Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரிட்டனில் மூவா் குத்திப் படுகொலை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரிட்டனில் மூவா் குத்திப் படுகொலை!

Capture-28-960x491.jpg?189db0&189db0

 

பிரிட்டனின் தென்புற நகரான ரெடிங்கில் இடம்பெற்ற கத்திக் குத்துத் தாக்குதலில், மூவர் கொல்லப்பட்டதுடன், ஆறு போ் காயமடைந்தனா். இவா்களில் மூவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸாா் தெரிவித்துள்ளனர்.

ரெடிங்கின் நகர மையத்தில் உள்ள ஃபோர்பரி கார்டனில் நேற்று (20) இடம்பெற்ற இந்தக் கத்திக்குத்துத் தாக்குதல் ஒரு பயங்கரவாத சம்பவமாக கருதப்படவில்லை. இருப்பினும் இந்த சம்பவத்திற்கான பின்னணி குறித்து அதிகாரிகள் தீவிரமாக விசாரணை செய்து வருவதாக ரெடிங் நகர துப்பறியும் தலைமை கண்காணிப்பாளர் இயன் ஹண்டர் கூறினார்.

இந்தக் கத்திக் குத்துத் தாக்குதல் தொடா்பில் 25 வயதான ஒருவா் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இந்தத் தாக்குதலைத் தொடா்ந்து பொதுமக்களுக்கு மேலும் ஆபத்து எதுவும் இருப்பதாக உளவுத் துறை தகவல்கள் ஏதும் இல்லை. இருப்பினும் விழிப்புடன் இருக்குமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்வதாக ரெடிங் நகர பொலிஸாா் எச்சரித்துள்ளனா். சந்தேகத்துக்கிடமாக நபா்கள் அல்லது சம்பவங்கள் தொடா்பில் உடனடியாக பொலிஸாருக்குத் தகவல் அளிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

இதேவேளை, கத்திக் குத்தில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபா் லிபியாவைச் சோ்ந்தவா் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கத்திக் குத்துத் தாக்குதலைின்போது ரெடிங்கின் நகர மையத்தில் உள்ள ஃபோர்பரி கார்டனில் கூடியிருந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடியதாகவும் பின்னா் சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸாா் கொலைச் சந்தேகநபரை பிடித்து நிலத்தில் தள்ளி விழுத்திக் கைது செய்ததாகவும் சம்பவ இடத்தில் இருந்தவா்கள் தெரிவித்துள்ளனா்.

https://newuthayan.com/பிரிட்டனில்-மூவா்-குத்தி/

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரிட்டனின் ரீடிங் நகரில் மர்ம நபர் கத்தியால் குத்தியதில் 3 பேர் பலி; ஏராளமானோர் காயம்: தீவிரவாதத் தாக்குதலா என விசாரணை

3-feared-dead-several-injured-in-multiple-stabbings-in-uk-city-of-reading ரீடிங் நகரில் உள்ள பூங்கா பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ள காட்சி.

லண்டன்

பிரிட்டனின் தென்கிழக்கில் உள்ள ரீடிங் நகரில் நேற்று மாலை ஒரு பூங்காவிற்குள் புகுந்த மர்ம நபர் கண்ணில்பட்ட மக்களைச் சரமாரியாகக் கத்தியால் குத்தியதில் 3 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர் என்று போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இந்தத் தாக்குதல் தீவிரவாதச் செயலோடு தொடர்புடையதா என்பது குறித்து பிரிட்டன் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட 25 வயதுடைய நபரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர் லிபியா நாட்டைச் சேர்ந்தவர் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரீடிங் நகரில் உள்ள ஃபோர்பரி பூங்காவில் நேற்று வழக்கம் போல் மக்கள் கூடியிருந்தனர். அப்போது, கூட்டத்துக்குள் புகுந்த 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் திடீரென சத்தமிட்டு, தான் வைத்திருந்த கத்தியால் கண்ணில் தென்பட்ட மக்கள் மீது குத்தத் தொடங்கினார்.

