Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எக்காளம் ஊதிடுவோம்
எரிக்கோவை தகர்த்திடுவோம்
கர்த்தரின் நாமம் உயர்த்திடுவோம்
கல்வாரிக் கொடி ஏற்றுவோம்

1. கிதியோன்களே புறப்படுங்கள்
எதிரிகளை துரத்திடுங்கள்
தீபங்களை ஏந்திடுங்கள்
தெருத் தெருவாய் நுழைந்திடுங்கள்
2. சிம்சோன்களே எழும்பிடுங்கள்
வல்லமையால் நிரம்பிடுங்கள்
சீறிவரும் சிங்கங்களை
சிறைபிடித்து கிழித்திடுங்கள்
3. தெபோராக்களே விழித்திடுங்கள்
உபவாசித்து ஜெபித்திடுங்கள்
எஸ்தர்களே கூடிடுங்கள்
இரவுகளை பகலாக்குங்கள்
4. அதிகாலையில் காத்திருப்போம்
அபிஷேகத்தால் நிரம்பிடுவோம்
கழுகுபோல பெலனடைந்து
கர்த்தருக்காய் பறந்திடுவோம்

 

  • Replies 2.9k
  • Views 225.3k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • உடையார்
    உடையார்

  • Maruthankerny
    Maruthankerny

    இணைப்புக்கு நன்றி உடையாரண்ணா  இவரின் குரலில் சில இஸ்லாமிய பாடல்கள்  மனதையே கொள்ளை கொண்டுவிடும்  சில வருடங்கள் முன்பு ஒரு யூஸ்பி யில் பதிந்து வைத்திருந்தேன்  எங்கோ தவற விட்டுவிட்ட்டேன் ... ம

  • உடையார்
    உடையார்

    யேசுவே எனக்கு என்று யாருமேயில்லை   

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாக்யம்தான் லட்சுமி வாருமம்மா

முன்னோர்கள் செய்த
பாக்யம்தான் லட்சுமி வாருமம்மா

என் அன்னையே
சௌபாக்யம்தான் லட்சுமி வாருமம்மா

என் இல்லமே
சௌபாக்யம்தான் லட்சுமி வாருமம்மா

நித்தில கொலுசுகள் கட்டியம் படிக்க

நித்தில கொலுசுகள் கட்டியம் படிக்க
உத்தமி வருகையை மெட்டிகள் ஒலிக்க

நித்திய சுமங்கலி பூஜையில் அழைக்க
மத்துறு தயிரினை வெண்ணையாய் ஜொலிக்க

கனக வ்ரிக்-ஷமாய் தன மழை தருக
மனைகள் எங்கிலும் திரவியம் பெறுக

தினகரன் கோட்டி உன் மேனியில் உருக
ஜனகராஜன் திரு கண்மணி வருக

சங்கணினி முதல் நவநிதி தாராய்
கங்ஙனம் கையால் மங்களம் செய்தல்

குங்கும பூவாய் மங்கைய பாவை
வெங்கட்டரமணனின் பூங்கொடி வாராய்
 
அக்திகள் சொரியும், மண்ணையில் ஐஸ்வர்யம்
நித்த மஹாச்சவம், நித்ய மங்களம்

சக்திக் ஏத்தபடி சாது போஜனம்
சாப்பிட்டு தருவாய் அக்க்ஷதை சீதனம்

சர்க்கரை பாயசம் சுமங்கலி அருந்த
சுக்கிரவார பூஜையில் இருந்து

அக்கறை யோடு சந்தனம் குழைத்து
சாற்றிட புரந்தர விதலனை அழைத்து

பாக்கியம் தான் லட்சுமி வாரமும் அம்மா...
என் இல்லமே, சௌபாக்கியம் தான் லட்சுமி வாரமும் அம்மா...

