Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இவர்கள்தானா கொள்கை, உரிமைக்காகப் போராடப் போகிறார்கள்? கேள்வி எழுப்பும் மணிவண்ணன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள்தானா கொள்கை, உரிமைக்காகப் போராடப் போகிறார்கள்? கேள்வி எழுப்பும் மணிவண்ணன்

August 21, 2020

manivannan-300x200.jpg

 

“நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்திற்காக எத்தகைய ஏமாற்று வேலைகளையும் செய்யக்கூடியவர்கள்தான் இன்று எமது தலைவர்களாகவுள்ளார்கள். இவர்கள்தானா கொள்கை, உரிமைக்காகப் போராடப் போகிறார்கள்?” என சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கூட்டுறவாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாமனிதர் சின்னத்தம்பி சிவமகாராசாவின் நினைவு தினம் நேற்று தெல்லிப்பளை கூட்டுறவு சங்க மண்டபத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

 

“மாமனிதர் சிவமகாராசா தனது கொள்கையில் உறுதியுடன் இருந்தமையால் தான் தனது முதல் தெரிவின் போது நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தை பெறவில்லை. ஆனால் இன்றுள்ள எமது தலைவர்கள் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் கிடைப்பதற்காக ஏமாற்றுவேலை செய்யக்கூடிய நிலையே உள்ளனர்.

 

மக்களின் உரிமை, தேசியம், கொள்கைக்காக போராடுபவர்கள் அதே கொள்கைக்காக போராடி எம்மை விட்டு பிரிந்தவர்களையும் நினைவு கூரவேண்டும். அவ்வாறு செய்வதே நாம் அவர்களுக்கு செய்யும் நன்றிகடனில் ஒன்றாகும். இன்றைய நினைவு நாளில் எத்தனை பேர் கலந்து கொண்டு மாமனிதரை நினைவு கூறுகின்றோம்?” என்றார்.

 

http://thinakkural.lk/article/63635

 

5 hours ago, கிருபன் said:

இவர்கள்தானா கொள்கை, உரிமைக்காகப் போராடப் போகிறார்கள்? கேள்வி எழுப்பும் மணிவண்ணன்

August 21, 2020

manivannan-300x200.jpg

 

“நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்திற்காக எத்தகைய ஏமாற்று வேலைகளையும் செய்யக்கூடியவர்கள்தான் இன்று எமது தலைவர்களாகவுள்ளார்கள். இவர்கள்தானா கொள்கை, உரிமைக்காகப் போராடப் போகிறார்கள்?” என சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கூட்டுறவாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாமனிதர் சின்னத்தம்பி சிவமகாராசாவின் நினைவு தினம் நேற்று தெல்லிப்பளை கூட்டுறவு சங்க மண்டபத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

 

“மாமனிதர் சிவமகாராசா தனது கொள்கையில் உறுதியுடன் இருந்தமையால் தான் தனது முதல் தெரிவின் போது நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தை பெறவில்லை. ஆனால் இன்றுள்ள எமது தலைவர்கள் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் கிடைப்பதற்காக ஏமாற்றுவேலை செய்யக்கூடிய நிலையே உள்ளனர்.

 

மக்களின் உரிமை, தேசியம், கொள்கைக்காக போராடுபவர்கள் அதே கொள்கைக்காக போராடி எம்மை விட்டு பிரிந்தவர்களையும் நினைவு கூரவேண்டும். அவ்வாறு செய்வதே நாம் அவர்களுக்கு செய்யும் நன்றிகடனில் ஒன்றாகும். இன்றைய நினைவு நாளில் எத்தனை பேர் கலந்து கொண்டு மாமனிதரை நினைவு கூறுகின்றோம்?” என்றார்.

 

http://thinakkural.lk/article/63635

 

தலைவர்களைப்பற்றி இப்போது வெளிவரும் கருத்துக்கள் எப்படி இருக்கின்றது? ஒவ்வொருவருக்கும் சந்தர்ப்பம் வரும்போதுதான் தாங்கள் யார் என்பதை வெளிப்படுத்துவார்கள். அதுவரைக்கும் எல்லோரும் நல்லவரே.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

“கட்சியின் தேசிய அமைப்பாளர் – ஊடக பேச்சாளர் பதவிகளில் தொடர்ந்து நீடிப்பேன்”

August 22, 2020

Manivannan-1024x768.jpg

“எனக்கு எதிராக எடுக்கப்பட்ட தீர்மானம் ஜனநாயகத்திற்கு எதிரானது, இயற்கை நீதிக்கோட்பாட்டுக்கு எதிரானது என்பதனால் நான் தொடர்ந்து கட்சியின் தேசிய அமைப்பாளர் மற்றும் ஊடக பேச்சாளர் பதவிகளில் தொடர்ந்து நீடிப்பேன் என சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

தேசிய அமைப்பாளர் மற்றும் ஊடக பேச்சாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி இரு தினங்களில் எனக்கு கட்சி தலைவர் மற்றும் செயலாளரினால் நான் பதவி விலக்கப்பட்டுள்ளதாக கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டது.

சட்ட நிபுணர்கள், கல்வியாளர்கள் , ஆதரவாளர்களுடன் கலந்தாலோசித்து அதற்கு பதில் கடிதம் அனுப்பியுள்ளேன்.

