Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசிய பட்டியல்; சந்தர்ப்பவாதிகளை அடையாளம் காணும் தருணம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தேசிய பட்டியல்; சந்தர்ப்பவாதிகளை அடையாளம் காணும் தருணம்

August 10, 2020

10.png

 

லங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான தேர்தல் நடைபெற்று முடிந்திருக்கிறது. மக்கள் தமது தீர்ப்பை வழங்கி தமது பிரதிநிதிகளைத் தெரிவு செய்து உள்ளார்கள். இப்போது தலைவர்கள் தமது தீர்ப்பின் மூலம் தமக்கான பிரதிநிதிகளைத் தெரிவு செய்து கொள்ளும் சந்தர்ப்பம். அந்த சந்தர்ப்பம் எத்தனை சந்தர்ப்பவாத தலைவர்களை அம்பலப்படுத்தியுள்ளது என்பதே இந்தவார அவதானமாக உள்ளது.

முதலாவது தேசிய பட்டியல் உறுப்பினர்களை வெளியிட்டு ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தாங்கள்தான் ஆட்சியாளர்கள். அதற்கான தலைமை தங்களிடம் இருக்கிறது என்பதை நிரூபித்து உள்ளார்கள். ஆகஸ்ட் 6 பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வந்ததும் ஆகஸ்ட் 7 பெரமுன கட்சி தமது பட்டியலை தமது கட்சி கடித தலைப்பில் தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பி உரிய முறையில் நடந்து கொண்டது. அவர்களின் தெரிவுகளின் பின்னர் பெரிய வசைபாடல்கள் எதுவும் இடம்பெற்றதாக தெரியவில்லை. மாறாக அவர்களின் எதிர் கட்சியினரே பாராட்டி பேசி இருந்ததை அவதானிக்க முடிந்திருந்தது. அதற்கு காரணமும் இருந்தது. பெரமுன கட்சி முஸ்லிம்களுக்கு எதிரானது என்ற மன நிலையில் பார்த்தவர்களை வாயை அடைக்கும் வகையிலான பட்டியல் அது. அலி சப்ரி, முஸம்மில், மர்ஜான் எனும் மூன்று முஸ்லிம் பெயர்களை இடம்பெறச் செய்துள்ளார்கள். கூடவே ஒரு தமிழரின் பெயரும். இதில் உள்ள சந்தர்ப்பவாதம் என்ன என்பதை பிரிதொரு நாளில் பார்க்கலாம்.

ஆனால் ஒரு ஏமாற்றத்தை இப்போதைக்கு பார்க்கலாம். அதுதான் தமது பங்காளி கட்சியான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சியை அவர்கள் கைவிட்டமை. நுவரெலியா மாவட்டத்தில் குறைந்தது மூன்று இ.தொ.கா உறுப்பினர்கள் தெரிவாக கூடிய நிலையில் இருந்தும் அதனை சாதுரியமாக தட்டிப் பறித்தது தமது உறுப்பினர்கள் மூவரைப் பெற்றுக் கொண்டதுடன் தேசிய பட்டியலில் இருவரது பெயர்களை இடம்பெறச் செய்தும் அவர்களுக்கு ஒரு ஆசனத்தை பெற்றுக் கொடுக்காமை. பதுளை, கண்டி மாவட்டங்களில் இ.தொ.கா வேட்பாளர்களின் வாக்குளைப் பெற்றுக் கொண்டு இருப்பதுடன் மதியுகராஜா போன்ற ஆளுமை ஒருவரின் அவசியத்தை பாராளுமன்றில் உணர்ந்து இ.தொ.கா அதனைப் பெற்றுக் கொள்ள ஆர்வம் காட்டாது விட்டமை இ.தொ.கா வின் ஏதாவது சந்தர்ப்பவாதமா? என்பது மறுபக்கம்.