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குழலாக பிறப்பேனோ கண்ணா
உந்தன் விரல் தீண்ட கனி வாயில் இசை பாடுவேன்
 மயிலாக பிறப்பேனோ கண்ணா 
உந்தன் மயிர்க்காலில் மயிலிறகாய் நடமாடுவேன்..
குயிலாக பிறப்பேனோ கண்ணா
 உந்தன் குழல் ஓசைக்கிசைவாக தினம் கூவுவேன் 
குழல் ஏதும் எனக்கில்லை கண்ணா 
எந்த பிறவியிலும் உன்னை எண்ணி உயிர் வாழ்வேன்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திருநீர் என்னை காக்கும் வடிவேலவா 
வடிவேல் எந்தன் துனையே வேல்முருகா 

வடிவேல் என்னை காக்கும் வடிவேலவா 
உந்தன் நாமம் என்னை நாடும் வேல்முருகா 

ஓம் முருகா ஓம் முருகா 
சரவண பவ குக வடிவேலா 

திருநீர் என்னை காக்கும் வடிவேலவா 
வடிவேல் எந்தன் துனையே வேல்முருகா 

சிவபெருமான் உந்தன் தந்தையல்லவோ 
பார்வதி அம்மா உன் தாயல்லவோ 
ஸ்ரீ கணேசன் உந்தன் அண்ணல்லவோ 
என்று பாடும் இந்த உயிர் உந்தன் பிள்ளை அல்லவோ  

ஓம் முருகா ஓம் முருகா 
சரவண பவ குக வடிவேலா 

திருநீர் என்னை காக்கும் வடிவேலவா 
வடிவேல் எந்தன் துனையே வேல்முருகா 

கண்கள் உன்னை தேடும் வடிவேலவா 
எந்தன் கண்ணீர் உந்தன் அபிஷேகம் வேல் முருகா 

ஓம் முருகா ஓம் முருகா 
சரவண பவ குக வடிவேலா 

திருநீர் என்னை காக்கும் வடிவேலவா 
வடிவேல் எந்தன் துனையே வேல்முருகா 

வடிவேல் என்னை காக்கும் வடிவேலவா 
உந்தன் நாமம் என்னை நாடும் வேல்முருகா 

ஓம் முருகா ஓம் முருகா 
சரவண பவ குக வடிவேலா

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எட்டுக்குடி வேலோனுக்கு ஆடும் காவடி சேவல் காவடி.. பாடல் (அரோகரா)

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அல்லா ஒருவனை இதயம் மகிழ்ந்தே போற்றிடுவோம்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இடைவிடா நன்றி உமக்குத்தான்
இணையில்லா தேவன் உமக்குத்தான்

1. என்ன நடந்தாலும் நன்றி ஐயா
யார் கைவிட்டாலும் நன்றி ஐயா
நன்றி… நன்றி…

2. தேடி வந்தீரே நன்றி ஐயா
தெரிந்துகொண்டீரே நன்றி ஐயா

3. நிம்மதி தந்தீரே நன்றி ஐயா
நிரந்தரமானீரே நன்றி ஐயா

4. என்னைக் கண்டீரே நன்றி ஐயா
கண்ணீர் துடைத்தீரே நன்றி ஐயா

5. நீதி தேவனே நன்றி ஐயா
வெற்றி வேந்தனே நன்றி ஐயா

6. அநாதி தேவனே நன்றி ஐயா
அரசாளும் தெய்வமே நன்றி ஐயா

7. நித்திய ராஜாவே நன்றி ஐயா
சத்திய தீபமே நன்றி ஐயா

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சின்னஞ்சிறு குழந்தை ஒன்று கனவில் வந்தது அதன்
சிங்காரா புன்னகையால் என்னை கவர்ந்தது

வெற்றி தரும் அதன் கையில் வேலிருந்தது
வில்லும் அதன் விழி எந்தன் மேலிருந்தது
நெற்றி திருநீறு பாலை போலிருந்தது
நீலமயில் மீதிலதன் காலிருந்தது | |

வண்ணமணி மார்பில் முத்து மாலை கிடந்தது 
வந்த கிண்கிணி ஓசை காதில் தொடர்ந்தது 
பொன்னான அதன் முகமோ பூவை வென்றது
போற்றும் எந்தம் பெயர் எதுவோ முருகன் என்றது | |

கண்களை நான் திறந்தேன் காட்சி மறைந்தது
கண்ட அந்த காட்சி அதன் ஆட்சி விரைந்தது
மண்ணுறங்கும் எனினும் எந்தன்  மனமுறங்கவில்லை
மயக்கும் அந்த முகத்தை தவிர வேறெதுவும் தெரியவில்லை

சின்னஞ்சிறு குழந்தை ஒன்று கனவில் வந்தது அதன்
சிங்காரா புன்னகையால் என்னை கவர்ந்தது | |
கனவில் வந்தது முருகன்...

