Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எமது ஆயுதக்கொள்வனவை கட்டுப்படுத்த இந்தியாவுக்கு உரிமை இல்லை: அமைச்சர் ஜெயரட்ன

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சனிக்கிழமை 2 யூன் 2007இ 07:41 ஈழம்[.அருணாசலம்]

எமது ஆயுதக்கொள்வனவை கட்டுப்படுத்த இந்தியாவுக்கு உரிமை இல்லை: அமைச்சர் ஜெயரட்ன

இந்திய தேசிய பாதுகாப்புத்துறை ஆலோசகரான எம்.கே.நாராயணனின் கருத்து சிறிலங்காவின் அரசியல் கட்சிகள் தொடக்கம் படை அதிகாரிகள் வரை கடுமையான சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

எங்கு ஆயுதம் வாங்க வேண்டும் என்ற முடிவை எமது அரசே எடுக்கும் இந்தியா அல்ல என்று சிறிலங்கா அரசாங்கத்தின் அமைச்சரும்இ சுதந்திரக்கட்சியின் வலிமையான உறுப்பினருமான டி.எம்.ஜெயரட்ன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

தனது தேவைகளை நிறைவு செய்யக்கூடிய சரியான ஆயுதங்களையே நாம் கொள்வனவு செய்ய வேண்டும். எனவே யார் அதனை சிறிலங்காவுக்கு வழங்குவார்கள் என்பதனையே அரசு பார்க்கவேண்டும்.

இந்தியா எமது நெருங்கிய நண்பன். எனவே எமக்கு இடையிலான உறவுகளை தக்கவைப்பது முக்கியமானது. ஆனால் எமக்கு தேவையான ஆயுதங்களை எமது படையினரின் தேவைகளை நிறைவு செய்யக்கூடிய நாடுகளிடம் இருந்தே நாம் பெறுவோம். அதற்கான முடிவை சிறிலங்கா அரசே எடுக்கும் என்றார் அவர்.

நன்றி

புதினம்

தனது குப்பைகளை வாங்க இந்தியா சிறிலங்காவை நிர்ப்பந்திக்கின்றது: கொழும்பு ஊடகங்கள்

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான எம்.கே.நாராயணன் அண்மையில் தான்தோன்றித்தனமாக வெளியிட்ட கருத்துக்கள் உலகத் தமிழ் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை தோற்றுவித்துள்ளதுடன் சிங்கள அரசியல் கட்சிகள், படை அதிகாரிகள், ஊடகங்கள் மத்தியிலும் பெரும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தனது குப்பைகளை வாங்க இந்தியா அரசு, சிறிலங்காவை நிர்ப்பந்திக்கின்றது என கொழும்பு ஊடகம் ஒன்று தனது ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவித்துள்ளது.

எம்.கே.நாராயணனின் கருத்து தொடர்பாக கேலிச்சித்திரம் ஒன்றை வரைந்த டெய்லி மிரர் நாளேடு 'இந்தியாவால் தனது குப்பைகளை வாங்க சிறிலங்காவை நிர்ப்பந்திக்க முடியும்' என்ற வாசகத்தின் கீழ் ஒரு குப்பை நிரம்பிய கூடையின் முன் நாராயணன் நிற்பது போன்ற படத்தை வரைந்துள்ளது.

இந்தியாவால் முன்னர் வழங்கப்பட்ட இரு பரிமாண ராடார்கள் விடுதலைப் புலிகளின் வானூர்திகளை கண்டறியத் தவறிவிட்டது என்ற குற்றச்சாட்டு முன்னர் எழுந்ததும் குறிப்பிடத்தக்கது.

தி ஐலன்ட் நாளேடு தெரிவித்துள்ளதாவது:

நாம் மிகவும் சக்தி வாய்ந்தவர்கள். எனவே சீனா, பாகிஸ்தானிடம் சிறிலங்கா ஆயுதங்களை வாங்கக்கூடாது என்ற எம்.கே.நாராயணனின் கருத்து ஹிட்லரின் நாசி அரசின் தோற்றப்பாட்டை கொடுத்துள்ளது.

இந்தியா தாக்குதல் ஆயுதங்களை வழங்காதாம், பாதுகாப்பு ஆயுதங்களை வழங்குமாம் என்ற கருத்து கற்களையும், துடைப்பம் கட்டைகளையும் கொண்டா விடுதலைப் புலிகளுடன் மோதுவது என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

இந்தியாவின் கருத்தை சிறிலங்கா பின்பற்றாது விட்டால் இந்தியா சில குழப்பமான வேலைகளில் ஈடுபடலாம். அதாவது விடுதலைப் புலிகளின் மீதான தனது கட்டுப்பாடுகளை மென்மையாக்கலாம் என அது தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் முன்னாள் இணை வெளிவிவகார செயலாளரும், வெளிவிவகார ஆய்வாளருமான கே.கொடகே தெரிவித்துள்ளதாவது:

சிறிலங்காவின் பாதுகாப்பு தேவைகளை இந்தியா நாயைக் கையாளும் எசமான் போல கையாள்கின்றது. சிறிலங்கா பொதுச் சேவைகள் பொருட்கள் வழங்கும் ஒப்பந்தத்தை அமெரிக்காவுடன் செய்துள்ளது. அது சீனாவுடன் படைத்துறை ஒத்திகைகளையும் முன்னர் மேற்கொண்டிருந்தது என்றார்.

இது தொடர்பில் டெய்லிமிரர் நாளேடு தெரிவித்துள்ளதாவது:

பிராந்திய காவல்துறை வீரர் போன்று செயற்பட இந்தியா முயல்கின்றது. ஒரு சுதந்திர நாடு ஒன்றின் மீதான மன்மோகன் சிங்கின் அணுகுமுறை ஜனநாயகமற்றது. எம்.கே.நாராயணனின் வாதத்தின் அடிப்படையில் இந்தியா செயற்பட நாம் அனுமதிக்க முடியாது என தெரிவித்துள்ளது.

http://www.eelampage.com/

ஒரே குழப்பமா இருக்கிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.