Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாற்று தமிழ்த் தேசிய தரப்பினரது வெற்றியும் அதன் அரசியல் முக்கியத்துவமும்? - யதீந்திரா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாற்று தமிழ்த் தேசிய தரப்பினரது வெற்றியும் அதன் அரசியல் முக்கியத்துவமும்? - யதீந்திரா

இம்முறை தேர்தலில் மாற்றம் ஏற்படலாம் என்பது பலருடைய எதிர்பார்ப்பு. இதுவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே தமிழ் மக்களின் ஒரோயோரு தமிழ்த் தேசிய தலைமையாக இருந்தது. கூட்டமைப்பு ஒரணியாக நிற்க வேண்டும் – அதுதான் தமிழ் மக்களுக்கு நல்லதென்பது, பலரதும் கருத்தாக இருந்தது. அதே போன்று, தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் அணைத்தும் கூட்டமைப்பிற்குள் ஓரணியாக நிற்க வேண்டும் என்னும் அபிப்பிராயமும் பலரிடம் இருந்தது. ஆனால் நிலைமைகள் எதிர்பார்த்தது போன்று இருக்கவில்லை. அனைவரையும் அரவைணத்து, கூடுத் தலைமையொன்றை, வழங்கக் கூடிய ஆற்றல் கூட்டமைப்பிடம் இருந்திருக்கவில்லை.

அனைவரும் ஓரணில் நிற்க வேண்டுமென்னும் எதிர்பார்ப்பு தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் நீண்டகாலமாகவே நிலவி வருகின்றது. தமிழர் அரசியல், தமிழ்-மிதவாதிகளின் செல்வாக்கிற்குள் இருந்த காலத்திலும் சரி, பின்னர் ஆயுத விடுதலை அமைப்புக்களின் செல்வாக்கிற்குள் இருந்த காலத்திலும் சரி – அனைவரும் ஓரணியில் நிற்க வேண்டும் என்னும் கோசம் ஆரம்பத்தில், மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தது உண்மைதான். ஆனால் விடுதலைப் புலிகள் ஏகத் தலைமையாக எழுச்சியுற்ற காலத்தில், மாற்று அணிகள் தேவையற்றது என்னும் வாதமே பெரும்பாலானவர்கள் மத்தியில் இருந்தது. விடுதலைப் புலிகளின் நிலைப்பாடும் அதுவாகவே இருந்தது. அது சரியானதொரு நிலைப்பாடுதானா – என்பதில் மாறுபட்ட அபிப்பிராயங்கள் இருக்க முடியும்.

2009இல், விடுதலைப் புலிகள் இயக்கம் தோல்விடைந்ததைத் தொடர்ந்து, மீண்டும் பாராளுமன்ற அரசியல் தமிழ் மக்கள் மத்தியில் முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. உண்மையில் தமிழ் மக்களின் முன்னால் பாராளுமன்றத்தை தவிர்த்து. வேறு தெரிவுகள் எதுவும் இருக்கவில்லை. விடுதலைப் புலிகள் அரசியலை தீர்மானித்த காலத்தில், பாராளுமன்ற கதிரைகளுக்கு எந்தவொரு பெறுமதியும் இருக்கவில்லை. ஆனால் 2009இற்கு பின்னரான நிலைமைகள் அப்படியில்லை. மீண்டும் பாராளுமன்ற வழிமுறை ஒன்றே ஒரேயொரு அரசியல் உபாயமாக மாறியது. இந்த பின்புலத்தில்தான், 2009இற்கு பின்னர் இடம்பெற்ற இரண்டு பாராளுமன்ற தேர்தல்களிலும் கூட்டமைப்பை, தமிழ் மக்கள் தங்களின் பிரதான தலைமையாக அங்கீகரித்திருந்தனர். 2010இல், கஜேந்திரகுமார் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்று, கூட்டமைப்பிற்கு மாற்றான அரசியல் தொடர்பில் விவாதித்த போதிலும், மக்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.

ஆனால் மக்களின் ஏகோபித்த ஆதரவை பொற்றுக் கொண்ட, கூட்டமைப்பால், குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய பெரிய மாற்றங்கள் எதுவும் இதுவரை ஏற்படவில்லை. இந்த பின்புலத்தில்தான் மாற்று தமிழ்த் தேசிய தலைமையொன்றின் தேவை உணரப்பட்டது. அதற்கான முயற்சிகளும் இடம்பெற்றன. அந்த முயற்சிகளின் விளைவாகவே வடக்கு மாகாணத்தின் முன்னைநாள் முதலமைச்சர், நீதியரசர் விக்கினேஸ்வரன் தலைமையில் தமிழ்த் தேசிய மக்கள் கூட்டணி என்னும் அமைப்பு உருவாக்கப்பட்டது.

