Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மலையக மக்கள் மறந்த யானை - ஒரு பாரம்பரிய கட்சியின் படுதோல்வி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சி.சி.என்

இலங்கை வரலாற்றில் மலையக  சமூகத்தின்  மீது பல விதங்களிலும் தாக்கம் செலுத்திய பிரதான கட்சியாக ஐக்கிய தேசிய கட்சி விளங்குகிறது. இலங்கைக்கு சுதந்திரம் வாங்கித்தந்த தேச பிதா என்றும் சுதந்திர இலங்கையின் முதல் பிரதமர் என்றும் போற்றப்படும் ஐ.தே.கவின் ஸ்தாபத் தலைவர் டி.எஸ்.சேனாநாயக்க சுதந்திரம் வாங்கிக்கொடுத்த உடனேயே இந்திய வம்சாவளி மலையக மக்களின் குடியுரிமையை பறித்தார். 

சுதந்திரம் கிடைத்த ஆண்டே நாடற்றவர்களானார்கள் இலட்சக்கணக்கான தமிழர்கள்.  தமிழ் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் அதிகரித்து  விடக்கூடாது என்ற அச்சமே அதற்குக் காரணம். இலங்கையை ஆட்சி செய்த ஆங்கிலேயர்கள் தாமாகவே வெளியேறினர். ஆனால் சனத்தொகையில் அதிகரித்திருந்த இந்திய வம்சாவளி மக்களை நாட்டை விட்டு வெளியேற்ற சிங்கள தேசியவாதிகள் பிரயத்தனம் எடுத்தனர். இதில்  மேட்டுக்குடி சிங்களத்தலைவர்கள் பிரதான பாத்திரம் வகித்தனர். அவர்கள் அனைவருமே ஐ.தே.கவில் அணிவகுத்து நின்றனர்.    

1977 இற்குப்பிறகு ஐ.தே.க தலைவராகவும் ஜனாதிபதியாகவும் விளங்கிய ஜே.ஆர். ஜெயவர்தனவின் காலகட்டம் மிக முக்கியமானது. 1977 ஆம் ஆண்டு கலவரம் மற்றும்  83 இனக்கலவரத்தில் ஆயிரக்கணக்கான தமிழர்களின் சொத்துகள் சூறையாடப்பட்டு பெருந்தொகையானோர் மீண்டும் தமிழகத்துக்கு படையெடுத்து அங்கேயே தங்கி விட்டனர். ஜுலை இனக்கலவரத்துக்கு பிரதான சூத்திரதாரிகள் பலரும் ஐ.தே.கவின் அதிகார மிக்க அமைச்சர்களாக இருந்தவர்கள். 

 எனினும் 1988 ஆம் ஆண்டிற்குப்பிறகு ஐ.தே.கவின் தலைமைப் பொறுப்பை ஏற்ற அமரர் ரணசிங்க பிரேமதாச, ஆரம்ப கட்டத்தில்  மலையக சமூகத்துக்கு ஐ.தே.க செய்த துரோகச் செயல்களுக்கு பரிகாரம் பெற்றுத் தர விரும்பினார். தான் பிரதமராக இருந்த 1986 ஆம் ஆண்டிலேயே நாடற்றவர்களுக்கு குடியுரிமையைப் பெற்றுத்தருவதற்கான காரணங்களை முன்வைத்து பாராளுமன்றில் நீண்ட உரையொன்றை அவர் ஆற்றியிருந்தமை முக்கிய விடயம். தான் ஜனாதிபதியானவுடன்  அப்போதைய மலையக பிரதிநிதியான அமரர் செளமியமூர்த்தி தொண்டமானின் அணுகுமுறைக்குப் பிறகு அதை அமுல்படுத்தினார்.   1988 ம் ஆண்டு 39 ம் இலக்கச் சத்தியக் கடதாசி மூலம் பிரஜாவுரிமை வழங்கும் சட்டம் உருவாக்கப்பட்டது.

