Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அறிவியல் முதல் அரசியல் வரை அப்துல் கலாம்....

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அறிவியல் முதல் அரசியல் வரை அப்துல் கலாம்....

spacer.png

 

“கனவு காணுங்கள் ஆனால் கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பது அல்ல உன்னைத் தூங்க விடாமல் செய்வது எதுவோ, அதுவே இலட்சிய கனவு” என்று இளைஞர்களைத் தட்டி எழுப்பிய முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் நினைவு தினம் இன்று.

2002 முதல் 2007 வரை இந்தியாவின் 11ஆவது குடியரசுத் தலைவராக இருந்தவர் அப்துல் கலாம். ராமநாதபுரத்தில் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்த கலாம், விஞ்ஞானி, எழுத்தாளர், சிந்தனையாளர் என அவர் கால் பதிக்காத இடம் இல்லை. எவ்வளவு உயரம் சென்றாலும், அவருடைய எளிமைதான் அவரை மக்களிடம் கொண்டு சேர்த்தது என்று சொல்லலாம். குழந்தைகள், மாணவர்கள் மீது தனிப்பிரியம் கொண்ட அப்துல் கலாம் எப்போதும், இளைஞர்கள் தான் இந்தியாவின் எதிர்காலம் என்பார்.

இறுதியாக 2015 ஜூலை 27ஆம் தேதி, மேகாலயா ஐஐஎம்-ல் மாணவர்களுடன் உரையாடிக் கொண்டிருக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது மறைவு நாட்டுக்குப் பேரிழப்பு என்று பலரும் இரங்கல் தெரிவித்தனர். லட்சக்கணக்கான இளைஞர்களும், மக்களும் அவரை அடக்கம் செய்த பேய்க்கரும்பில் குவிந்தனர்.

அப்துல் கலாம் மறைந்து இன்றுடன் 5 ஆண்டு நிறைவடைகிறது. இந்நிலையில் அவரை நினைவுகூறும் விதமாக அரசியல் கட்சித் தலைவர்களும், இளைஞர்களும் கலாம் பொன்மொழிகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

இளைஞர்களின் முன்மாதிரியாக கருதப்படும் கலாமின் பொன்மொழிகள்

உங்கள் முதல் வெற்றிக்குப் பிறகு ஓய்வு எடுத்துவிடாதீர்கள். ஒருவேளை அடுத்தமுறை தோற்றுவிட்டால், உங்களுடைய முதல் வெற்றி அதிர்ஷ்டத்தால் கிடைத்தது என்று சொல்லப் பல நாக்குகள் காத்திருக்கின்றன.

உங்கள் பணியில் வெற்றி பெற, அதை நோக்கி ஒரு மனதாக இருங்கள்

ஒருமுறை தோற்றுவிட்டால் அதோடு நிறுத்திவிடாதீர்கள், மீண்டும் முயற்சி செய்யுங்கள், தோல்வி என்பது முதல் கட்டம்

நம் அனைவருக்கும் சம திறமை இல்லை. ஆனால், நம் திறமைகளை வளர்த்துக் கொள்ள நம் அனைவருக்கும் சமமான வாய்ப்பு உள்ளது

 

சிக்கல்களை எதிர்கொள்ளும் போது கூடவே திறமைகளும் வளர்கின்றன என இளைஞர்களுக்கு மட்டுமின்றி அனைத்து மக்களையும் ஊக்குவிக்கும் வகையில் பல பொன்மொழிகளை எழுதியுள்ளார்.

டி.ஆர்.டி.ஓ மற்றும் இஸ்ரோவில் கலாமின் பங்களிப்பு

டாக்டர் கலாம் மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் பட்டம் பெற்ற பிறகு 1958 இல் டி.ஆர்.டி.ஓவில் தனது பணியைத் தொடங்கினார்.

பொக்ரான் அணுசக்தி சோதனையில் முக்கிய பங்கு வகித்த அவர், நாட்டின் முக்கியமான விஞ்ஞானியாக உருவெடுத்தார். 1992-1999 வரை பிரதமரின் முதன்மை அறிவியல் ஆலோசகராக அவர், பதவி வகித்த காலகட்டத்தில் தான் பொக்ரான் அணு சோதனைகள் நடத்தப்பட்டன.

இஸ்ரோவில் தனது ஆராய்ச்சிப்பணிகளைத் தொடர்ந்த அவர், துணைக்கோள் ஏவுகணைக் குழுவில் எஸ்.எல்.வி செயற்கைக்கோள் ஏவுதலில் முக்கிய பங்காற்றினார். 1980 ஆம் ஆண்டு எஸ்.எல்.வி -III ராக்கெட்டைப் பயன்படுத்தி ரோகினி-I என்ற துணைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவச்செய்தது, கலாமுக்கு மட்டுமல்லாமல், இந்தியாவிற்கே ஒரு சாதனையாக அமைந்தது.

19 ஆண்டுகள் இஸ்ரோவில் பணிபுரிந்த பின்னர், அவர் டிஆர்டிஓவுக்குத் திரும்பி, ஒருங்கிணைந்த வழிகாட்டப்பட்ட ஏவுகணை மேம்பாட்டுத் திட்டத்தின் (ஐஜிஎம்டிபி) கீழ் அக்னி மற்றும் பிருத்வி போன்ற ஏவுகணைகளை உருவாக்குவதில் குறிப்பிடத்தக்கப் பங்கைக் கொண்டிருந்தார்.

கலாம் தலைமையில், 1988ஆம் ஆண்டில் முதல் பிருத்வி ஏவுகணை மற்றும் 1989இல் அக்னி ஏவுகணை போன்ற ஏவுகணைகளைத் தயாரிப்பதன் மூலம் ஐஜிஎம்டிபி திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டது. இதன்மூலம் அவர் ஏவுகணை நாயகன் என்று அறியப்பட்டார்.

இவ்வாறு இஸ்ரோவிலும், டிஆர்டிஓவிலும் முக்கிய பங்காற்றிய அவரை அவரது நினைவு தினத்தில் டிஆர்டிஓ நினைவு கூர்ந்துள்ளது. டிஆர்டிஓ ட்விட்டர் பக்கத்தில், “மில்லியன் கணக்கான மக்களை உற்சாகப்படுத்தும் இந்திய ஜனாதிபதியாக, மிக உயர்ந்த பதவியை வகித்த முதல் விஞ்ஞானி” என்று தெரிவித்துள்ளது.

உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது ட்விட்டர் பக்கத்தில், “புத்தி, ஞானம் மற்றும் எளிமை ஆகியவற்றின் அடையாளமான கலாம் ஒரு மக்கள் ஜனாதிபதி ஆவார். விஞ்ஞானம் முதல் அரசியல் வரை பல துறைகளில் அழியாத தடம் பதித்துள்ளார். அறிவிற்கான அவரது இடைவிடாத தேடலானது தன்னம்பிக்கை கொண்ட இந்தியாவின் யோசனையைத் தொடர்ந்து ஊக்குவிக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

கலாமின் நினைவு தினத்தையொட்டி, கொரோனா ஊரடங்கு காரணமாக அவரது குடும்பத்தினர் மட்டும் பேய்க்கரும்பில் அஞ்சலி செலுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

https://minnambalam.com/public/2020/07/27/25/former-president-apj-abdul-kalams-death-anniversary

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.