Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தெற்கிலிருந்து தமிழர்களையும் வடக்கிலிருந்து புலிகளையும் வெளியேற்ற நடவடிக்கை!

Featured Replies

தெற்கிலிருந்து தமிழர்களையும் வடக்கிலிருந்து புலிகளையும் வெளியேற்ற நடவடிக்கை!

-விதுரன்-

நாட்டை பாதுகாப்பதற்காக பிரிவினைப் போராட்டத்திற்கு எதிராக நடவடிக்கைகளை எடுப்பதாகக் கூறிவந்த இலங்கை அரசுகள், இன்று தலைநகர் கொழும்பையும் தெற்கையும் பாதுகாப்பதற்காக வடக்கு - கிழக்கில் பெரும் போர் நடத்துகின்றன.

25 வருடங்களுக்கும் மேலாகத் தொடரும் இந்தப் போரில் அரச படைகளால் புலிகளை வெற்றிகொள்ள முடியவில்லை. இதுவரை அரசுக்கு வெற்றி கிடைக்கவில்லையென்றால் அவர்கள் தோல்விகளையே சந்திக்கிறார்களென்று பொருள்படக்கூடும். ஆனாலும், வடக்கு - கிழக்கை துவம்சம் செய்யும் நடவடிக்கைகள் தொடர்கின்றன.

கிழக்கிலிருந்து விடுதலைப்புலிகளை முற்றாக வெளியேற்றுவதாகக் கூறி மேற்கொள்ளப்பட்டு வரும் பாரிய நடவடிக்கைகளால் கிழக்கு இன்று பேரழிவுகளைச் சந்தித்து நிற்கிறது. ஏற்கனவே வடக்கில் காலம் காலமாக நடைபெற்ற போராலும் தொடரும் தாக்குதல்களாலும் வடக்கு முழுமையாகச் சிதைந்து போயுள்ளது.

ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். பல இலட்சம் பேர் காயமடைந்துள்ளனர். இலட்சக் கணக்கானோர் வடக்கு - கிழக்கிலிருந்து இடம்பெயர்ந்துள்ளனர். பத்து இலட்சத்திற்கும் மேற்பட்டோர் நாட்டைவிட்டு தப்பிச்சென்றுவிட்டனர்.

ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட வீடு வாசல்கள் அழிக்கப்பட்டுள்ளன. அதிஉயர் பாதுகாப்பு வலயமென்ற போர்வையில் பெருமளவு பிரதேசங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. வடக்கு - கிழக்கில் மக்கள் வாழ முடியாததொரு சூழ்நிலை தோற்றுவிக்கப்பட்டாலும் பல பிரதேசங்களிலிருந்து மக்கள் வெளியேற முடியாது பாதைகள் மூடப்பட்டுள்ளன. யாழ். குடாநாடு இன்று திறந்தவெளிச் சிறையாகவே மாற்றப்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகளைப் பலவீனமாக்குவதன் மூலமே சமாதானப் பேச்சுக்களுக்கு அவர்களை வரவழைக்க முடியுமெனக் கூறிவரும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் அவரது படைகளும் சமாதானத்திற்கான போராக இந்த யுத்தத்தை சித்திரிக்க முயல்கின்றன.

தமிழீழத்திற்கான விடுதலைப் போராட்டத்தை கிராமங்களுக்கிடையிலான பஞ்சாயத்து அதிகாரங்கள் மூலம் நசுக்க முயலும் அரசு, கொழும்பையும் தெற்கையும் பாதுகாத்தவாறு வடக்கு - கிழக்கில் பேரழிவுகளை ஏற்படுத்த முயல்கிறது.

வடக்கு - கிழக்கு அழிக்கப்பட வேண்டிய பிரதேசங்கள் போன்றும் தமிழர்கள் கொல்லப்பட வேண்டியவர்கள் போன்றும் தெற்கில் இனவாதக் கோஷங்கள் வலுக்கின்றன. வடக்கு - கிழக்கை பிரித்து கிழக்கிலிருந்து புலிகளை விரட்டி வடக்கில் அவர்களை பெருமளவில் பலவீனப்படுத்திவிட்டால் இனப்பிரச்சினைக்கு தீர்வு கண்டுவிட முடியுமென இந்த அரசு கருதுகிறது.

