Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைத் தேர்தல்: ஒரு புத்த பிக்குவின்.. நியாயமான கருத்து.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
பொட்டில் அடித்த தேரர் .... (இவர்கள் நமக்கு வரம்)
நாங்கள் மாடுகள் போன்ற இனம் (மோட்டு இனம்)
 
இந்த நாட்டில் சோறு சாப்பிடும் மாடுகள் கூட்டம் ஒன்றுதான் வாழ்கின்றன. இந்த யதார்த்தத்தை உணர முடியாமலிருக்கிறது. எங்களுடைய வரிப் பணத்தில் உழைத்து - வாழ்ந்து தேர்தல் காலத்தில் கோடிக் கணக்காக செலவழிப்பது எங்கள் மேல் உள்ள அன்பிலா இந்த அரசியல்வாதிகள்.....
இவ்வளவும் ஏன் செலவழிக்கிறார்கள்.மக்கள் அவதிப்படும் போது செலவு செய்யாதோர் இப்போது தேர்தலுக்கு செலவு செய்கிறார்கள். ஒரு சோத்து பார்சலுக்கும் ஒரு போத்தல் சாராயத்துக்கும் ஆயிரம் ரூபா காசுக்கும் நாங்கள் வாழ்கை முழுவதும் நடந்து போகிறோம். பஸ்களில் போகிறோம். அவர்களுக்கு வாக்களித்து விட்டு கோடிக் கணக்கான வாகனங்களில் போகும் வரப்பிரசாதத்தை அவர்களுக்கு செய்து கொடுக்கிறோம். இதுதானே உண்மை!
நாங்கள் ஒரு இனமாக எங்கே இருக்கிறோம்? இந்த நாட்டில் சிங்களவர் - தமிழர் - இஸ்லாமியர் - பறங்கியர் என 4 இனத்தவர்கள் வாழ்கிறார்கள். அனைவரும் முட்டாள்கள். இவர்கள் எல்லோரும் எருமைகள். இவர்கள் தங்களுடைய சுயநலத்தை மட்டுமே நினைக்கிறார்கள். நாடு - மதம் - இனம் குறித்து எந்த கரிசனையும் இல்லை. இனமாக நாங்கள் சிங்களமா - தமிழா - முஸ்லீமா என்பதல்ல பிரச்சனை ..... எங்களது நாட்டை பொருளாதார ரீதியாக உயர்வடைய செய்ய வேண்டும். 72 வருடங்களாக இவர்கள் செய்தது என்ன? நாங்கள் அரசியல்வாதிகள் பின்னால் திரிந்தது மட்டும்தான். இந்த 2020லாவது நாங்கள் மாறியே ஆக வேண்டும்.
 
இந்த தேர்தலில் போட்டியிடும் 55 வயதுக்கு மேற்பட்ட ஒருத்தருக்கும் வாக்களிக்காதீர்கள். மனிதர்களை உணர்ந்த - நிலத்தில் கால் பதித்த - அருகே உள்ள - அவர்கள் எந்த கட்சியினராக இருந்தாலும் பரவாயில்லை . அவர்கள் தமிழராக - சிங்களவராக - முஸ்லீமாக அல்லது எந்த கட்சியாகவும் இருக்கலாம் . அனைத்து இனங்களும் இணைந்த ஒன்றாக இருக்க வேண்டும்.
இதுவரை ஆண்டவர்கள் நாட்டை உருவாக்கவில்லை. இவனுகள் நாட்டை அழித்ததுதான் செய்தது. மக்கள் அதை உணர வேண்டும். மக்கள் யோசித்து வாக்களிக்க வேண்டும்.
 
எனது விருப்பம் இனம் மதம் மொழிகளை நினைக்காது மக்களுக்கு சேவை செய்துள்ள - செய்யும் ஆட்களை தேர்ந்தெடுங்கள். கல்வி கூட எனக்கு பெரிதான பிரச்சனை இல்லை என்பது எனது தனிப்பட்ட கருத்து. படித்தவர்கள்தானே பாராளுமன்றத்தில் இருக்கிறார்கள். என்னத்தை கிழித்தார்கள்? அவர்களை உயர்த்திக் கொண்டார்கள். அவர்களுடைய பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்தார்கள். அங்கு போய் படிக்கிறார்கள். கோடிக் கணக்காக உழைக்கிறார்கள். அவர்களும் நாட்டுக்கு வந்து அரசியலை செய்கிறார்கள். அப்பாவிலிருந்து மகனுக்கு ... அரசியல். இந்த நிலை மாற வேண்டும்.
 
இவர்களுக்கு வாக்களித்து விட்டு அவர்கள் வாகன பவனி வரவா பதவிக்கு கொண்டு வருகிறோம். மோட்டு கூட்டமாக இருக்காதீர்கள். இம்முறையாவது சரியான முடிவுகளை எடுங்கள் என மக்களிடம் கேட்டுக் கொள்கிறேன். 55 வயதுக்கு மேற்பட்ட ஒருத்தருக்கும் வாக்கு போடாதீர்கள்.
உங்கள் அருகே உங்களுக்கு உதவுவோருக்கு வாக்களியுங்கள். அவர்கள் சுயேற்சையாக இருந்தாலும் பரவாயில்லை. நல்லவர்களை திறமையானவர்களை மக்கள் மனதை அறிந்தோரை தேர்ந்தெடுங்கள்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.