Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் குறித்து விசேட அறிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் குறித்து விசேட அறிவிப்பு

 

நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் எதிர்வரும்-25 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. 

இந்நிலையில் உற்சவம் இடம்பெறுமென்பதை ஆலய நிர்வாகத்தினர் உறுதிப்படுத்தியுள்ளதாக யாழ். மாநகரசபையின் ஆணையாளர் த. ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

யாழ். மாநகரசபையின் அமர்வு நேற்று வியாழக்கிழமை(09) மாநகர சபையின் பதில் முதல்வர் து. ஈசன் தலைமையில் இடம்பெற்ற போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஆலயத்திற்கு உள்ளே 50 பேர் மாத்திரம் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா நோய்த் தொற்றினைத் தொடர்ந்து தற்போதுள்ள சுகாதார நடைமுறைகளுக்கமைய எமது சுகாதார வைத்திய அதிகாரி சில விடயங்களைத் தெளிவாகத் தெரியப்படுத்தியுள்ளார்.

அந்தவகையில் இம்முறை மஹோற்சவ காலப் பகுதியில் தூக்குக்காவடி, காவடி, அங்கப் பிரதட்சணை, அன்னதானங்கள், தண்ணீர்ப் பந்தல்கள் போன்ற செயற்பாடுகளை உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி மேற்கொள்ள முடியாதென்பதால் அவற்றிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

ஆலயத்திற்குள் இடம்பெறும் உற்சவ நிகழ்வுகள் தொடர்பில் ஆலய நிர்வாகம் கவனம் செலுத்தும். எனினும், உற்சவகாலத்தில் ஆலயத்திற்கு வெளியே இடம்பெறும் செயற்பாடுகளுக்கு யாழ். மாநகர சபையும், பாதுகாப்புப் பிரிவினருமே பொறுப்பாளிகள்.

தற்போதுள்ள சுகாதார நடைமுறைகளுக்கமைய இதுதான் நடைமுறை எனில் அதனைப் பின்பற்றுவதற்குத் தயாரென ஆலய நிர்வாகத்தினர் எமக்குத் தெரியப்படுத்தியுள்ளனர்.

ஆகவே, சுகாதார நடைமுறைகளை மீறுவதற்கான அதிகாரம் எங்களிடமில்லை. தற்போதுள்ள சூழலில் சுகாதார நடைமுறைகளை நாங்கள் அனைவரும் பின்பற்றித் தான் ஆக வேண்டும்.

ஆலய உற்சவம் ஆரம்பமாவதற்கு இன்னும் இரண்டு வாரங்கள் உள்ள நிலையில் குறித்த காலப் பகுதிக்குள் ஏதாவது தளர்வுகள் ஏற்படும் பட்சத்தில் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு நாம் தயாராகிவிருக்கின்றோம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

https://www.virakesari.lk/article/85573

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, கிருபன் said:

யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் குறித்து விசேட அறிவிப்பு

 

நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் எதிர்வரும்-25 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. 

இந்நிலையில் உற்சவம் இடம்பெறுமென்பதை ஆலய நிர்வாகத்தினர் உறுதிப்படுத்தியுள்ளதாக யாழ். மாநகரசபையின் ஆணையாளர் த. ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

யாழ். மாநகரசபையின் அமர்வு நேற்று வியாழக்கிழமை(09) மாநகர சபையின் பதில் முதல்வர் து. ஈசன் தலைமையில் இடம்பெற்ற போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஆலயத்திற்கு உள்ளே 50 பேர் மாத்திரம் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா நோய்த் தொற்றினைத் தொடர்ந்து தற்போதுள்ள சுகாதார நடைமுறைகளுக்கமைய எமது சுகாதார வைத்திய அதிகாரி சில விடயங்களைத் தெளிவாகத் தெரியப்படுத்தியுள்ளார்.

அந்தவகையில் இம்முறை மஹோற்சவ காலப் பகுதியில் தூக்குக்காவடி, காவடி, அங்கப் பிரதட்சணை, அன்னதானங்கள், தண்ணீர்ப் பந்தல்கள் போன்ற செயற்பாடுகளை உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி மேற்கொள்ள முடியாதென்பதால் அவற்றிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

ஆலயத்திற்குள் இடம்பெறும் உற்சவ நிகழ்வுகள் தொடர்பில் ஆலய நிர்வாகம் கவனம் செலுத்தும். எனினும், உற்சவகாலத்தில் ஆலயத்திற்கு வெளியே இடம்பெறும் செயற்பாடுகளுக்கு யாழ். மாநகர சபையும், பாதுகாப்புப் பிரிவினருமே பொறுப்பாளிகள்.