இந்த சம்பவமே  ஐக்கிய தேசிய கட்சியின் யானை சின்னத்துக்கு மலையக மக்கள் தொடர்ச்சியாக வாக்களிக்கத்தொடங்கியமைக்கு பிரதான காரணமாயிற்று. யானை சின்னம் மலையக மக்களின் மனதில் இடம்பிடித்ததற்குக் காரணமே அவர்களுக்கு பிரஜா உரிமை வழங்கப்பட்டதாகும்.

 அமரர் பிரேமதாச மூலம் இந்த சமூகத்துக்கு இன்னும் பல வரப்பிரசாதங்களைப் பெற்றுக்கொள்ளலாம் என்று மலையக சமூகம் நினைத்துக்கொண்டிருந்த சமயம் அவர் படுகொலை செய்யப்பட்டார். அதன் பின்னர் கட்சி தலைமை சில காலம் டி.பி.விஜயதுங்கவிடமிருந்து ரணிலுக்கு மாறியது. டி.எஸ்.சேனாநாயக்க, ஜே.  ஆர். ஆகியோரின் குணங்களிலிருந்து சற்றும் மாறுபடாத ஒருவராக ரணில் விளங்கினார்.  யானைச்சின்னமும் அவருடனேயே தொடர்ந்தது. எனினும் தனது தந்தையின் குணாம்சங்களுடனும் கருத்துக்களுடனும் கட்சியில் அமைதியாக உருவான சஜித் தனக்கு அரசியல் எதிரியாக மாறுவார் என்பதை ஆரம்பத்தில் ரணில் உணரவில்லை.

ஆனால் காலம் எல்லாவற்றையும் புரட்டிபோடும் வல்லமை கொண்டது என்பதை ஏனோ ரணில் ஏற்கவும் இல்லை.  கட்சியை மறுசீரமைப்பதை விடுத்து கட்சி சின்னத்தை மாற்றி  கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடும் உபாயத்தை ஆரம்பித்தார். தானே தலைவர் , தான் எடுப்பது மட்டுமே முடிவு என்ற பிடிவாதக்குணம் கொண்டவராக  மாறிப்போனார். இதற்கு கட்சியின்  மேட்டுக்குடி பண்புகளுடன் இருந்த ஏனைய அங்கத்தவர்கள்  கட்டுப்பட்டனர். ஆனால் ஜனநாயக பண்புகளை விரும்பும் சஜித், தயாசிரி  போன்ற இரண்டாம் கட்ட தலைமைத்துவ இளம் உறுப்பினர்கள் இதை எதிர்த்தனர்.  மேலும் யானைக்குப் பதிலாக அன்னத்தை கொண்டு வந்ததற்கும் எதிர்ப்புகள் கிளம்பின. ஆனால் அதற்கும் மக்கள் ஆதரவு கிடைக்கவே தனது முடிவுக்கு மக்கள் ஆணை இருக்கின்றது என்று தவறாக விளங்கிக்கொண்டார் ரணில்.

இன்று அதன் விளைவை அனுபவித்துக்கொண்டிருக்கின்றார். இளம் தலைமைத்துவங்கள் அதிகரித்த தற்போதைய ஐக்கிய தேசிய கட்சியின் ராணித் தேனீ சஜித் என்பதை ரணில் விளங்கிக்கொண்டது  2020 ஆம் ஆண்டு  பாராளுமன்றத் தேர்தலுக்கு பிறகு தான் என்றால் அவரது அரசியல் முதிர்ச்சியை என்னவென்பது? தான் சொன்னால் யானைக்கும் அன்னத்துக்கும் மக்கள் ஆதரவளிப்பார்கள் என்ற எண்ணம் உடைந்து போய்விட்டது.

