Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய தூதரக அதிகாரிகள் தமிழ் அரசியல்வாதிகளை சந்தித்தது ஏன்? பேசப்பட்ட விடயங்கள் மறைக்கப்படுவது ஏன்? சிங்கள அரசியல்வாதிகள் போர்க்கொடி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய தூதரக அதிகாரிகள் தமிழ் அரசியல்வாதிகளை சந்தித்தது ஏன்? பேசப்பட்ட விடயங்கள் மறைக்கப்படுவது ஏன்? சிங்கள அரசியல்வாதிகள் போர்க்கொடி

July 21, 2020

வடக்குகிழக்கு அரசியல்வாதிகளை இந்திய தூதரகத்தை சேர்ந்தவர்கள் சந்தித்துள்ளமை குறித்து சிங்கள அரசியல்வாதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஆங்கில ஊடகமொன்று இதனை தெரிவித்துள்ளது.
அதில்மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

indian-high-commisson.jpg

 

திங்கட்கிழமை இந்திய தூதரகத்தை சேர்ந்தபிரதிநிதிகள் குழுவொன்று கிழக்கு மாகாணத்துக்கு விஜயம் மேற்கொண்டு அரசியல் தலைவர்களுடன் சந்திப்புகளை மேற்கொண்டுள்ளது.
எனினும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை திருகோணமலையில் உள்ள வீட்டில் மூடிய கதவுகளின் பின்னால் இந்திய தூதரக அதிகாரிகள் சந்தித்தது ஏன் என்ற கரிசனை வெளியாகியுள்ளது.
இந்த சந்திப்பின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்டுள்ள சம்பந்தன் இந்திய தூதரக அதிகாரிகளுடனான சந்திப்பு தவிர எந்த விடயம் குறித்தும் கருத்துவெளியிடுவேன் என தெரிவித்துள்ளார்.

sampanthan-july-8.jpg

 

திருகோணமலையின் நிலாவெளியில் உள்ள ஆடம்பர ஹோட்டலொன்றில் இந்திய தூதரக அதிகாரிகள் வேறு பல கட்சிகளை சேர்ந்தவர்களையும் சந்தித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சில நாட்களுக்கு முன்னர் அவர்கள் வடபகுதியில் பல அரசியல்வாதிகளை சந்தித்துள்ளனர்.
இந்திய தூதரக குழுவினர் விடுதலைப்புலிகளின் முன்னாள் தலைவர்களை சந்தித்திருக்கலாம் அதன் காரணமாகவே ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் வேட்பாளர் சுசந்த புஞ்சிநிலமே தெரிவித்துள்ளார்.

நாட்டில்  குழப்பத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சியா இது எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதேவேளை இதற்கு மாறான கருத்தினை வெளியிட்டுள்ள உதயகம்மன்பில தனிப்பட்ட சந்திப்புகளை மேற்கொள்வதற்கும் அந்த சந்திப்பில் இடம்பெற்ற விடயங்களை பகிரங்கப்படுத்தாமலிருப்பதற்கும் எவருக்கும் உரிமையுள்ளது என தெரிவித்துள்ளதுடன் தமிழ்தேசிய கூட்டமைப்புடன் மாற்றுக்கருத்துள்ள போதிலும் அவர்களின் அந்தரங்கத்தை பேணுவதற்கான உரிமையை மதிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை அமைச்சர் விமல்வீரவன்ச இந்த சந்திப்பு குறித்து அச்சம் வெளியிட்டுள்ளார்.

wimal-weera1-300x175.jpg

 

அவர்கள் எதனையே மறைக்க முயல்வதன் காரணமாகவே ஊடகங்களை கேள்வி கேட்க வேண்டாம் என தெரிவிக்கின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.
எங்களை பொறுத்தவரையில் வெளிநாட்டு தூதரகங்களுடன் மக்களுக்கு தெரிவிக்க முடியாத உடன்பாடு எதுவுமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வெளிப்படுத்த முடியாதது என்றால் இது கவலையளிக்கும் விடயம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள தேசிய அபிவிருத்தி முன்னணியின் ருசிரிபால தென்னக்கோன் அவர்கள் நாட்டில் புதிய அணியொன்றை உருவாக்க முயல்கின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.

 

http://thinakkural.lk/article/56824

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.