தற்போதுள்ள சுகாதார நடைமுறைகளுக்கமைய இதுதான் நடைமுறை எனில் அதனைப் பின்பற்றுவதற்குத் தயாரென ஆலய நிர்வாகத்தினர் எமக்குத் தெரியப்படுத்தியுள்ளனர்.

ஆகவே, சுகாதார நடைமுறைகளை மீறுவதற்கான அதிகாரம் எங்களிடமில்லை. தற்போதுள்ள சூழலில் சுகாதார நடைமுறைகளை நாங்கள் அனைவரும் பின்பற்றித் தான் ஆக வேண்டும்.

ஆலய உற்சவம் ஆரம்பமாவதற்கு இன்னும் இரண்டு வாரங்கள் உள்ள நிலையில் குறித்த காலப் பகுதிக்குள் ஏதாவது தளர்வுகள் ஏற்படும் பட்சத்தில் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு நாம் தயாராகிவிருக்கின்றோம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நல்லூரின்,  நல்லதொரு... முன்னேற்பாடான அறிவிப்பு.
இதனை... கடைப் பிடிக்க வேண்டியது, எமது கடமை.

ஆலயத்திற்கு வெளியில்... கூட்டம் கூடி... 
இதுவரை... கொரோனாவால், சாகாத யாழ்ப்பாண  தமிழனை,
கொன்று போடாதீர்கள், என மன்றாட்டமாக... வேண்டுகின்றேன். 

நாம்... இழந்த உயிர் இழப்புகள்...
ஈழப் போரில் தொடங்கி,  "ரிப்பர் லொறி" வாகன விபத்து  என்று...
சராசரியாக... ஒரு நாளைக்கு, 15 தமிழர்கள், இறந்து கொண்டு இருக்கின்றார்கள்.
என்பதனை கவனித்து.... வீட்டில், இருந்து... நல்லூர் கந்தனை.. கும்பிடுங்கள்.

கொரோனா... வந்திட்டுது, என்றால்...
எல்லோரும்... கூண்டோடு, கயிலாயம்... என்பதை மறவாதீர்கள். 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர் மஹோற்சவம் குறித்த அறிவித்தல்

nallor.jpg?189db0&189db0

யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் சுகாதார நடைமுறைகளுக்கு அமைய எதிர்வரும் 25ம் திகதி கொடி ஏற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். மாநகர சபையின் பதில் முதல்வர் து.ஈசன் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும்,

“இக்கட்டான சூழ்நிலையிலும் உற்சவம் இடம்பெறுமென்பதை ஆலய நிர்வாகத்தினர் உறுதிப்படுத்தியுள்ள நிலையில் தற்போதுள்ள சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதற்கு தயாரென ஆலய நிர்வாகத்தினர் தெரியப்படுத்தியுள்ளனர்.

பரிந்துரைக்கப்பட்ட சுகாதார நடைமுறைகளாக, ஆலயத்திற்கு உள்ளே 50 பேர் மாத்திரம் செல்ல முடியும். மஹோற்சவ காலப் பகுதியில் தூக்குக்காவடி, காவடி, அங்கப் பிரதட்சணை, அன்னதானங்கள், தண்ணீர்ப் பந்தல்கள் போன்றவற்றிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

ஆலயத்திற்குள் இடம்பெறும் உற்சவ நிகழ்வுகள் தொடர்பில் ஆலய நிர்வாகம் கவனம் செலுத்தும். எனினும் உற்சவ காலத்தில் ஆலயத்திற்கு வெளியே இடம்பெறும் செயற்பாடுகளுக்கு யாழ். மாநகர சபையும், பாதுகாப்புப் பிரிவினருமே பொறுப்பாளிகள்.

ஆகவே, சுகாதார நடைமுறைகளை மீறுவதற்கான அதிகாரம் எங்களிடமில்லை. தற்போதுள்ள சூழலில் சுகாதார நடைமுறைகளை நாங்கள் அனைவரும் பின்பற்றித் தான் ஆக வேண்டும்.” – என்றார்.

https://newuthayan.com/யாழ்-நல்லூர்-வருடாந்த-மஹ/

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.