நான் பல்கலைகழகத்தில் சட்டப்பீடத்தில் கற்றுக்கொண்டிருந்த கால பகுதியில் , யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்னர் எமது இனத்தின் கொள்கைகளை தொடர்ந்து முன்னெடுக்க கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருடன் கை கோர்த்து, பயணித்தேன்.

2010ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் படு தோல்வியடைந்தோம். அதனை அடுத்து பலர் எமது அமைப்பில் இருந்து விலகி சென்றனர். இருவர் துரதிஸ்டவசமா இறந்து போனார்கள். அதன் பின்னர் தலைவர் , செயலாளர், நான் ஆகிய நாங்கள் மூவருமே எமது அமைப்பை தொடர்ந்து முன்னெடுத்தோம். பல்வேறு அச்சுறுத்தல்கள் , நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து எமது அமைப்பை கட்டியொழுப்பினோம்.

கடந்த உள்ளூராட்சி தேர்தலில் நாம் மகத்தான வெற்றியை பெற்றோம். அதன் பின்னர் எமது அமைப்பு உத்வேகத்துடன் முன்னோக்கி சென்றது.

இந்த நிலையில் கடந்த நாடாளுமன்ற தேர்தல் காலத்தில் நான் இந்த தேர்தலில் தோல்வியுற்றால், தேர்தல் அரசியலில் இருந்து விலகுவேன் என அறிவித்திருந்தேன். இதனை எவரும் ஏற்றுக்கொள்ளவில்லை. நான் அரசியலில் இருந்து வெளியேறுவதை பலரும், விரும்பாததல், நான் தொடர்ந்து அரசியலில் பயணிப்பேன்.

எனக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் என் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை நிராகரித்துள்ளேன் எனக்கு எதிராக எடுக்கப்பட்ட தீர்மானம் இயற்கை நீதி கோட்பாட்டுக்கு எதிரானது.

மத்திய குழு கூட்டம் ஏன் ? எதற்கு ? என கூறப்படாமல் கூட்டப்பட்டது. எனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. என் தரப்பு நியாங்களை கூற சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை இது ஜனநாயகம் இல்லாதது. அறமற்ற செயற்பாடாகும்.

அதில் பிராதான குற்றசாட்டு பணம் வாங்கியதாக உள்ளது. நான் என் சொந்த தேவைக்காக பணம் பெறவில்லை. அதனை முற்றாக மறுக்கிறேன். ஏனைய விடயங்கள் தொடர்பில் பொது வெளியில் பிரஸ்தாபிக்க விரும்பவில்லை. அது தொடர்பில் எனது பதில் கடிதத்தில் தெளிவாக குறிப்பிட்டுள்ளேன்.

எனக்கு எதிராக கட்சியினால் எடுக்கப்பட்ட ஜனநாயக பண்பற்ற ஒரு தீர்மானம் என்பதாலும் , இயற்கை நீதி கோட்பாட்டிற்கும் எதிரானது என்பதனால் , நான் தொடர்ந்து தேசிய அமைப்பாளராகவும் , ஊடக பேச்சாளராகவும் செயற்படுவேன். எம் இனத்திற்காக உயிர் நீத்தவர்களை மனதில் நிறுத்தி அர்ப்பணிப்புடன் எனது செயற்பாடுகள் தொடரும் என ஆணித்தரமாக கூறுகிறேன்.

இன்று தேசியம் பேசுபவர்கள் பிளவுபட்டு நிற்பதனால் , சிங்கள கட்சிகள் , தேசியம் பேசாதவர்கள் வெற்றி பெறுகின்றார்கள். அதனால் சிறு சிறு பிரச்சனைகளுக்காக பிரிந்து செல்வதனை நான் என்றைக்கும் ஏற்கமாட்டேன்.

தேர்தல் காலத்தில் எனக்கு எதிராக கட்சியை சேர்ந்த சிலரால் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் தொடர்பில் , கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை கடந்த 09ஆம் திகதி எனது நண்பன் சட்டத்தரணி அர்ஜூனாவுடன் சென்று சந்தித்து முறையிட்டு சில ஆதாரங்களையும் முன் வைத்தோம். அது தொடர்பில் எனக்கு இதுவரை தலைவர் எந்த பதிலையும் தரவில்லை.

எனக்கும் தலைவருக்கும் இடையிலான உறவு ஆழமானது நாம் என்றும் இணைந்து செயற்படுவோம். நான் எனது கட்சியுடன் நேசக்கரத்தை நீட்டுவேன். எனது கட்சி நிறுவனமயப்படுத்தப்பட்டு மக்கள் சேவைக்காக செயற்படும். அதற்காக தொடர்ந்து செயற்படுவேன் என உறுதி அளிக்கிறேன்.

காலங்கள் பல பதில்களை மக்களுக்கு தெளிவுபடுத்தும் என நம்புகிறேன். எனத் தெரிவித்தார்.
 

 

https://globaltamilnews.net/2020/149122/

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, கிருபன் said:

காலங்கள் பல பதில்களை மக்களுக்கு தெளிவுபடுத்தும் என நம்புகிறேன்.

அப்டித்தான் கனபேர் காத்திருக்கினம்.

போகப்போக தெரியும் நிறைய விடயங்கள் வெளிவரும் . இங்கு எழுதவேண்டியதில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.