Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு பல்கலைக் கழகங்ளில் பட்டப்படிப்பை மேற்கொண்ட பட்டதாரிகளுக்கும் நியமனங்கள் வழங்கப்படும் – அமைச்சர் டக்ளஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு பல்கலைக் கழகங்ளில் பட்டப்படிப்பை மேற்கொண்ட பட்டதாரிகளுக்கும் நியமனங்கள் வழங்கப்படும் – அமைச்சர் டக்ளஸ்

அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு பல்கலைக் கழகங்ளில் பட்டப்படிப்பை மேற்கொண்ட பட்டதாரிகளுக்கும் நியமனங்கள் வழங்கப்படும் –  அமைச்சர் டக்ளஸ்

அண்மையில் வழங்கப்பட்ட பட்டதாரிகள் நியமனத்தின்போது பாதிக்கப்பட்ட ஒரு பகுதியினர் இன்று சனிக்கிழமை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை யாழ். அலுவலகத்தில் சந்தித்தபோது பல்கலைக் கழகங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு பல்கலைக் கழகங்ளில் பட்டப்படிப்பை மேற்கொண்ட பட்டதாரிகளுக்கும் நியமனங்கள் வழங்கப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார்.இதன்போது, பல்கலைக் கழகங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு பல்கலைக் கழகங்களின் பட்டதாரிகளுக்கும், சேமலாப நிதிக் கணக்கினை வைத்திருந்தாலும் பட்டப்படிப்பிற்கு பொருத்தமற்ற தொழில்களில் தற்காலிகமாக ஈடுபட்டு வருகின்றவர்களுக்கும் நியமனங்களை வழங்குவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

அந்தவகையில், பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் மேன்முறையீட்டை மேற்கொள்ளுமாறும் மேலதிகமாக பத்தாயிரம் பட்டதாரிகளுக்கு விரைவில் நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.யாழ். மாவட்டத்தில் குறித்த பட்டதாரிகள் நியமனத்திற்கு விண்ணப்பித்தர்களில் சுமார் ஆயிரத்து 500இற்கும் மேற்பட்டவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அல்லது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.Douglas-Devananda-Graduates-Meeting-In-Jaffna-3

குறித்த விண்ணப்பதாரிகள் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பினை மேற்கொண்டவர்கள் அல்லது ஏற்கனவே தொழில்வாய்ப்பினை பெற்றுக் கொண்டவர்கள் என்பதற்கு ஆதாரமாக சேமலாப நிதி கணக்கினை கொண்டிருப்பவர்கள் என்ற அடிப்படையில் நியமனங்கள் வழங்கப்படாது தவிர்க்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக கடந்த புதன்கிழமை இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் பிரஸ்தாபிக்கப்பட்டது.அத்துடன், விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட மற்றும் ஒத்திவைக்கப்பட்ட விண்ணப்பதாரிகள் அனைவரையும் எதிர்வரும் செப்ரெம்பர் 15 ஆம் திகதிக்கு முன்னதாக மேன்முறையீட்டை மேற்கொள்ளுமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.(15)
 

 

http://www.samakalam.com/செய்திகள்/அங்கீகரிக்கப்பட்ட-வெளிந/

  • கருத்துக்கள உறவுகள்

இவர் இப்படி இரட்டை வேடம் போடுவது இது முதற்தடவை அல்ல.

ஏலவே போர் காலத்தில் வடக்குக் கிழக்கில் இளையோரை கைது செய்துவிட்டு.. கொழும்பில் மகேஸ்வரியை வைத்து பெயில் எடுத்து காசு உழைத்தவர் தான் இவர்.

அதேபோல்.. 1990 களில் வெட்டுப்புள்ளி பாரபட்ச அமுலாக்கத்தால்.. யாழ் மாவட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்ட போது தான் சந்திரிக்காவோடு பேசி முடிவு தாறேன் என்று சொன்னது தான். இறுதியில்.. நீதிமன்றத்தை மாணவர்கள் நாடி தீர்வு தேடிக் கொண்டது தான்நடந்தது.

இப்படி இந்தத் தாடியன்.. தனது சுயலாப அரசியலுக்காக எமது மக்கள் மீது சிங்கள அரசின் துணையோடு செய்யும் அராஜகங்களும்.. பின் அதற்கு தீர்வு என்று மக்களை ஏய்ப்பதும்.. தொடர்கதை தான்.

மக்களை முட்டாளாக்கி பிழைக்கும் இவர் போன்ற அரசியல்வாதிகளை அடிமட்ட தமிழ் மக்கள் சிலர் இன்னும் இனங்காண முடியாமல் இருப்பது அவர்களின் பலவீனம் என்றே சொல்ல வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, nedukkalapoovan said:

இவர் இப்படி இரட்டை வேடம் போடுவது இது முதற்தடவை அல்ல.

ஏலவே போர் காலத்தில் வடக்குக் கிழக்கில் இளையோரை கைது செய்துவிட்டு.. கொழும்பில் மகேஸ்வரியை வைத்து பெயில் எடுத்து காசு உழைத்தவர் தான் இவர்.

அதேபோல்.. 1990 களில் வெட்டுப்புள்ளி பாரபட்ச அமுலாக்கத்தால்.. யாழ் மாவட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்ட போது தான் சந்திரிக்காவோடு பேசி முடிவு தாறேன் என்று சொன்னது தான். இறுதியில்.. நீதிமன்றத்தை மாணவர்கள் நாடி தீர்வு தேடிக் கொண்டது தான்நடந்தது.

இப்படி இந்தத் தாடியன்.. தனது சுயலாப அரசியலுக்காக எமது மக்கள் மீது சிங்கள அரசின் துணையோடு செய்யும் அராஜகங்களும்.. பின் அதற்கு தீர்வு என்று மக்களை ஏய்ப்பதும்.. தொடர்கதை தான்.

மக்களை முட்டாளாக்கி பிழைக்கும் இவர் போன்ற அரசியல்வாதிகளை அடிமட்ட தமிழ் மக்கள் சிலர் இன்னும் இனங்காண முடியாமல் இருப்பது அவர்களின் பலவீனம் என்றே சொல்ல வேண்டும். 

இனங்காணாமலல்ல, அவர்களின் தேவை அப்படிப்பட்டது. அதனால் முயற்சிக்கிறார்கள். சமுத்தி, சைக்கிள் ஆசை காட்டி வெயிலில் வதைக்கிற கொடியவன் என்று தெரிந்தும் போகிறார்கள். காரணம் கடமை அவர்களை இப்படிப்பட்ட ஆசைகாட்டிகளின்  பின்னால் ஓட வைக்கிறது. இப்படிப்பட்டவர்களை தன் பின்னால் அலைய வைத்து தனக்கும் ஒரு கூட்டம் இருக்கென்று படம் பிடித்து பந்தா காட்டலாம்  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.