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கோகுல கண்ணன் தாலாட்டு

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையார் சுழி போட்டு

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மஹாலக்ஷ்மி வருவாயே

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இருமுடிக்கட்டு சபரிமலைக்கு

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தீன் வளர்க்கும்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீ ஜெயிக்க தானே ஒப்புக்கொடுத்தேன்
கல்வாரி சிலுவையில் பலியானேன்(2)

     என் பிரியமே நீ ஜெயங்கொள்ள
     சிலுவையில் வெற்றி சிறந்தேன்(2)

ஆதி அன்பை விட்டு
போனதும் ஏனோ?
என் மேல் கொண்ட பாசம்
குறைந்ததும் ஏனோ? (2)
விழுந்த நிலையை நினைத்து
ஆதி நிலைக்கு ஓடி வா!
ஜீவ கனியை புசித்து
நித்தம் என்னோடு வாழ வா! - என் பிரியமே


  அனலாய் நின்ற நீ
  குளிர்ந்தது ஏனோ?
  பாடுகள் வந்ததும்
  உடைந்தது ஏனோ? (2)
  சோதனையை  நீ சகித்து
  உண்மையாய் வாழ நீயும் வா
  ஓட்டத்தை ஓடி முடித்து
  ஜீவ கிரீடம்  சுட வா ! - என் பிரியமே

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கண்ணன் பிறந்தான்-எங்கள்
கண்ணன் பிறந்தான்-இந்தக்
காற்றதை யெட்டுத் திசையிலுங் கூறிடும்.

தின்ன முடையான்-மணி
வண்ண முடையான்-உயர்
தேவர் தலைவன் புவிமிசைத் தோன்றினன்

பண்ணை யிசைப்பீர்-நெஞ்சிற்
புண்ணை யொரிப்பீர்-இந்தப்
பாரினிலே துயர் நீங்கிடும் என்றிதை

எண்ணிடைக் கொள்வீர்-நன்கு
கண்ணை விழிப்பீர்-இனி
ஏதுங் குறைவில்லை;வேதம் துணையுண்டு,
                                                                                                 (கண்ணன் பிறந்தான்)

அக்கினி வந்தான்-அவன்
திக்கை வளைத்தான்-புவி
யாரிருட் பொய்மைக் கலியை மடித்தனன்

துக்கங் கெடுத்தான்-சுரர்
ஒக்கலும் வந்தார்-சுடர்ச்
சூரியன்,இந்திரன்,வாயு,மருத்துக்கள்

மிக்க திரளாய்-சுரர்
இக்கணந் தன்னில்-இங்கு
மேவி நிறைந்தனர்;பாவி யசுரர்கள்

பொக்கென வீழ்ந்தார்,-உயிர்
கக்கி முடிந்தார்-கடல்
போல ஒலிக்குது வேதம் புவிமிசை.
                                                                                              (கண்ணன் பிறந்தான்)

சங்கரன் வந்தான்-இங்கு
மங்கல மென்றான்-நல்ல
சந்திரன் வந்தின் னமுதைப் பொழிந்தனன்

பங்க மொன் றில்லை-ஒளி
மங்குவ தில்லை-இந்தப்
பாரின்கண் முன்பு வானத்திலே நின்று

கங்கையும் வந்தாள்-கலை
மங்கையும் வந்தாள்-இன்பக்
காளி பராசக்தி அன்புட னெய்தினள்

செங்கம லத்தாள்-எழில்
பொங்கு முகத்தாள்-திருத்
தேவியும் வந்து சிறப்புற நின்றனள்.
                                                                                                 (கண்ணன் பிறந்தான்)

