Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எஸ்.பி.பிக்கு கரோனா தொற்று: மருத்துவமனையில் அனுமதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எஸ்.பி.பிக்கு கரோனா தொற்று: மருத்துவமனையில் அனுமதி

spacer.png

பிரபல பாடகர் எஸ்.பி.பிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் கரோனா தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகம் 2.6 லட்சம் தொற்று எண்ணிக்கையைக் கடந்த நிலையில், சென்னையும் ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது. குறிப்பாக சென்னை, மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கரோனா அச்சுறுத்தல் அதிகமாக உள்ளது. இதனால் சின்னத்திரை படப்பிடிப்பு மட்டுமே சென்னையில் நடைபெற்று வருகிறது. சினிமா படப்பிடிப்புக்கு இன்னும் அனுமதி அளிக்கப்படவில்லை.

கரோனா அச்சுறுத்தலால் பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே இருக்கிறார்கள். சிலருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டாலும், வீட்டிலேயே தனிமைப்படுத்திக் குணமாகிவிட்டார்கள். தமிழ்த் திரையுலகில் முதல் நபராக தனக்குக் கரோனா தொற்று இருப்பதாக தெரிவித்தவர் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா அர்ஜுன். அவரும் குணமாகி விட்டார்.

இன்று (ஆகஸ்ட் 5) காலை முதலே பாடகர் எஸ்.பி.பிக்கு கரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதாகவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் பரவின. இது தொடர்பாகப் பலரும் தொலைபேசியில் விசாரிக்க அழைக்கவே, உடனடியாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் எஸ்.பி.பி.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

"கடந்த 2, 3 நாட்களாக உடல்நிலை சீராக இல்லை. சளி, காய்ச்சல் விட்டு விட்டு வருகிறது. இதுதவிர வேறு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், நான் இதை எளிதாக எடுத்துக்கொள்ள விரும்பவில்லை. எனவே நான் மருத்துவமனைக்குச் சென்று பரிசோதித்தேன். எனக்கு மிக மிக லேசான கரோனா தொற்று இருப்பதாக அவர்கள் கூறினார்கள்.

என்னை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சில மருந்துகளை உட்கொள்ளச் சொல்லியிருக்கிறார்கள். நான் இதை விரும்பவில்லை. குடும்பத்தோடு இருக்கும்போது இது மிகவும் கடினமான விஷயம். அவர்கள் நம்மை எப்போதும் தனிமையில் விடமாட்டார்கள். எனவே நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். என்னுடைய நண்பர்கள் இங்கு இருக்கிறார்கள். அவர்கள் என்னை நல்லபடியாகப் பார்த்துக் கொள்கின்றனர்.

நான் நன்றாக இருக்கிறேன். இதுகுறித்து யாரும் கவலை கொள்ள வேண்டாம். சளி மற்றும் காய்ச்சல் மட்டுமே உள்ளது. காய்ச்சல் கூட தற்போது குணமாகிவிட்டது. இன்னும் இரண்டு நாட்களில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிவிடுவேன். நன்றி".

இவ்வாறு எஸ்.பி.பி தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் முன்னணிப் பாடகராக வலம் வருபவர் எஸ்.பி.பி. இதனால், அவர் பூரண நலம்பெற வேண்டி திரையுலகப் பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகிறார்கள்.

 

https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/568285-corona-for-spb.html

  • கருத்துக்கள உறவுகள்

அபிமான பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கோவிட்-19 நோய் தொற்றியுள்ளதாகவும், சிகிச்சைக்காக இன்று (புதன்) காலை சென்னையிலுள்ள எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தனது சிகிச்சை நல்லபடியாக நடப்பதாகவும் விரைவில் குணமடைந்து இரண்டே நாட்களில் வீட்டுக்குத் திரும்பிவிடுவேன் எனவும் அவர் பதிவுசெய்த காணொளியொன்றை மருத்துவமனையிலிருந்தே அவர் தனது ரசிகர்களுக்காக வெளியிட்டிருக்கிறார்.

பல தேசிய விருதுகளைப் பெற்ற, 74 வயதுள்ள அவர், 16 மொழிகளில், 40,000 த்துக்க்ம் மேற்பட்ட பாடல்களைப் பாடியிருக்கிறார்.

“கடந்த இரண்டு, மூன்று நாட்களாக நெஞ்சில் கொஞ்சம் சளி பிடித்திருந்தது. பின்ன தடிமனும், காய்ச்சலும் வந்தன. நான் உடனே மருத்துவமனைக்குச் சென்று பரிசோதித்தேன். அப்போதுதான் எனக்கு மிகவும் சொற்பமான, மெதுவான கொறோணாவைரஸ் தொற்றியிருப்பது தெரிந்தது. நான் வீட்டிலேயே சுய தனிமைப்படுத்தலைச் செய்யலாம் என மருத்துவர்கள் கூறினார்கள். நான் அதை மறுத்துவிட்டேன். ஏநைய குடும்பத்தவர் இருக்குமிடத்தில் அது கஷ்டமாகவிருக்கும். அதனால் நான் மருத்துவமனையில் தங்கிச் சிகிச்சைபெற முடிவு செய்தேன்” என அவர் தெரிவித்தார்.

 

https://marumoli.com/எஸ்-பி-பாலசுப்ரமணியத்துக/?fbclid=IwAR3w-m34DWRGmbOcdJEME48rGtKHLspllvEjMwOZVJnAxXe05ldzpQyZgKM

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.