இப்போது சந்தர்ப்பவாத தலைமையாக முதல் அடையாளத்தை வெளிப்படுத்தி இருப்பவர் ஐக்கிய மக்கள் சக்தி யின் தலைவர் சஜித் பிரேமதாச. ஐக்கிய மக்கள் சக்தி உருவாக்கத்துக்கு பக்கபலமாக இருந்த சிறு கட்சிகளான ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஜாதிக்க ஹெல உறுமய ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தேசிய பட்டியல் உறுப்புரிமை தருவதாக முன்னதாக உறுதி அளித்துவிட்டு இப்போது அந்த வாக்குறுதியில் இருந்து அந்தர்பல்டி அடித்துள்ளார். ரணில் இடம் இருந்து சஜித் தலைமை ஏற்றால் எல்லாம் சரியாகிவிடும் என எதிர்பார்த்த சிறுபான்மை கட்சிகளுக்கு சஜித் தான் யார் என்பதை தெளிவாக காட்டி உள்ளார். ஒரு பட்டியலைத் தயாரித்து ஒத்திகைப் பார்த்துவிட்டு இப்போது சமாளித்துக் கொண்டு பேச்சுவார்த்தை என இழுக்கும் சஜித் இனி எப்போதும் இழுவைதான்.

சஜித்தை ஒரு புறம் வைத்துவிட்டு சிறுபான்மை கட்சி தலைவர்களான ஹக்கீம், ரிஷாத், மனோ, திகா, இராதாவின் நிலை அவர்கள் பிரதிநிதித்துவம் செய்யும் மக்களைப் போன்றே பரிதாபகரமானது. சஜித் ஒரு பட்டியலை அனுப்பி அது ஊடகங்களில் செய்தியானதன் பின்னரே தூக்கத்தில் இருந்து எழும்பி உள்ளார்கள். ஏனெனில் அவர்கள் ஐவரும் தேர்தலில் தெரிவாகி விட்டார்கள். அதிலும் குறிப்பாக தேசிய பட்டியல் உறுப்புரிமையையும் பெற்றே தீருவோம் என வாய்கூசாமல் பேசி மக்களிடம் வாக்குகளை வாங்கி பெற்றுக் கொண்டுவிட்டு நிம்மதியாக தூங்கும் மனது அவர்களுக்கு தாராளமாக இருக்கிறது.

சஜித்தின் தொலைபேசி சின்னத்துக்கு இந்த மூன்று கட்சிகளும் வழங்கிய பங்களிப்பு என்று பார்த்தால் முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ் ஆகியவற்றோடு ஒப்பிடும்போது தமிழ் முற்போக்கு கூட்டணி யின் பங்கு அதிகம். அது ஆசனங்களின் எண்ணிக்கையினால் மட்டும் எழும் நிலை அல்ல. மாறாக வாக்குகளினாலும். காரணம் முஸ்லிம் காங்கிரஸ் மட்டக்களப்பில் ‘மரம்’ சின்னத்திலும், மக்கள் காங்கிரஸ் திகாமடுல்ல (அம்பாறை) யில் ‘மயில்’ சின்னத்திலும் போட்டியிட்டதுடன் கூட்டாக இணைந்து ‘தராசு’ சின்னத்தில் கூட்டிணைந்து போட்டியிட்டு புத்தளம் மாவட்டத்தில் தமது ஆசனங்களை உறுதி செய்து கொண்டுள்ளனர். இந்த மூன்று ஆசனங்களுக்குமான தேசிய பட்டியல் பங்களிப்பு “தொலைபேசிக்கு” இல்லை. இப்படித்தான் முஸ்லிம் காங்கிரஸ் ( 4+1) 5 ஆசனங்களையும் மக்கள் காங்கிரஸ் ( 2+2) 4 ஆசனங்களையும் தனதாக்கிக் கொண்டுள்ளன.