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

    அருண மலை குரு ரமணா
    கருணை அருள் விழி வதனா
    அருண மலை குரு ரமணா
    கருணை அருள் விழி வதனா
    மனது ஒன்று இருக்கிறதே
    எனது என்று தவிக்கிறதே
    மனது ஒன்று இருக்கிறதே
    எனது என்று தவிக்கிறதே
    எனது மனம் அழிந்திடவே
    அருள் புரிவாய் அருள் புரிவாய்

    அருண மலை குரு ரமணா
    கருணை அருள் விழி வதனா
    அருண மலை குரு ரமணா
    கருணை அருள் விழி வதனா

    இசை        சரணம் - 1

    தனித்திருக்கும் தாகம் கொண்டேன்
    தயவும் உனக்கு இல்லையோ
    பனித்த விழி நீரும் எந்தன்
    நிலையைக் கூறவில்லையோ
    இனியும் காலம் தாழ்த்தாமல்
    கனிவாம் பார்வை தர வேண்டும்
    பெரிதாம் பிறவி நோய் தீர்த்து
    இனி பிறவா வரமும் பெற வேண்டும்
    அந்தம் கடந்த ஆதியே
    உனைச் சொந்தம் என்று பாடினேன்
    அச்சம் தோற்றும் பூமியில்
    வினை மிச்சம் தொலைய நாடினேன்
    கோடி கோடி அடியவரில்
    நான் தான் கடைக் கோடி அய்யா

    அருண மலை குரு ரமணா
    கருணை அருள் விழி வதனா
    மனது ஒன்று இருக்கிறதே
    எனது என்று தவிக்கிறதே
    எனது மனம் அழிந்திடவே
    அருள் புரிவாய் அருள் புரிவாய்

    அருண மலை குரு ரமணா
    கருணை அருள் விழி வதனா
    அருண மலை குரு ரமணா
    கருணை அருள் விழி வதனா

    இசை        சரணம் - 2

    உன் பெயரை ஓதும் யாரும்
    உயர்ந்த ஓர் பிறவியே
    தம் துயரைத் தீர்க்க எமக்கு
    கிடைத்த ஓர் கருவியே
    உன்னை தொழுதல் பெரும் பேறு
    செய்வேன் என்ன கைமாறு
    அய்யன் அருளைப் பெறுமாறு
    செய்தாய் அது என் அருட்பேறு
    உன் கடனைத் தீர்க்கும் வழி ஒன்றும்
    நான் காணா நிலையும் ஆகுமோ
    என் உடலை தீபத் திரி ஆக்கி
    அதை எரித்தால் கூடப் போதுமோ
    என் பிதற்றல் பிள்ளை மொழி அல்ல
    ரமணன் விளக்கின் ஒளியன்றோ

    அருண மலை குரு ரமணா
    கருணை அருள் விழி வதனா
    அருண மலை குரு ரமணா
    கருணை அருள் விழி வதனா
    மனது ஒன்று இருக்கிறதே
    எனது என்று தவிக்கிறதே
    எனது மனம் அழிந்திடவே
    அருள் புரிவாய் அருள் புரிவாய்

    அருண மலை குரு ரமணா
    கருணை அருள் விழி வதனா
    அருண மலை குரு ரமணா
    கருணை அருள் விழி வதனா

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சின்ன பயல் ஒருவன் செய்த செயல் என்னை கலக்கிடுதே

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இருளில் நிலவாக பிறந்தார்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை செய்த செயல்களுக்காக
இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம்

1.  உவர் நிலமாக இருந்த என்னை
விளைநிலமாக மாற்றிய உம்மை
அலைகடல் அலைந்து ஓய்கின்ற வரையில்
நாவினால் புகழ்ந்து பாடுவேன் நன்றி

2. தனி மரமாக இருந்த என்னை
கனி மரமாக மாற்றிய உம்மை
திசைகளும் கோள்களும் அசைகின்ற வரையில்
இன்னிசை முழங்கியே பாடுவேன் நன்றி

