இந்திய அரசுக்குத் தமிழக முதல்வர் உரிய வகையில் எடுத்துக் கூறி அத்தகைய உத்தரவாதத்தைப் பெற வேண்டும்.

இலங்கையில் மீண்டும் அமைதி பேச்சைத் தொடங்க வேண்டும் என்று உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் இலங்கை அரசு ராணுவ நடவடிக்கைகளின் மூலம் வெற்றிகாண வேண்டும் என்ற போர் வெறியுடன் செயல்பட்டு வருகிறது. ஏற்கெனவே பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளிடம் ஆயுதங்களை வாங்கிக் குவித்து வைத்துள்ள இலங்கை அரசு இந்தியாவிடமும் ஆயுதங்களைக் கேட்டு கையேந்தி நிற்கிறது.

ஆயுதங்கள் கேட்டு வரும் இலங்கைத் தலைவர்களிடம், அமைதிப் பேச்சு மூலம் ஈழத் தமிழர்களுக்கு நியாயமான அரசியல் உரிமைகளை வழங்கும்படி இந்தியா வலியுறுத்த வேண்டும். இந்தியாவின் ஆலோசனையைக் கேட்டு இலங்கை செயல்பட மறுத்தால் இலங்கைத் தலைவர்களை இந்தியா புறக்கணிக்க வேண்டும். இதன் மூலம் அமைதிப் பேச்சுக்கு இலங்கை மீண்டும் திரும்புவதற்கான கட்டாயத்தை இந்தியா கொண்டு வர வேண்டும்' என்று அறிக்கையில் ராமதாஸ் கூறியுள்ளார்.

- தினமணி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.