அதே நேரம் தமிழ் முற்போக்கு கூட்டணி தொலைபேசி சின்னத்தின் ஊடாக மாத்திரமே போட்டியிட்டு நுவரெலியா, பதுளை, கண்டி, கொழும்பு ஆகிய நான்கு மாவட்டங்களில் 6 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டு இருப்பதுடன் தங்கள் ஆசனங்களைப் பெறாத இரத்தினபுரி, கம்பஹ, கேகாலை மாவட்டங்களில் சுமார் 36500, 25000, 22000 என எண்பதினாயிரம் மேலதிக வாக்குகளையும் தொலைபேசிக்கு பெற்றுக் கொடுத்து உள்ளனர். எனவே ஒன்று அல்ல இரண்டு தேசிய பட்டியல் உறுப்பிரிமைப் பெறும் வல்லமை தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு உண்டு. ஆனால் அதனை கேட்டுப் பெறுவதில் கூட்டணி தலைமைகளுக்கு அக்கறை இருப்பதாக தெரியவில்லை. இப்போது எழுந்திருக்கும் இழுபறி நிலை கூட முஸ்லிம் காங்கிரஸ் தாமதமாகவேனும் முன்வந்து பேசி இருப்பதால்தான் எழுந்துள்ளது என அவதானிக்க முடிகிறது.

மேலும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தேசிய பட்டியலுக்கு பெயர் குறிப்பிடப்பட்ட திலகராஜ், லோரன்ஸ், குருசாமி ஆகிய மூவரில் திலகராஜ் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர். அவருக்குத் தேசிய பட்டியல் தருவதாக கூறியே தலைமைகள் போட்டியிடும் வாய்ப்பை வழங்கவில்லை. 52 நாள் ஆட்சி காலத்தில் அங்கும் இங்கும் பாய்ந்து புகழ்பெற்ற வடிவேல் சுரேஷ்க்கு மாவட்டத்தில் முதலாம் இடத்தையும் பாய்வதற்கு தயாராக மகிந்தவை சந்தித்து வந்த இராதாகிருஷ்ணன், அரவிந்தகுமார் ஆகியோருக்கு அங்கீகாரம் கொடுத்த மலையக மக்கள் அவ்வாறு பாய்ச்சல் எல்லாம் காட்டாது தனக்கு வழங்கப்பட்ட பணியை சிறப்பாக நிறைவேற்றி மக்கள் மனதையும் மாவட்டத்தில் முதலிடம் என்ற விருதையும் வென்ற திலகராஜை தெரிவு செய்யாமல் இருக்க வாய்ப்பில்லை.

கூடவே நுவரெலியாவில் நாங்கள் மூவரும் வென்றுவிட்டால் திலகராஜ்க்கு தேசிய பட்டியல, ஊடாக பெற்றுக் கொடுப்போம் என மேடைக்கு மேடை முழங்கிய திகா – ராதா – உதயா இன்று கள்ளமௌனம் காப்பது சந்தர்ப்பவாத்த்தின் உச்சம். திலகரின் செயற்பாடுகளில் ஏதேனும் பலவீனம் இருக்கலாம் ஆனால் அவர் தேர்தலுக்கு முன்னரும் பின்னரும் தெளிவாக ஊடகங்களில் பேசி வருகிறார்.

ஆனால், ஏற்கனவே ஊடகங்களில் திலகராஜுக்கு தேசிய பட்டியல் உறுதியாக வழங்கப்படும் என கூறிவந்த மனோ கணேசன் தேர்தல் முடிந்த பின்னரான தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அத்தகைய உறுதியை வெளிப்படுத்துவதாக தெரியவில்லை. இப்போவது மூவரது பெயரையும் கூறுவது, கூடிப்பேசி தீர்மானிப்போம் என்பதெல்லாம் சந்தர்ப்பவாதம் அன்றி வேறில்லை.

மறுபக்கம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேசிய பட்டியல் தெரிவை அதன் பங்காளி கட்சியான ‘டெலோ’ விமர்சித்து இருப்பது வழமையாக அந்த தலைமைகள் காட்டும் சந்தர்பவாதம். “நான் அடிக்கிற மாதிரி நடிக்கிறேன். நீ வலிக்கிறமாதிரி நடி” என்கிற உடன்பாடு அது. அத்தகைய உடன்பாடு ஒன்றுக்கு தமிழ் முற்போக்கு கூட்டணி தலைமைகளும் வந்து இருக்கும் சந்தர்ப்பம் தெளிவாகிறது. இனி சந்தர்ப்பம் பற்றி வாதம் செய்யலாம்.

 

http://thinakkural.lk/article/61440

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.