3. உம் சித்தம் செய்திட அழைத்தவர் நீரே
சொந்தமாய் என்னையே ஏற்றுக் கொள்வீரே
சோர்விலும் தாழ்விலும் சோதனை யாவிலும்
தாங்கினீர் தயவாய் பாடுவேன் நன்றி

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என் உள்ளம் ஏங்குதே உம் அன்பிற்காகவே
என்றென்றும் ஏங்குதே உம் வாசம் வேண்டியே
என்றென்றும் பாராமல் (2)
எப்போதும் நெஞ்சில் உம்மை துதிப்பேன்
காற்றோரம் காற்றாகி உம்மை தொடுவேன்
ஆனந்த பூவாகி உம் காலில் கிடப்பேன்
இன்பங்கள் பெருகி பாசத்தை பொழிவீர்
எப்போதும் நெஞ்சில் உம்மை துதிப்பேன்

உம் அன்பை பார்க்கிலும்
வேறொன்றும் இல்லையே ஓ...
என் இயேசுவே...
ஒருநாளும் மறவேனே
என் நேசர் நீர்தானே ஓ...
என்றென்றுமே
நான் உம்மை மறவேன்

உம் சத்தம் கேட்டுதான் என் நெஞ்சம் குளிரும்
உள்ளாடும் எண்ணங்கள் என் கண்ணில் தெரியும்
சிற்பங்கள் சிரிக்கும் சிந்தனை சிறக்கும்
உன் முகம் பார்த்தால் பூமி நிலைக்கும்
அதிகாலை நேரத்தில் என் கண்கள் தவிக்கும்
உம் முகம் பார்த்தால் என் கண்கள் குளிரும்
இன்பங்கள் தருவீர் பாசத்தை பொழிவீர்
எப்போதும் நெஞ்சில் உம்மை துதிப்பேன்

உம் அன்பை பார்க்கிலும்
வேறொன்றும் இல்லையே ஓ...
என் இயேசுவே...
ஒருநாளும் மறவேனே
என் நேசர் நீர்தானே ஓ...
என்றென்றுமே
நான் உம்மை மறவேன்

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிவபுராணம் - திருவாசகம்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பண் -  நட்டபாடை                
திருச்சிற்றம்பலம்        
        
    தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடிக்       
    காடுடையசுட லைப்பொடிபூசிஎன்1 உள்ளங்கவர் கள்வன்        
    ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்தஅருள் செய்த         
    பீடுடையபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தொந்தி சரிய மயிரே வெளிறநிரை
     தந்த மசைய முதுகே வளையஇதழ்
          தொங்க வொருகை தடிமேல் வரமகளிர் ...... நகையாடி

தொண்டு கிழவ னிவனா ரெனஇருமல்
     கிண்கி ணெனமு னுரையே குழறவிழி
          துஞ்சு குருடு படவே செவிடுபடு ...... செவியாகி

வந்த பிணியு மதிலே மிடையுமொரு
     பண்டி தனுமெ யுறுவே தனையுமிள
          மைந்த ருடைமை கடனே தெனமுடுக ...... துயர்மேவி

மங்கை யழுது விழவே யமபடர்கள்
     நின்று சருவ மலமே யொழுகவுயிர்
          மங்கு பொழுது கடிதே மயிலின்மிசை ...... வரவேணும்

எந்தை வருக ரகுநா யகவருக
     மைந்த வருக மகனே யினிவருக
          என்கண் வருக எனதா ருயிர்வருக ...... அபிராம

இங்கு வருக அரசே வருகமுலை
     யுண்க வருக மலர்சூ டிடவருக
          என்று பரிவி னொடுகோ சலைபுகல ...... வருமாயன்

சிந்தை மகிழு மருகா குறவரிள
     வஞ்சி மருவு மழகா அமரர்சிறை
          சிந்த அசுரர் கிளைவே ரொடுமடிய ...... அடுதீரா

திங்க ளரவு நதிசூ டியபரமர்
     தந்த குமர அலையே கரைபொருத
          செந்தி னகரி லினிதே மருவிவளர் ...... பெருமாளே 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தாயே கருமாரி

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தும்பிக்கை ஆண்டவனே 

 

Edited by உடையார்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.