இதனால்தான், தெற்கில் ஏதாவது அசம்பாவிதங்களேற்பட்டால் அதன் பாதுகாப்புக்கும் சிங்கள மக்களின் பந்தோபஸ்திற்கும் தமிழர்கள் பேராபத்தானவர்களென காண்பிக்க அரசும் இனவாதிகளும் முற்படுகின்றனர். அதேநேரம் வடக்கு - கிழக்கிலிருந்து மட்டுமல்லாது, தெற்கிலிருந்தும் தமிழர்களை விரட்டியடிக்க முற்படுகின்றனர்.

இரு நாடுகளுக்கிடையிலான போராகவே வடக்கு - கிழக்கில் இலங்கை அரசு போர் தொடுத்துள்ளது. அந்தப் பிரதேசங்களில் எங்கு திரும்பினாலும் பேரழிவுகளே தென்படுகின்றன. பல பிரதேசங்கள் மக்களின்றி சுடு காடுகளாகிவிட்டன. நகர்ப்புறங்களிலும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களிலும் மட்டுமே இன்று தமிழர்கள் வாழும் நிலை தோன்றியுள்ளது.

வடக்கு - கிழக்கில் போரினால் மக்கள் கொல்லப்படுவது தேவையானதொரு செயலெனவும் தெற்கில் ஏதாவது சம்பவம் இடம்பெற்றால் அது இனக்கலவரத்தை தூண்டும் செயலெனவும் அரசு சித்திரிக்க முற்படுகிறது. அத்துடன், தெற்கில் இடம்பெறும் சம்பவங்களை சாட்டாக வைத்து வடக்கு - கிழக்கு தமிழர்களை அங்கிருந்து துரத்தவும் முற்படுகிறது.

வடக்கு - கிழக்கில் புலிகளை அழிக்க இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வது எவ்வாறு அவசியமோ அதுபோல் தலைநகரைப் பாதுகாப்பதற்காக தமிழர்களை வெளியேற்றுவது அவசியமென்பதுபோல் நாடு முழுவதும் மோசமான இனவாதப் பிரசாரத்தில் அரசு இறங்கியுள்ளது.

வான் புலிகளது வருகை யுத்தத்தில் புதிய பரிமாணத்தை தோற்றுவித்துள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிரான போர் எனக்கூறி வடக்கு - கிழக்கில் விமானப் படை விமானங்கள் குண்டுகளை வீசி வருகையில், அரச பயங்கரவாதத்திலிருந்து மக்களைக் காக்கவும் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்காகவுமெனக் கூறி, வான் புலிகள் தெற்கில் வான்வழித் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளனர்.

இந்த நிலையில்தான், கொழும்பினதும் தெற்கினதும் பாதுகாப்புக்கெனக் கூறி அங்கிருந்து தமிழர்களை விரட்டியடிக்க அரசு முற்படுகிறது. அத்துடன், தமிழர்களை வடக்கு - கிழக்கிற்குச் செல்லுங்களெனவும் விரட்டுகிறது.

அரசின் இந்த நிலைப்பாடு சரியென்றால், வடக்கு - கிழக்கிலுள்ள படைகள் அங்கிருந்து வெளியேறி தெற்கே வந்துவிட்டால், வடக்கு - கிழக்கு தமிழர்கள் தங்கள் சொந்த இடங்களுக்கு தாராளமாகச் செல்வரென தமிழ் தரப்புகள் கூறுகின்றன.

வடக்கு - கிழக்கில் பெரும்போர் தொடர்கிறது. அங்கு பல்லாயிரக்கணக்கில் படைகள் நிலைகொண்டுள்ளதாலேயே அங்கு தமிழ் மக்களால் வாழ முடியாத நிலையேற்பட்டுள்ளது. அங்கு யுத்தமுமில்லை, படைகளுமில்லையென்றால் தெற்கில் தமிழர்கள் ஏன் வாழப் போகிறார்களென்ற கேள்வியும் எழுகிறது.