இதில் பூங்காவில் இருந்த பலர் கத்திக்குத்து வாங்கிய நிலையில் மயங்கிச் சரிந்தனர். பலர் இந்த சம்பவத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்து அங்கிருந்து அலறியடித்துக்கொண்டு ஓடினர்.

இந்த நபரின் வெறிச்செயலைப் பார்த்த அங்கிருந்த மக்கள் போலீஸீாருக்குத் தகவல் தெரிவித்தனர். உடனடியாக அங்கு வந்த போலீஸார் அந்த நபரைச் சுற்றி வளைத்துப் பிடித்துச் சென்றனர். இந்தக் கத்திக்குத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேேய பலியானார்கள். காயமடைந்த பலரையும் போலீஸார் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

1592710549756.jpg

இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த இளைஞர் லாரன்ஸ் வோர்ட் என்பவர் கூறுகையில், “நான் என் நண்பர்களுடன் பூங்காவில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தேன். பலரும் பூங்காவில் சாப்பிட்டுக்கொண்டும், ஏதோ குடித்துக்கொண்டும் இருந்தார்கள். அப்போது ஒரு இளைஞர் திடீெரன கூட்டத்துக்குள் வந்து புரியாத மொழியில் ஏதோ பேசி அனைவரின் கவனத்தை ஈர்த்தார். திடீரென தான் வைத்திருந்த கத்தியால் தன் அருகில் இருந்தவர்கள் மீது குத்தத் தொடங்கியதால் நாங்கள் அங்கிருந்து தப்பித்து ஓடினோம்” எனத் தெரிவித்தார்.

தேம்ஸ் வேலி போலீஸின் புலனாய்வுப் பிரிவின் கண்காணிப்பாளர் இயான் ஹன்டர் கூறுகையில், “இந்தத் தாக்குதலில் ஒரு இளைஞரைத் தவிர வேறு யாருக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை. இதை தீவிரவாதச் செயலோடு தொடர்புபடுத்தி இப்போது பார்க்க முடியாது. பலரும் அவ்வாறு சந்தேகித்தாலும், விசாரணையில்தான் தெரியவரும்.

இந்தத் தாக்கதலுக்கான காரணம் குறித்து கைதான அந்த இளைஞரிடம் விசாரித்து வருகிறோம். இந்தத் தாக்குதல் குறித்த புகைப்படம், வீடியோ ஏதும் மக்களிடம் இருந்தால் அதை வெளியிட வேண்டாம். பாதிக்கப்பட்டவர்கள் நலன் கருதி இதைச் சொல்கிறோம். மக்கள் பூங்காவுக்குள் செல்ல வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம். இந்தத் தாக்குதலுக்கும் கறுப்பினத்தவர்கள் மீதான இனவெறித் தாக்குதலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை” எனத் தெரிவித்தார்.

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸன் கூறுகையில், “ரீடிங் நகரில் கத்திக்குத்து தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு என் இரங்கலைத் தெரிவிக்கிறேன். விரைவாக வந்து குற்றவாளியைக் கைது செய்த போலீஸாரைப் பாராட்டுகிறேன்” எனத் தெரிவித்தார்.

பிரிட்டன் உள்துறை அமைச்சர் பிரித்தி படேல் கூறுையில், “ரீடிங் நகரில் நடந்த கத்திக்குத்துச் சம்பவம் எனக்குக் கவலையளிக்கிறது. இந்தத் தாக்குதலில் பலியானவர்களுக்காக இரங்கல் தெரிவிக்கிறேன். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். உரிய நேரத்தில் வந்து நடவடிக்கை எடுத்த போலீஸாருக்குப் பாராட்டுகள்” எனத் தெரிவித்தார்.

https://www.hindutamil.in/news/world/560427-3-feared-dead-several-injured-in-multiple-stabbings-in-uk-city-of-reading-2.html

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்தின் பூங்கா ஒன்றில் தாக்குதல் நடத்திய வாலிபர் குறித்த பகீர் பின்னணி

