Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தூத்துக்குடியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 4 பேர் உயிரிழப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தூத்துக்குடியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 4 பேர் உயிரிழப்பு

தூத்துக்குடியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 4 பேர்  உயிரிழப்பு

 

தூத்துக்குடியில் கழிவுநீர் தொட்டியில் சுத்தம் செய்தபோது விஷ வாயு தாக்கி 4 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பதிவு: ஜூலை 02,  2020 15:36 PM
தூத்துக்குடி,
 
தூத்துக்குடி செக்காரக்குடி பகுதியில் இன்று கழிவுநீர் தொட்டியில் சுத்தம் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். கழிவுகளை அகற்றிக்கொண்டிருந்தபோது தொட்டிக்குள் இருந்து விஷ வாயு வெளிப்பட்டது. இதனை சுவாசித்த தொழிலாளர்கள் 4 பேர் அடுத்தடுத்து மயங்கி விழுந்து உயிரிழந்தனர்.
 
உயிரிழந்தவர்களின் 4 பேரின் உடல்களும்  பிரேத பரிசோதனைக்கு தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. உயிரிழந்த 4 பேரும் நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளன.
 
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகினறனர். 
 

வெள்ளவத்தையிலும் இப்படி நடத்தது Moor's road இல்,  மலையக  இருவர் பலி. Methon வாயுதான் காரணம், பாதுகாப்பு கவசங்கள் அணிவது காட்டாயப்படுதனும் இப்படிப்பட்ட வேலைகளுக்கு

  • கருத்துக்கள உறவுகள்

அப்துல் கலாம் கண்ட கனவு,  2020 ல் இந்திய வலசு மன்னிக்கவும் வல்லரசு 😂😂

இந்தச் சீனன் இந்தியனை அடித்துக் கொல்லவே தேவையில்லை. சீனனின்ர சாக்கடையை இந்தியாவின் பக்கம் திருப்பி விட்டாலே போதும் இந்தியன் குளோஸ் 😏😏

  • கருத்துக்கள உறவுகள்

தூத்துக்குடியில் விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

தூத்துக்குடி அருகே செக்காரக்குடியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி உயிரிழந்த 4 தொழிலாளர்களின் உடல்களை வாங்க மறுத்து திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி அருகேயுள்ள செக்காரக்குடி வடக்கு தெருவை சேர்ந்த சோமசுந்தரம் வீட்டில் உள்ள கழிவுநீர் தொட்டியை திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரைச் சேர்ந்த இக்கிராஜா (17), பாலா (20), பாண்டி (28) மற்றும் ஆலங்குளத்தை சேர்ந்த தினேஷ் (20) ஆகிய 4 பேரும் நேற்று முன்தினம் சுத்தம் செய்தனர்.

அப்போது விஷவாயு தாக்கியதில் அவர்கள் 4 பேரும் உயிரிழந்தனர். இது குறித்து தட்டப்பாறை போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கிறார்கள். உயிரிழந்த 4 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது.

இந்நிலையில் 4 பேரின் உடல்களையும் வாங்க மறுத்து அவர்களது உறவினர்கள் இன்று காலையிலிருந்து மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் அதிகாரிகளும், போலீஸாரும் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து உடல்களைப் பெற்றுக்கொள்ள உறவினர்கள் நேற்று மாலையில் ஒப்புக்கொண்டனர்.

https://www.hindutamil.in/news/tamilnadu/562548-tutcorin-family-protest-not-getting-the-bodies-of-4-who-died-while-cleaning-sewage-tank-1.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.