இன்றைய நிலையில் தமிழ்த் தேசிய அரசியல் அரங்கில், மூன்று பிரதான கட்சிகள் தேர்தலில் போட்டியிடுகின்றன. கூட்டமைப்பு மட்டும் ஒரேயொரு தலைமையாக இருப்பது பயனற்றது, என்னும் வாதத்தின் அடிப்படையிலேயே மாற்றுத் தரப்புக்கள் தேர்தலில் போட்டியிடுகின்றன. விக்கினேஸ்வரன் தலைமையிலான கட்சியும், கஜேந்திரகுமார் தலைமையிலான கட்சியும் சில ஆசனங்களை பெற்றால், பாராளுமன்றத்தில் கூட்டமைப்பிற்கு மாற்றான அரசியல் குரல்கள் இருக்கும்.

Tamil Leaders

ஆனால் இந்த இடத்தில் ஒரு கேள்வி எழலாம் – பாராளுமன்றத்தில் கூட்டமைப்பிற்கு மாற்றான தமிழ்த் தேசிய குரல்கள் இருப்பதால் தமிழ் மக்களுக்கு என்ன நன்மை? இது குழப்பங்களையல்லவா விளைவிக்கும்? தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடிக்கும் போது, இவ்வாறான கேள்விகளைத்தான் கூட்டமைப்பினர் முன்வைக்க முயற்சிப்பர். இந்த இடத்தில் இடைமறித்துக் கேட்க வேண்டிய கேள்வி – அவ்வாறாயின் கூட்டமைப்பினர் ஓரணியாக, 16 பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இருந்ததால் மக்களுக்கு என்ன நன்மை கிடைத்தது? ஏன் அவர்களால் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய அரசியல் வெற்றிகள் எதனையும் அடைய முடியவில்லை? ஆயுத விடுதலைப் போட்டம் இடம்பெற்ற காலத்தில் பல்வேறு தரப்புக்களாக பிரிந்திருப்பது, எதிரிகளுக்கு வாய்ப்பாக அமைந்துவிடும், எதிரிகள் ஒருவரை, மற்றவருக்கு எதிராக பயன்படுத்த முயற்சிப்பர் – எனவே அனைவரும் ஏதோவொரு வகையில் ஓரணியாக நிற்க வேண்டியது முக்கியம் – என்று கூறியதில் தவறில்லை. ஏனெனில் ஆயுதப் போராட்டம் நடைபெற்ற சூழல் முற்றிலும் வேறானது. ஆனால் ஜனநாயக அரசியலில் அனைவரும் ஓரணியாக நிற்பது என்பது சிக்கலானது இதனை கொழும்பு தனக்கு சாதகமாகப் பயன்படுத்துவதற்கான அதிக வாய்ப்புக்கள் உண்டு. கூட்டமைப்பின் கடந்த கால செயற்பாடுகளும், கூட்டமைப்பை கொழும்பு கையாண்ட விதமும் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

அதாவது, 16 ஆசனங்களை வைத்திருக்கும் கூட்டமைப்பின் தலைமை தவறான பாதையில் செல்லும் போது, தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்க எந்தவொரு மாற்றுத் தலைமையும் இருந்திருக்கவில்லை. உதாரணமாக, ஜக்கிய நாடுகள் சபையில் சிறிலங்கா அரசாங்கத்திற்கு மீண்டும் கால அவகாசம் கொடுக்க வேண்டுமென்று கூட்டமைப்பின் தலைமை முடிவெடுத்த போது, அது தவறானது என்று கூறுவதற்கு தமிழ் மக்கள் மத்தியில், வேறு மக்கள் பிரதிநிதிகள் இருந்திருக்கவில்லை. மக்களின் ஆதரவை பெற்றவர்கள் ஒரணியாக நிற்கின்ற போது, அவர் தவறு செய்தால் அல்லது தவறான பாதையில் சென்றால், அதனை எதிர்கொள்ளுவதற்கான மாற்று உபாயம் மக்கள் மத்தியில் இல்லை. கடந்த பத்து வருடகால தமிழ் பாராளுமன்ற அரசியல் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு.