இங்கிலாந்தின் பூங்கா ஒன்றில் தாக்குதல் நடத்திய வாலிபர் குறித்த பகீர் பின்னணி

இங்கிலாந்து நாட்டில் பூங்காவில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்த பொதுமக்களை குறிவைத்து பயங்கரவாதி நடத்திய கத்திகுத்து தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர்.
பதிவு: ஜூன் 22,  2020 08:56 AM
லண்டன்

இங்கிலாந்தின் தென்கிழக்கில் உள்ள ரீடிங் நகரில் போர்பரி என்ற பூங்கா உள்ளது. சனிக்கிழமை மாலை இந்த பூங்காவில் வழக்கம் போல் மக்கள் கூடியிருந்தனர். அப்போது, கூட்டத்துக்குள் புகுந்த 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் திடீரென சத்தமிட்டு, தான் வைத்திருந்த கத்தியால் கண்ணில் தென்பட்ட மக்கள் மீது குத்தத் தொடங்கினார்.


இதனால் பூங்காவில் பெரும் பதற்றம் உருவானது. மக்கள் அனைவரும் உயிரை காப்பாற்றிக்கொள்ள நாலாபுறமும் சிதறி ஓடினர்.

ஆனாலும் அந்த வாலிபர் சற்றும் ஈவிரக்கமின்றி விரட்டிச் சென்று கத்தியால் குத்தினார். இதில் பலர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தனர். இதற்கிடையே இந்த வாலிபரின் வெறிச் செயல் குறித்து அங்கிருந்த மக்கள் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்து சென்ற போலீசார் கத்திக்குத்து தாக்குதல் நடத்திய வாலிபரை சுற்றி வளைத்துப் பிடித்தனர்.

எனினும் இந்த கொடூர தாக்குதலில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். கத்திக்குத்தில் படுகாயமடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டு இருந்த பலரை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தேம்ஸ் வேலி போலீசின் புலனாய்வுப் பிரிவின் கண்காணிப்பாளர் இயான் ஹன்டர் கூறியதாவது: இந்தத் தாக்குதலில் ஒரு வாலிபரை தவிர வேறு யாருக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை. அந்த வாலிபர் லிபியா நாட்டைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது என கூறினார்.

தற்போது இந்த வாலிபர் குறித்து மேலதிக தகவல்கள் தெரியவந்து உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

அவரது பெயர் கைரி சதல்லா (வயது 25) 16 நாட்களுக்கு முன்பு சிறையில் இருந்து விடுதலையானார், விடுதலையாவதற்கு முன்னர் மனஉளைச்சல் மற்றும் உளவியல் ரீதியான பிரச்சினைக்களுக்காக சிகிச்சை பெற்று உள்ளார்.மேலும் 2018 ஆம் ஆண்டில் வன்முறை நிகழ்த்தியதாக குற்றச்சாட்டுகள் இருந்தபோதிலும் அவருக்கு ஐந்து ஆண்டுகள் இங்கிலாந்தில் வசிக்க அனுமதி வழங்கப்பட்டது.

சிரியாவுக்கு செல்ல வேண்டும் என்ற இவரது ஆர்வம் காரணமாக கடந்த ஆண்டு சில மாதங்கள் இங்கிலாந்தின் உளவு அமைப்பின் கண்காணிப்பு வட்டத்தில் இருந்துள்ளார். வன்முறைக்கான குற்றச்சாட்டுகளும் உளவியல் பிரச்சினையும் உள்ள  ஒரு இளைஞரை இங்கிலாந்து ஏன் மேலும் 5 ஆண்டுகள் தங்கிக் கொள்ள அனுமதித்தது என்ற கேள்வி தற்போது முன்வைக்கப்படுகிறது.

ஆனால் லிபியாவில் பயங்ரவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்து வருவதால், சதல்லா அங்கிருந்து தப்பித்துக்கொள்ள இங்கிலாந்து வந்ததாகவும், அவர் கிறிஸ்தவ மதத்தை தழுவியதாகவும் உறவினர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

https://www.dailythanthi.com/News/TopNews/2020/06/22085653/3-people-killed-in-stabbing-incident-in-England.vpf

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.