 கட்சியின் தலைமையை விட்டுக்கொடுக்காத ரணிலின் பிடிவாதக்குணம் மட்டுமே ஐ.தே.கவின் வீழ்ச்சிக்கு காரணமாகாது. நல்லாட்சியில் கட்சி உறுப்பினர்களின் ஊழல்களை கண்டும் காணாதது போன்று இருந்தமையும் மெளனமும் பிரதான காரணங்களாகின. கட்சியின் 90 வீதமானோர் சஜித்துக்கு ஆதரவளிக்க முன் வந்தும் கூட யானையின் மீது நம்பிக்கை வைத்திருந்தார் ரணில். இன்று நாட்டின் வாக்காளர்களில் 2.15 வீதமானோரே கட்சிக்கு ஆதரவு எனும் போது நிலைமை விளங்குகிறது. யானைச்சின்னம் மொத்தமாக பெற்ற இரண்டரை இலட்சத்துக்கும் அண்மித்த வாக்குகளை ஒரு காலத்தில் கொழும்பு மாவட்டத்தில் ரணில் மாத்திரம் பெற்றவராக இருந்தார் என்பதை இங்கு பதிவு செய்யத்தானே வேண்டும்?

சின்னத்துக்கு மட்டும் வாக்களித்து பழக்கப்பட்டவர்கள் இல்லை தமிழ் மக்கள் புதிய எண்ணங்களுக்கும் வாக்களிப்பவர்கள் என்பதை நிரூபித்துள்ளனர். யானை அப்படியே இருக்கும் பாகனைத் தான் மாற்ற வேண்டும் என்ற விமர்சனங்கள் இன்னும் எழுந்தவண்ணமேயுள்ளது. பொதுத்தேர்தல் பெறுபேறுகள்  வெளிவந்து  கொண்டிருக்கும் போது சமூக ஊடகங்களில் வைரலான  கருத்து  இது. 

‘ ஒரு நாட்டை எவ்வாறு சீரழிப்பது என முன்னாள் ஜனாதிபதி மைத்ரியிடம் பாடம் கற்க வேண்டும் அதே போன்று ஒரு கட்சியை எவ்வாறு இல்லாமலாக்குவது என்பது பற்றி ரணிலிடம் பாடங்கற்க வேண்டும்’ 

ஐக்கிய தேசிய கட்சியிலேயே தனது அரசியலை ஆரம்பித்தவர் எஸ்.டபிள்யூ .ஆர். டி .பண்டாரநாயக்க. பின்னர் கொள்கை முரணால் அதிலிருந்து வெளியேறி சுதந்திர கட்சியை ஸ்தாபித்தார். இறுதியாக அதன் தலைவராகவும் நாட்டின்  ஜனாதிபதியாகவும் விளங்கிய மைத்ரி கட்சியை வளர்த்தெடுப்பதை விடுத்து ரணிலை விமர்சனம் செய்து இறுதியில் நாட்டின் மிகவும் பலகீனமான நிறைவேற்று அதிகார ஜனாதிபதி என்ற பெயருடன் விடை பெற்றார். தற்போது பொது ஜன பெரமுனவில் தஞ்சமடைந்து பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகியிருக்கின்றார். ஆனால் சுதந்திர கட்சி இனி உயிர்க்கப்போவதில்லை. அதே நிலைமை தான் ஐ.தே.கவுக்கும். 

  42 ஆண்டுகளாக தொடர்ந்தும் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து அதில் 5 தடவைகள் பிரதமராக  விளங்கி 2 ஜனாதிபதி தேர்தல்களில் போட்டியிட்டு  25 வருடங்களுக்கு மேல் கட்சியின் தலைவராகவும் விளங்கிய ரணிலின் நிலைமை மிக மோசமானது.   1977 முதல் 2015 வரை நடைபெற்றுள்ள 8 பொதுத்தேர்தல்களிலும்  தொடர் வெற்றிகளைப் பெற்ற ரணிலை மட்டுமா மக்கள் நிராகரித்துள்ளனர்? இல்லை கட்சியையும் சேர்த்துத் தான்…! யானை தனது தலையில் மண்ணை வாரி போட்டுக் கொண்டதற்கு  இதை விட வேறு உதாரணங்கள் தேவை தானா?  

https://www.virakesari.lk/article/87795

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.