இதனை எதிர்கொள்வதற்கான ஒரு உபாயம் தொடர்பில்தான் இந்தக் கட்டுரை அழுத்திக் கூற முயற்சிக்கின்றது. அதாவது, கூட்டமைப்பினர் பாராளுமன்றம் செல்கின்ற போது, அதற்கு மாற்றாக ஏனைய தமிழ்த் தேசிய அணியிலிருந்தும் ஆளுமைமிக்கவர்கள் பாராளுமன்றம் செல்ல வேண்டும். அதாவது வழமைபோல் கூட்டமைப்பு மட்டும் ஏகத் தலைமை என்னும் தோற்றத்தில் பாராளுமன்றம் செல்லக் கூடாது. இதன் மூலம், தமிழ்த் தேசிய அரசியல் பரப்பிற்குள் இருந்து கொண்டே, அதனை சிதைக்க அல்லது அதனை தமது சுயநல அரசியல் நிகழ்சிநிரலுக்காக பயன்படுத்த முயற்சிப்பர்களுக்கு கடிவாளமிட முடியும். இதனை நான் சமநிலைப்படு;த்தும் தமிழ்த் தேசிய உபாயம் என்று வரையறுப்பேன். இன்றைய சூழலில் இது தவிர்க்க முடியாத ஒன்றாகும். ஒரு வலுவான, அதே வேளை அனைவரையும் ஓரணிப்படுத்தும், தலைமையை வழங்கக் கூடிய தமிழ் பேராளுமை ஒன்று, தோன்றும் வரையில், இந்த சமநிலைப்படுத்தும் உபாயம் தமிழ் மக்களுக்கு அத்தியாவசியமான ஒன்றாகும். இது தொடர்பில் சிங்கள தேசத்திடமிருந்து, தமிழர்கள் கற்றுக் கொள்ள முடியும். சிங்கள சமூகத்தின் மத்தியில், அங்கு ஒரு தேசியவாத கட்சி, பிறிதொன்றின் மீது அழுத்தங்களை பிரயோகின்றது. அதன் ஊடாக, எவருமே சிங்கள தேசியவாத நிகழ்நிரலிருந்து வெளியேற முடியாதளவிற்கு சிறையிடப்படுகின்றனர். ஆனால் தமிழ்த் தேசிய பரப்பில் உபாயங்கள் சார்ந்த அரசியல் மிகவும் பலவீனமாக இருக்கின்றது.

இந்த அனுபவங்களிலிருந்து சிந்தித்தால், தமிழ்ச் சமூகம், நடைபெறவுள்ள தேர்தலை ஒரு தமிழ்த் தேசிய உபாயமாக கைக்கொள்ள முடியும். அதாவது, கடந்த இரண்டு தேர்தல்களோடு ஒப்பிட்டால் இம்முறை கூட்டமைப்பிற்கு மாற்றான தமிழ்த் தேசிய அணிகள் பலமாகவே இருக்கின்றன. குறிப்பாக, ஒப்பீட்டடிப்படையில் வடக்கில் போட்டிக்கான வாய்ப்புக்கள் அதிகமாக இருக்கின்றன. இந்தப் போட்டியை சரியாக பயன்படுத்திக் கொண்டால், கூட்டமைப்பிற்கு மாற்றான தமிழ்த் தேசிய அணிகள் வெற்றியை பெறமுடியும். கூட்டமைப்பு மீண்டும் அனைத்து ஆசனங்களையும் வெற்றிகொண்டால், அடுத்து வரப்போகும் ஜந்து வருடங்களுக்குள், தமிழசு கட்சியிலுள்ள சில தனிநபர்கள் தமிழ்த் தேசிய அரசியலின் வீரியத்தை மேலும் சிதைக்கக் கூடும். அவ்வாறு இடம்பெறுவதை தடுக்க வேண்டுமாயின், மாற்று தரப்பிலுள்ள சிலரும் பாராளுமன்றம் செல்ல வேண்டியது கட்டாயமானதாகும். உதாரணமாக விக்கினேஸ்வரன், அருந்தவபாலன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சிவசக்கி ஆனந்தன் மற்றும் சுரேஸ் போன்றவர்களை குறிப்பிடலாம். இது நடைபெறுமாக இருந்தால், மாற்று தமிழ்த் தேசிய அணியினர் சமநிலைப்படுத்தும் அழுத்த சக்திகளாக இருக்க முடியும். கூட்டமைப்பும் ஒரு கட்டத்திற்கு மேல் தவறான பாதையில் செல்லாது அல்லது அதனால் செல்ல முடியாதளவிற்கு மாற்று தமிழ்த் தேசிய அணியினர் அவர்களுக்கு கடிவாளமிட முடியும்.

ஆனால் தேர்தல் வெற்றி என்பது பலரும் கூறுவது போன்று, கொள்கை சார்ந்த ஒன்றல்ல – மாறாக, அது வியூகங்கள் சார்ந்த ஒன்று. ஒவ்வொரு கட்சியும் எவ்வாறு வியூகங்களை வகுக்கப் போகின்றது என்பதைப் பொறுத்தே, அவர்களின் வெற்றியும் அமையும். வியூகங்கள் சறுக்கினால் – வெற்றியும் சறுக்கலாம்.
 

http://www.samakalam.com/செய்திகள்/மாற்று-தமிழ்த்-தேசிய-தரப/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.