Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மக்கள் நோயாளிகளா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் நோயாளிகளா?

July 28, 2020

10.png

 

டந்த 2019 ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் “கோட்டா” வந்துவிட்டால் … எனும் எதிர்பார்ப்பு மக்களிடத்தில் பெருமளவில் இருந்தது. குறிப்பாக பெரும்பான்மை ஆதிக்க சக்திகளிடத்தில் அந்த எதிர்பார்ப்பின் அளவு உச்சத்தில் இருந்தது.

அந்த உச்சக்கட்ட எதிர்பார்ப்புகளில் ஒன்று முஸ்லிம்களை அதிகம் வாலாட்ட விடமாட்டார். நாட்டில் எல்லாமே சொன்னது சொன்னபடி நடக்கும்.

வீதி ஓர குப்பைகள் எல்லாம் இருந்த இடம் காணாமல் போகும்.

அரச அதிகாரிகள் வினைத்திறனாக வேலை செய்வார்கள்

எந்தவகையான பிரச்சினைக்கும் அவரிடம் தீர்வு உண்டு … இப்படி பற்பல காரணங்கள்.

எதிர்பார்த்தது போலவே கோட்டா ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுவிட்டார். அவரது ஐந்தாண்டு பதவி காலத்தில் ஒரு வருட பூர்த்தியைக் கொண்டாட இன்னும் மூன்று மாதங்களே இருக்கும் நிலையில் மக்கள் இன்று பொதுத்தேர்தல ஒன்றை சந்திக்க உள்ளனர். தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஒருபக்கமும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ ஒரு பக்கமாகவும் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். அதில் பிரதமர் பல உரைகளை ஆற்றுகிறார். அடுத்தவர் வீட்டு படுக்கை அறையை எட்டிப்பார்ப்பது முதல் புவனேகபாகுவிற்கு எத்தனை மனைவிகள் என்பதுவரை அதற்குள் அடக்கம்.

மறுபக்கம் ஊர்ஊராக செல்லும் ஜனாதிபதி என்ன சொல்ல வருகிறார் என்பது பற்றிய அவதானமே இப்போது செலுத்தப்படுகிறது. கோட்டா வந்தால் என்ற எதிர்பார்ப்பில் இருந்த முக்கியமான அம்சமாக அமைந்த முஸ்லிம்களை வாலாட்ட விடமாட்டார் என்பதனை பல பட்டியல் ஊடாக செய்து காட்டி இருக்கிறார்.

அதில் முதலாவது அவர் பதவியேற்றதை அடுத்து அவர் தலைமையில் உருவாக்கப்பட்ட அமைச்சரவையில் முஸ்லிம் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இத்தனைக்கும் அவருக்காக தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்ட முன்னைய அரசாங்கத்தில் அமைச்சராகவுமிருந்த பைசர் முஸ்தபாவை தமது அணியில் வைத்துக்கொண்டே அதனை செய்து காட்டி இருக்கிறார். இது பௌத்த பெரும்பான்மைவாத அடிப்படையில் அவர்களுக்கு வாக்களித்தவர்களுக்கு வழங்கப்பட்ட முதல் பரிசு.

x-119-1024x576.jpgஇரண்டாவது இந்த கொரொனா காலத்தில் முஸ்லிம்களின் அடிப்படை மதம் சார்ந்த உரிமையான ஜனாசாவை நல்லடக்கம் செய்தல் என்கின்ற உரிமையை அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்ட மத உரிமையை மீறி எரிப்பதற்கான நடவடிக்கைகளை அதிகாரங்களைக் கொண்டு நடைமுறைப்படுத்தி அடுத்த உற்சாக பரிசை அவர்கள் சார்பானவர்களுக்கு வழங்கி இருக்கிறார். அவர்களுக்கு இது பரிசானபோதும் முஸ்லிம் மக்கள் மத்தியில் அது அவர்களைத் தண்டித்ததற்கு சமனானது. தமக்கு வாக்களிக்காத மக்களை எந்தளவு தூரம் தண்டனை வழங்கலாம் என்பதற்கான மன தண்டனை அது. அதன் பிரதிபலிப்புகளை முஸ்லிம் சமூகத்திலே அவதானிக்க முடிகிறது.

இத்தனை நிகழ்ந்தும் இந்த கோட்டாதான் சரியென வாதிட்டுக் கொண்டிருக்கும் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி போன்றவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பது வேறு கதை. அவருக்கு தேசிய பட்டியல் பாராளுமன்ற பதவி மட்டுமல்ல நீதி அமைச்சர் பதவியும் தரப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த அரசாங்கத்தின் அடுத்த இலக்கு முஸ்லிம் திருமண சட்டத்தை இல்லாமல் ஆக்குவதாக இருக்கும். அதன்போது நீதி அமைச்சராக அலிசப்ரி இருந்தால் எப்படி இருக்கும் என்பது அவதானிக்கத்தக்க அரசியல் காட்சியாகும் என நம்பலாம்.

கோட்டபாயவின் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரங்களின்போது இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் 32 அம்ச கோரிக்கையை அவரிடம் கையளித்தது. அதனைப் பெற்றுக் கொண்ட அவர் அங்கே வந்திருந்த ஒரு பெண் தோட்டத்தொழிலாளியை அருகே அழைத்து, “உங்களைப் பார்க்க எனக்கு பரிதாபமாக இருக்கிறது . உங்களுக்கு நான் ஜனாதிபதியாகி அடுத்த நாளே 1000/- பெற்றுத்தருகிறேன்” என்கூறியதாக அப்போது அமைச்சராக இருந்த ஆறுமகன் தொண்டமான் கூறினார்.