வடக்கு - கிழக்கின் இன்றைய நிலைமை தென்பகுதியில் சிங்களவர்களுக்கு தெரியாவிடினும் சர்வதேச சமூகத்துக்கு நன்கு தெரியும். படுகொலைகள், ஆட்கடத்தல்கள், ஆட்கள் காணாமல் போதல் என அங்கு வாழ்வதற்கானதொரு சூழ்நிலையே இல்லை.

ஆயிரக்கணக்கில் பாதுகாப்புக்கென படையினர் நிலைகொண்டிருக்கையில் வீடு வாசல்களிலும் வீதிகளிலும் தினமும் பலர் சுட்டுக் கொல்லப்படுகின்றனர். இராணுவ சோதனை நிலையங்கள் ஊடாக வரும் வெள்ளை வான்களில் தினமும் பலர் கடத்தப்பட்டு கொல்லப்படுகின்றனர் அல்லது காணாமலே போய் விடுகின்றனர்.

அரச படைகளின் ஆசியுடன் இயங்கும் ஆயுதக் குழுக்களால், கப்பம் கேட்டு பலர் கடத்தப்படுவதுடன் பெருந்தொகை பணமும் அறவிடப்படுகிறது. இல்லையேல், கடத்தப்படுபவர்கள் கொல்லப்படுகின்றனர் அல்லது காணாமல் போய்விடுகின்றனர்.

இவற்றிலிருந்தெல்லாம் தப்ப முடியாது தவிக்கும் தமிழர்களே கொழும்பில் மூவின மக்களும் வாழும் பகுதியில் ஓரளவாவது பாதுகாப்பு கிடைக்குமென்றதொரு நம்பிக்கையில் தங்களது சக்திக்கும் அப்பால் பணம் செலுத்தி கொழும்பில் தங்கியிருக்கின்றனர்.

ஆனால், கொழும்பில் ஒரு சில இடங்களில் வெடித்த குண்டுகளுடன், தமிழர்களை கொழும்பை விட்டே துரத்துவதென்ற அரசின் முடிவானது, பின்னணியில் பல நோக்கங்களைக் கொண்டது. திட்டமிட்டே கொழும்பில் குண்டுகளை வெடிக்க வைத்துவிட்டு, தேசிய பாதுகாப்புக்கும் ஏனைய மக்களின் பாதுகாப்புக்கும் தமிழர்களால் பெரும் அச்சுறுத்தலேற்பட்டுள்ளதாகக

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனுக்கு என்று சொந்தமாக இடமில்லாவிட்டால் இப்படித் தான் அவன் கொழும்பில் இருந்து மட்டுமல்ல, அவனது எல்லா வதிவிடத்திலும் இருந்து துரத்தப்பட்டு மந்தைகளாகப்படுவான். அல்லது ஒரு துண்டுப் பாணுக்கும் சிங்கள அரசின் கையை நம்பியிருக்க வாழ வேண்டி வரும்.

இந்த நிலை மாறவேண்டுமானால் நமக்கு தனி நாடு அவசியம் என்பதைப் படம் பிடித்துக் காட்டுகின்றது.

தெற்கிலிருந்து தமிழர்களையும் வடக்கிலிருந்து புலிகளையும் வெளியேற்ற நடவடிக்கை!...

நல்ல சிந்தனை...

அப்ப விரைவில் வடக்கில் உள்ள புலிகள் தெற்கிற்கு வந்து தாக்குதல்கள் செய்வதற்கும், தெற்கில் உள்ள தமிழர் வடக்கில் புலிகளுடன் சென்று இணைந்து ஆயுதம் தூக்க்குவதற்கும் இவை வழிகோலும்...

மகிந்து சிந்தனை என்னமா வேலை செய்யுது! ஆ கேட்கவே புல்லரிக்கிது...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த நேரத்தில எங்கட மதியண்ணை வரவேணும்

கொழும்பில இத்தனை சனம் வந்திருக்குது. சிங்கள அரசுக்கு ஆதரவு என்று விளக்கம் வேறை முந்திச் சொல்லிக் கொண்டு திரிந்தவர்.

இப்ப ஆதரவான சனத்தைக் கொழும்பில இருந்து சிங்கள அரசு ஏனாம் வெளியேத்தப் பாக்குது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.