அது 32 அம்ச கோரிக்கைகளில் ஒன்றாக இருந்திருக்கவில்லை என்பது வேறு விஷயம். எனினும் ஆட்சிமாற்றம் வந்த அவரும் ஜனாதிபதி ஆனது மட்டுமல்ல. ஆறுமுகனும் அமைச்சரானார். அவர்கள் சொன்னதுபோல அடுத்த நாளே 1000/- கொடுக்காவிட்டாலும், அடுத்த இரண்டு மாதங்களில் தை வந்தது. தை பிறந்தால் வழிபிறக்கும் என ” புதிய” தத்துவம் பேசி ஆயிரம் ரூபா சம்பளம் பெற்றுக்கொடுக்க அமைச்சரவை பத்திரம் சமர்ப்பித்து அனுமதியையும் பெற்றுவிட்டார்கள்.

அந்த பத்திரத்தின் ஓராண்டு நிறைவு கொண்டாட்டங்கள் இன்னும் ஐந்து மாதங்களில் நடக்கும். அப்போது ஊடகங்கள் கேள்வி கேட்க ஆறுமுகன் இருக்க மாட்டார். துரதிர்ஷ்டவசமாக அவர் இறந்துவிட்டார். ஆனால் அந்த பத்திரத்துக்கு பொறுப்பான ஜனாதிபதியிடம் ஏதாவது கேட்டால் எனக்கு அது மட்டுமா பிரச்சனை. எனக்கு நாட்டை கட்டி எழுப்ப வேண்டி உள்ளது. அதனை அந்த துறைசார்ந்த அமைச்சர் பார்த்துக் கொள்வார் என நழுவி விடுவார். இத்தைகைய நழுவல் போக்கே மலையகத் தமிழ் மக்கள் விடயத்தல் இனிரும் ஐந்தாண்டு காலத்திலும் ஜனாதிபதி கடைப்பிடிப்பார் என்பது அவதானம்.

ஏனெனில் அவரது முதல் முயற்சியே முரண்பாடானது. அமைச்சரவை பத்திரம் சமர்ப்பித்து ஆயிரம் ரூபா பெற்றுக் கொடுக்க முடியாது என்பதை உணர அவருக்கு ஐந்து ஆண்டுகள் அல்ல பத்து ஆண்டுகள் கூட போகலாம். அப்படி ஒரு சுமையை அவர் மீது ஏற்றி அடுத்த தேர்தலை இலக்கு வைத்த ஆறுமுகனோ அந்த தேர்தலைக்கூட சந்திக்காமல் விடைபெற்று சென்றுவிட்டார்.

அடுத்த இலக்கு வடக்கு கிழக்கு தமிழ் மக்கள். அவர்களது பூர்வீக பூமி வடக்கு கிழக்கு இல்லை என்ற மன உளைச்சலைக் கொடுத்து அவர்களது பிரசரசினைகளை வேறு திசையில் வைத்திருக்கும் கைங்கரியத்தை கச்சிதமாக செய்திருக்கிறார் ஜனாதிபதி. எங்களுக்கு சுயாட்சி வேண்டும் , தனிநாடு வேண்டும். சமஷ்டி வேண்டும் என கோரிக்கையை வைத்து அரசியலை முன்னெடுத்த இலங்கைத் தமிழர் தரப்பு இப்போது “வடக்கு – கிழக்கு தொல்பொருளியல் ஆய்வுக்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணியில் தமிழர் ஒருவர் வேண்டும்” என சுருக்கிக் கொண்டு இந்த தேர்தல் காலத்தில் கோஷம் எழுப்ப வேண்டிய நிலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். ஒருபக்கம் இவர்களுக்கு மன உளைச்சல் மறுபக்கம் பௌத்த பேரினவாத்த்துக்கு தீனி என கச்சிதமாக கையாள்கிறார் .

இதற்கும் அப்பால் நாட்டில் முழு மக்கள் நோக்கியும் ஓர் இராணுவ பணித்துறை ஆட்சியை முடுக்கவிடும் செயற்பாடு லாவகமாக முன்னெடுக்கப்படுகின்றன. கோட்டா வந்தால் குப்பைப் பிரச்சினைகளை எல்லாம் இராணுவத்தைக் கொண்டு தீர்த்து விடுவார் என எதிர்பார்த்த மக்களுக்கு சுகாதார பிரச்சினையை கூட அப்படித்தான் தீர்ப்பேன் என அடையாளம் காட்டி உள்ளார்.

இத்தனைக்கும் அவர் இந்த தேர்தல் பிரச்சார மேடைகளில் வாய் திறப்பதே இல்லை. கொரொனா மாஸ்க் அதற்கான வாய்ப்பை அவருக்கு கொடுத்து இருக்கிறது. நாடு முழுக்க பயணத்தாலும் அவர் வாய் திறந்து ஏதும் பேசுகிறார் இல்லை. மக்களிடம் சென்று நலம் விசாரித்துக் கொண்டு போகும் அவரது பாணியில் கொரொனா இல்லாவிட்டாலும் மக்களை நோயாளிகளாகவும் அவர் வைத்தியர் போலவுமே அந்த காட்சி அமைகிறது. மக்கள் அனைவருமே நோயாளிகளா? ஜனநாயகம்தான் பதில் சொல்ல வேண்டும்.

 

http://thinakkural.lk/article/58366

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.